
14.08.2013 அன்று தவ்ஃபிக் சுல்தானா கற்பழித்து கொலை செய்யபட்டுள்ள செய்தியை தமிழக ஊடகங்களில் ஒருதலைப்பட்சமாக காட்டப்படுகிறது என்பது மிகத் தெளிவாகிறது. டெல்லியில் ஓரு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த இந்தியாவும் ஒருமித்த குரலில் அநீதிக்கு எதிராக ஒன்று திரண்டு குற்றவளிகளுக்கு தண்டனை வழங்கவும்" குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் போராட்டம் நாடு முழவதும் நடந்தது "குற்றவாளிகளும் உடனே பிடிக்க பட்டனர், இந்தியாவில் வடமாநிலத்தின் ஓரு நகரத்தில் நிகழ்ந்த குற்றச் செயலுக்கு ஒன்று கூடிய நம்ம தமிழ்நாட்டு மக்களும் ஊடங்களும் சொந்த மாநிலத்தில் ஓரு இளம் பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இதை எந்த ஒரு செய்தித்தாள்களிலோ தொலைக் காட்சியிலோ வெளிச்சம் போட்டு காட்டாமல் மறைத்தது ஏனோ?
இந்த கொடூரத்திற்கு ஏனோ சமுக அர்வலர்களும் குரல் கொடுக்காமல் இன்னும் மவுனம் சாதிக்கிறார்கள்.
இந்த கொலையைக் கண்டிக்க மறந்த பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளின் ஒருதலைபட்சமான போக்கை அனைவரும் கண்டிக்க வேண்டும். டெல்லியில் வசிக்கும் பெண்ணுக்கு ஓரு நியாயம் தமிழ்நாட்டில் வாழும் பெண்ணுக்கு வேறு நியாயம், அதுவும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஓர் முஸ்லீம் பெண் என்ற பாரபட்சம்.
தவ்ஃபிக் சுல்தானா….. இந்த இளம் பிஞ்சும் ஒரு பெண்தானே…. தமிழ் மக்களே இந்தக் கொடூரத்தை கண்டித்தும் கொடிய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விரைவில் தண்டிக்கப்பட குரல் கொடுக்க வேண்டும்.
இந்த கொலை தொடர்பாக சரியான விசாரனை நடத்த கோரி திருச்சியில் முஸ்லீம்கள் நேற்று முன்தினம் நடைத்திய ஆர்பாட்டத்தின் காணொளி இதோ..
அதிரைநிருபர் பதிப்பகம்
மாணவி தவ்பிக் சுல்தானாவின் கொலையும் நாம் பெற வேண்டிய பாடமும்.
முதலில் அவருடைய தந்தை சவூதி அரேபியாவில் வேலை பார்க்கிறார் தந்தையின் நேரடி கவனிப்பற்ற வளர்ப்பு. ஆயிரம் பேர் இருந்தாலும் தந்தை இருப்பது போல் வராது. இன்னும் நாம் வெளிநாட்டில் வேலையிலேயே கவனம் செலுத்தி நமது பிள்ளைகளை இன்னும் எத்தனை பேரை இழக்க போகிறோம் என தெரியவில்லை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
இரண்டாவது காரணம் மாணவி தவ்பிக் சுல்தானா தன்னை சிலர் பின்தொடருவதாகவும் கேலி செய்வதாகவும் தன் கூடப்படித்த தோழிகளிடம் சொல்லியிருக்கிறரே தவிர பெற்றோர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை இது காட்டுகிறது. பெற்ற பிள்ளைகளிடம் உற்ற நண்பன் போல் பெற்றோர்கள் நடந்துக் கொள்ள வேண்டும் நம்மிடம் பேசுவதற்கு அவர்களின் குறைகளை சொல்வதற்கு தயங்கக் கூடாது.
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் போனில் பேசும்போது குழந்தைகளிடம் குறைகளை கொஞ்சம் நேரம் செலவழித்து பேசி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் நல்ல நண்பனாக நான் இருந்து விட்டால் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலே களைந்து விடலாம். இன்ஷா அல்லாஹ்.