Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சோம்பேறி. Show all posts
Showing posts with label சோம்பேறி. Show all posts

என் இதயத்தில் இறைத்தூதர் - 18 - சோதிடம் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2014 | , , ,

சோதிடமும் ஒரு அறிவியலே, ஒரு கலையே அதற்கும் கோள்களுடைய இயக்கத்திற்கும் தொடர்பு உண்டு அதை நம்புவதில் தவறில்லை என்றும் ஒரு சாரார் நம்பிக் கொண்டுள்ளனர். இல்ஸாத்தைத் தவிர ஏணைய மதங்கள் அனைத்தும் அதில் நம்பிக்கை கொண்டுள்ளவைகளே ! 

இந்து மத விசேஷங்கள் அனைத்தும் சோதிடத்தை முழுவதும் அடிப்படையாகக் கொண்டவையே. ஆனால், துரதிர்ஷ்டமாக முஸ்லீம்கள் சிலரும்கூட, சோதிடம், சகுணம், பால் கிதாபு, நட்சத்திர நம்பிக்கை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இவைகள் மிகப் பெரும் ஷிர்க் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.

சோதிடமும் அறிவியலே என்று வாதிடுவோர்க்களுக்கு, நாம் அவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். கேள்விகளை அடிப்படையாக வைத்து - அதன் சுழற்சி,தங்கும் இடங்களை வைத்து, சோதிடம் சொல்லப்படுகிறது என்றால் அதன் மூலம் பலன்கள் இருக்கிறது என்றால், முன்பு 9 கோள்கள் என்று சொன்ன அறிவியல் இப்போதோ புது புதிதாக கண்டு பிடித்துக் கொண்டே உள்ளதே, அது எப்படி ? அதனுடைய பலன்கள் என்ன ? இதன் மூலம் ஏக இறைவனாகிய அல்லாஹ், கோள்கள் அனைத்தையும், மற்றவைகளையும் படைத்து விட்டு, சும்மா இருந்து விடவில்லை. புதிது புதிதாக படைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும், அவன் இயங்கிக் கொண்டே இருக்கிறான் என்றும் விளக்குறதா ? அல்லது புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் கோள்களின் கிரக ராசி என்ன ? அதைப் பற்றி ஏன்  மூச்சு விட மறுக்கிறது சோதிடம்.

முன்பு புளோட்டோ என்று அறியப்பட கோள் இன்று விஞ்ஞானிகளால் ஒரு கோளாக அடையாளம் காட்டப்படுவதில்லை. முன்பு புளுட்டோவை வைத்து கணித்த முறைகள் இப்போது செல்லுபடியாகதே ! அதற்கு சோதிடம் என்ன சொல்லப் போகின்றது. இனி அதை வைத்து இப்போது சோதிடம் சொல்ல முடியாத நிலைக்கு சோதிடப் புரட்டர்களின் பதில்தான் என்ன ?

கார்ல் பாப்பர் என்ற விஞ்ஞானியின் கூற்றுப்படி, எந்த அறிவியல் கொள்கையும் ஒரே ஒரு தடவை உண்மையற்றது என நிருபிக்கப்படுமானால், அந்த விஞ்ஞானக் கொள்கையே உண்மையற்றதாக ஆகிவிடும். ஆனால், சோதிடத்தில் பலிப்பதைவிட, பொய்ப்பதுதான் மிக அதிகம். ஒவ்வொரு சோதிடனும் ஒவ்வொரு மாதிரி சொல்வார். அதில் யார் சொல்வது சரி ? இப்படி பொய்ப்பதன் மூலம், சோதிடம் பொய்யானது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், இஸ்லாத்தின் எந்தக் கொள்கைகளும் இன்று வரை பொய்யானதில்லை. இன்றும் திருக்குர்ஆன் உலகமக்கள் யாவரிடமும் சவால் விட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படிதான் அறிவியலும் சென்றாக வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ! மனிதப் படைப்பு, பிரபஞ்ச தோற்றம், கரு உருவாவது, மழைநீர், இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். அறிவியல் ஒன்று சொல்லும் கருத்து, குர்ஆனுக்கு ஆரம்பத்தில் மாற்றமாக இருந்தால், கடைசியில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, குர்ஆன் என்ன சொல்கிறதோ, அந்தக் கொள்கையில் வந்து நின்று விடுகிறது அந்த அறிவியல்.

இதுவரையில் சொன்னவை அனைத்தும் பொய்க்காத சோதிடரை யாரும் கண்டதுண்டா ? முடியவே முடியாது ! காரணம் சோதிடமும் ஒரு மிகைப் படுத்தப்பட்ட ஒரு பெரிய பொய் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது.

இதை சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் நம்புகிறார்கள் என்பதுதான் மன வேதனை. இது ஒரு மனநோய் அல்லது அதன் ஆரம்ப அறிகுறி என்று கூட கூற இயலும்.

சிலரைப் பார்த்தால், ஒரு தினசரி நாளிதழை கையில் விரித்துக் கொண்டு, அவர்களின் அன்றைய ராசி - பலன்கள் என்ன போட்டிருக்கிறது  என்று பார்ப்பவர்கள் அதை நம்புவார்கள். அதே போன்று செயல்பட ஆரம்பிப்பார்கள். காலண்டரையும் நாளிதழ்களையும் பார்த்து, பார்த்து சோம்பேறிகளாக, மடையர்களாக, மன நோயாளிகளாக என்று மாறிப் போய் விடுவார்கள் .

இந்த சோதிடம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ?

இன்ஷா அல்லாஹ் தொடரும் !

இப்னு அப்துல் ரஜாக்

வாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , ,

ஜப்பானில் உள்ள மக்கள் ஆரம்பதில் இருந்தே மீனை பிடித்தவுடன் ( FRESH FISH ) ருசித்து சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ( நம்ம ஆள்கள் போலதான் ), ஆனால் மக்கள் தொகை பெருக்கதால் அவர்கள் கரை ஒரத்தில் பிடித்துவரும் மீன் அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை. ஆதலால் அங்குள்ள மீனவர்கள் கடலில் வெகு தொலைவிற்கு ஆழ்கடல் சென்று அதிக மீனை பிடித்து வருவதற்க்கு பெரிய பெரிய படகுகளில் போய் மீன் பிடித்து வந்தார்கள்,ஆனால் கரை வருவதற்க்குள் அதன் புத்துணர்ச்சி (Freshness) தன்மை மாறிவிடுகிறது. அதை மீன் வாங்குபவர்கள் விரும்புவது இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த மீனவர்கள்..குளிரூட்டும் கருவியை அவர்கள் படகுகளில் பொருத்தி..அதில் பிடித்த மீனை போட்டு கொண்டுவந்தார்கள்..அப்பொழுதும் வாடிக்கையாளர்கள் அது ஜஸ்லே வைத்த மீன்..அதனால ருசி இல்லை என்று வாங்க மறுத்தார்கள்…என்னாடா செய்வதுயேன்று யோசித்த மீனவர்கள்..அவர்களின் படகுகளில் பெரிய தண்ணீர் தொட்டிகளை இணைத்து அதில் தண்ணீர் நிரப்பி..பிடித்த மீன்களை அதில் விட்டு உயிருடன் கொண்டுவந்தார்கள் ஆனால் அது வரும் வழியில் தொட்டியில் நீச்சல் அடித்து,தொட்டியின் சுவர்களில் முட்டி கரை சேருவதற்கு முன்பே களைத்து அதன் புத்துணர்ச்சியை இழந்தன.

ஆனால் இப்போழுது ஜப்பானியர்கள் உயிருடன் பிடித்த மீனை சாப்பிடுகிறார்கள் எப்படி? மீனவர்கள் அதை செய்தார்கள்? அவர்கள் அதை தொட்டியைத்தான் உபோயிகித்தார்கள் ஆனால் அதில் ஒரு சிறிய சுறா மீனை வீட்டார்கள் , தொட்டில் உள்ள மீன்களுக்கு சுறாவிடம் சிக்கினால் ஆபத்துதான். ஆகையால் அதனிடம் இருந்த தப்பிக்க வேண்டும் என்று சவால் எடுத்து, தொடர்ந்து தொட்டியில் இடைவிடாமல் நீந்தி கொண்டு, சுறா என்ற சவாலை எதிர் கொண்டு உயிருடனும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன.

அதேபோல் நம்மிலும் பலர் இதைபோல் தொட்டியில் சுறா இல்லாமல் வாழூம் மீன்களைபோல் வாழ்க்கையில் எந்தவித இலக்கும், சவாலும் இன்றி கிடைத்ததுபோதும் என்று வாழ்ந்து மற்றும் வாய்ப்பு கிடைத்தும் நழுவ விட்டு நொந்து நூலாகி மதிப்பு இல்லாமல் போய்விடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் சவாலைகளை எதிர் கொண்டு. அதில் தொடந்து வெற்றி கண்டு அதானால் மகிழ்ச்சி அடைந்து. புத்துணர்ச்சி பெற்று ஏறு நடை போட்டு வாழ்கின்றவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

சோம்பேறிதனம் வாழ்க்கையே அழித்துவிடும் அல்லாஹ் நமக்கு எல்லாவித திறமைகளையும் அளித்து இருக்கிறான். வெற்றி தோல்வி என்பது சோம்பேறிதனத்தை அகற்றி கையால்வதில் தான் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை என்ற கடலில் சவால் என்ற சுறாவை விட்டு அதை எதிர் கொண்டு பாருங்கள். அதில் வெற்றியடையும் போது உள்ள மகிழ்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்கும், சந்தோசமாக வாழ வைக்கும் (அல்லாஹ்வின் உதவியால்)

நீங்கள் இந்த கட்டுரையே படித்து. சோம்பல் படாமல் பின்னூட்டம் இடுவீர்கள் என்று நம்புகிறேன்.

சிந்தனை & ஆக்கம்

யாசிர் -துபாய்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு