Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அரசியல்வாதி. Show all posts
Showing posts with label அரசியல்வாதி. Show all posts

வா.. வின் (கவி) ஓவியம்... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 18, 2011 | , ,


கருணாநிதி:

பட மெடுத்தீர்! தமிழ்த்திரு
நாட்டைத் தீண்டி விட்டீர்!
மின்சாரத்தைத் துண்டித்தீர்! மக்கள்
உம்மைத் தண்டித்து விட்டனர்!
மின்சாரம் இல்லாமலேயே ஷாக்
ட்ரீட்மென்ட் தந்து விட்டனர்!

ஜெயலலிதா:


மதுரைக்கே வேட்டு வைத்த
கண்ணகிக்கு வேட்டு வைத்தீர்!
கற்பில் நிலைத்து நின்றவளுக்கே
இக் கதிதான் உண்டு என்றால்
பொறுப்பில் உள்ளோர் கதி
யாதா குமோ யாரறிவார்?

விஜயகாந்த்:


கொட்டு முரசே! தனிக்காட்டு ராஜ்யம்
நமதென்று கொட்டு முரசே!
பாட்டில் அடிக்காமல் எழுத முடியாது!
பாட்டில் அடிக்காமல் பேச முடியாது!
பாலாறு, தேனாறு ஓடுதோ இல்லையோ,
கோளாறு செய்யும் மது ஆறு ஓடும்!

வைக்கோ :

அம்மாவால் சைக்கோ ஆகுமுன்,

வைக்கோ, இடம் மாற நினைத்தீர்!
நல்ல வேளை தப்பித்தீர்; மாறினால்
உமது நிலைமை என்னவாகும்?
மறு தளர்ச்சி வேண்டாம்; மீண்டும்
புது மறுமலர்ச்சி மலரட்டும்!

தா. பாண்டியன்:


சொந்த அரிவாள் அதனால்
கதிர் அறுக்க முடிய வில்லை!
சொந்த அறிவாலும் அறுவடை
நடத்தத் துணிவில்லை; உமது
கூரிய அறிவாள் செங்கோல்
என்றுதான் நிமிர்ந்து நிற்கும்!

ராமதாஸ்:

அரசியலில் மகா மருத்துவர் நீர்!
உமது ட்ரீட்மென்ட் என்ன ஆச்சு?
எக்ஸ்ரே, ஸ்கேனிங் எல்லாம்
மிகவும் பழுதாகிப் போயினவோ?
புதிதாக வாங்கி வைக்க,
அய்யாவுக்கு ஐடியா உண்டா!

தங்கபாலு:

வெளியேறி யவரோ கராத்தேக்காரர்!
சகாக்களுடன் செய்தீர் கராத்தே!
என்ன சொன்னாலும் உமக்கு வராதே!
பொற்கைப் பாண்டியனின் கை,
ஜோஷ்யக் கையாய்ப் போனதேனோ?
விதி ரேகை சொல்லுமா விளக்கம்?


உமர்தம்பிஅண்ணன்

நன்றி : Zakir Hussain

அரசியல்வா(வியா)தி 23

அதிரைநிருபர் | March 14, 2011 | , ,

அரசியல் களம்

இரு'கை' கூப்பி வருவான்.
இருக்கையை பிடிக்க!
மாமன் என்பான்.
மச்சான் என்பான்.

பங்காளி என்பான்.
அம்மா, தாயே என்பான்.
தாய்குலம் என்பான்.
எல்லாரும் ஓர்குலம் என்பான்.

உங்கள் வீட்டு பிள்ளை என்பான்.
கூப்பிட்ட குரலுக்கு
ஓடி வருவேன் என்பான்.
எல்லாம் தேர்தல் வரைதான்.


இருக்கையை பிடித்தபின்
ஒருகையை மட்டும் காட்டிடுவான்(டாட்டா).
ஒருவாய் சோற்று பருக்கைக்கு கூட உதவமாட்டான்.
காரியம் ஆக காலைபிடித்தவன்.

ஒவ்வொரு காரியம் செய்யவும் காசு கேட்பான்.
தொகுதிக்கு என்றும் வரமாட்டான்.
தன் தகுதிக்கு மீறி சொத்து சேர்ப்பான்.
நம்மையும் நம் சுற்றத்துடன் சேராமல் பிரிக்க பார்ப்பான்.

கலவரம் உண்டுபன்னுவான்.
இருபக்கமும் கோல்சொல்லி கோலடிப்பான்.
மறுபடியும் தேர்தல் வாக்குறுதியை அள்ளிவீசிடுவான்.
இன்பமாய் பேசி மவுனமாய் வென்றிடுவான்,

மாங்கா மடையர் நாம் தான்,
எப்பொதுமே தோத்து நிற்போம்.
இது வேதனையான வாடிக்கை
இளிச்சவாயர் நம் பேர் ''வாக்காளர்''.

-- CROWN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு