Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

காரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப் பெரியவர்கள்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2015 | , , ,

சொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திற‌ம்ப‌ட‌ வடித்திருந்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் இந்த‌ அந்த‌ஸ்த்தை அடைய‌வ‌த‌ற்குள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், துன்ப‌ங்க‌ளையும், துய‌ரங்க‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், நோய்நொடிக‌ளையும், ச‌ண்டைச‌ச்ச‌ர‌வுக‌ளையும், பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் மற்றும் ப‌ல‌ பிண‌க்குக‌ளையும் ச‌ந்திக்காம‌ல் வந்து விடுவதில்லை.

அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌த்துட‌ன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்கு ஏதேனும் துன்ப‌மும், நோய்நொடிக‌ள் வ‌ந்து விட்டால் துடித்துப்போகிறார்க‌ள். 'என் ஈர‌க்குலையே; என் தாம‌ர‌ங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவ‌ர்க‌ள் பாச‌த்தின் உச்சிக்கே சென்று த‌ன் தூக்க‌த்தையும் தொலைத்து விடுவார்க‌ள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.

ஆனால் அவ‌ர்க‌ள் யாருக்காக‌ ப‌ரிவும், பாச‌மும், இர‌க்க‌மும் கொண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நாளை வ‌ள‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ பாச‌ ம‌ழை பொழிய‌ச்செய்த‌ வீட்டுப்பெரிய‌வ‌ர்களை சிறிதும் ம‌திப்ப‌து இல்லை மாறாக‌ ம‌ரியாதையில் மிதி ப‌டுவ‌தை நாம் ஆங்காங்கே காண‌ முடிகிற‌து. பெரிய‌வ‌ர்க‌ள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்க‌த்துடனும் உள்ள‌த்தில் இறுக்க‌த்துட‌னும் அவ‌ர்க‌ள் இறுதி நாட்க‌ளை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் க‌ட‌த்துவ‌தை காணும் ச‌ம‌ய‌ம் நாம் ம‌ன‌ வேத‌னைப்ப‌டுவ‌தை த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ இய‌லும்?

"காய்ந்த‌ தென்ன‌ந்தோகையைப் பார்த்து ப‌ச்சைத்தோகை ஏள‌ன‌மாக‌ சிரித்த‌தாம் தானும் ஒரு நாள் காய்ந்த‌ தோகையாக‌ ஆக‌ இருப்ப‌தை ம‌ற‌ந்து" என்ற‌ ப‌ழ‌மொழி தான் இங்கு ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து.

கால‌ப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ள் முற்றி வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் வாழ்ந்து அனுப‌வித்த‌ வீட்டை விட்டே வெளியேற்ற‌ நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது ம‌ட‌த்த‌ன‌த்தின் உச்ச‌ க‌ட்ட‌ம். ம‌னித‌ நேய‌த்தின் பெரும் வீழ்ச்சி.

பாதிக்க‌ப்ப‌ட்ட அப்பெரியவர்களின் உள்ள‌க்குமுற‌லும், வேதனையின் வெளிப்பாடான‌ க‌ண்ணீரும் த‌ண்ணீருக்குள் அழும் மீன்க‌ளின் க‌ண்ணீர் போல் இவ்வுல‌குக்கு தெரியாம‌ல் போக‌லாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் ப‌டைத்த‌ இறைவ‌னுக்கு தெரியாம‌ல் போய் விடுமா என்ன‌?

பெரிய‌வ‌ர்க‌ள் வ‌யோதிக‌த்தாலும், சுய நினைவு/உண‌ர்வு இன்றி ப‌டுக்கையில் கிட‌த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு, அவ‌ர்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேத‌னையின் உச்ச‌ கட்ட‌ம். இந்த‌ நிலை நாளை யார்,யாருக்கு வ‌ரும் அல்ல‌து வ‌ராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிப‌டுத்திக்கூற‌ முடியுமா? அதற்கே ஏதேனும் சக்தி உண்டா? இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட‌ முடியுமா?

அவ‌ர்க‌ளை க‌வ‌னிக்க‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கு தான் மார‌டிப்பார்க‌ளே அன்றி பாச‌ ம‌ழை பொழிந்து விடுவார்க‌ளா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.

சில‌ இட‌ங்க‌ளில் இது போல் ப‌டுக்கையில் கிட‌த்தப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌த்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய‌ வ‌ய‌தின‌ர் ஏதோ கார‌ண‌த்தால் தீடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டு ப‌டுக்கையில் கிட‌ப்ப‌வ‌ருக்கு முன்பே இவ்வுல‌கை விட்டு சென்று விடுவ‌தை காண‌ முடிகிற‌து.

ப‌டுக்கையில் இருந்தாலும் ம‌னித‌ன் ப‌ல்ல‌க்கில் சென்றாலும் ம‌ர‌ண‌த்திற்கு என்ன‌ விதிவில‌க்கு?

பெரிய‌வ‌ர்க‌ள் த‌ன‌க்கு ஏற்ப‌டும் இழிநிலைக்கும், கேவ‌ல‌த்திற்கும், ப‌ரிவ‌ற்ற‌ சூழ்நிலைக்கும், வேத‌னைக‌ளுக்கும், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌லுக்கும் த‌ட்டிக்கேட்க‌வோ அல்ல‌து த‌ண்டிக்க‌வோ அவ‌ர்க‌ளுக்கு ச‌க்தியும், ம‌ன‌திட‌மும் இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண்ணீருக்கு இறைவ‌னிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய‌ ச‌க்தி நிச்சயம் இருக்க‌த்தான் செய்யும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.

நாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் வீட்டின் பொக்கிச‌ங்க‌ளாக பெரும்பாலும் க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை மாறாக‌ ச‌மைய‌லில் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்திற்கு ப‌ய‌ன்படுத்தப்படும் க‌றிவேப்பில்லை போல் ம‌ட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ம் அறியாத‌வ‌ர்க‌ளாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

வாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ? இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ?

வீட்டுப் பெரிய‌வ‌ர்க‌ளைப் போற்றுவோம்; வாழ்வில் உன்ன‌த‌ நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

உதவுங்கள் ! :: உறவுகளின் பிரிவு வலி மிக கொடியது ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2012 | , , , ,


தயவு செய்து பகிருங்கள் / Please SHARE
***************************************

கடந்த 12.08.2012 அன்று கோவை காந்திபுரம் நடைபாதை மேம்பாலத்தில் திரு. முகமது அலி (70) உடல் நலம் சரியில்லாத நிலையில், "ஈர நெஞ்சம்" மற்றும் காவல்துறை இணைந்து அவரை பாதுகாப்பாக, ஸ்ரீ சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

மேலும், திரு. முகமது அலியின் வாக்காளர் அடையாள அட்டை கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து நமக்கு கிடைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள அவரது முகவரி: 

91, ஜானி பேகம் காலனி வடக்கு, 
உடுமலை பேட்டை (ந), 
உடுமலைபேட்டை (வ), 
கோயமுத்தூர் (மா), 

வாக்காளர் அடையாள அட்டையின் எண் TN/21/111/0093362 . 

உடுமலை பேட்டை நண்பர்கள் எவருக்கேனும், இந்த முகவரி அறிந்திருந்தால், தயவு செய்து திரு. முகமது அலி அவர்களைப் பற்றி கூறி, "ஈர நெஞ்சத்தை" 9843344991 / 7200099400 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள செய்யுங்கள். உறவின் பிரிவின் வலி மிக கொடியது. மேலும், திரு. முகமது அலி உடல் நலம் குன்றி இருக்கிறார்.உறவுகளோடு இணைய உதவுங்கள்.

~நன்றி 
ஈர நெஞ்சம்.

அதிரைநிருபர்  குழு

முதுமை என்பது ஒரு குழந்தைப் பருவம்! 9

அதிரைநிருபர் | June 22, 2011 | , , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

--அதிரை அஹ்மது

காரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப்பெரியவர்கள்.. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2011 | , , ,

சொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திற‌ம்ப‌ட‌ வடித்திருந்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் இந்த‌ அந்த‌ஸ்த்தை அடைய‌வ‌த‌ற்குள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், துன்ப‌ங்க‌ளையும், துய‌ரங்க‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், நோய்நொடிக‌ளையும், ச‌ண்டைச‌ச்ச‌ர‌வுக‌ளையும், பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் மற்றும் ப‌ல‌ பிண‌க்குக‌ளையும் ச‌ந்திக்காம‌ல் வந்து விடுவதில்லை.

அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌த்துட‌ன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்கு ஏதேனும் துன்ப‌மும், நோய்நொடிக‌ள் வ‌ந்து விட்டால் துடித்துப்போகிறார்க‌ள். 'என் ஈர‌க்குலையே; என் தாம‌ர‌ங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவ‌ர்க‌ள் பாச‌த்தின் உச்சிக்கே சென்று த‌ன் தூக்க‌த்தையும் தொலைத்து விடுவார்க‌ள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.

ஆனால் அவ‌ர்க‌ள் யாருக்காக‌ ப‌ரிவும், பாச‌மும், இர‌க்க‌மும் கொண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நாளை வ‌ள‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ பாச‌ ம‌ழை பொழிய‌ச்செய்த‌ வீட்டுப்பெரிய‌வ‌ர்களை சிறிதும் ம‌திப்ப‌து இல்லை மாறாக‌ ம‌ரியாதையில் மிதி ப‌டுவ‌தை நாம் ஆங்காங்கே காண‌ முடிகிற‌து. பெரிய‌வ‌ர்க‌ள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்க‌த்துடனும் உள்ள‌த்தில் இறுக்க‌த்துட‌னும் அவ‌ர்க‌ள் இறுதி நாட்க‌ளை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் க‌ட‌த்துவ‌தை காணும் ச‌ம‌ய‌ம் நாம் ம‌ன‌ வேத‌னைப்ப‌டுவ‌தை த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ இய‌லும்?

"காய்ந்த‌ தென்ன‌ந்தோகையைப் பார்த்து ப‌ச்சைத்தோகை ஏள‌ன‌மாக‌ சிரித்த‌தாம் தானும் ஒரு நாள் காய்ந்த‌ தோகையாக‌ ஆக‌ இருப்ப‌தை ம‌ற‌ந்து" என்ற‌ ப‌ழ‌மொழி தான் இங்கு ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து.

கால‌ப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ள் முற்றி வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் வாழ்ந்து அனுப‌வித்த‌ வீட்டை விட்டே வெளியேற்ற‌ நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது ம‌ட‌த்த‌ன‌த்தின் உச்ச‌ க‌ட்ட‌ம். ம‌னித‌ நேய‌த்தின் பெரும் வீழ்ச்சி.

பாதிக்க‌ப்ப‌ட்ட அப்பெரியவர்களின் உள்ள‌க்குமுற‌லும், வேதனையின் வெளிப்பாடான‌ க‌ண்ணீரும் த‌ண்ணீருக்குள் அழும் மீன்க‌ளின் க‌ண்ணீர் போல் இவ்வுல‌குக்கு தெரியாம‌ல் போக‌லாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் ப‌டைத்த‌ இறைவ‌னுக்கு தெரியாம‌ல் போய் விடுமா என்ன‌?

பெரிய‌வ‌ர்க‌ள் வ‌யோதிக‌த்தாலும், சுய நினைவு/உண‌ர்வு இன்றி ப‌டுக்கையில் கிட‌த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு, அவ‌ர்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேத‌னையின் உச்ச‌ கட்ட‌ம். இந்த‌ நிலை நாளை யார்,யாருக்கு வ‌ரும் அல்ல‌து வ‌ராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிப‌டுத்திக்கூற‌ முடியுமா? அதற்கே ஏதேனும் சக்தி உண்டா? இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட‌ முடியுமா?

அவ‌ர்க‌ளை க‌வ‌னிக்க‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கு தான் மார‌டிப்பார்க‌ளே அன்றி பாச‌ ம‌ழை பொழிந்து விடுவார்க‌ளா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.

சில‌ இட‌ங்க‌ளில் இது போல் ப‌டுக்கையில் கிட‌த்தப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌த்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய‌ வ‌ய‌தின‌ர் ஏதோ கார‌ண‌த்தால் தீடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டு ப‌டுக்கையில் கிட‌ப்ப‌வ‌ருக்கு முன்பே இவ்வுல‌கை விட்டு சென்று விடுவ‌தை காண‌ முடிகிற‌து.

ப‌டுக்கையில் இருந்தாலும் ம‌னித‌ன் ப‌ல்ல‌க்கில் சென்றாலும் ம‌ர‌ண‌த்திற்கு என்ன‌ விதிவில‌க்கு?

பெரிய‌வ‌ர்க‌ள் த‌ன‌க்கு ஏற்ப‌டும் இழிநிலைக்கும், கேவ‌ல‌த்திற்கும், ப‌ரிவ‌ற்ற‌ சூழ்நிலைக்கும், வேத‌னைக‌ளுக்கும், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌லுக்கும் த‌ட்டிக்கேட்க‌வோ அல்ல‌து த‌ண்டிக்க‌வோ அவ‌ர்க‌ளுக்கு ச‌க்தியும், ம‌ன‌திட‌மும் இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண்ணீருக்கு இறைவ‌னிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய‌ ச‌க்தி நிச்சயம் இருக்க‌த்தான் செய்யும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.

நாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் வீட்டின் பொக்கிச‌ங்க‌ளாக பெரும்பாலும் க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை மாறாக‌ ச‌மைய‌லில் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்திற்கு ப‌ய‌ன்படுத்தப்படும் க‌றிவேப்பில்லை போல் ம‌ட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ம் அறியாத‌வ‌ர்க‌ளாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

வாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ? இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ?

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளைப்போற்றுவோம்; வாழ்வில் உன்ன‌த‌ நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....

- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

வயசு 25

ZAKIR HUSSAIN | January 28, 2011 | , ,

நோய்கள் மக்களை காவு வாங்குவதை விட மெடிக்கல்பில்கள் அதிகம் காவு வாங்குவதாக ஊரெங்கும் பேச்சு.ஆனா காலா காலமா அதுக்காக என்ன செய்ரோம்னா துப்பரவா ஒன்னும் இல்லீங்க.ஒரே குடும்பத்திலெ இருக்கிற ஏற்றதாழ்வு ஏழையா இருக்கிற நோயாளியோட பில்லை கட்டுவதற்கு மனசு வராமெ பணவசதி உள்ளவர்கள் "ஜெயிக்கிர குதிரையிலெதான் பணம் கட்டுவேன்ற மாதிரி "அவருக்குதான் வயசாயிடுச்சில அப்புரம் என்ன" என்று ஒதுங்கிக்க்கொள்ளும்போது அந்த ஏழை நோயாளியின் மனசு என்ன பாடுபடும். எழை சொல்தான் அம்பலம் ஏறாதே என்று மெளனிச்சுதான் போயிடுதில்லெ.

இத்தனைக்கும் அந்த நோயாளியும் தனது இளமையில் குடும்பத்துக்கு உழைச்சவர்தான்....எங்கே மதிப்பு இருக்கு. மதிப்பு சம்பாதிக்கிற வரைக்குதான்ற "முக்கிய விதி' தெரியாமலேயே வயசான பெறவு தெரிஞ்சு வருத்தப்படறவங்கதான் இப்போ பெருவாதியா இருக்காங்க.

சென்டிமென்ட்ல காசையும் இளமையும் தொழச்சிட்டு வயாசான பொரவு தெரிஞ்சு ....ச்சே என்னடா பெரிய தப்புபண்ணிட்டோமேனு தேம்பி மனசுக்குள் அழும்போது 'ஒன்னும் கவலைப்படாதே" வாழ்க்கைனா எல்லாம் சேர்ந்ததுதான்னு சொல்ல பக்கத்திலெ ஒருத்தரும் இல்லாத மாதிரி பொட்டவெளியில தனியா நிக்கிறாப்ல ஒரு தாய் மடி கேட்கும்ல.

பொண்டாட்டிக்காக அம்மாவிடம் சண்டை பல வருசம்...அம்மாவுக்காக பொண்டாட்டிகிட்டே சண்டை பல வருசம்...இடையில் சொந்த புத்தி எங்கெ தொலைஞ்சது?

திருச்சி தஞ்சாவூர்னு பொட்டுக்கு திருகாணி மாத்துரேன்னு போயி இந்த நகையை வாங்கிட்டேனு செல்லமாக நொந்துகொள்ளும் [ அல்லது "கொல்லும்"] பொம்பளைங்க இருக்கும் வீட்டிலேயும் மூலையில் முடங்கிப்போன நோயாளிகள். பாயும் தலகானியும் மூத்திர வாடையுடன். எங்கே போனது மனிதம்...கல்யாணம் சுன்னத் காதுகுத்திலெயெல்லாம் மாமன் மச்சான் மாப்பிள்ளைனு சொன்ன எல்லோரும் எங்கே வருமையும் நோயும் மூப்பும் வந்த உடனேயே சொல்லி வச்சாப்லெ காணாமெ போயிடுறாங்க...

மல்லியப்பூ மாதிரி மனசு உள்ளவங்கல்லாம் சம்பாதிக்கிற காலத்தில காசு கேட்டுவந்த உறவுகளெ 'நெசம்னு' நம்பித்தான் ஏமாந்துபோயிட்டாங்க. வந்தவுகளும் இந்த மனுசனுக்கு கொடுத்த மரியாதெ என்ன தெரியுமா..ஒரு ஏ.டி.எம் மிசினுக்கு கொடுத்த மரியாதெதான். பட்டனெ அழுத்தினா காசு தரப்போவுது...பொழைக்கிற காலத்துலெ கொஞ்சம் சூதானமா இருக்காமெ போனவைங்க எல்லாம் கெளரவத்தும் பசிக்கும் எடையிலெ இப்படி சர்க்கஸ் குறங்கா போச்சு அன்னாட பொழப்பு. நீங்க கொடுக்கும்போது அதிகமா மறுப்பு சொல்லாமெ வாங்கிகிர்ரவங்கள்ளெ அனேகப்பேர் நொந்துபோயிருப்பவர்கள்தான்.

ஏழை மனசு அறிய ஏழையா இருக்கனும்னு அவசியம் இல்லே.

ஊர் என்ன சொல்லும்னு கவலைப்படுற விசயங்கள்னு சிலதுகள் இருக்கத்தான் செய்கிறது..அது சமூகம் சார்ந்த அவமானங்கள் மட்டும்தான். அதை வீட்டுட்டு உழைக்காத, உடம்பு வளையாத உறவுக்கெல்லாம் அள்ளி எறெச்சிட்டு அதற்க்கு பெயர் 'ஒத்தாசை-உதவி' என நாமாவே தவறான பெயர் வைத்து கொள்கிறோம்...அதற்க்கு பெயர் ;'கடைந்தெடுத்த.. கேனத்தனம்'

இது வெளங்கும்போது வயசாகி மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் ரொம்ப ஹைலைட் செய்ற ரீடிங் இருக்களாம்

வாங்காமெ வெலெ ஏறிப்போன தோப்புக்கும் வயலுக்கும் வக்கெனெ சொல்லும் சிறுசுங்க சாதிச்சதுதான் என்ன?

சரி எதுதான் வாழ்க்கையிலெ சரி , தப்பு ... எதுவுமில்லெ விட்டுதள்ளுங்க.. மத்தவன்வாழ்க்கெயெ பாத்து கத்துக்கிட்டவன் புத்திசாலி... தன் வாழ்க்கையிலெ பட்டுதெறிஞ்சவன் முட்டாள்.

எப்போதும் நான் நெகடிவ் விசயங்களெ எழுதிறதில்லே... ஆனால் தெரியாமல் பாசிட்டைவா மட்டும் எழுதிட்டு வாழ்க்கையிலெ 'இதுவும் இருக்கு'னு சொல்லாம இருக்கிறது தார்மீகமா தப்பு.

மேலெ உள்ள ஒரு போட்டொவெ பார்த்து 15 நிமிசத்துலெ எழுதுனதான் இது...

-- ZAKIR HUSSAIN

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்! 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.


என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

தகவல்: அதிரை அஹ்மது




உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு