Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மன்னிப்பு. Show all posts
Showing posts with label மன்னிப்பு. Show all posts

மாயை 13

ZAKIR HUSSAIN | April 17, 2016 | , , ,

அன்றைக்கு கொஞ்சம் வித்யாசமாக பயணிக்க நினைத்து நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஸ்லிம் ரிவர் எனும் ஊருக்கு காரில் போய் பின்பு ரயிலில் திரும்பினேன்.



பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 70 வயது இருக்கும் என்னிடம் அவராகவே பேச்சுக்கொடுத்தார்.

மனதுக்குள் அவர் ஏதோ சுமப்பது போல் என் உணர்வு சொன்னது.. தமிழ்நாட்டில் இருந்து வருவதாக சொன்னார்...ஏதோ  நீடாமங்களம், மன்னார்குடி   ஊர் பக்கம் மாதிரி சொன்னார்.

இந்தியாவுக்கு சொந்தமான அடர்த்தியான காட்டன் சட்டை...கையில் கொஞ்சம் பெரிய சைஸ் லெதர் பெல்ட் வாட்ச். இங்க் பேனா, கையில் ஏதொ நேத்திக்கட கயிறு, ஒழுங்கு படுத்தாத மீசை..குரலில் ஒரு விதமான ஸ்ரத்தையின்மை..அனுபவத்தை எழுத ஆரம்பித்த வெள்ளைமுடிகளின் ஆதிக்கம்.

முதன் முறையாக மலேசியா வந்ததாக சொன்னார்.

நீங்கள் தேடி வந்தது.... உங்களிடம் சின்ன வயதில் பழகிய பெண்ணா?.... இப்போது வயது எப்படியும் 60 தை தாண்டியிருக்க வேண்டுமே??. இப்படி கேட்ட உடனே...

எப்படி இவ்வளவு துள்ளியமா சொல்ரே தம்பி? என்றார்

“இந்த வயதில் இவ்வளவு தூர பயணம்...காதல் / நட்பு இரண்டுக்குத்தான் மிகப்பெரிய சாத்யம்” என்றேன்

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன். சம்பாத்யம் சரியாக இல்லாமல் , தங்கை , தாய் , சகோதரன் எல்லோரையும் கவனிக்க ஓய்வில்லாமல் உழைத்தேன் அற்ப காசுக்கு...என்கிட்டே அன்பா இருந்தது இந்த புள்ளெதான் [இன்னும் புள்ளெ இமேஜில் இருந்து அந்த அம்மா டெலிட் ஆகலே]. எல்லோரும் என்னெ வையும்போது 'நீ ஒரு நாள் நல்லா வருவே"னு தைரியம் சொன்னது இந்த புள்ளெ தான்

ரயிலின் வேகத்துக்கு அவரின் பேச்சு கொஞ்சம் திணறியது. கொஞ்சம் அவதானித்தே அவர் பேசினார்.
 

'அப்புறம் நீங்க விரும்பறதெ சொல்லலியா?''

சொல்லலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாவது தடைவரும்...ஆனா அது ஒருமுறைகூட அப்படி என்னிடம் பேசியதில்லெ...மனசுலெ இருந்திருக்கலாம்.

ஒரு நாள் சொல்ல நினைத்து , பண வசதி , வறுமை எல்லாத்தடையும் மீறி சொல்ல போனால் ...அந்த புள்ளெக்கு கல்யாணப்புடவை எடுக்க கும்பகோணம் பஸ்ஸில் அந்த புள்ளெயோட வீட்லெ உள்ளவங்க புறப்பட்டு போனவுடனே என்னுடைய மனசை மாத்திக்கிட்டேன்...பிறகு அந்த புள்ளெ இங்கெ கல்யாணம் கட்டி இங்கெ வந்து இப்போதைக்கு பெரிய குடும்பம்...வசதி அப்படி ஒன்னும் சொல்லிக்கிறாப்லெ இல்லெ.. எனக்கு பிறகு கல்யாணம் , குடும்பம் , பிள்ளைங்க , பேரப்புள்ளைங்க, கார் , வீடு , சொத்து , எல்லாம் குறையில்லெ....

'இருந்தாலும் உங்க குடும்பத்திலெ...இப்போதைக்கு உங்கள் சொல்லுக்கு அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லெ..."


எப்படி தம்பி இப்படி கரெக்ட்டா சொல்றே?..

'இது ஒன்னும் அதிசயமில்லெ....இது பரிணாம வளர்ச்சி மாதிரியான விசயம், செடி வளந்து பிறகு வயதாகி காய்ந்து போற மாதிரி..'

இப்போ அவங்க வீட்டுக்கு போனீங்களா?...

'போனேன்...அவங்க வீட்டுக்காரர் , அந்த புள்ளே , அதனோட பேரப்புள்ளைங்க எல்லாம் என்னெ நல்லா கவனிச்சாங்க..." இப்போ நாங்க ரென்டு பேரும் வாழ்க்கையின் கடைசிய்லெ நிக்கிறோம், எனக்கு உள்ள சீக்கு புணியெ சொல்லிக்காண்பிச்சேன்'…

அந்த புள்ளே நான் அவங்க வீட்டெ விட்டு புறப்படும்போது என்ன சொன்னிச்சு தெரியுமா?..." 

நீங்க நல்லா இருப்பீங்க..உங்களுக்கு ஒரு குறையும் வராது"...

"உன் கிட்டே பேசினப்புறம் மனசு ரொம்ப லேசாயிடுச்சு தம்பி " என்றார்.  உன்னெ பார்த்தப்போ எனக்கு என்னவோ என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லனும்னு தோனுச்சி'''


சிலரின் எண்ண ஒட்டம் எவ்வளவு தூரம் அன்பைத்தேடி இவ்வளவு தூரம் பயணம் செய்ய வைத்துள்ளது என்பதை நினக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. 

மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான் இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.

உறவு என்பதே மாயை...இந்த மாயையை நிஜமாக்கி பின்னப்பட்டதுதான் வாழ்க்கை. இந்த மாயையில்தான் மனிதன் இத்தனை வக்கிரங்களையும், அன்பையும், தர்மத்தையும், கஞ்சத்தனத்தையும் ..

மன்னிக்கும் தன்மையையும் வன்முறையையும் நிஜம் என்று நம்பி வாழ்கிறான். உறவுகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடிமானம் இருக்காது, வெல்வதற்கு எதுவும் இருக்காது... பின்னாளில் உறவுகளின் நடத்தையை வைத்து அந்த மாயையில் ப்ரயோஜனம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.

எல்லோருக்கும் காலம் தான் பதில் சொல்லும்.

ZAKIR HUSSAIN

யா அல்லாஹ்...! மன்னிப்பாயாக... 10

அதிரைநிருபர் | May 27, 2014 | , , , ,

யா அல்லாஹ்...! மன்னிப்பாயாக... [காணொளி தமிழில் எழுத்தோடை...]
படைத்தவன் அளித்த அருட்கொடைகள் ஏராளம் அதில் ஆயிரமாயிரம் பலன்களை ஒவ்வொரு மணித்துளிகளிலும் அடைந்து வந்தாலும், மனிதனென்ற அடிப்படையில் நிறை குறை சுட்டி இறைவனிடம் கையேந்த மறந்த தருணங்களை மூன்று விதமானச் சூழலை உணர்வுகளின் உயிரோடு உறவாடும் வரிகளைக் கொண்டு காட்சிக் காணொளியாக அமைத்து இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் அழகிய பாடலாக நகர்ந்து செல்லும் காணொளிக்கு தமிழ் மூச்சு கொடுத்து அதன் அச்சு பிசகாமல் மனதில் பதிக்கும் கவிதை வரியாக வழங்கவும் அதனை அப்படியே காட்சிகளுக்குள் நடைபோட எழுத்தோடையாக்கிட உதவிய சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
நன்மை நாடி, நலன் வேண்டி பகிர்ந்தளியுங்கள் அதற்கான கூலியை அல்லாஹ்விடமே வேண்டிப் பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ் !

-- அதிரைநிருபர் பதிப்பகம்

மன்னிப்பாயாக ! 8

அதிரைநிருபர் | October 19, 2011 | , ,

பூச்சாண்டி கட்டிக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலும் வந்து அதற்கே உரிய சலசலப்புடன் நடந்தேறியது. அதிலும் கடந்த சில நாட்களாக நாமும் பரபரப்புடன் இருந்தோம், அதிரை வலைத்தளங்களும் அவரவருக்கு எட்டிய தகவல்களை உடனுக்குடன் காணொளிகளாகவும் ஒலிப்பேழைகளாகவும் பரிமாறிக் கொண்டிருந்தனர், அவைகள் இன்னும் தொடரலாம்...

அதிருக்கட்டும், சற்றே மாற்றம் வேண்டி நம் செவிகளுக்கும் அதோடு உணர்களோடு ஊடுருவவும், சிந்திக்க தூண்டும் காணொளி உங்களின் பார்வைக்காக !



--  அதிரைநிருபர் குழு



உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு