Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label என் வீட்டுத் தோட்டத்தில். Show all posts
Showing posts with label என் வீட்டுத் தோட்டத்தில். Show all posts

என் வீட்டுத் தோட்டத்தில்...! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2013 | , , , ,

மரம் நடுவதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களின் வாயிலாக ஊக்குவித்திருக்கின்றார்கள். அதனை அவர்கள் வெறும் உலகியல் நடவடிக்கையாக மட்டும் குறிப்பிடாமல்  அதனை நன்மை தரும் தர்மமாக மார்க்கத்துடன்  தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்கள்.

‘எந்தவொரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது ஒரு பயிரை விளைவித்தால் அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது பறவையோ அல்லது விலங்கோ உண்ணும் காலமெல்லாம் அவருக்கு அது தர்மமாக அமையும். 

‘உங்களில் ஒருவரின் கையில் மரச்செடியொன்று இருக்கும் நிலையில் மறுமை வந்து விட்டது என்றிருந்தாலும் அவர் அச்செடியை நாட்டிவிடட்டும்’ (ஆதாரம் : அஹ்மத்) 

எவ்வளவு ஆழமான கருத்துக்களை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


‘இமாரத்’ என இப்பணி அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் இவ்வுலகில் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கிய பணிகளில் இபாதத், கிலாபத்,  இமாரத் என்பவையாகும். இதில் 'இமாரத்' என்பது பூமியை பரிபாலித்து நிர்வகித்து அதனை வளப்படுத்தும் இப்பணி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் தொடர்பானது. இப்பூமியை அதில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி மனிதன் சிறப்பான முறையில் வாழ்வதற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கும் அதனைத் தொடர்ந்து நிலைபெறச் செய்வதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை இஸ்லாம் ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாக்கியுள்ளது.

‘அவனே உங்களைப் பூமியிலிருந்து தோற்றுவித்து அதனைப் பரிபாலிக்குமாறும் கேட்டுக்கொண்டான்’ (அல்குர்ஆன் 11 : 61). 

இவ்வாறெல்லாம் நம் இஸ்லாத்தில் மரம் வளர்ப்பின் அவசியத்தை கூறப்பட்டுள்ளது. இத்தகைய நன்மையான அரும்பணியை நம் வீடுகளிலும் பொது இடங்களிலும் நடுவதுடன் அழகிய பொழுது போக்குடன் நன்மையும் அடைய முடியும்.

இத்தகு நற்பணியில் எனது உழைப்பில் வளர்ந்த காய்கறிகளும் அதன் பலனும்.

கொண்டையிலெ பூ இடையிலெ கனி - சோளம்


சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சுட்டு உப்புடன் மிளகாதூள் லெமன் தடவியும் விளக்காரிகளிடம் அவித்து வருவதை வாங்கி கொரித்து சாப்பிட மற்றும் பிரத்யேகமாக பொழுது போக்கிக்கென்றே இதனை வறுத்து உருவகமற்ற  பாப்கார்னாகவும் விற்கப்படுகிறது.  இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  

சோளம் அரைத்த  மாவிலிருந்து சப்பாத்தி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மாவை பொறிக்க வேண்டிய பொருளின் மீது தூவி பொறித்தால் சுவையாகவும், எண்ணெய் அதிகம் உறிஞ்சப்படாமலும் காக்கும். இதில்  கலோரி, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம் , இரும்புசத்து, கரோட்டின் இன்னும் பல  சத்துக்கள் கலந்துள்ளன. 

கோழியுடன் சம்பந்தமே இல்லை ஆனால் - முட்டை கோஸ்


வயிற்று புண்ணை ஆற்றி, குடலுக்கு பலமூட்ட உடலுக்கு வனப்பும் வலிமையையும் தரும் நல்ல உணவு. சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும் சேர்த்து சமைப்பதால்  கோஸ் கீரைகளிலுள்ள விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை நீக்கும்

இதன் வண்ணமே தனி அழகு  -  கலர் முட்டை கோஸ்


இது  திருப்பூர் கோவை பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதில் முட்டை கோசுக்குரிய சத்துக்களுடன் பீட்ரூட்டின் மகத்துவமும் கலந்து உள்ளது.

டைலருக்கோ, நாவிதருக்கோ சம்பந்தமில்லா காய்- கத்தரி


பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துடன் ஃபைபர்  மாங்கனீசு , பொட்டாசியம் , ஃபோலேட் , வைட்டமின் கே , வைட்டமின் பி ,, வைட்டமின் சி , மெக்னீசியம் ,ஆகியவை உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. 

காதல் கணி எனப் பெயரும் உண்டு  - தக்காளி 


இதில் வைட்டமின் சி பொட்டாசியம் மாங்கனீசு இன்னும்  சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரககல் உருவாகும் என்பது ஆதாரப்பூர்வமானதல்ல!

காயாக, காய்ந்ததாக, காரத்தூளாக – மிளகாய்


காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்து  உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலின் கொழுப்பைக் குறைக்க  பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாமல் சந்தோச உணர்வைத் தூண்டும் ஒருவகை சக்தியும் இதில் இருக்கிறது.

இரத்தம் ஓட நல்ல ரூட் -பீட்ரூட். 


இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் அல்சர் குணமாக, பித்தப்பையும் சுத்திகரிக்கப்பட,  நல்ல உணவு.  இதன் சாறு   அஜீரணத்தை நீக்கி மலச் சிக்கலையும் போக்குகின்றன. இதில் வைட்டமின்  A B B1 B2  C  மற்றும் கால்சியம் இரும்பு சத்துக்களும் மிகுந்திருக்கின்றன.

நிறமே இதன் தரம் - கேரட்


கேரட்  சாப்பிடுவதால் பற்கள் ஒளிர்கின்றன.கண் பார்வையை பாதுகாக்கின்றன.  இதயம்  மற்றும் வலிப்பு நோயை தடுக்கின்றன.முதுமையை பிற்படுத்தி  ஆரோக்கியமும் மினுமினுப்பும் உடைய தோள்களை பெற முடியும். இதிலும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின்கள் இருக்கின்றன.

உருவத்தில் பல வகை - உருளைக்கிழங்கு 


இதற்கு பூமியின் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு.உருளை சத்து மிகுந்தது. அரிசியை போன்ற மாவுப் பொருள்.  இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.

தமிழ் பெயர் இல்லாத பூ - காலிஃப்ளவர்


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.  காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா  சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.  இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.  

இது நரம்பை பலமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை அதிகம் ஏற்படாது.

தலைப்புக்கு பொருத்தம் இல்லாத- பூ


இது ரோடியம் மிளிரும் வண்ண செடிகள். நான் வளர்த்தவை அல்ல கடையில் கிளிக்கியது.

நாமும்  மரம் செடி வளர்ப்போம் மனமகிழ்வும் பெறுவோம்.

M.H.ஜஹபர் சாதிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு