நவீன மவ்லூது - கண்டனங்களுக்கு அப்பாற்பட்டது !
முன்னுரை:
மெளலாய சல்லி வசல் லிம்தாயி மன் அபதா
அலா ஹபீபிக்க கைரில் ஹல்க்கி குல்லி ஹிமி
என்று ரிதம் அமைய....
நார்சா - கம்பன் எக்ஸ்பிரஸில் வருகிறது....
---------------------------------------------------------------------------------
ஏக இறையோனே... எல்லாம் வல்ல அல்லாஹ்வே !
என் ஊரு நிலைமைகளை... சொல்லுகிறேன் நீ கேளு !
தயாளம் நிறைந்தோனே... தங்கடம் நீக்கிவிடு!
இணையில்லாப் பெரியோனே... இம்முசை போக்கிவிடு !
ஆட்டைக் கழுதையாக்கி அசர வச்ச எங்கூரு...!
கோட்டை போல பள்ளி கட்டி தொழுது வரும் நல்லூரு..!
கான்வெண்ட், ஹைஸ்கூலு, கல்லூரி போனாலும்...
புளியமரம், ரேவடின்னு புள்ளேபோய் படிச்சாலும்
பாஸ்போர்ட்டு எண்ணத்தாலே... படிப்பு ஆச்சு...
கல்லி வல்லி
அப்போ ! இடுப்பு வலிச்ச அடுத்த கணம் நாசுடு...
சுத்திக் குலவை விட்டு... சுயமாகப் பெப்பாங்க...
இப்போ வலின்னா... ஏறுராங்க தஞ்சாவூரு
கத்தாமே பெக்கனும்னு கத்தி போட்டு பெத்துக்குறாங்க...
(ஏக இறையோனே....)
எறச்சியினு வாங்கப்போனா... வெலகிலோ நானூறு
மத்தபடி, மீனெல்லாம் மனை விலையாயிடுச்சு - சரி
மனையாச்சும் வாங்கலாம்னா... மண்ணுவெல கூடிடுச்சு!
வரதட்சனை கூடாதுன்னு... கண்டிப்பாக சொன்னாலும்
உண்டிப்பணம் போல... ஒளிச்சுகிட்டு வாங்கிடுறாங்க...
நேரான மார்க்கம் சொல்ல... வந்தாரு ஒருவர்
"மார்க்கம் இதுதான்"ன்னு சொல்லிட்டாரு அவரும்!
அவரை,ஒரு மார்க்கம் பண்ண... நிலுவையில ஒரு வழக்கு !
(ஏக இறையோனே....)
கூட்டாளி வீட்டு வைபவன்ம்னு... கொண்டாட வந்த பாலகரை
கொடுமை ரொம்ப படுத்திடுச்சு... கொலைகாரக் கொசுக் கூட்டம்...
கொசு பேட்டுச் வச்சிருந்தும் பாலகரு தூங்கலையே...!
சிட்டாகப் பறந்துட்டாரு... பச்ச பெல்ட் ஊரு பக்கம் !
வரப்பு பக்கம் போனாக்கா... அந்தப் பக்கம் ஆளிருக்கும்...
காட்டுப் பக்கம் ஒதுங்கலாம்னா... கணைப்பு சப்தம் கேட்கும்...
வெட்டவெளி வேனான்னு... வீட்டிலேயே கக்கூஸ்....
பொட்டுத் தண்ணியில்லாமே... வச்ச பைப்பு இத்துடுச்சு....
(ஏக இறையோனே....)
பச்சைத் தண்ணி குளங்களெல்லாம்... பள்ளிக்குன்னு ஆனதாலே...
சீர்போல வந்த தண்ணி... CMP வறண்டு போச்சு....
CMP தண்ணி வந்தாலே... அஞ்சு குளம் நிறைஞ்சிருக்கும்...
அக்க-பக்க கிணறல்லாம்... அலையடிச்சு தண்ணி இருக்கும்...
(ஏக இறையோனே....)
எங்க கவி வேட்டிடுத்தி...!? விளையாண்ட வெட்டிக்குளம்
வெடி பொருக்கு வெளஞ்சு... வேலிக்குருவை நிக்கிதங்கே !
தப்படிச்சு குளிச்ச குளம்... தரைமட்டமாகிடுச்சு....
முட்டை கட்டி குளிச்ச குளம்... பொட்டக்கரையாயிடுச்சு....
தாந்தோண்டி குளம் தூத்து… வீடு கட்டி வாழுறாக…
தண்ணிக் கடைகளெல்லாம்... ஊரைச் சுத்தி வந்துடுச்சு..
(ஏக இறையோனே....)
இன்பம் நிறைந்தவனே.... இம்முசுகளைக் கலைந்துவிடு...
உன்னையே வணங்குகிறோம்... உம்மிடத்தே ஏகுகிறோம்
(ஏக இறையோனே....)
ZAEISA
முன்னுரை:
மெளலாய சல்லி வசல் லிம்தாயி மன் அபதா
அலா ஹபீபிக்க கைரில் ஹல்க்கி குல்லி ஹிமி
என்று ரிதம் அமைய....
நார்சா - கம்பன் எக்ஸ்பிரஸில் வருகிறது....
---------------------------------------------------------------------------------
ஏக இறையோனே... எல்லாம் வல்ல அல்லாஹ்வே !
என் ஊரு நிலைமைகளை... சொல்லுகிறேன் நீ கேளு !
தயாளம் நிறைந்தோனே... தங்கடம் நீக்கிவிடு!
இணையில்லாப் பெரியோனே... இம்முசை போக்கிவிடு !
ஆட்டைக் கழுதையாக்கி அசர வச்ச எங்கூரு...!
கோட்டை போல பள்ளி கட்டி தொழுது வரும் நல்லூரு..!
கான்வெண்ட், ஹைஸ்கூலு, கல்லூரி போனாலும்...
புளியமரம், ரேவடின்னு புள்ளேபோய் படிச்சாலும்
பாஸ்போர்ட்டு எண்ணத்தாலே... படிப்பு ஆச்சு...
கல்லி வல்லி
அப்போ ! இடுப்பு வலிச்ச அடுத்த கணம் நாசுடு...
சுத்திக் குலவை விட்டு... சுயமாகப் பெப்பாங்க...
இப்போ வலின்னா... ஏறுராங்க தஞ்சாவூரு
கத்தாமே பெக்கனும்னு கத்தி போட்டு பெத்துக்குறாங்க...
(ஏக இறையோனே....)
எறச்சியினு வாங்கப்போனா... வெலகிலோ நானூறு
மத்தபடி, மீனெல்லாம் மனை விலையாயிடுச்சு - சரி
மனையாச்சும் வாங்கலாம்னா... மண்ணுவெல கூடிடுச்சு!
வரதட்சனை கூடாதுன்னு... கண்டிப்பாக சொன்னாலும்
உண்டிப்பணம் போல... ஒளிச்சுகிட்டு வாங்கிடுறாங்க...
நேரான மார்க்கம் சொல்ல... வந்தாரு ஒருவர்
"மார்க்கம் இதுதான்"ன்னு சொல்லிட்டாரு அவரும்!
அவரை,ஒரு மார்க்கம் பண்ண... நிலுவையில ஒரு வழக்கு !
(ஏக இறையோனே....)
கூட்டாளி வீட்டு வைபவன்ம்னு... கொண்டாட வந்த பாலகரை
கொடுமை ரொம்ப படுத்திடுச்சு... கொலைகாரக் கொசுக் கூட்டம்...
கொசு பேட்டுச் வச்சிருந்தும் பாலகரு தூங்கலையே...!
சிட்டாகப் பறந்துட்டாரு... பச்ச பெல்ட் ஊரு பக்கம் !
வரப்பு பக்கம் போனாக்கா... அந்தப் பக்கம் ஆளிருக்கும்...
காட்டுப் பக்கம் ஒதுங்கலாம்னா... கணைப்பு சப்தம் கேட்கும்...
வெட்டவெளி வேனான்னு... வீட்டிலேயே கக்கூஸ்....
பொட்டுத் தண்ணியில்லாமே... வச்ச பைப்பு இத்துடுச்சு....
(ஏக இறையோனே....)
பச்சைத் தண்ணி குளங்களெல்லாம்... பள்ளிக்குன்னு ஆனதாலே...
சீர்போல வந்த தண்ணி... CMP வறண்டு போச்சு....
CMP தண்ணி வந்தாலே... அஞ்சு குளம் நிறைஞ்சிருக்கும்...
அக்க-பக்க கிணறல்லாம்... அலையடிச்சு தண்ணி இருக்கும்...
(ஏக இறையோனே....)
எங்க கவி வேட்டிடுத்தி...!? விளையாண்ட வெட்டிக்குளம்
வெடி பொருக்கு வெளஞ்சு... வேலிக்குருவை நிக்கிதங்கே !
தப்படிச்சு குளிச்ச குளம்... தரைமட்டமாகிடுச்சு....
முட்டை கட்டி குளிச்ச குளம்... பொட்டக்கரையாயிடுச்சு....
தாந்தோண்டி குளம் தூத்து… வீடு கட்டி வாழுறாக…
தண்ணிக் கடைகளெல்லாம்... ஊரைச் சுத்தி வந்துடுச்சு..
(ஏக இறையோனே....)
இன்பம் நிறைந்தவனே.... இம்முசுகளைக் கலைந்துவிடு...உன்னையே வணங்குகிறோம்... உம்மிடத்தே ஏகுகிறோம்
(ஏக இறையோனே....)
ZAEISA


