Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

தொடரும் தண்டவாளக் கொலைகள்...! – தவ்ஃபீக் சுல்தானா… 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2013 | , , , , ,

திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா இவரின் மகள் தவ்ஃபீக் சுல்தானா(13). 8ம் வகுப்பு மாணவி. கடந்த 13ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் எடமலைப் பட்டி புதூரை அடுத்த ரெட்டை மலை பகுதியில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உடல் உறுப்புகள் சிதைந்து உடல் சிதறி பினமாக கண்டெடுக்கப்பட்டார்.  

14.08.2013 அன்று தவ்ஃபிக் சுல்தானா கற்பழித்து கொலை செய்யபட்டுள்ள செய்தியை தமிழக ஊடகங்களில் ஒருதலைப்பட்சமாக காட்டப்படுகிறது என்பது மிகத் தெளிவாகிறது. டெல்லியில் ஓரு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த இந்தியாவும் ஒருமித்த குரலில் அநீதிக்கு எதிராக ஒன்று திரண்டு குற்றவளிகளுக்கு தண்டனை வழங்கவும்" குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் போராட்டம் நாடு முழவதும் நடந்தது "குற்றவாளிகளும் உடனே பிடிக்க பட்டனர், இந்தியாவில் வடமாநிலத்தின் ஓரு நகரத்தில் நிகழ்ந்த குற்றச் செயலுக்கு ஒன்று கூடிய நம்ம தமிழ்நாட்டு மக்களும் ஊடங்களும் சொந்த மாநிலத்தில் ஓரு இளம் பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இதை எந்த ஒரு செய்தித்தாள்களிலோ தொலைக் காட்சியிலோ வெளிச்சம் போட்டு காட்டாமல் மறைத்தது ஏனோ?

இந்த கொடூரத்திற்கு ஏனோ சமுக அர்வலர்களும் குரல் கொடுக்காமல் இன்னும் மவுனம் சாதிக்கிறார்கள்.

இந்த கொலையைக் கண்டிக்க மறந்த பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளின் ஒருதலைபட்சமான போக்கை அனைவரும் கண்டிக்க வேண்டும். டெல்லியில் வசிக்கும் பெண்ணுக்கு ஓரு நியாயம் தமிழ்நாட்டில் வாழும் பெண்ணுக்கு வேறு நியாயம், அதுவும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஓர் முஸ்லீம் பெண் என்ற பாரபட்சம்.

தவ்ஃபிக் சுல்தானா….. இந்த இளம் பிஞ்சும் ஒரு பெண்தானே…. தமிழ் மக்களே இந்தக் கொடூரத்தை கண்டித்தும் கொடிய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விரைவில் தண்டிக்கப்பட குரல் கொடுக்க வேண்டும்.

இந்த கொலை தொடர்பாக சரியான விசாரனை நடத்த கோரி திருச்சியில் முஸ்லீம்கள் நேற்று முன்தினம் நடைத்திய ஆர்பாட்டத்தின் காணொளி இதோ..


அதிரைநிருபர் பதிப்பகம்

மாணவி தவ்பிக் சுல்தானாவின் கொலையும் நாம் பெற வேண்டிய பாடமும்.

முதலில் அவருடைய தந்தை சவூதி அரேபியாவில் வேலை பார்க்கிறார் தந்தையின் நேரடி கவனிப்பற்ற வளர்ப்பு. ஆயிரம் பேர் இருந்தாலும் தந்தை இருப்பது போல் வராது. இன்னும் நாம் வெளிநாட்டில் வேலையிலேயே கவனம் செலுத்தி நமது பிள்ளைகளை இன்னும் எத்தனை பேரை இழக்க போகிறோம் என தெரியவில்லை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

இரண்டாவது காரணம் மாணவி தவ்பிக் சுல்தானா தன்னை சிலர் பின்தொடருவதாகவும் கேலி செய்வதாகவும் தன் கூடப்படித்த தோழிகளிடம் சொல்லியிருக்கிறரே தவிர பெற்றோர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை இது காட்டுகிறது. பெற்ற பிள்ளைகளிடம் உற்ற நண்பன் போல் பெற்றோர்கள் நடந்துக் கொள்ள வேண்டும் நம்மிடம் பேசுவதற்கு அவர்களின் குறைகளை சொல்வதற்கு தயங்கக் கூடாது.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் போனில் பேசும்போது குழந்தைகளிடம் குறைகளை கொஞ்சம் நேரம் செலவழித்து பேசி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் நல்ல நண்பனாக நான் இருந்து விட்டால் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலே களைந்து விடலாம். இன்ஷா அல்லாஹ்.

வேலியே பயிரை மேய்ந்தால்... 4

அதிரைநிருபர் | January 20, 2013 | , , , ,

ஊழல், லஞ்சம், திருட்டு, கற்பழிப்பு, கொலை என்று பல தீய காரியங்கள் யாருடைய துணையுடன் நடைபெறுகிறது என்பது ஊரறிந்த செய்தியே என்றாலும் இதோ இரண்டு உதாரணங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

இங்கே பதியப்பட்ட இரண்டு காணொளிகளை நீங்கள் ஏற்கபவே பார்த்திருந்தாலும் மீண்டும் மீள்பதிவு செய்திக்கிறோம்.


நவம்பர் 6, 2011ல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட திருட்டு காணொளி.


ஆகஸ்ட் 25, 2010ல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஊழல் காணொளி.


செப்டம்பர் 9, 2012ல் பதிவேற்றம் செய்யப்பட்ட குடிகார காணொளி.


இது போன்று இணையத் தேடலில் யூடியூப் வாயிலாக தேடினால் ஏராளம் கொட்டிக்கிடக்கிறது.

பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையோடு உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டு வருவதில்லை. இருப்பினும் தமிழகத்தில் நல்லவர்களும் காவல்துறையில் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது.

திருட்டை, ஊழலை, கற்பழிப்பை, கொலையைக் கட்டுப்படுத்தவே நாட்டின் சட்டமும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால்?

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு