Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அரும்பு. Show all posts
Showing posts with label அரும்பு. Show all posts

நண்டும் நரியும் 10

அதிரைநிருபர் பதிப்பகம் | November 17, 2014 | , ,

நீலக்  கடலின்  அலையோசை - எம்
  நெஞ்சக்  கதவைத்  தட்டியபின்
காலைக்  கழுவித்  தூய்மையுடன் - மண்
  கரையில்  வந்து  நின்றோமே.

கரையில்  நின்ற  பாத்திம்மா - தன்
  கண்ணில்  பட்ட  நண்டொன்றை
அருகில்  கண்டு  பதறிப்போய் - ஓடி
  அணைத்துக்  கொண்டாள்  உம்மாவை.

தண்ணீ  ருக்குள்  ஓடாமல் - போய்த்
  தரையில்  கண்ட  பொந்துக்குள்
மண்ணே  தனது  வீடென்று - தான்
  மறைந்த  நண்டைக்  கண்டோமே.

“நண்டின்  கதியை  அறிவீரோ? - ஒரு
  நரியொன்  றுக்கது  விருந்தாகும்
வண்டி கிளம்பிச் சென்றவுடன்–நரி
  வந்து  திரிந்தே  இரைதேடும்.

“அந்தி  வேளை   யானவுடன் - அது
  அமைதி  யாக  வந்தந்தப்
பொந்துக்  குள்ளே  வால்விட்டுத் - தன்
  பொறுமை  காக்கும்  தந்திரமாய்.

“வானைப்  பார்த்த  சிறுநண்டோ – தன்
  வாயால்  கவ்விப்  பிடித்துவிடும்
தேனை  உண்ட  மகிழ்வோடு - நரி
  திடுமென  வாலை  வெளியாக்கும்.

“அச்சம்  ஊட்டிய  நண்டதனை - நரி
  அடித்து  நொறுக்கித்  தின்றுவிடும்
இச்சிறு  வாழ்வின்  நிலையிதுதான்” - என
  எடுத்துச்   சொன்னார்  வாப்பாவும்.

அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு