Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

அணு அணுவான மின்சாரமே ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2016 | , , ,


தட்டுப்பாடு, கட்டுப்பாடு, ஊரெல்லாம் ஒரே கூப்பாடு ! மின்சாரத்தை வெட்டாதே ! எங்கள் வாழ்வாதாரத்தில் விளையாடாதே ! உயிரைப் பனையம் வைக்காதே... தொடரும் போராட்டங்கள். இதெல்லாம் எதற்கென்று தெரியாததுபோல் ஒரு கூட்டம் தான் உண்டு தனது நிலைகண்டு நாட்களை கடத்துகிறது.

மின்சாரத்திற்கான தேவையுடைய மக்களின் கோரிக்கையைவிட அது கிடைக்கப்பெறும் உலைய மூட போராடும் மக்களின் கோரிக்கை வலுத்திருந்து இப்போது வழுவிழந்து நிற்கிறது ! மின்சாரத்தை தொட்டாலும் பேராபத்து அதனை கிடைக்காமல் விட்டாலும் ஆபத்து !

என்ன செய்யலாம் !? -  கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை !

அணுவை வைத்து மின்சாரம் எப்படி உற்பத்தி செய்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்  

அணுக்கரு பிளவுக்கு முக்கியமாக  பயன்படுத்தப்படுவது   யுரேனியம் அல்லது   புளுட்டோனியம் இதில் எது நம் நாட்டின் மண்ணில் அதிகம் கிடைக்கின்றதோ   அதை வைத்து . “இந்த அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான  மூலப் பொருள் தயார் செய்யப்படுகின்றது    ஒவ்வோர் அணுமின் உலையிலும் அணுக்கரு பிளப்புக்கு   தேவையான யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள். எதிர் எதிராக  இருக்கும் இந்தக் கம்பிகளைக் “கோர்’ என்று சொல்வார்கள்.(நாம் கார்களுக்கு பயன்படுத்தும் ரேடியேட்டரில் இருப்பதுபோல்)   அணு உலையில் நடுப் பகுதியில் அணுக்கலனில் உள்ள தண்ணீரில் இந்தக் கோர் வைக்கப்பட்டு இருக்கும். உலோகத்தால் செய்யப்பட்ட  இந்த அணுக்கலன் மிகவும் பாதுகாப்பானது.(அப்படித்தான் சொல்றங்க!) அணுக்கரு பிளப்பை  கட்டுக்குள் வைப்பதற்குப் “போரான்’ இல்லையென்றால்  காட்மியம் என்ற கட்டுப்பாட்டு கருவி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு   கட்டுப்பாட்டு கம்பிகள் என்று சொல்வார்கள் இது செயல் இழந்தால் யாரும் செயல் பட முடியாது

அணுக்கருவைப் பிளக்கும் போது (அதாவது நியூட்ரான்கள்  என்னும் அணுத்துகள்களை  மோதி பிளக்க செய்வது)  மிக அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் . அந்த வெப்பத்தைக்கொண்டு     கலனுக்குள் உள்ள நீரை கொதிப்படைய செய்து நீரை ஆவியாக்குவார்கள் இங்கே வெளிப்படும் அணுக்கதிர்கள்  வெளியே வராத அளவுக்கு   அணுக்கலனின் சுவர் மிகவும் தடிப்பாகவும் அணு கதிர் வீச்சை தாங்க கூடிய தன்மையிலும் அமைக்கப்பட்டிருக்கும் .

மேலும் அணுவை  பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து  நீராவி உருவாகும் நிலக்கரி எஞ்சினில் நீராவி வருவதை விட பலமடங்கு அதிகமான அழுத்தம் மிகுந்த அந்த நீராவி குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு   அந்த அழுத்தத்தின் மூலம்  பெரிய அளவில் உள்ள டர்பன் என்று சொல்லப்படும் டைனமோ சுழற்றப்படும் அது சுற்றுவதன்  மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படும் 

இந்த  வகையில் பார்க்கும்போது அணுமின்சாரம் உருவாக்க அடிப்படையாக அணு உலையில் ஏற்படும் வெப்பமே காரணம் வெப்பத்தைத் தணிக்க (சூட்டை தணிக்க)தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது.மறுபக்கம் உலையில் (தொட்டியில்) . அணுக்கலனின் வெப்பம் குறிப்பிட்ட அளவை  தாண்டாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் . இதனால் தண்ணீர் மூலம் அணுக்கலன் எப்போதும் சூட்டை தனித்துக்கொண்டே(COOLING SYSTEM)    இருக்க வேண்டும் இதற்கு அதிகமாக தண்ணீர்   தேவைப்படும்.அதனால் தான் அணு உலைகள் எப்போதும் கடற்கரை ஓரமாக அமைக்கின்றார்கள் 

கடல் நீரை பெரிய பம்புகள் வைத்து உரிந்து அணுகலன் உள்ளே செலுத்தி மறுபக்கம் அந்த நீர் சூடாக வெளியே வரும் இப்படி கடல் நீர் உறிஞ்சப்படும் போது மீன்களும் மீன் குஞ்சுகளும் உறிஞ்ச படாமல் பாதுகாப்பு  செய்யப்பட்டு இருக்கும் இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் அணுகலன் அதிக அளவில் சூடாகி வெடித்து விடாமல் இருக்கும் இதில்  ஏதாவது தவறு ஏற்பட்டு, தண்ணீர் வராமல் நின்று போனால்   அணு உலை சூடு தாங்காமல் வெடித்து விடும். அப்படி வெடித்தால் என்ன ஆகும் என்று அதனைச் சுற்றியிருப்பவர்களுக்கு தெரியும் முன்பே உயிர்  அவர்களை விட்டு பிரிந்து போயிருக்கும்.

Sஹமீது

கந்தூரி ஊர்வலத்தின்போது விதிமீறும் மின்வாரியத்துக்கு ADT-யின் மடல்! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2013 | , , , , ,


3.12.2013

உதவி மின் பொறியாளர், அவர்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம்
அதிராம்பட்டினம் - 614701

பொருள்: கந்தூரி ஊர்வலத்தின்போது விதிகளுக்குப் புறம்பாக மின்னிணைப்புத் துண்டிக்கப்படுவது
பார்வை : 9.5.2013 தேதியிட்ட தங்களுக்கான எங்கள் மடல்

ஐயா,

அதிராம்பட்டினத்தில் கந்தூரி ஊர்வலங்களின்போது விதிகளுக்குப் புறம்பாக மாலை 4 மணிமுதல் இரவு பத்து மணி வரையிலும் மின்னிணைப்புத் துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் கந்தூரியின்போது வாரிய விதிகளுக்கு எதிராக ஆங்காங்கே மின்னிணைப்பைத் துண்டிப்பதால் பொதுமக்கள் பலவிதக் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

கந்தூரித் தேர் செல்வதற்காக மின்னிணைப்பைத் துண்டித்துவிட்டு, தாழ்வான மின்கம்பிகளை உயர்த்திக் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு மின் கம்பியை உயர்த்திய ஒருவர், வீடுகளிலிருக்கும் இன்வெர்ட்டரின் எதிர்மின்னலை தாக்கி, பல நாள்கள் கோமா நிலையிலிருந்து மருத்துவ மனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார் எனும் தகவல் தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

எனவே, எதிர்வரும் 4.12.2013 அன்று கந்தூரி தினத்தில் விதிகளுக்குப் புறம்பாக மின்வாரிய ஊழியர்கள் மின் தடை ஏற்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி!

ஜமீல் M. ஸாலிஹ்
செயலாளர் (9043727525)

நகல்கள்:
1. மாண்புமிகு மின்வாரிய அமைச்சரின் உதவியாளர் Thiru Rajesh Lakhoni IAS Email: enersec@tn.gov.in
2. செயற்பொறியாளர், அவர்கள், மின்சார வாரிய அலுவலகம், பட்டுக்கோட்டை.

ADT

மின்சாரம் - அப்படீன்னா என்னங்க !? 50

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2012 | , , , , , , ,

மின்சாரம் – ஆட்சியை மாற்றுகிறது, ஆளுபவர்களை மாற்றி பேச வைக்கிறது, இருட்டை அழைக்கிறது, கொசுவுக்கு வரவேற்பு வைக்கிறது, உரைந்த ஐஸ்-ஐ உருக வைக்கிறது… இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய சூழலில் நமதூரில் மட்டுமா தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு தலை விரித்தாடுகின்றது இதற்கு காரணம்தான் என்ன?

இதற்காக கார் எடுத்துகிட்டு போய் அப்பர் மலையேறி தனிமையில் யோசிக்க வேண்டியதில்லை, முதலில் தேவைக்கு  அதிகமாக நாம் மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதற்கு காரணம் பெரும்பாலான எலக்ட்ரானிக் (மின்னனு) சாதனங்கள் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அடுத்ததாக அரசும்  உற்பத்தியை அதிகரித்து இருக்க வேண்டும்  ஆனால் முந்தை, இன்றைய அரசுகள்  அதைச் செய்யவில்லை. அவ்வாறு அரசு  செய்யாததால் ஆறு அறிவு  படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான்.

மின்சாரம் மின்சாரம் என்ற கூக்குரல்! ஆனால், மின்சாரம் அப்படின்னா என்ன  ?

இந்த கேள்வியை அணு உலை எதிர்ப்பாளரிடம் கேட்டாலும் சரியான பதில் வராது அதையே அணு உலை  ஆதரவாளரிடம் கேட்டாலும் சரியான பதில் வராது. ஏன் அதிராம்பட்டினம் மின்சாரத்துறையிடம் கேட்டால் கூட சரியான பதில் கிடைக்குமா என்பது  சந்தேகமே.  இதை சொல்ல தலையை சுத்தி மூக்கை சொறியனுமா என்று 'யாசிர்' புலம்புவது காதில் விழுகின்றது விசயத்திற்கு வருவோம்.

மின்சாரம் என்றால் என்ன?  ஒளி என்பது ஒரு வகை ஆற்றல், ஒளியை புரோதான் (proton) துகள்கள்  என்று சொல்லலாம். அனைத்து பொருள்களிலும் எலக்ட்ரான்  என்ற மின்னணு ஒன்று (இறைவன்  படைப்பில் எத்தனை விதங்கள்)  உண்டு இந்த எலக்ட்ரானுக்கு கொஞ்சம் ஆற்றலைக் (அதாவது கொஞ்சம்  சூடு அல்லது உராய்வு) கொடுத்தால், அது இருக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும். இப்படி இந்த  எலக்ட்ரான் ஓட்டத்தைதான்  நாம் மின்சாரம் என்கிறோம். இந்த எலக்ட்ரான் ஓடுவதை தொட்டால் மரணம் தான் இது ஓடாமல் நின்றாலும் மரண வேதனைதான்.

மின்சாரம் என்பது  இரண்டு வகைப்படும் ஒன்று AC கரண்ட்  (இதிலும் இறைவன் ஜோடிகளை புகுத்தி உள்ளான்) இரண்டு ஜோடிகள் உள்ளன. இரண்டாவது DC கரண்ட்  இதில் இரண்டு ஜோடிகள் உள்ளன. அதாவது பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இங்கே  ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும்  ஜோடியில் ஒன்று இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருப்படியாக எதையும் செய்ய முடியும் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இரண்டும் இருந்தால் தான் இயக்கவோ அல்லது செலுத்தவோ முடியும்.


AC மற்றும் DC மின்சாரம் என்றால் என்ன ?

AC  - மின்சாரம்

AC (ALTERNATIVE CURRENT) மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு கடத்த முடியும் (மத்திய அரசிடம் 'அம்மா' தனி வழித்தடம் கேட்பது இப்போது புரிகிறதா?). எனவேதான் நம் மத்திய அரசு நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி செய்து கர்நாடகவிற்கு கடத்துகின்றது. இது  கடத்தலுக்கு எளிமையாய் இருப்பதால் தான் தொழிற்சாலை வீடுகள் அனைத்திற்கும் இந்த AC மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த AC யை கடத்துவதற்கு செலவும் மிக குறைவு. நம் வீடுகளில் 220-வோல்ட்டுக்கு சிறிய அளவிலான சில்க் (Silk) வயரை பயன்படுத்தி அதாவது விலை  மலிவான கடத்தி / (wire) ஒயர்களை பயன்படுத்தி AC மின்சாரத்தை எளிமையாக  கடத்தி விடலாம். ஆனால், இந்த வகை கரண்டை சேமித்து வைக்க முடியாது.

DC - மின்சாரம்

(DIRECT CURRENT) DC மின்சாரம் என்பது பேட்டரி (Battery) மற்றும் சோலார் (Solar) செல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். DC மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. காரணம் மின் சிதைவு அல்லது இழப்பு (power loss) என்று சொல்லப்படும்  மின்சார இழப்பு இந்த DC மின்சாரத்தில் ஏற்படும். ஆகவே, இந்த  DC மின்சாரத்தை கூடங்குளத்தில் இருந்து ஒரு 500 கிலோவாட் அனுப்பினால் அது அதிராம்பட்டினம் வரும் போது 100 கிலோ வாட் தான் கிடைக்கும். ஆகையால் இந்த DC கரண்டை எந்த கடத்தல் மன்னராலும் நீண்ட தூரம் கடத்த முடியாது. மேலும், இதை கொஞ்ச தூரம் கடத்துவதாக இருந்தாலும் தடிமனான கடத்தி (Wire) வேண்டும் உதரணமாக கார் பேட்டரி 12 வோல்ட் அல்லது 24 வோல்ட்  இருக்கும் அதற்கு தடித்த இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் கவணித்துப் பார்த்தால் தெரியும். இந்த DC  மின்சாரத்தில்  ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் இதை சேமித்து வைக்கலாம் (அலாவுதீன் காகா விற்கு பிடித்த கரண்ட் )

ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும் ஜோடியில் ஒன்று (நியூட்ரல் அல்லது பேஸ் - Phase) இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருபடியாக எதையும் சுழல அல்லது எரிய விடமுடியும். பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இந்த இரண்டும் இருந்தால்தான் எதையும் இயக்கவோ செலுத்தவோ முடியும். அதுபோல் மனிதர்களில் ஆண்-பெண்  ஜோடி, மரங்களில் ஆண்  மரம், பெண் மரம், இப்படி உலகில் ஏராளமான ஜோடிகள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. இந்த ஜோடிகளில் ஒன்றை பிரித்தாலும் உற்பத்தியோ அல்லது இனப்பெருக்கமோ உலகில் நடைபெற வாய்ப்புகள் கிடையாது. இந்த மின்சாரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மை படைத்த இறைவன்   அல்குர்ஆனில் இதைப் பற்றியெல்லாம் மிக விபரமாக கூறிவிட்டான்.அறிவுடையோருக்கு அல்குர்ஆன் ஒரு அறிய பொக்கிஷம்.

அல் குர்ஆன்

36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.

Sஹமீது

உருகுதே அதிரை ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2012 | , ,


வியாழன் இரவு கையில் கிடைத்த ஒரு டிஜிடல் விடியோ கேமாரவை எடுத்த பொடியன், தான் கற்றதை கைவிரல் அளவோடு விளையாட எத்தனிக்கும்போது அதிரையின் அசாத்திய துணிச்சலுக்கு பெயர்போன மின்சாரம் இருட்டை பிரசவித்தது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி. ஆனால், வந்ததோ கோபம் பொடியனுக்கு கையிலிருந்த கேமராவை தூக்கியடித்தான் அது எங்கு விழுந்தது என்று தேடிடத்தான் இந்த மெழுகுவர்த்தியை ஏற்றியும் வைத்தான். கேமரா கையில் கிடைத்ததும் அந்த பொடியன் தானாக அதனை ஆன் செய்து தனக்கே உரிய ஸ்டைலில் காணொளியும் பதிவு செய்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டான்.

ஏனுங்க உங்கள் பங்கிற்கு ஏதேனும் உண்டா ?

-அபுஇபுறாஹிம்

அடிப்படை தேவைகளுக்கு ஆலாய்பறக்கும் அவலம்... 31

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2012 | , , , , ,


அதிராம்பட்டினம் பேரூராட்சி ( பேருக்கு ஊராட்சி?) அறிவிப்பு என்று ஒரு அறிவிப்பை வலைதளத்தில் படிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டது. அதன்படி மின்சார வெட்டின் காரணமாக இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அதன்படி ஊரார் தங்களது தேவைகளை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ சொல்லத்துடிக்குதடா நெஞ்சம் –வெறும் சோத்துக்கும் வந்ததிந்த பஞ்சம் “ – என்று எங்கோ யாரோ பாடியதை கேட்டு இருக்கிறோம். இன்றோ “ கூறத்துடிக்குதடா நெஞ்சம் இந்த குடிநீருக்கும் வந்ததடா பஞ்சம்” என்றுதான் பாடவேண்டி இருக்கிறது.

என்ன குறை?

தண்ணீருக்கும்,மின்சாரத்துக்கும் அல்லாடவேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தது.?

"காவிரி தென்பெண்ணை பாலாறு –தமிழ்
கண்டதோர் வைகை பொதிகை நதி – என
மேவிய ஆறுகள் பல ஓட –திரு
மேனி செழித்த தமிழ்நாடு “

என்று திருவாளர்கள் சிங்காரம்பிள்ளையும், தாமஸ், இராமதாஸ் ஆகிய தமிழ் ஆசிரியர்களும் பாடம் நடத்தி படித்து இருக்கிறோமே அப்படி எல்லாம் வளங்கள் இருந்தும் அவைகள் வகையாய் நிர்வகிக்கப்படாமல்தானே  (RESOURCES MANAGEMENT) இப்படி அவலநிலைகள் ஏற்படுகின்றன என்று மனநிலை சரியில்லாதவர் கூட கேட்பார். 

ஏன் இந்த நிலை? இதுதான் கதை.

சமீபத்தில் தமிழக அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக 5995 கோடி ஒதுக்கி அறிவித்தது. அதன் பிறகு இதுவரை மின் உற்பத்தியில் இருந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தங்களது மின் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் இழப்பு 988 மெகாவாட் மின்சாரமாகும். சொல்லப்பட்ட காரணம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை தராமல் புதிய திட்டங்களுக்கு பணம் ஒதுக்கியதை கண்டித்து என்பதாகும். தனியார் ஒன்று கூடி அரசை நிர்ப்பந்தப்படுத்த எடுத்த ஆயுதம்.

இதன்படி ஜி. எம். ஆர் 196 மெகாவாட், பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 மெகாவாட், மதுரை பவர் 106 மெகாவாட், சாமல்பட்டி 105  மெகாவாட் ஆகியவை உற்பத்தியை நிறுத்திவிட்டு பழைய மளிகை பாக்கியை தந்தால்தான் மீண்டும் உற்பத்தி தொடங்க முடியும் என்று அலியார் காக்கா கடை ஸ்டைலில் (இப்போதும் இருக்கிறதா?) அடம் பிடித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்கு உடையவர்களுடையதுதான். கடந்த ஆண்டுகளில் இதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை இலாபம் பார்த்தவைகள்தான்.  நெய்வேலியில் இருந்து மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறது. அரசுகளின் திட்டமிடலுக்கு ஏற்பட்ட அண்மைக்கால அவமானம் தரும் உதாரணம்.

அதுமட்டுமல்ல,

தமிழ்நாட்டில் உள்ள 14 அணைகளில் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சரிவர தூர்வாரப்பட்டால் அதன்பின் அதிகரிக்கும் நீர் கொள்ளளவை வைத்து 2000  மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இன்றோ வெறும் 800  மெகாவாட் மட்டுமே தயாரிக்க முடிகிறது. ஆகவே இருக்கிற மூலவளங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமை (LACK OF PROPER UTILIZATION OF RESOURCES) யும் அரசுத்தரப்பை நோக்கி நம் விரலை நீட்டச்செய்கின்றது.

அத்துடன் மூலவளங்களை பயன்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பது. நம்மிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நமது கடையில் சில சாமான்கள் வாங்கிப்போட வேண்டும், பசிக்கிறது-  சாப்பிடவேண்டும், தையல் கடையில் தைக்ககொடுத்த துணி தயாராக இருக்கிறது அதை வாங்க வேண்டும், ஒரு சர்கஸ் பார்க்க வேண்டும் என்று ரெம்ப நாளாக ஆசை இன்றுடன் அந்த சர்கஸ் கடைசி என்று வேறு போட்டிருக்கிறான். நாம் என்ன செய்வோம்? எந்த செலவுக்கு முக்கியத்துவம் தருவோம்? இருப்பதோ 100 ரூபாய்தான். இதைத்தான் நிர்வாகத்தில் PRIORITIZE  - முன்னுரிமைப்படுத்துதல் என்று சொல்வார்கள். இருக்கிற மின்சாரத்தை தொழில்சாலைகளுக்கு, விவசாயத்துக்கு, சமுதாய வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு என்று பயன்படுத்துவதில் முன்னுரிமைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (PRIORITIZE THE UTILIZATION OF RESOURCES).

அப்படியானால் என்ன செய்யலாம் . பொழுதுபோக்கு தலையில் கைவைக்க வேண்டியதுதான்.

இன்று தமிழகம் முழுதும் ஏறக்குறைய 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகள் இருப்பதாக ஒரு கணக்கு. இந்த தொலைக்காட்சிப்பெட்டிகள் ஒன்றுக்கு 100 வாட் மின்சாரம் என்று வைத்துக்கொண்டாலும் 2000 மெகாவாட் செலவாகிறது. மின்சார நிலை சீர்பெறுகிறவரை தொலைக்காட்சிப்பெட்டிகளை குறிப்பிட்ட நேரங்களுக்காவது  பயன்படுத்தக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதிப்பதைப்பற்றி அரசு பரிசீலிக்கலாம்.  குடிக்கவே தண்ணீர் இல்லை படுக்க பஞ்சு மெத்தை வேண்டுமா? அரசு அப்படி கட்டுப்பாடு விதிக்குமா ? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, உளுத்த கட்சி, பாசகட்சி, படுத்தகட்சி, தளர்ந்த கட்சி, தள்ளாடும் கட்சி இப்படி எல்லாகட்சிகளுமே தங்களுக்கென்று தனி தொலைக்காட்சிகளை (தொல்லைக்காட்சிகளை?) வைத்து விளம்பரத்தில் இலாபம் சம்பாதிக்கும் நிலையில் இது நடக்குமா? இதை அமுல்படுத்த யாருக்கும் தைரியம் உண்டா?

“அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு”

என்று ஒரு கவிஞன் புலம்புகிறான். இன்று குடிநீரை முறை வைத்து விடவேண்டுமென்று திட்டம் தீட்டுபவர்கள், ஊர் முழுதும் பரவிக்கிடக்கும் மதுக்கடைகளையும், அத்துடன் இணைந்த பார்களையும், இரவு களியாட்டங்கள் நடத்தும் விடுதிகளையும், சூதாட்ட விடுதிகளையும் குறைந்தபட்சம் இரண்டாவது காட்சி திரைப்படத்தையும் மின்சாரநிலையை காரணம் காட்டி மூடுவார்களா?   

வளைகுடா நாடுகளில் காவிரியோ, தென்பெண்ணையோ, பாலாறோ, வைகையோ ஓடவில்லை. ஆனாலும் அடிப்படைதேவைகளான தண்ணீருக்கும் ,மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு என்பதே தெரியாமல் மூலவளங்களின் நிர்வாகம் கோலோச்சுகிறது. பாலைவனத்தில் இல்லாத பஞ்சம் பாலாறு ஓடும நாடுகளில், வற்றாத ஜீவனதிகள் பாயும் நாடுகளில் வரக்காரணம் மிக மிக மோசமான நிர்வாகம்தான். (LACK OF RESOURCES MANAGEMENT). என்பதை அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள்.

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் மக்களின் அடிப்படை இன்றியமையா தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்சாட்டுகளை ஏவிவிட்டு, இருக்கும் மூலவளங்களையும்  காலி செய்கிறோம். மண்ணில் இருக்கிறவன் குடிக்க தண்ணீர் இல்லாமலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்சாரம் இல்லாமலும் சாகக்கிடக்கிறான் சந்திரனுக்கு ஆள் அனுப்புவது அவசியமா? “கும்பி உருகுது! குடல் கருகுது! குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்று அறுபதுகளில் ஒரு ஆட்சித்தலைவரைப்பார்த்து ஒரு அரசியல் தலைவர் கேட்டார். இன்றுவரை இதற்கு மாற்றம் உண்டா? குறைந்தபட்ச தேவையான குடிதண்ணீர் கூட தரமுடியாத அரசுகள் வேறு என்ன தந்துவிடும்? விளக்கெரிக்க மின்சாரம் இல்லை வெறும் வார்த்தைகள் வல்லரசு ஆக்கிவிடுமா?

-இபுராஹீம் அன்சாரி

யார் செய்கிற கொடுமை ? 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2011 | , ,

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

தலைப்பைப் படித்ததும் மனசுக்கு படபடண்டு அடிக்குதா? வெடவெடண்டு உதறுதா ?

வேற ஒன்னுமில்லைங்க அது ஊருக்குள்ள "மின்சாரவலிப்பு"ன்னு ஒரு வியாதி பரவி கெடக்குதுன்னு வைத்தியர் சொன்னதாக எங்கேயாவது காணொளி பார்த்தீருப்பீங்க.

முதலில் மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. ஃபிரிட்ஜிலிருந்து சூடா ஸாரி ஆறிப்போன ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு ஆசுவாசம் செய்து கொள்ளுங்க. விசயத்திற்கு வருகிறேன் கவனமா கண் வைத்து காது கொடுத்து கேளுங்க ஆனா இதெல்லாம் கரண்ட் நியூஸ்ங்க.

நம்ம ஆளுங்ககிட்ட வெறுமனே “என்ன ஆச்சு"ண்டு? கேட்டா…

உடனே "அம்மா ஆட்சி"ண்டு சொல்லுறாங்க !

அடுத்து வெவரமா “கரண்டு என்னாச்சு"ண்டு கேட்டா…

அதுவா போச்சு"ண்டு நக்கலா சொல்லுறாங்க !

அதுவா எங்கே போச்சுன்னு யாருக்கும் சொல்லத் தெரியலை மின்சாரம் இருந்தாதான் ஷாக் அடிக்கும் என்பதெல்லாம் அந்தக்காலம் ஆனா நம்ம ஊருல மின்சாரமின்றியும் நிறைய விசயங்களிலும் ஷாக்காக இருக்குது போங்க…

காலையில் குளிப்பதற்கு மின்சார மோட்டார் பொத்தனை அழுத்தினால், வீர்ர்ர்ர்ர் கொண்டு எழுந்து ஆரவாரத்துடன் ஓட ஆரம்பிக்கும் மோட்டாரை. சில நிமிடங்களில் சீத்த ‘வெடி’ போல் வீரியத்தை இழக்க செய்கிறது இந்த மின்சா(ஜு)ரம்.

மீண்டும் மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைவது எப்போதோ?) அந்த திட்டுமுட்டுகிடையில…

சமையல் அறையில் இருந்து ராத்தா, தங்கைமார்களின் சப்தமான குரல் ஓங்குகிறது 'கல்ச்சல்ல போவான் கரண்ட அமத்திட்டானுவோ' என்ற சப்தம் காதுலே வேகமாக ஊடுருவுது. இந்த ஊடுருவல் மட்டும் மின்சாரத் துறையின் காதுகளுக்கு போவதில்லை!

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர  (குணமடைய)

சரி சட்டையை அயர்ன் பன்னுவோம்ண்டு இஸ்திரி பெட்டிக்கு மின் இணைப்பு கொடுத்து டெம்ப்ரச்சர் ஏத்தி வச்சு அயர்ன் செய்யலாம்ண்டு இஸ்திரி பெட்டியை கையில் எடுத்தால். பெட்டியில் டெம்ப்ரச்சர் குறைய நம்ம மூளைக்குள் சூடு அதிகமாகிறது (டென்ஷன் டென்ஷன் ஒரே டென்ஷன்).

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைய)

'சரி'ண்டு சொல்லி கடைக்கு போய் கம்பூட்டருக்கு முன்னாடி அமர்ந்து (அ.நி) அமைதின் ஆளுமைக்கு வந்து அமைதி காப்போம்ண்டு வந்தால். சிறிது நேரத்தில் UPSஐ யாரோ கிள்ளிவுட்டுகிட்டு இருப்பது போல் விடாமல் தொடர்ந்து வீல் வீல்ண்டு கத்த விடுகிறது மின்சா(ஜு)ரம்.

இத்துடன் முடிந்ததுண்டு வெறுப்புடன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்கிறீர்களா?

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைய)

பாவம் பிஞ்சு குழந்தைகள் யாருக்கு என்ன துரோகம் செய்தது? ஆனா இந்த மின்சாரம் ராத்திரியிலே நமக்கு போட்டியா தூங்கச் செல்கிறது நம்மள காவ காக்கா வச்சுட்டு. அதுல பாருங்க டெண்டர் போட்டு காண்ட்ராக் எடுத்த மாதிரி இந்த ஈவு இறக்கம் இல்லாத கொசு நர்சுகளோ குழந்தைகள் கதற கதற ஊசிகள் போடுதுங்க!.

சிறுசுகள் கதறுவதால் பெருசுகளின் தூக்கமும் பறந்து விடுகிறது குழைந்தங்களை கடித்த கொசுக்களோடு!

இது யார் செய்கிற கொடுமைங்க ?

ஐயா செய்கிறாரா ? அல்லது அம்மா செய்கிறாங்களா ?

கேட்டாக்கா இது அதிரைக்கு மட்டுமல்ல அனைத்து தமிழகத்திலேயும் இருக்கும் மின்சார (மருந்து) தட்டுப்பாடு என்று சாக்கு சொல்லி அங்கும் ஷாக்கு அடிக்கின்றது (சொன்னாலும் ஆனாலும்!)

அதிரை பேரூராட்சிக்கு ஜெயித்த தலைவருக்கு போட்டியாக நின்று தோற்றதும் பின்னர் துணைக்கு நின்று ஜெயித்ததும் பதவிக்கு வந்ததும். ஆளுங்கட்சியான எங்களால்தான் எதையும் செய்ய முடியும்ண்டு, பரபரப்பாக பேட்டியோடு செயல் படுவதையும் காட்டிடும் மாநில ஆளுங்கட்சி சகோதரர்கள் அதிரையில் மலேரியாபோல் பரவிக்கிடக்கும் இந்த மின்சாரத்த ஊருக்குள்ளேயே கட்டிப் போடுங்களேன் அடிக்கடி வந்துட்டு வந்துட்டு ஓடி ஒளிஞ்சுபோயிடுது.. இப்படி வருவதும் வராததுமாக இருக்கும் மின்சார ஜுரத்தை ஆளுங்கட்சி மருத்துவர்களைக் கொண்டு முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் பாதிக்கு மேலயாவது முடியுமான்னு யோசிச்சு 'ஷாக்  அடிக்கிற மாதிரி ஒரு "action please !"

- லெ.மு.செ.அபுபக்கர்

மின்சாரக் காற்றே ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 10, 2011 | , , ,

அஸ்ஸலாமு அழைக்கும்...

என்னுரை

எனது இந்த பதிவுக்கு ஊக்கம் தந்தது என் முந்தைய கட்டுரையான ராக்கெட் விடலாம் வாங்க! என்ற கட்டுரைக்கு சகோ MSM நெய்னா முஹம்மது இட்ட இந்த பின்னுடமே!

// மின்சாரம் எங்கு "சல்லிசா" கிடைக்கும் என்று உங்கள் செயற்கைக்கோளிடம் கொஞ்சம் இயற்கையாக கேட்டு சொல்லுங்களேன் //


இந்த கருத்துதான் மண்டைக்குள் சிறுதுளி மின்சாரத்தை பாச்சியதன் விளைவே இந்த கட்டுரை!

மின்சாரக் காற்றே !
தமிழகத்தின் ஆட்சி மாற்றத்தின் முதல் காரணம் மின்சாரம் இதற்கு 1ஜி என்று பெயர் வைக்கலாம் அந்த அளவிற்கு அரசியலை புரட்டிப் போட்டது இந்த மின்சாரம்தான் அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பதுதான் இந்த 2 ஜி தமிழகத்தை ஆண்ட தி.மு.. அரசு பொது மக்களுக்கு சரிவர மின்சாரம் கொடுக்காததால் தமிழக மக்கள் தி.மு.. விற்கு கரண்ட் ஷாக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதும் நினைவு இருக்கலாம்.

தமிழகத்தின் மின்சாரத் தேவை ஏறத்தாழ 12,700 மெகா வாட் நாம் தற்போது உற்பத்தி செய்வதோ 8,500 முதல் 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நம்மால் உற்பத்தி செய்யப்படுகிறது. 4,200 மெகா வாட் தற்போதைய தேவை. தற்போது உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 50 % சதவீதத்திற்கு மேல் காற்றலை மூலமும் பாக்கி மின்சாரம் அனல்மின் மற்றும் நீர்மின் நிலைகள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி பெருமளவில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இங்கு எடுத்து வரப்படுகின்றது இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன நிலக்கரி எரிக்கப்பட்டு அதன் மூலம் நீரை கொதிக்க வைத்து வரும் நீராவியின் அழுத்தத்தை கொண்டு டைனோமோ (டர்பன் என்றும் சொல்வார்கள்) சுழற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகின்றது இப்படி செய்யும் போது எரிக்கப்படும் நிலக்கரி புகை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்திவிடுகின்றன அனல் மின் நிலையம் அருகே வசிக்கும் பொது மக்கள் பலவித நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் .

நீர்மின் நிலையம்

நீர் மின் நிலையங்கள் பெரும்பாலும் மலை பிரேதசங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன காரணம் மலையின் மேல் பகுதியில் மழை நீரை தேக்கி வைத்து அந்த அழுத்தத்தில் இருந்து நீரை பைப் லைன் மூலம் மலை அடிவாரம் வரை கொண்டுவந்து அந்த நீரின் அழுத்தத்தின் மூலம் டைனோமோ சுழற்றப்பட்டு மின் உற்ப்பத்தி செய்யப்படுகின்றது இதற்க்கு மழை காலங்கில் கிடைக்கும் நீரை வைத்து மின் உற்பத்தி நடைபெறுகின்றன கோடைகாலங்களில் நீர் வரத்து இருக்காது ஆகையால் மின் உற்பத்தியும் இருக்காது.

தமிழகத்தின் மின்சாரத் தேவையில் பாதியளவை பூர்த்தி செய்வது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம்தான்.ஏறத்தாழ 5,690 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகளில் சில சமயம் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். காற்று குறைந்தால் 1,500 மெகாவாட் வரைதான் மின்சாரம் கிடைக்கும். காற்றாலைகள் அனைத்தும் இப்போது தனியார் வசமே உள்ளன ஒரு காற்றாலை அமைக்க ரூ. 2 கோடி வரை செலவாகும் நாம் நம் அதிரை பட்டினத்தில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் இந்த காற்றலைகளை நிறைய காணலாம்.

காற்றாலை மின் உற்பத்தி

நமதூர் செல்வந்தர்கள் இந்த காற்றலைகளை நமதுரிலும் நிறுவி அதன் மூலம் மின் உற்பத்தி செய்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம் முதலீடு அதிகம் என்றாலும் லாபமும் அதிகம் இதன் மூலம் கிடைக்கும். நமதுரின் பிரதான வருமானம் வரக்கூடிய தென்னம் தோப்புகுகளில் தென்னைக்கு நடுவே காற்றாலை நிறுவலாம் இதனால் மாதா மாதம் நல்லா வருமானம் கிடைக்கும் காற்றலை மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியால் காற்று கேடாவது கிடையாது அதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் வராது நமதூரில் ஒருவர் ரியல் எஸ்டேட் செய்து லாபம் பார்த்தால் அனைவரும் அதையோ செய்வார்கள் ஒருவர் நகை கடை வைத்து லாபம் பார்த்தால் மற்றவர்களும் நகை கடை வைப்பார்கள் இதுதான் அதிரையின் பிஸினஸ் லாஜிக்காக இருந்து வருகின்றது .அதிரையின் இந்த லாஜிக்படி பார்த்தால் யாரவது ஒருவர் ஒரு காற்றலை அமைத்து அதில் வருமாம் பார்த்தால் போதும் ஒன்றன்பின் ஒருவராக நமது ஊரில் காற்றாலை நிறுவ ஆரம்பித்து விடுவார்கள் நமதூர் மக்களும் நமது ஊரும் மேம்படுவதற்கான ஒரு சூழ்நிலை தென்படுகின்றது இதன் மூலம் நாட்டுக்கு தேவையான மின்சாரமும் கிடைத்துவிடும் நமது வீட்டுக்கும் மின்சாரம் கிடைத்துவிடும் முதலீட்டாளருக்கு வருமானமும் கிடைத்துவிடும்.அதிரை செல்வந்தர்கள் தமது சிந்தனைகளை காற்றாலை பக்கம் திருப்பலாமே!

காற்றாலை அமைக்க சாத்திய கூறுகள்

நமது ரயில்வே ஸ்டேஷன் கடல்கரையை பார்த்து அமைத்துள்ளது ரயில்வே ஸ்டேஷன் எப்போதுமே காற்று வீசிக்கொண்டே இருக்கும் நம் ஊரை பொறுத்தவரை காற்று என்றால் ரயில்வே ஸ்டேஷன் ரயில்வே ஸ்டேஷன் என்றால் அது காற்று என்றுதான் அர்த்தம் ,அதுபோல் நம் ஊர் தென்னை மரங்கள் எப்பொதும் காற்றினால் தாலாட்ட பட்டு கொண்டே இருக்கும். பெரும் பாலான ஐரோப்பிய நாடுகளில் அமைந்துள்ள காற்றலைகள் கடல்கரையை ஒட்டியோ அமைந்துள்ளன இதுபோன்ற சாதக பாதகங்களை ஆராய்ந்து நமது அதிரை பட்டினத்தில் காற்றாலை அமைக்க முயற்சிகள் செய்யலாம்

- Sஹமீது
தமாம்

மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதனைவிடவும் நன்கு அறிந்த துள்ளியமான அரிய தகவல்கள் இதனை வாசிக்கும் சான்றோர்களிடம் இருந்திடலாம்..


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு