Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label AEAC. Show all posts
Showing posts with label AEAC. Show all posts

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி - பகுதி 3 6

அதிரைநிருபர் | February 14, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறோம்.

இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-3 CMN சலீம் அவர்களின் உரை உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

சகோதரர் CMN. சலீம் M.A. அவர்களின் எழுச்சியுரை





இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.

மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி - பகுதி 2 3

அதிரைநிருபர் | February 08, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை  நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிடுகிறோம். 

இதோ இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-2  உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

பேராசிரியர் பரகத் அவர்களின் உரை
 














இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.

மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

     மற்றும் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி - பகுதி 1 8

அதிரைநிருபர் | February 08, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை முதன் முதலில் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிடுகிறோம். அதிரைநிருபர் குழு சகோதரர்களின் வேலை பளுவுக்கு நடுவில் இந்த கானொளி பதிவேற்றம் நடைப்பெற்று வருகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் பகுதி-1 உங்கள் பார்வைக்காக தருகிறோம். முடிந்தவரை நல்ல தரத்தில் தந்திருக்கிறோம், பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

கிராஅத்: ஹாபிழ்: பத்ர்




தலைமையுரை: அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள் 






இரண்டாம் உரை:அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள்





இந்த கானொளி தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த கானொளியை எல்லோரும் தங்களின் வலைத்தளங்களில் வெளியிட்டு எல்லா மக்களும் பயனைடைய செய்யலாமே.

மற்ற பேச்சாளர்களின் கானொளி விரைவில் வெளியிடப்படும்.

தொடர்ந்து இணைதிருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

மற்றும் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு

மற்றும் ஓர் வாய்ப்பு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்பின் அதிரைப்பட்டினத்து மாணவச் சமுதாயமே ! உங்களுக்கென்று ஒர் விழா எடுத்தோம் அதில் உங்களில் சிலர்தான் அதன் பலனைக் கண்டீர்கள் ஆனால் மீதமிருந்த பெரும்பாலான மாணவர்கள் உங்களின் பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டு அன்றைய சுயநலனுக்காக தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு ஒளிந்து கொண்டீர்களா ? அல்லது ஒதுங்கிக் கொண்டீர்களா ? சிந்தித்துப் பாருங்கள் !

படித்தவர்களும் பண்பாளர்களும் அவரவர் அனுபவங்களையும் அறிவுரைகளையும் உங்களுக்காக வழங்கிடத்தானே ஊரே கூடி ஒர் கூட்டு முயற்சியாக உங்களை ஓர் இடத்திற்கு வர அழைத்தோம் ஏன் இந்த மெத்தனம் இதனால் இவ்விழா நடத்தியவர்களுக்கு இழப்புகள் ஏதுமில்லை காரணம் அவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவுடன் தான் உங்களைக் களம் காண அழைத்தார்கள் இன்னும் அழைப்பார்கள், ஆனால் அந்த இரண்டு நாட்களின் அற்புதமான நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் நிஜத்தினை அனுபவிக்க தவறிவிட்டீர்களே !.


இதுவரை நடந்தவை நடந்ததாக இருந்திடட்டும், இழந்த அந்த இரண்டு நாட்களின் பலன்களை கண்டிட உங்களுக்கும் இன்னும் ஒரு வாய்ப்பு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சிகளின் காணொளித் தொகுப்பை குருந்தகடாக வெளியிட இருக்கிறோம் இதனைப் பெற்று என்னதான் அங்கே பேசினார்கள் எதைத்தான் எடுத்து வைத்தார்கள், யாருக்காக இவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பதன் உண்மை நிலவரத்தை கண்டறியுங்கள், இந்தத் தொகுப்புகளின் குருந்தகடைப் (compact disc) பெற்றுக் கொள்ள adiraieducationalmission@gmail.com அல்லது adirainirubar@gmail.com  என்ற முகவரிகளில் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதோடு அவர்களால் தரப்படும் கருத்துக் கணிப்பு படிவத்தினையும் முறையாக பூர்த்தி செய்து எங்கே பெற்றுக் கொண்டீர்களோ அங்கே திருப்பிக் கொடுத்திடுங்கள் அல்லது எங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பித் தாருங்கள்.

இதுமட்டுல்ல நாங்கள் எடுத்த பணி இன்னும் இருக்கிறது இது தொடரத்தான் செய்யும் அதுவும் உங்களைப் போன்ற மாண்வச் சமுதாயத்துடன் கைகோர்த்து அதிரைப்பட்டினத்து நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நலனுக்காகவும் இன்ஷா அல்லாஹ்.. !

வரும் காலங்களில் தொடர் நிகழ்வுகளாக உங்களுக்கும் ஊருக்கும் பலன் தரும் படிப்புகளைப் பற்றியும் அதற்கான வாய்ப்புகளைப் பற்றியும், ஆட்சி, அதிகாரம், நிர்வாகத்தில் கோலோச்சிட என்னவெல்லாம் நாம் செய்திட வேண்டும் என்ற வழிகாட்டல்கள் தொடரும் இதற்கான ஆதரவும் உங்களின் ஆர்வமான பங்களிப்பும் இனிவரும் நம் வீட்டுச் சகோதரர்களுக்கு வழிகாட்டியாகவும், நிம்மதியான வாழ்வாதாரமாகவும் அமையும் இன்ஷா அல்லாஹ்..

அதிரை கல்வி சேவையகம் adirai educational mission - AEM, இது நிதி நிறுவனமல்ல ஆனால் அதிரைப்பட்டினத்து சமுதாயத்தின் நலனுக்காக உயர் கல்விக்கும், அரசு வேலைக்கான ஆதரவான கல்விகளுக்காக நிதியும், நீதியுடனும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாகபலன்களின் நதிகளில் நீந்திட வழிகாட்டிடுவோம் இயன்றவரை கற்றுக் கொடுப்போம், அரசு பணிகளுக்கும் உயர் பதவிகளுக்கும் உங்களை உயர்த்திட உங்கள் யாவரின் ஆதரவும், ஆர்வமும், முயற்சியும், தெளிவான குறிக்கோலுடன் வாருங்கள் இந்த வாய்ப்பை பயண்படுத்திக் கொள்ளுங்கள் பயனைந்திடுங்கள் !

- அதிரைநிருபர் குழு

அதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம் அவர்களின் எழுச்சி உரை 13

அதிரைநிருபர் | January 19, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அதிரைநிருபர் வாசகர்களே, கடந்த ஜனவரி 14ம் மற்றும் 15ம் தேதிகளில் அதிரையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது என்பது நாம் எல்லோரும் அறிந்தது.

நாம் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிறப்புப் பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சியுரை கானொளி முதன் முதலில் நம் அதிரைநிருபரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம்.


இந்த கானொளியை பார்த்து பயனைடையுங்கள், இதை உங்களுக்கு தெரிந்த அதிரை சகோதரர்கள் மற்ற வெளியூர் சகோதர்ர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநாடு முடிந்த பிறகும் இந்த கானொளியை இணையத்தில் நம் அதிரைநிருபருக்காக தன் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி upload செய்து தந்த சகோதரர் மொய்னுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அல்லாஹ் போதுமானவன்.

-- அதிரைநிருபர் குழு

இலட்சியத்தின் "இலச்சினை (Logo)" 16

அதிரைநிருபர் | December 31, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச் சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.

முதல் நாள் (14.01.2011)  நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட" முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமான சகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள் (15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.




விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!

மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.

இவண்

அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team

________________________________________________________

நன்றியுடன் : இம்மாநாட்டிற்கான இலட்சினை உருவாக்கிட அதிரைநிருபர் குழுவுடன் இணைந்து எல்லா வகையான ஆலோசனைகளையும் உறுதுணையுடன் பதிவு வடிவம் கொடுத்திட்ட எங்கள் அன்பின் ஜமீல் காக்கா மற்றும் அதிரை அஹ்மது காக்கா, சபீர் காக்கா, ஷர்ஃபுத்தீன் காக்கா இவர்களை நினைவில் கொள்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு