Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஒளி. Show all posts
Showing posts with label ஒளி. Show all posts

வேவ்ரைடர் விமானம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2012 | , , , , , ,


ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக (காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 343 மீட்டர் ஆகும்) பறக்கக்கூடிய ஒரு விமானத்தை உருவாக்கி  அதற்கு (முந்தைய கண்டுபிடிப்பு சூப்பர் சானிக்) இப்போ ஹைபர்சானிக் விமானம் (சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் என்பது போல்தான்)   என்று பெயரும் வைத்து பரிசோதனை செய்தபோது அது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்து விட்டது (ஹைபர்சானி(பி)க் பசியால் விழுந்ததா?). அங்கே விழுந்தது விமானம் மட்டும் அல்ல அதனோடு ஒரு பெரும் தொகை டாலரும்தான்.


அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. அப்படி எட்டியிருந்தால் அரை மணி நேரத்திற்கு பிறகு சாகடிக்கப்பட வேண்டிய அப்பாவிகள் அரை மணி  நேரத்திற்கு முன்பாகவே அமெரிக்கா படைகளால்  சாகடிக்கப்படுவார்கள்.

வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட தோல்வி.  கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு சோதனை முயற்சியும் தோல்வியடைந்தது. இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அதுவும்  பசிஃபிக் கடலுக்குள் விழுந்து விட்டது (இது பசிஃபிக் கடலா அல்லது பசி(யுடனிரு)க்கும் கடலா?).

பி-52 போர் (இந்த விமானம் gulf-war நடந்தபோது அதிக அளவு பயன்படுத்தப்பட்ட விமானம் நீண்ட தூரம் பறந்து சென்று குண்டு வீசக்கூடிய திறன் படைத்த விமானம். B50, B52 இப்படி 'B'யில் ஆரம்பிக்கும் விமானங்கள் குண்டு வீசக்கூடிய விமானங்கள். F15, F16 என்று 'F'யில் ஆரம்பிக்கும் விமானங்கள்  வானில் சண்டை போட கூடிய விமானங்கள்). விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர் 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வானில் இருந்து ஒரு ராக்கெட் உதவியுடன்  வானில் உந்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


அவ்வாறு உந்தப்படும் வேவ்ரைடர் பின்னர், மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்ற  வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வேகத்தை எட்ட முடியாமல்  கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. அடுத்த தலைமுறை மனிதர்களை கொன்று குவிக்க  இது போன்ற வேகம் கூடிய  ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு   ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைகளும் அமெரிக்க அரசும் இணைந்து பலகோடி  டாலர் செலவு செய்து வருகின்றது. அதிவேக உயர்  தொழில் நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் சொல்லப்படுகின்றது. 

இந்தத் திட்டத்தை (அப்பாவி மக்களை கொல்ல) அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது அதற்கான செலவை பார்த்தாலே விளங்கும்.  இதே  தொழில் நுட்பத்தில் பயணிகள் விமானம் செய்தால் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒருமணி நேரத்தில் சென்றடையலாம்.  இவற்றினால் தொடர்ந்த தோல்விகளைப் பார்த்தால் இவை இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தம் இல்லாத அழித்தொழிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிரான மக்களின் மனக்குமுறலால் என்றே கணிக்க வேண்டி இருக்கிறது.
மற்ற நாடுகளில் இரசாயண ஆயுதம் இருக்கிறது, தடை செய்யப்பட அணு ஆயுதம் இருக்கிறது என்று வலியச் சண்டைக்கு போகும் அமெரிக்கா இப்படி மனித இனத்தை  அழிக்கும் ஆயுதம் வைத்திருக்க இறைவன் மட்டும் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவானா?   

இன்னும் பல ஆயிரம் டாலர்களை இந்த முயற்சியில் இழக்க, உலகைப் படைத்தவனும் அவனால் படைக்கப்பட்ட அந்த பசிபிக் கடலும் துணை நிற்குமாக !

முக்கிய குறிப்பு :) இந்த பதிவில் பதியப்பட்டிருக்கும் படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டது, இதெற்கென்று தனியாக சேட்டிலைட் விட்டோ, தனி விமானத்திலோ, ஆள் நடமாட்டமில்லாத இடத்திலிருந்தோ, எடுக்கப்பட்டது அல்ல, இதனை காரணம் காட்டி வேவு பிரிவு, பத்திரிகைகாரர்களின் கதவு தட்டி கூப்பிட்டு 'வாங்க வாங்க' வந்து பாருங்க என்று கடை விரிக்க மாட்டார்கள். ஒருவேளை இந்த ஆர்டிகல் தமிழில் இருப்பதால் தமிழ்நாட்டின் வேவு பிரிவுக் காரங்கதான் இதுக்கும் ஒரு கற்பனைக் கதை வைத்திருந்தால் பத்திரிக்கை, தொலைக்காட்சி காரங்களுக்கு தீனியாக இருக்கும்.

Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு