Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வாழ்கைப் பயணத்தில் உறவுகள். Show all posts
Showing posts with label வாழ்கைப் பயணத்தில் உறவுகள். Show all posts

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 11 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2012 | , ,

பாட்டி-பேரன் உறவு...

கனிந்த அன்பு - பாட்டி தாத்தாவிடம் கிடக்கும் அன்புதான். அவர்களின் அதட்டல்கூட பேரன் பேத்திகளுக்கு நகைச்சுவையாய் தெரியும் புதுமை. தாத்தாவின் அன்றாட வருடல் காலத்தால் அழியாத அன்பின் வெளிப்பாடு. வெளியில் காணும் போது எனது பேரன் என்று பெருமையாக கூறி கொள்ளும் தாத்தா சிகரத்தை தொட்ட பெருமை தாத்தாவின் குரலில் தெரியும். 

பாட்டியின் அன்பு என்றுமே ஒரே பார்வை ஐந்து வயது பேரனும் இருபது வயது பேரனும் ஒன்றாகவே தெரிவர். இரண்டு பேருக்கும் அதே அன்புதான் முந்தானையில் முடிந்து வைத்த ருபாயை அன்பாக கொடுக்கும் பாட்டி. கனிந்த அன்பு கிடைக்க பெற்றவர்கள் உண்மையிலேயே பேறு பெற்றவர்கள்தான்.

நெருடலான நிகழ்வுகள் – தாயை இழந்த பிள்ளைகளின் சூழல்.

தாயில்லா பிள்ளைகளை வளர்க்கும் பாட்டிகளின் அன்பு அந்த பிள்ளைகளுக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்.

*சிறு பிள்ளைகளுக்கு  வயதானவர்களை பற்றிய அபிப்பிராயம் என்னவென்றால் தாம் செய்யும் செயல்கள் ஒன்றும் அவர்களுக்கு தெரியாது. தாயின் பராமரிப்பில் உள்ள பிள்ளைகள் செல்லமாக பாட்டியை ஏமாற்றும் செயல் சுவாரஸ்யமானது. அனால், சில வீடுகளில் பாட்டி கண்காணிப்பில் வளரும் பிள்ளைகள் சிறு விசயங்களில் ஏமாற்றும் பிள்ளைகள் பிறகு பெரிய தவறுகளை செய்ய துவங்கும். தாயில்லா பிள்ளை என்ற ஒரே கரிசனம் பிள்ளை என்ன செய்தாலும் சரி என்ற நிலை பாட்டினை கொண்டிரும் பாட்டியின்  வளர்ப்பு முறை பிள்ளைக்கு பாதகமான சூழலாக அமைவது தான் பரிதாபம்.

* தாயில்லா பிள்ளைகள் பிறரால் பாதிக்க படும்போது பாட்டி படும் துயரம் அதன் வெளிப்பாடு மிக பரிதாபமானது. தனக்கு கிடைக்கும் அபரிவிதமான உணவு வகைகளை பேரனுக்கு கொடுக்கும் பாட்டியின்   பாசம் கவர தக்க ஒன்று.

* டாக்டர் பேரனுக்கு பாட்டி கொடுக்கும் வைத்தியம் சில சமயம் ஒவ்வாமை கொண்டதாக இருக்கும் ..சிரித்துக் கொண்டே அப்படியா என கேட்க்கும் பேரன்.

* I P S   படித்த பேரனை அலட்டும் தாத்தா, பொய்யாய் பயப்படும் பேரன் போன்ற நிகழ்வுகள் ரசிக்க தக்கவை பேரன் கொடுக்கும் பணம் மற்ற வாரிசுக்கு கொடுத்து மகிழும் பாட்டி தாத்தா உறவு கனியை போன்ற இனிமையான உறவுதான். 

பிள்ளைகள் உறங்க தொட்டில் பருவம் முடிந்து தரையில் படுத்து உறங்கும் பருவம் வரும்போது பிள்ளைகளின் கவனம் பாட்டியின் பக்கமே திரும்பும். விளையாட்டு பருவம் என்பதால் ஓரிடத்தில் இருக்காத பிள்ளைகளை சுண்டி இழுக்கும் தன்மை பாட்டியின் கதைகளுக்கு உண்டு. நல்ல அறிவுள்ள கதைகள் சொல்லி வளர்க்கும் பாட்டி அறிவுள்ள பேரனை வளர்கிறாள். சில பாட்டிகள் மூட நம்பிக்கையை பிள்ளைகளுக்கு ஊட்டும் கதை கூறி மனதை பாழடிப்பதும் உண்டு. சில பாட்டிகள் குல பெருமை கூறி பெருமையளனாகவும் சில பாட்டி குடும்ப பகமை கூறி பிள்ளைகளை கோப காரர் களாகவும் ஆக்குவது உண்டு. நிலா கதை, நரிக்கதை வருங்கால பாட்டிகள் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக் குறியே!.

தொட்டிலில் உறங்க மறுக்கும் மழலைகளுக்கு தாலாட்டு பாட்டி வசமே இருப்பு இருக்கும்.

மீண்டும் நான்  வலியுறுத்த விரும்புவது பிள்ளைகள் வளர்ப்பில் தாய்க்கே அதிக பங்களிப்பு இருக்க வேண்டும். சிலர்  பல அலுவல் காரணமாக பாட்டிகளிடம் பிள்ளைகளை முழுமையாக வளர்க்கும் பொறுப்பை கொடுத்தால் பிள்ளைகள் பிடிவாதம் பிடித்த பிள்ளையாகவும் கோபம் அதிகம் உள்ள பிள்ளையாகவும் வளரும். செல்வ செழிப்புள்ள பாட்டிகளிடம் வளரும் பிள்ளைகள் ஊதாரியாக இருக்கும். பணம் கொடுக்க மறுக்கும் போது அடாவடியாக கேட்கத் துனியும் பேரன்களையும் காண முடிகிறது.

வயதான பாட்டிக்கு ஒன்றும் தெரியாது என்ற உணர்வுள்ள பிள்ளைகள் பொய் சொல்லுதல் சிறு களவு போன்ற செயலில் கூட ஈடுபடும் .தயவு செய்து பிள்ளைகளை பெற்ற தாய் மார்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்கும் பொறுப்பை தாயே ஏற்க வேண்டும். தாயில்லா பிள்ளைகளை பாட்டி மட்டுமல்லாது பெரிய / சிறிய  தாய் போன்ற உறவுகளும் ஏற்க வேண்டும்.

பாட்டி தாத்த நல்ல கனி போன்ற இனிமையான உறவுதான் சில சமயங்களை கசப்பான மருந்தும் கொடுப்பது அவசியமல்லவா. எனவே பாட்டிக்கு ஒய்வு. தாய்க்கே பிள்ளை வளர்க்கும் பொறுப்பு. என்பதை அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன்.
உறவுகள் தொடரும்
அதிரை சித்தீக்

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 8 26

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2012 | ,

மச்சான் - உறவு...

கல்லூரி காலங்களில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை  ராகிங் செய்வார்கள் .. இதெல்லாம் ஏன் என்று கேட்டால் இருவருக்குள் நட்பு பாலம்  உருவாக சிறிய பரிகாச விளையாட்டு என்பார்கள். மூன்று அல்லது நான்கு வருட நட்புக்கு விபரீதமான கேலி கிண்டல் செய்வது என்றால், வாழ் நாள் முழுவதும் உறவாக திகழ போகும் ஒரு உறவை கேலி கிண்டல் செய்வதற்கு சொல்லவா வேண்டும்...!!

ஹல்வா கேட்கும் மச்சினி...

கல்யாணமாகி  முதல் நாள் காலையில் புதுமாப்பிள்ளை பெண் வீட்டை வெளியே செல்ல எத்தனிக்கும் மாப்பிள்ளையின் செருப்பு நேற்றிரவு இட்ட இடத்தில் காணாமல் தவிப்பார். வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு சப்தம் வரும் “மச்சான் செருப்பு இங்கே இருக்கு செறுப்பு வேணும்னா, எங்களுக்கு நல்ல ஸ்வீட் வங்கி தரனும்” என்ற நிபந்தனையோடு கேலி கிண்டல் துவங்கும். இந்த கிண்டல் சில வாரங்கள் தொடரும். சிலரின் கேலி கிண்டல் முகம் சுளிக்கும் அளவிற்கு கூடுதலாகும். சிலர் இனிப்பு என்று எதிர்பார்க்கும் பண்டங்களில்  உப்பை அதிகமாக போடுதல் போன்றவை நமதூரில் நாற்பது வருடங்களுக்கு முன்பு அதிகமாக காணப்பட்டது. அது கனிசமாக குறைந்து பேச்சளவில் மட்டுமே உள்ளது எனலாம். ஆனால், நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் கேலியும் கிண்டலும் கொஞ்சம் தூக்கலாகவே நடைபெறும். சில சமயம் விபரீத நிகழ்வுகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் ..

மாப்பிள்ளை வீட்டுக்குள் வரும் நடை பாதையில் கொட்டை பாக்கு பளிங்கு ரவை போன்றவைகளை தரையில் போட்டு அதன் மேல் புல்லு பாயை போட்டு வைத்து மாப்பிள்ளையை நடக்க வைத்து சறுக்கி விழ வைத்து வேடிக்கை பார்க்க திட்டம். அதே போன்று மாப்பிள்ளையையும் அதன்மீது நடந்து வந்தார். பாயில் கால் வைத்ததுதான் தாமதம் சறுக்கி கீழே விந்தார். பிடரியில் அடிப்பட்டு அதே இடத்தில பரிதாபமாக அவர் உயிர் பிரிந்த காட்சி அந்த பகுதியை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அந்த பகுதி மக்களின் கேலிய்ம் கிண்டலும் இன்னும் மாற வில்ல.

அன்றைய காலங்களில் புதுமண தம்பதிகளிடையே புரிந்துணர்வு ஏற்படவும் அவர்கள் இருவருக்கும் பரஸ்ப்பர உணர்வு வரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்த பட்டது. அது இன்றைய காலத்திற்கு தேவையில்லாத ஒன்று காரணம் ஆணும் பெண்ணும் இக்கால திரைப்படங்கள் சீரியல்கள் எல்லா வற்றையும் கற்று கொடுத்து விட்டதால் சம்பிரதாயங்கள் தேவை இல்லை என்றே சொல்ல வேண்டும். சில வீடுகளில் மச்சான் வரவு வெற்றியானதாகவும்  இன்னும் சில இடங்களின் துயரமாகவும் அமைந்து விடுகிறது.

மச்சான் மச்சினன் உறவு பற்றி முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். மச்சானின் மெய் காவலன் மச்சினன் எனலாம், தூத்துக்குடி பகுதி மீனவர்கள் முத்துக்குளிக்கும் போது ஆழ கடலில் மூழ்குவார்கள். அப்போது மூழ்கும் நபர் இடுப்பில் கயிறை கட்டி  மேல் மட்டத்தில் மச்சினன் பிடித்து இருப்பார் மூச்சு முட்டும் தருணம் வந்தால் கயிறை அசைப்பார், உடனே மேல் மட்டத்தில் உள்ளவர் இழுத்து கரை எற்றுவார். அந்த கயிறு மச்சினன் கையில் தான் கொடுப்பார்களாம். ஏன் என்றால் சகோதரியின் தாலி காக்க வேண்டும் என்ற உணர்வு மச்சினன் இடம் அதிகமாக இருக்குமாம்.   
தொடரும்...
அதிரை சித்தீக் (தகப்பனார் பெயர் முகம்மது இப்ராஹீம்)

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 7 16

அதிரைநிருபர் பதிப்பகம் | October 18, 2012 | ,

சகோதரன் சகோதரி பாச உறவின் மறுபக்கம் 

சகோதரன் சகோதரி பாச உறவுகளின் மறுபக்கம் மிகவும் வித்தியாசமானது. சிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவு பெற்ற அதிகாரம் வீட்டில்  கொடிகட்டி பறக்கும் தருணத்தில் அண்ணனோ தம்பியோ வீட்டில் வம்பு சண்டை அல்லது சிறு உதவி செய்யாத போது சகோதரி மூலம் தந்தைக்கு தகவல் பறக்கும். எனவே சகோதரி என்றாலே உடன் பிறந்த சகோதரனுக்கு ஆகாது, சிறுவயது போராட்டம் குரோதம் .கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும் சகோதரி பெரியவளாக ஆனா பின்பு மரியாதை கலந்த பாசம் பிறக்கும் எல்லா உதவிகளுக்கும் சகோதரனையே நாடும் சகோதரி தான் விருப்பப்படும் தீன்பண்டங்கள் கூட சகோதரன் மூலம் வாங்கி வர செய்வாள். 

பெற்றோர்கள் தன் மகன் குடும்பத்தின் எல்லாவித பொறுப்புகளையும் ஏற்கும் தருவாயில் சகோதரியானவள் இயற்கையாகவே மரியாதையை கொடுக்க ஆரம்பித்து விடுவதும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம் . 

சகோதரன் படிப்பு முடித்து பொருளீட்ட ஆரம்பித்தால் அவனுடைய சகோதரி மணவாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பிப்பது பாசத்தின் எல்லை என்றே கூறலாம். சகோதரனின் உழைப்பு ஆபரணமாகவும் வீடாகவும் மாறுவதுடன், நல்ல வரண் அமைய சகோதரனை பகரமாக வைப்பதும் உண்டு. சகோதரி, சகோதரனின் தியாகத்தை எவ்வளவு நாள் உள்ளத்தில் வைத்திருப்பாள் என்பது கால சக்கரத்தின் சுழற்சியும் வாழ்க்கை சூழ்நிலையுமே நிர்ணயிக்கும்.

இது பொதுவான கருத்து, இலக்கு நோக்கி கருத்து கூற விழைகிறேன் .....

அண்ணன் தம்பி உறவு எதிரும் புதிருமாய் இருந்து உரிமை கொள்ளும் உறவாய் மாறி மீண்டும் பகையாய் உருவெடுத்ததை கண்டோம்.  ஆனால் அக்கா தம்பி உறவு அதிகமாக பிளவு படுவதில்லை. அக்கா உறவு ஏறக்குறைய தாய்க்கு சமமான உறவு அக்காவிடம் தனது தேவைகளை கேட்பது அன்றாட நிகழ்வுகள் காலம் செல்ல செல்ல உறவுகள் பலப்படும் அக்காவிற்கு மணமானால் தம்பியின் மகிழ்ச்சி அலாதியானது. அக்காவின் கணவருக்கு கொடுக்கும் மரியாதை, இவைகளால் தம்பி பெரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து செல்லும் தம்பி மீது அக்காவிற்கு தனி மரியாதையே வந்து விடும்.

மச்சானுக்கு கொடுக்கும் மரியாதை தனக்கே தருவதாக எண்ணி மகிழ்வாள். சகோதரிக்கு மணமானால், சகோதரியின் கணவன் சற்று ஏறக்குறைய எஜமானன் தோரணையில் செயல்படுவார். சற்றும் தயங்காமல் பணிவிடை செய்யும் மச்சினனின் பணிவிடை காணப்படும். தனது வாழ்க்கையின் துவக்கம் சகோதரியின் மன வாழ்க்கை கிடைத்த பின்புதான் என கூறும் சகோதரன் உறவு உயிருக்கு நிகரான உறவு.  இப்படிப்பட்ட தியாக உள்ளம் கொண்ட உறவு பிரிவதும் தொடர்வதும் அவரவர் துணையின் செயல்பாடுகளை பொறுத்தே அக்கா தம்பி உறவு தொடரும்.

அதே போன்று அண்ணன் -தங்கை உறவு ..அண்ணன் தங்கைக்கு தரும் பரிசு உறவாக தொடரும் தங்கைக்கு அண்ணன் தரும் ஆதரவு ..சிறு வயது கொண்ட தங்கைக்கு பரிந்து பேசி தங்கை அன்பை பெரும் அண்ணன் ..அன்பு மிகுதியால் அண்ணனாக தெரியாமல் அன்பின் மிகுதியால் தந்தை ஸ்தானமாக தெரிவான் தங்கையின் கணவர் சின்ன மச்சான் சில நேரங்களில் தோழனாய் சுற்றி திரியும் தருணமும் உண்டுசகோதரன் சகோதரி உறவு பாசமலர்கள் தான்.  ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது போல, இந்த உறவிலும் மறுபக்கம் உண்டு அதிரை நிருபரின் பதிவர்கள் தங்களின் எதிர்மறை கருத்தை வழங்கி இவ்வாக்கத்தை வலுப்பெறச் செய்ய வேண்டுகிறேன்.
தொடரும்...
அதிரை சித்தீக் 
(தகப்பனார் பெயர் முகம்மது இப்ராஹீம்)

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 6 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2012 | ,

அக்கா…. தங்கை உறவு...! 

அக்கா தங்கை உறவு ஒரு கொடியில் பூத்த   இருமலர்கள் போன்றவர்கள்.  சிறு வயது முதற்கொண்டு மணமாகும் வரை நல்ல தோழியாக, செல்ல தோழியாக வளர்ந்து வருவார்கள். தங்கைக்கு சிகை அலங்காரம் அக்காவின் கைவண்ணமாகதான்  இருக்கும். தனது மனக்குறை உடல் உபாதை பற்றி பேசிக்கொள்ளுதல் மற்றும் பல அந்தரங்க விசயங்களை பரிமாறி கொள்ளும் அளவிற்கு  அற்புதமான உறவு அக்கா தங்கை உறவு.  .மலர்களின் வாழ்நாளை போல மிகவும் குறைந்த ஆயுளை கொண்ட உறவு. 

அக்காவிற்கு மணமான பிறகும் கூட   அக்கா தங்கை உறவு சந்தோசமாகவே தொடரும்.. புதுமனபெண்ணான அக்காவிற்கு தங்கையின் பணிவிடை  மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும்  அக்காவின் கணவரின் பரிகாசம். மச்சினியின் பதில்  பரிகாசம் அழகிய நாட்கள்.

சில வருடங்கள் கழித்து தங்கையின் கல்யாணம் நடந்தேறும். ஆனால், அந்த தருணத்தில் தான்  அக்காவின் மனதில் நெருடல்கள் ஏற்படும் "எனது கணவருக்குசரியான மரியாதை கொடுக்க படவில்லை முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் துவங்கும் மனகசப்பு நாளாக நாளாக கூடுதலாகும் .அக்கா தங்கை இருவரில் யாராவது ஒருவரின் மன வாழ்வுதான் சிறந்திருக்கும். பணம் பொருள் ஈட்டுவதில் யார் கணவர் கூடுதலாக முனைகிறார்களோ ..அவர்களின் நடவடிக்கைகளால் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்   கணவன் மீதுள்ள ஈடுபாடு சகோதரி  பாசம் காணாமல் போய் விடுவதுதான் இயற்கை என்றாலும் சில நேரங்களில் மற்றொரு பரிதாபமான சூழல்.

ஒரு தாய் மக்களான ஒருத்தி பெரும் சீமாட்டியாகவும் மற்றொருத்தி பரம ஏழையாகவும் இருக்கும் தருணத்தில் கணவனின் சொல்கேட்டுகணவன் வழிசெல்லும் அக்கா தங்கை உறவு திசை மாறும் பறவைகளுக்கு  ஒப்பாகும் இவர்கள் இருவரும் மீண்டும் சந்திப்பது சந்தோஷ மகிழ்வாக இருக்குமா என்பது சந்தேகமே ..!தனது கணவனின் இயலாமையை சொல்லி அழ உடன் பிறந்த சகோதரிக்கு நேரம் இருக்காது என்பதுடன் சந்தோசத்தில் தழைத்த சகோதரிக்கு அழுது புலம்பும்  சகோதரியை காண பிடிக்காமல் போகும் நிலை பரிதாபமான நிலை.

ஒரு சகோதரி செல்வசெழிப்பில் சொந்த ஊரில் வசதி நிறைந்த மாளிகை கட்டி அதில் குடியிருக்கும் சூழ்நிலையில் கணவனின் தொழில் நிமித்தம் காரணமாக கணவர் இருக்கும் வெளியூருக்கோ ,அல்லது வெளிநாட்டிற்கோ செல்லும் போது அந்த மாளிகையை பூட்டி அந்த மாளிகைக்கு காவல் காக்க சம்பளத்திற்கு ஆள் வைத்து விட்டு செல்கிறாள் .அதே சந்தர்பத்தில் தன உடன் பிறந்த சகோதரி வீடில்லாமல் குடிசையில் வாழும் சூழல் ஏழை சகோதரி  நிலையை எட்டி பார்க்க முடியாத உறவுதான் அக்கா தங்கை உறவு. பெண் பிறரை சார்ந்து வாழும் நிலை.

ஒரே வீட்டில் வாழும் சகோதரிகள் .கிழக்கு பக்கம் வாழும் சகோதரி செழிப்பாகவும் மேற்கு பாவம் பரம ஏழை ஒரே வீடு ஒரு புறம் பல சவ்கர்யங்கள் ..,மறு புறம் கஷ்டம் ஆனால் ஒருவருக்கு ஒருவர் உதவ முடியாத சூழல்...! இப்படி தான் சார்ந்திருக்கும் கணவனின் சூலில் இணைந்து கொள்ளும் சகோதரியால் உடன் பிறந்த சகோதரிக்கு உதவிட இயலா நிலை ..,சில நேரங்களில் தனது வாழ்வின் வளத்தை மேலும் அதிகரித்து கொள்ள சகோதரிக்கு பாதகமாக செயல்படும்..சகோதரிகளும் உண்டு பிறந்து வளந்ததெல்லாம் ஒரே சூழல் விதி வசத்தால் இவ்வளவு ஏற்ற தாழ்வு.

மனசாட்சியுடன் மார்க்க வழிமுறையுடன் நடந்தால் எந்த சூழ்நிலையிலும் உடன் பிறந்த சகோதரிக்கு மற்ற சகோதரி உதவிட முடியும், சிலர் வருடத்திற்கு ஐந்து ஆறு லட்சம் ஜக்காத்  கொடுக்கும் நிலை இருந்தும்  உடன் பிறந்த சகோதரியை எண்ணி பார்க்காத நிலையை என்னவென்று சொல்வது ..? 
தொடரும்...
அதிரை சித்தீக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு