சிந்தையின்றிப் பூட்டிச் சிறையினில் வாட்டியே
தந்தையையும் வீணாகத் தண்டித்த- விந்தைமிகுச்
செய்தியாகச் சொல்லுமவர் செய்தத் தவறென்ன
கைதியாய்த் தந்தையைக் காண்.
காணும் தவற்றினைக் கூறிப் பிதற்றிடும் காரணங்கள்
பேணும் ஒழுக்கம் பிறழா இணையிலாப் பேரெளிமை;
நாணும் அரசரின் ஆளும் விவேகமும் நானிலங்கள்
பூணும் விரிவினால் காழ்ப்பினைப் பொய்மையில் பூசினரே!
பூசி மறைக்கும் பொழுதினில்
.....பொய்யாய்த் திரித்துச் சரித்திரம்
பேசி மக்கள் மனத்தினில்
....பேதம் கொள்ளச் செய்வதே
கூசி டவைக்கும் இவர்களின்
...கூட்டுச் சதியாம் கதைகளைத்
தூசி தட்டி உள்ளமைத்
...தூய்மை ஈண்டு நிலவுமே!
நிலவிடும் தவறுகள் நிகழா வண்ணமே
பலவித முயற்சிகள் பரிவுடன் தடைகட்
செய்தார் ஔரங்க சீப்பென வெகுண்டே
பொய்கள் கொண்டுதான் புனைந்தனர் வரலாற்(று)
ஆசிரி யரென்போர் ஆரியர் குழுவாம்
மாசில் மன்னரின் மகிமையை மறைத்துப்
போட்டவைப் புலம்பலின் பொடியாய்க்
காட்டும் மெய்கள் கட்டுரை வழியே!
“கவியன்பன்” கலாம்
தந்தையையும் வீணாகத் தண்டித்த- விந்தைமிகுச்
செய்தியாகச் சொல்லுமவர் செய்தத் தவறென்ன
கைதியாய்த் தந்தையைக் காண்.
காணும் தவற்றினைக் கூறிப் பிதற்றிடும் காரணங்கள்
பேணும் ஒழுக்கம் பிறழா இணையிலாப் பேரெளிமை;
நாணும் அரசரின் ஆளும் விவேகமும் நானிலங்கள்
பூணும் விரிவினால் காழ்ப்பினைப் பொய்மையில் பூசினரே!
பூசி மறைக்கும் பொழுதினில்
.....பொய்யாய்த் திரித்துச் சரித்திரம்
பேசி மக்கள் மனத்தினில்
....பேதம் கொள்ளச் செய்வதே
கூசி டவைக்கும் இவர்களின்
...கூட்டுச் சதியாம் கதைகளைத்
தூசி தட்டி உள்ளமைத்
...தூய்மை ஈண்டு நிலவுமே!
நிலவிடும் தவறுகள் நிகழா வண்ணமே
பலவித முயற்சிகள் பரிவுடன் தடைகட்
செய்தார் ஔரங்க சீப்பென வெகுண்டே
பொய்கள் கொண்டுதான் புனைந்தனர் வரலாற்(று)
ஆசிரி யரென்போர் ஆரியர் குழுவாம்
மாசில் மன்னரின் மகிமையை மறைத்துப்
போட்டவைப் புலம்பலின் பொடியாய்க்
காட்டும் மெய்கள் கட்டுரை வழியே!
“கவியன்பன்” கலாம்


