மனைவி | கணவன் |
உங்களின் துவா உடனடியாக பலனை ஏற்படுத்தவில்லையே என்ற ஏக்கமிருந்தாலும், அது நாட்டு மருந்துபோல் நாட்கள் கடந்து சிறுக சிறுக நல்ல பலன்களை தானாக அளிக்கும் இன்ஷா அல்லாஹ்!. ஆகவே, உங்களின் திருமண வழ்க்கை என்றும் வளமுடனும், சிறப்புடனும் அமைந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். | உங்களின் துவா உடனடியாக பலனை ஏற்படுத்தவில்லையே என்ற ஏக்கமிருந்தாலும், அது நாட்டு மருந்துபோல் நாட்கள் கடந்து சிறுக சிறுக நல்ல பலன்களை தானாக அளிக்கும் இன்ஷா அல்லாஹ்!. ஆகவே, உங்களின் திருமண வழ்க்கை என்றும் வளமுடனும், சிறப்புடனும் அமைந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். |
கணவனின் சொல் கேட்டு அவன் விருப்பு வெறுப்புகளின் படி நடங்கள், உணர்வுகளோடு ஒன்றோடு ஒன்றாக ஒட்டி உறவாடி நாட்கள் செல்லச் செல்ல அவரின் ‘கைப்புள்ள’யாகி உங்கள் அன்புக்கும், பாசத்துக்கும், அவர் சொல்வதை கேட்டு நடக்கும் பாங்கிற்கும் உரித்தவர்களாகி நீங்கள்தான் அவருக்கு எல்லாமே என்ற நிலைக்கு தானாக அவரை வென்றெடுக்க முடியும். | நம் சொற்பேச்சுகள் கேட்டு நம்மவள் நடக்கிறாளே என்று மனைவியை ஏளனமாக எண்ணி தவறான உதாரணங்களை ஏற்படுத்தி விடாதீர்கள். ஒருவேளை சில சந்தர்ப்பங்களில் மனைவி உங்களை கேட்காமல் அவர் விரும்பிய அல்லது நல்லதே என்று நினைத்து செய்த காரியங்களாக இருந்தாலும் கடுமை காட்டாமல் பெருந்தன்மையுடனும் அன்பாகவும், அவரால் ஜீரனித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கான சிறிது கண்டிப்புடனும் கூறுங்கள். ஹிட்லர் போல முடிவெடுத்தால் வாழ்க்கை ஜெர்மனியின் போர்க்களம் ஆகிவிடும். |
கணவனை நெருங்கியிருக்கும் சந்தர்ப்பங்கள் எல்லா வகையில் சந்தோசத்துடன் வைத்திருக்க முயலுங்கள், உங்கள் எண்ணங்களால், வசீகரத்தால், வார்த்தைகளால், சுவையான சமையலால், நகைச்சுவைகளால் - கணவன் உங்களுடைய சந்தோஷத்திற்கான திறவுகோல் என்பதை மறந்து விடாதீர்கள். | மனைவியின் மந்திரச் சொற்களுக்கு காது கொடுங்கள், மனைவியின் அழகை ரசியுங்கள், அவர் சமைத்த சமையலோடு வேறு சாப்பாட்டை ஒப்பீடு செய்யாமல் அதனை மனதார பாராட்டுங்கள், அந்த பாராட்டு உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வருவதையும் உணரவையுங்கள் ,நல்ல வார்த்தைகளைக் கூறினால் பாராட்டுங்கள், அழகிய பரிசுப் பொருட்களை பரிசளியுங்கள் (அவைகள் அவர் விரும்பும் சாயலைக் கண்டறிந்தே செய்யுங்கள்), அவ்வாறு செய்வதனால் அவர்களுக்கு அதிரையில் ஒரு மனைக்கட்டு வாங்கி இரண்டு வீடு கட்டிக் கொடுத்த சந்தோஷத்தில் இருப்பார்கள். |
சூடான விவாதங்களை முடிந்த அளவிற்கு தவிர்க்க முயலுங்கள். எந்த ஒரு சூடான பொருளும் நம் உடல் மீது கொட்டினால் துடிதுடித்து பதறுவதை உணர்ந்தவர்கள்தானே நாம், அந்த பாதிப்புகள் ஏற்படுத்துவதுபோல். சூடான விவாதமும் உங்கள் உறவில் ஒரு கரும்புள்ளியை உண்டாக்கிவிடும். தவறு கணவருடையதாக இருக்கும் பட்சத்திலும் ஒரு கொஞ்சும் முகத்துடன் ஓர் மன்னிப்பைk கோருங்கள். அதைவிடுத்து மாறாக சண்டையிட்டால் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகிவிடும்,எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறுங்கள். | மனைவி சூடான விவாதங்களை ஆரம்பிக்கும் போது, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயலுங்கள், அதாவது அதன் பின்ன்னியை அறிந்து கொள்ள முயற்சியுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது எப்போதும் பாராங்கல்லில் ஊற்றிய நீராக சிதறிவிடும். மனைவிக்கு அந்த விவாத்திற்கான விளக்கங்களை நிதானமாக கூறுங்கள். அதைவிடுத்து நான் தான் தலைவன் என்று தலைக்கனமாகதான் பேசுவேன் என்று தலைகீழாக நிற்காதீர்கள். அது வாழ்க்கையை தாறுமாறக்கிவிடும். உங்கள் பக்கம் தவறுகள் இருப்பின் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள் (அது வெளியில் தெரியாது, நல்ல மனைவி என்றும் உங்களை விட்டுக் கொடுக்கமாட்டார் யாரிடமும் காட்டிக் கொடுக்கவும் மாட்டார்) அதற்கு ஈகோ முன்னுக்கு நிற்கத் தேவையில்லை |
அவனளிக்கும் பாரட்டுக்களுக்கு நன்றி சொல்லுங்கள் | அவளளிக்கும் பாரட்டுக்களுக்கு நன்றி சொல்லுங்கள் |
உங்களுக்கும் உங்களின் கணவனுக்கும் எவ்வித ஒழிவுமறைவுகள் இல்லை அது நம் மார்க்கம் அனுமதித்த வரம்பிற்க்குள் உங்களை அங்கீகரித்து கொள்ளுங்கள், அழகிய ஆடைகள், சக்திக்கு ஏற்ற ஆபரணங்கள், சுண்டியிழுக்கும் நறுமணங்கள் கணவனுக்காக மட்டுமே என்ற இல்லற மரபாக அதனை இட்டுக்கொள்வதில் தப்பில்லை. அழுது வடியும் முகத்தை காண எந்த கணவனும் விரும்பமாட்டான், சபுராளிகளுக்கு “மாப்பிள்ளை வந்த பொண்ணு” என்ற சொல்லே அழகுதானே. | மனைவி உடுத்தியிருக்கும் எந்தவொரு நல்ல ஆடையானாலும் அதன் நேர்த்தியை பாராட்டுங்கள். பதனி குடித்த ஆடுபோல் நிற்காமல் மனைவியின் ஆடை அலங்காரங்களை ரசியுங்கள், அதன் அழகை மெச்சுங்கள், அன்பாக ஐஸ்கீரிமில் வைக்கப்பட்டு தரும் சாக்லெட டிப்ஸ்யைபோல் கொஞ்சம் அதிகமாக டீயூன் ஏத்தி அவளை மெச்சுங்கள்.. அது அவளை உங்களை நோக்கி வசப்படுத்தும், ஒவ்வொரு பெண்ணும் எதோ ஒரு வகையில் அழகானவளே. மாறாக அலங்காரத்தை கந்தூரி கூடு என்று கிண்டலிக்க முயற்சிக்காதீர்கள் |
கணவன் வெளியில் இருந்து வரும்போது இன்முகம் காட்டுங்கள், அவனுக்காக ஒரு காஃபி அல்லது டீ அல்லது வழக்கமாக விரும்பும் பதார்த்தங்களைத் தயாரித்து வைத்து காத்திருங்கள், கணவன் உங்கள் மேல் ‘தீ’யாய் பாசத்தைப் பொழிவான். | அவள் தயாரித்து கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அதனை அருந்திவிட்டு மெச்சாமல் இருந்தாலும் பரவாயில்லை, துச்சமாக எண்ணாதீர்கள், அவளின் அந்த உழைப்பிற்கு பின்னால் உள்ள அன்பையும், காதலையும்தான் மனசுல ஓட்டிப் பாருங்கள் நீங்கள்தான் மிகப்பெரிய ரசிகன், மனைவி தயாரித்து கொடுத்ததின் டேஸ்டை அல்ல (அப்படியென்றால் நீங்கள் சாப்பாட்டுப் பிரியர் மனைவி பிரியராக இருக்க மாட்டீர்கள்). |
ஒழுக்கத்துடனும்,மார்க்க பேணுதலுடனும், தங்கள் கணவனுக்கும் / குழந்தைகளுக்கும் வேண்டிய தொடர் கடமைகளைச் செய்யுங்கள், அதன் பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். | ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான், மனதளவிலும் மனைவிக்கு துரோகம் எண்ண வேண்டாம் – அது அல்லாஹ்வுக்கும் பிடிக்காத செயல். இல்லாள் செய்யும் வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் உங்களின் பங்கை உறுதி செய்யுங்கள் அதற்காக முடிந்த உதவிகளைச் செய்து பாருங்கள். அந்த உதவிக்கும் வேலைக்கும் நிறைய இன்க்ரிமெண்டோடு அளவு கடந்த அன்பிற்கும் நிச்சயம் பலன் உண்டு (உத்திரவாதம்). |