நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு கீபோ(ர்)டை ஆக்கத்திற்காகத் தட்டுவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த இடைவெளிக்குள் எத்தனையெத்தனைச் சிறந்த எழுத்தாளர்கள் அதிரைநிருபரை அலங்கரித்துத் தங்கள் திறமைகளையும் நம் சமுதாயப் பெருமைகளையும் பரப்பிக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்ப விசயத்திற்கு வருவோம்..
பம்முக்காலே (Pamukkale )
என்னடா இப்ப வந்ததும் வராததுமா வித்தியாசமா ஆரம்பிக்கின்றானே, ‘மூக்காலே சிந்துரதுதானே நமக்கு தெரியும். இப்படி பம்முக்காலே என்றால் பல மூக்காலே ஒன்றாக ஒரே சமயத்தில் சிந்துவதா என்று ஒரு கணம் சிந்திப்பவர்களுக்கு..
அல்லாஹ்வின் படைப்பையும் அதன் பயன்களையும் அறிந்து கொள்ள முற்பட்டால் நம் ஆயுள் முழுவதும் செலவழித்தாலும் போதாது.
அப்படித்தாங்க “பம்முக்காலே” அல்லது “பருத்திக்கோட்டை” எனப்படும் ஓர் இடம் துருக்கியில உண்டுங்க, சிறப்பு என்னவென்று கேட்கின்றீர்களா, சொல்றேன் இருங்க… ’சாவன்னா காக்கா கேமராவை நல்ல கழுவி எடுத்து வைத்து கொண்டு கிளம்பிடாதீங்க (இடம் அப்படி) நம்மூர்ல தண்ணி ஓடிக்கிட்டே இருந்தா அந்த இடம் வெத்திலைப் பாக்கு கறைபோல ஒட்டுமாவு சாப்பிட்ட பற்களைப் போல பளிச்சென்று இருப்பதுபோல (பாவம் எவ்வளவு நாளைக்குதான் சிகரெட் குடிச்ச கறைண்டு சொல்றது), இங்கே ஒடுற தண்ணி அதில உள்ள கார்பனேட் தாதுக்களை ஒதுக்கிவிட்டு ஒடுதுங்க. அதனாலே அது ஒதுங்கி ஒதுங்கி சேகரமாகி மலைபோல் குவிந்து பருத்திப் பஞ்சுகளை பரத்தியது போல் அழகா காட்சி தருது இந்த இடம். யாரு இந்த கார்பனேட்-ப்பா (CO2/3) என்று அதட்டி கேட்பவர்களுக்கு மகபூப் அலி சார் அவர்களின் முகவரியை தந்து விடுகின்றேன், அவுக தான் எங்களுக்கு இதையெல்லாம் கிளாஸுல சொல்லி தந்தாங்க) படத்தைப்பார்த்து விட்டு ஐஸ்கட்டியை காட்டிட்டு கதையை என்னமா மாத்தி சொல்ராருப்பா என்று சிலர் நினைக்கலாம். கூகுள் மாமா ஆயுசு இருக்கும் வரைக்கும் நாம எதையும் தப்பா சொல்ல முடியாது.
துருக்கி -மண்டுராஸ் ஆற்றின் பள்ளத்தாக்கில் தன் அழகாலும் மருத்துவ குணம் கொண்ட தண்ணீராலும் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கின்றது இந்த பம்முக்காலே
பஞ்சுபோதிபோல் இருக்கா இல்லை பஞ்சரான டையர்போல இருக்கா ?

பனிக்கட்டியல்ல ..சத்தியமா சொல்றேன் உப்புதானுங்க
நிலப்பரப்பிற்கு கீழே ஓடிக் கொண்டிருக்கும் எரிமலை செயல்கள் தான் இப்ப நிலவும் அதீத வெப்பநிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்..என்னங்க கிளம்பலாமா ? ஆமா நம்மூர் பக்கதுல இருக்கின்ற சுண்ணாம்புகாளேக்கே நாம மெல்ல போக நேரம் இல்ல உம்மாட்ட சொன்னா தண்ணிய அடுப்புல வச்சு சூடு பண்ணி தர்ராங்க இது என்னங்க பிஸ்கோத்து என்று சிலர் முணுமுணுப்பதும் சரிதானுங்க
ஐ!!! நிறைய சால்ட் வீட்டுக்கு அள்ளிகிட்டு போவோமா ?
கூடுதல் தகவல் கிளியோப்பட்ரா குளிப்பதற்க்கு தன் வீரர்களை இங்கு அனுப்பி தண்ணி எடுத்துவரச்செய்து குளிப்பாளாம்,யாரு பார்த்ததுண்டு கேட்காதீங்க அந்த பீப்பீங் சாம் வேலையெல்லாம் நம்மளுக்கு தெரியாதுங்க
பிலோப் மீன் (Blobfish)
என்ன இது கொடுவா / காளை / பண்ணா என்று பறந்து பறந்து அவியலும் ஆனமும் உண்ட நமக்கு இது கிடைக்காம தப்பிடுச்சே என்று நினைப்பவர்களுக்கு இது சாப்பிடக்கூடிய மீன் கிடையாது. ஒரு கிலோமீட்டருக்கு மேற்பட்ட ஆழ்க்கடலில் 30செ.மி சைஸூக்கு வளரும்/வாழும் ஒரு ஆபூர்வ மீன் இனம்,ஆஸ்திரேலியா கடற்பகுதிகளதான் இதன் வாழ்விடம்
உண்மையை சொல்லுங்க நம் சின்ன வயசில பார்த்த யாரோ ஒரு தெரு அப்பாவின் ஞாபகம் வரலயாண்டு
கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் காணப்படும் இந்த மீன் ரப்பர்போல கடலின் மேற்மட்டதிற்கு வந்து பலூன் மிதப்பதுபோல் மிதக்கும்..சரியான சோம்பேறி நீச்சல் அடிச்சா உடம்பு குறைந்து விடும் என்று மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.
நன்றி : வைக்கீப்பிடியா
என் கம்பெனி (இதுக்கெல்லாம் சம்பளம் கொடுக்குறாங்களே)
Mohamed Yasir