ஏன்தான் அன்று
அப்படிப் பொழிந்ததோ ?
நீர் நிலையால் பள்ளமெல்லாம் வழிந்ததோ?
நிலை குழைந்து
மக்கள் வாழ்வின் ஒரு பகுதி அழித்ததோ?
பருவம் தப்பிய நேரமல்லவே அன்றும்!
பருவத்தில் பிழை செய்யும்
மனித பிள்ளையல்லவே மழை!
இருந்தும் எல்லா இயல்பின் உருவம்
சிதைக்கும் கோபம்
ஈவு இரக்கம் இன்றி
ஒரு இனத்தின் மேல்
இத்தனை சினம்?
பணம் இருந்தவரும்
இல்லாதவரும்
பெரும் அவதிக்கும் ஆளாகி
ஆங்காங்கே பிணம்!
மானிடா!
நீர் நிலையில்
நீ குடிபுகுந்ததால் -அது
உன்குடியில் புகுந்தது
நீர் அடித்து நீர் விலகாது - ஆதலால்
நீரில் உன் வாழ்வாதரம்
அடித்து போகப்பட்டது!
கைவிடப்பட்ட நிலையில்
கை கொடுத்தது மனிதாபிமானம்!
அன்றுதான் தெரிந்தது
பாய்'அன்னியன் அல்ல
அன்பில் பினைந்தவன் என்று!
மேல் புறத்தில் மாட்டிய மனிதருக்கு
கீழ் இறங்கி தப்ப
தன் தோள் கொடுத்தான்!
பள்ளத்தில் படும் வெள்ளத்தில் மாட்டியவர்களை
படகில் ஏற்றிவிட்டான்!
அன்று மீட்பு படகெல்லாம்
பாய்"மரக்கப்பலாய் காட்சி அளித்தது!
துயரம் சிறிது சிறிதாய்
வடிய வடிகாலாய் இருந்தான்
என் சகோதரன்!
ஆனால்
கைபர் போலான் கனவாய் வழியே
நாட்டில் புகுந்தவர்கள்
கைகட்டி மட்டுமே இருந்தனர்.
இயற்கை பாடம் நடத்திவிட்டது
இனியேனும் நிலம் அப"கரிப்பை"
துறப்போம்!
மனிதாபத்தை மதிப்போம்!
CROWN