QUOTE
ஒருவன் சரியான நேரத்துக்கு மீட்டிங் போக வேண்டியவன், அன்று கொஞ்சம் தாமதமாக வந்தான்.... கான்பெரன்ஸ் ரூம் கதவு பூட்டியிருந்தது
"வாசல் கதவை தட்டலாமா... யாரும் தவறாக நினைக்கலாம்... நான் போட்டிருக்கும் உடை சரிதானா... சரியாக தலைவாரியிருக்கிறேனா... நான் உள்ளே சென்றவுடன் எல்லோரும் என்னை ஏளனமாக பார்க்கலாம்... பேசாமல் திரும்பி விடலாமா... ஏதோ ஒரு சின்ன தைரியத்தில் கதவின் கைப்பிடியில் கைவைத்து மெல்ல திறக்க..... ரூமுக்குள் ஒருத்தனும் இல்லை...... இல்லாத ஆட்களுக்கா இத்தனை யோசனை???
இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களை நினைத்தே நாம் நேரத்தை விரயம் செய்து முன்னேற்றத்தை ஒத்திப்போடுகிறோம்.
பதிவிலக்கணம் ? ! ! !
கருத்துச் சூழ்கொண்ட
குருத்துக் கவிஞர்காள்...
கோர்ப்பது பிசிறினாலும்
வார்ப்பது தொடரட்டும்!
எழுத்துப் பிழையால்
எண்ணம் குழையுமா?
சுமந்து வந்த செய்திச்
சுருங்கிப் போகுமா?
ஞஙன நமண யரல வழள
செழிக்கும் எழுத்தை...
லகர ளகரம் னகர ணகரம்
கிழித்துப் போடுமா?
உணர்ச்சி பொங்க
உருவாகும்
உள்ளக் கிடக்கையை...
புணர்ச்சி இலக்கணம்
புதைத்துப் போடுமா?
அடுக்குத் தொடரும்
ரெட்டைக் கிளவியும்...
அலங்கார மல்லாது
விலங்குக ளல்லவே?
குற்றியலுகர குற்றியலிகர
உகர இகரங்களும்
திரிபு மரபுகளும்
உற்று நோக்கியா
உணர்வுகள் பொங்கும்?
நாலடி, வெண்பா
அறுசீர், ஈரடி எல்லாம்...
பாட்டன் பூட்டன்
பழகிய வித்தை!
எதுகை மோனையில்
முதுகு சொரிந்தால்...
சொக்கும் சுகத்தில்
திக்குமே தீர்வுகள்!
இலக்கண விலங்குகள்
தலைக்கன வியாக்யானம்...
தகர்த்து தந்தது
தற்காலத் தமிழின்
தனித்திறன் அன்றோ?
எண்ணங்களை
ஒட்டி வந்தால்...
கூட்டிச் செல்வோம்;
இடறிவிட்டால்...
உதறி விடுவோம்
இலக்கண கைவிலங்குகளை!
மொழி எமக்கு ஊடகம்...
ஒலியின் -
மாத்திரை அளக்கவோ
அசை பிரிக்கவோ
அல்ல!
கற்றதும் உற்றதும் ...
நினைத்ததும் உணர்ந்ததும் ...
ஜனித்ததும் கணித்ததும்
சொல்ல!
முற்றும் தெளிந்தோர்
கற்றுத் தாருங்கள்.
அதுவரை...
வெற்றாய் நின்று
அற்றுப் போகாமல்-
சொல்வோம்
சுட்டுவர் உள்ளமும்
வெல்வோம்!
-- Zakir Hussain / Sabeer
"வாசல் கதவை தட்டலாமா... யாரும் தவறாக நினைக்கலாம்... நான் போட்டிருக்கும் உடை சரிதானா... சரியாக தலைவாரியிருக்கிறேனா... நான் உள்ளே சென்றவுடன் எல்லோரும் என்னை ஏளனமாக பார்க்கலாம்... பேசாமல் திரும்பி விடலாமா... ஏதோ ஒரு சின்ன தைரியத்தில் கதவின் கைப்பிடியில் கைவைத்து மெல்ல திறக்க..... ரூமுக்குள் ஒருத்தனும் இல்லை...... இல்லாத ஆட்களுக்கா இத்தனை யோசனை???
இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களை நினைத்தே நாம் நேரத்தை விரயம் செய்து முன்னேற்றத்தை ஒத்திப்போடுகிறோம்.
பதிவிலக்கணம் ? ! ! !
கருத்துச் சூழ்கொண்ட
குருத்துக் கவிஞர்காள்...
கோர்ப்பது பிசிறினாலும்
வார்ப்பது தொடரட்டும்!
எழுத்துப் பிழையால்
எண்ணம் குழையுமா?
சுமந்து வந்த செய்திச்
சுருங்கிப் போகுமா?
ஞஙன நமண யரல வழள
செழிக்கும் எழுத்தை...
லகர ளகரம் னகர ணகரம்
கிழித்துப் போடுமா?
உணர்ச்சி பொங்க
உருவாகும்
உள்ளக் கிடக்கையை...
புணர்ச்சி இலக்கணம்
புதைத்துப் போடுமா?
அடுக்குத் தொடரும்
ரெட்டைக் கிளவியும்...
அலங்கார மல்லாது
விலங்குக ளல்லவே?
குற்றியலுகர குற்றியலிகர
உகர இகரங்களும்
திரிபு மரபுகளும்
உற்று நோக்கியா
உணர்வுகள் பொங்கும்?
நாலடி, வெண்பா
அறுசீர், ஈரடி எல்லாம்...
பாட்டன் பூட்டன்
பழகிய வித்தை!
எதுகை மோனையில்
முதுகு சொரிந்தால்...
சொக்கும் சுகத்தில்
திக்குமே தீர்வுகள்!
இலக்கண விலங்குகள்
தலைக்கன வியாக்யானம்...
தகர்த்து தந்தது
தற்காலத் தமிழின்
தனித்திறன் அன்றோ?
எண்ணங்களை
ஒட்டி வந்தால்...
கூட்டிச் செல்வோம்;
இடறிவிட்டால்...
உதறி விடுவோம்
இலக்கண கைவிலங்குகளை!
மொழி எமக்கு ஊடகம்...
ஒலியின் -
மாத்திரை அளக்கவோ
அசை பிரிக்கவோ
அல்ல!
கற்றதும் உற்றதும் ...
நினைத்ததும் உணர்ந்ததும் ...
ஜனித்ததும் கணித்ததும்
சொல்ல!
முற்றும் தெளிந்தோர்
கற்றுத் தாருங்கள்.
அதுவரை...
வெற்றாய் நின்று
அற்றுப் போகாமல்-
சொல்வோம்
சுட்டுவர் உள்ளமும்
வெல்வோம்!
-- Zakir Hussain / Sabeer


.jpg)


