Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label உரைநடை. Show all posts
Showing posts with label உரைநடை. Show all posts

எண்ணமும் எழுத்தும் 52

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , , , , ,


தப்பித்தது –
இது
கவிதை அல்ல
நல்லவேளை –
நான்
கவிஞனும் இல்லை!

இந்த
வார்த்தைக் கோர்வை
எதேச்சையானது
சொந்த
வாழ்கையைச் சொல்வதில்
சுயேட்சையானது

இது
பகுத்தறிவுப் பண்புகளைத்
தொகுத்தக் கணக்கு
வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு

இது
வைத்தியர்கள் இலக்கணமோ
மருத்துவச்சி அனுபவமோ
அவசியப்படாத
இயற்கை பிரசவம்

தேன் தடவிய
கசப்பு மருந்து
தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து.

இது
கர்ப்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
கயமையை எதிர்ப்பதில்
தீண்டிடும் சர்ப்பம்

உபரிக் குறியீடுகளும்
உதிரிக் காகிதங்களும்
விரயமாகாததால்
விழலுக்கு
இது
வீணாவதில்லை

இது
கத்தரித்து வைக்கப்பட்ட
கட்டபொம்மன் மீசை
திருத்தி அமைக்கப்பட்ட
தீன்குலத்தோர் கேசம்

விளிப்புகளையும் அழைப்புகளையும்
அடிவருடல்களையும் தவிர்த்த
அறிவாகரனின் மேடைப்பேச்சு

கொண்டதைக் கொண்டே
கொள்கலன் அறியப்படும்
உண்டதைக் கொண்டே
உடல்நலம் சீர்படும்

ஏட்டோடு பழகாமல்
எழுத்தோடு மோதாமல்
எண்ணங்களைப் பார்க்கனும்
என்னவென்று புரியனும்

கெட்டதை சொல்லுமெனில்
கட்டுரையும் தீதே
கட்டுக் கதைகளையும்
தடுத்தே வைக்கனும்

கடமையை மறந்து
ஜடமாய் வாழ்பவனை
எண்ணமும் எழுத்தும்
திண்ணமாய் எழுப்பும்

எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்

- Sabeer abuShahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு