Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கவிதை கிரவ்ன். Show all posts
Showing posts with label கவிதை கிரவ்ன். Show all posts

அன்று பெய்தது மழை ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2015 | , ,


ஏன்தான்  அன்று
அப்படிப் பொழிந்ததோ ?

நீர் நிலையால் பள்ளமெல்லாம் வழிந்ததோ?
நிலை குழைந்து
மக்கள் வாழ்வின் ஒரு பகுதி அழித்ததோ?

பருவம் தப்பிய நேரமல்லவே அன்றும்!

பருவத்தில் பிழை செய்யும்
மனித பிள்ளையல்லவே மழை!

இருந்தும் எல்லா இயல்பின் உருவம்
சிதைக்கும் கோபம்

ஈவு இரக்கம் இன்றி
ஒரு இனத்தின் மேல்
இத்தனை சினம்?

பணம் இருந்தவரும்
இல்லாதவரும்
பெரும் அவதிக்கும் ஆளாகி
ஆங்காங்கே பிணம்!

மானிடா!
நீர்  நிலையில்
நீ குடிபுகுந்ததால் -அது
உன்குடியில் புகுந்தது

நீர் அடித்து நீர் விலகாது - ஆதலால்
நீரில் உன் வாழ்வாதரம்
அடித்து போகப்பட்டது!

கைவிடப்பட்ட நிலையில்
கை கொடுத்தது மனிதாபிமானம்!
அன்றுதான் தெரிந்தது
பாய்'அன்னியன் அல்ல
அன்பில் பினைந்தவன் என்று!

மேல் புறத்தில் மாட்டிய மனிதருக்கு
கீழ் இறங்கி தப்ப
தன் தோள் கொடுத்தான்!

பள்ளத்தில் படும் வெள்ளத்தில் மாட்டியவர்களை
படகில் ஏற்றிவிட்டான்!

அன்று மீட்பு படகெல்லாம்
பாய்"மரக்கப்பலாய் காட்சி அளித்தது!

துயரம் சிறிது சிறிதாய்
வடிய வடிகாலாய் இருந்தான்
என் சகோதரன்!

ஆனால்
கைபர் போலான் கனவாய் வழியே
 நாட்டில் புகுந்தவர்கள்
கைகட்டி மட்டுமே இருந்தனர்.

இயற்கை பாடம் நடத்திவிட்டது
இனியேனும் நிலம் அப"கரிப்பை"
துறப்போம்!
மனிதாபத்தை மதிப்போம்!

CROWN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு