Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

பேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ! ஆவணப்பட காணொளி 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2015 | , , ,

பெரும் மழை அதன் பின்னர் இஸ்லாமியரின் கருணை மழை...


சற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின்  வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது.  கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவரும் தன்னார்வலர்களாக மாறி சென்னையை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்தார்கள்! இதோ அவற்றின் சில காட்சிப் பேழையின் தொகுப்பு... காணொளி.


அதிரைநிருபர் பதிப்பகம்

காரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப் பெரியவர்கள்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2015 | , , ,

சொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திற‌ம்ப‌ட‌ வடித்திருந்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் இந்த‌ அந்த‌ஸ்த்தை அடைய‌வ‌த‌ற்குள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், துன்ப‌ங்க‌ளையும், துய‌ரங்க‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், நோய்நொடிக‌ளையும், ச‌ண்டைச‌ச்ச‌ர‌வுக‌ளையும், பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் மற்றும் ப‌ல‌ பிண‌க்குக‌ளையும் ச‌ந்திக்காம‌ல் வந்து விடுவதில்லை.

அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌த்துட‌ன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்கு ஏதேனும் துன்ப‌மும், நோய்நொடிக‌ள் வ‌ந்து விட்டால் துடித்துப்போகிறார்க‌ள். 'என் ஈர‌க்குலையே; என் தாம‌ர‌ங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவ‌ர்க‌ள் பாச‌த்தின் உச்சிக்கே சென்று த‌ன் தூக்க‌த்தையும் தொலைத்து விடுவார்க‌ள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.

ஆனால் அவ‌ர்க‌ள் யாருக்காக‌ ப‌ரிவும், பாச‌மும், இர‌க்க‌மும் கொண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நாளை வ‌ள‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ பாச‌ ம‌ழை பொழிய‌ச்செய்த‌ வீட்டுப்பெரிய‌வ‌ர்களை சிறிதும் ம‌திப்ப‌து இல்லை மாறாக‌ ம‌ரியாதையில் மிதி ப‌டுவ‌தை நாம் ஆங்காங்கே காண‌ முடிகிற‌து. பெரிய‌வ‌ர்க‌ள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்க‌த்துடனும் உள்ள‌த்தில் இறுக்க‌த்துட‌னும் அவ‌ர்க‌ள் இறுதி நாட்க‌ளை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் க‌ட‌த்துவ‌தை காணும் ச‌ம‌ய‌ம் நாம் ம‌ன‌ வேத‌னைப்ப‌டுவ‌தை த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ இய‌லும்?

"காய்ந்த‌ தென்ன‌ந்தோகையைப் பார்த்து ப‌ச்சைத்தோகை ஏள‌ன‌மாக‌ சிரித்த‌தாம் தானும் ஒரு நாள் காய்ந்த‌ தோகையாக‌ ஆக‌ இருப்ப‌தை ம‌ற‌ந்து" என்ற‌ ப‌ழ‌மொழி தான் இங்கு ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து.

கால‌ப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ள் முற்றி வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் வாழ்ந்து அனுப‌வித்த‌ வீட்டை விட்டே வெளியேற்ற‌ நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது ம‌ட‌த்த‌ன‌த்தின் உச்ச‌ க‌ட்ட‌ம். ம‌னித‌ நேய‌த்தின் பெரும் வீழ்ச்சி.

பாதிக்க‌ப்ப‌ட்ட அப்பெரியவர்களின் உள்ள‌க்குமுற‌லும், வேதனையின் வெளிப்பாடான‌ க‌ண்ணீரும் த‌ண்ணீருக்குள் அழும் மீன்க‌ளின் க‌ண்ணீர் போல் இவ்வுல‌குக்கு தெரியாம‌ல் போக‌லாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் ப‌டைத்த‌ இறைவ‌னுக்கு தெரியாம‌ல் போய் விடுமா என்ன‌?

பெரிய‌வ‌ர்க‌ள் வ‌யோதிக‌த்தாலும், சுய நினைவு/உண‌ர்வு இன்றி ப‌டுக்கையில் கிட‌த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு, அவ‌ர்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேத‌னையின் உச்ச‌ கட்ட‌ம். இந்த‌ நிலை நாளை யார்,யாருக்கு வ‌ரும் அல்ல‌து வ‌ராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிப‌டுத்திக்கூற‌ முடியுமா? அதற்கே ஏதேனும் சக்தி உண்டா? இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட‌ முடியுமா?

அவ‌ர்க‌ளை க‌வ‌னிக்க‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கு தான் மார‌டிப்பார்க‌ளே அன்றி பாச‌ ம‌ழை பொழிந்து விடுவார்க‌ளா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.

சில‌ இட‌ங்க‌ளில் இது போல் ப‌டுக்கையில் கிட‌த்தப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌த்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய‌ வ‌ய‌தின‌ர் ஏதோ கார‌ண‌த்தால் தீடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டு ப‌டுக்கையில் கிட‌ப்ப‌வ‌ருக்கு முன்பே இவ்வுல‌கை விட்டு சென்று விடுவ‌தை காண‌ முடிகிற‌து.

ப‌டுக்கையில் இருந்தாலும் ம‌னித‌ன் ப‌ல்ல‌க்கில் சென்றாலும் ம‌ர‌ண‌த்திற்கு என்ன‌ விதிவில‌க்கு?

பெரிய‌வ‌ர்க‌ள் த‌ன‌க்கு ஏற்ப‌டும் இழிநிலைக்கும், கேவ‌ல‌த்திற்கும், ப‌ரிவ‌ற்ற‌ சூழ்நிலைக்கும், வேத‌னைக‌ளுக்கும், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌லுக்கும் த‌ட்டிக்கேட்க‌வோ அல்ல‌து த‌ண்டிக்க‌வோ அவ‌ர்க‌ளுக்கு ச‌க்தியும், ம‌ன‌திட‌மும் இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண்ணீருக்கு இறைவ‌னிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய‌ ச‌க்தி நிச்சயம் இருக்க‌த்தான் செய்யும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.

நாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் வீட்டின் பொக்கிச‌ங்க‌ளாக பெரும்பாலும் க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை மாறாக‌ ச‌மைய‌லில் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்திற்கு ப‌ய‌ன்படுத்தப்படும் க‌றிவேப்பில்லை போல் ம‌ட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ம் அறியாத‌வ‌ர்க‌ளாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

வாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ? இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ?

வீட்டுப் பெரிய‌வ‌ர்க‌ளைப் போற்றுவோம்; வாழ்வில் உன்ன‌த‌ நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

இருவேறு துருவங்கள் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2013 | , , , , , ,

நமதூரில் அண்மைக் காலத்தில் நடந்த இருவேறு நிகழ்வுகள் பற்றிச் சிந்தனையை மனத்துள் ஓடவிட்டேன்.  அவற்றுள் ஒன்றைப் பற்றிக் கேட்டு உவகையுற்றேன்; மற்றொன்றைப் பற்றி அறிந்து மனம் வருந்தினேன்.  அவை, இவைதான்:

நமது சகோதர வலைத்தளமான ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ பதிவாக்கி வெளியிட்ட செய்தி இது: http://adiraixpress.blogspot.in/2013/08/blog-post_1035.html#.UlOZK9KBl_Y

அதிரை ஈசிஆர் சாலை வழியாக அதிவேகமாக நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு செல்லும் பொழுது நாய் காருக்கு குறுக்கே புகுந்ததால் திடீரென்று பிரேக் பிடிக்கும்பொழுது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஜோதினி என்ற ஆறு மாத பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவியான சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் வாகனத்தில் பயணம் செய்த மற்றவர்கள் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச்  சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது..

இது குறித்து, தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசுப் பொது  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து அதிரை காவல் துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வில், நம் சமுதாய அமைப்புகளின் செயல் வீரர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், சமூக சேவையில் ஈடுபட்டு, உள்ளூர் காவல்துறையை எதிர்பார்க்காமலும், அவர்கள் வந்த பின்னர் அவர்களுக்குத் துணை நின்றும், காயமுற்றோரை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றும், இறந்துவிட்டவர்களின் உடல்களைக் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்த உதவிகள் செய்தும், சேவைகள் செய்துள்ளனர் என்ற தகவலும், வாசகர்களை மகிழ வைத்தது.


அதற்குப் பின்னரும், அமைப்புத் தோழர்கள் காயமுற்றவர்களை அரசு மருத்துவ மனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவ மனை ஊழியர்கள் முறையாகச் சிகிச்சை செய்வதற்கு உதவியாக நின்றும், பாதிப்படைந்தவர்களுக்கு மருந்துகளை வாயினுள் செலுத்த உதவிகள் செய்தும், தம் சேவை உணர்வுக்கு இலக்கணமாக நின்று, அவர்களின் தேவைகள் ஒவ்வொன்றையும் பெற்றுக் கொடுத்து  உதவிகள் செய்தனர் என்ற செய்தியும் மனத்தைக் குளிர வைத்தது.

காயமுற்றுக் கிடந்தவர்களுள் ஒருவர் தமது ஊரில் தம் குடும்பத்தாருக்கு விபத்தைப் பற்றிக் கூறியபோது, “இந்த ஊர் முஸ்லிம் மக்கள் சேவை உள்ளத்துடன் எங்களுக்கு உதவிகள் செய்கின்றார்கள்!  எமக்குக் கிடைத்த மாத்திரைகளையும் மருந்து வகைகளையும் வாயில் ஊட்டிவிடுகின்றனர்!  நமது உறவோ, அயலவர்களாகவோ இல்லாத நிலையிலும் எங்களை நல்லபடியாகக் கவனிக்கின்றனர்!  நமக்கிடையே எவ்விதப் பிணைப்பும் இல்லாத முஸ்லிம்கள் இவ்வாறு உதவுவதற்கு இவர்களின் மார்க்கமான இஸ்லாம் தடையாக நிற்கவில்லை” எனவும் கூறி,  உறவினரையும் ஆறுதல் படுத்தினார் என்னும்  செய்தியானது, நம்மை மகிழ்விக்கின்றது.   

இரண்டாவது நிகழ்வு:

இதுபற்றி மற்றொரு வலைப்பூவான ‘அதிரை நியூஸ்' வெளியிட்ட செய்தி இதோ:

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில்   இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின.

தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு வேண்டிய உதவியை செய்தனர்.  அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் காரணமாக அதிரை நகரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.

மேலும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார்,  டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘தக்வாப் பள்ளி’க்குச் சொந்தமான மார்க்கெட் கடைகள் தீக்கிரையான அன்றைய இரவில், நமதூர் இளைஞர்கள் ஓடிப்போய், முதலுதவி என்ற முறையில் தீயை அணைக்கப் பாடுபட்டனர்.  


ஆனால், அறிவித்து வெகு நேரம் சென்று வந்ததற்காகத் தீயணைப்புக்காரர்களுடன் சண்டையிட்டு, தீயணைப்பு வண்டி ஓட்டுனரின் மண்டைக்குக் காயம் ஏற்படுத்தி, இளைஞர்கள் சிலர் மனிதத் தன்மையின்றி நடந்துகொண்டனர் என்ற வருந்தத் தக்க  செய்தி, நம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றது.  இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்டோர், முன் நிகழ்வைப் போன்று, முஸ்லிம்களும் மாற்று மதத்தினரும் ஆவர். 

முதல் நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள், நமதூர் முஸ்லிம்களைப் பாராட்டினர்.  இரண்டாவது நிகழ்வில் பாதிக்கப்பட்டவர், மாற்று மதத்தவரான அரசு ஊழியர்.  இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டோர், நம்மவர்களின் நடத்தையால் முஸ்லிம்களான நம் மீது வெறுப்பைத்தான் அள்ளி வீசுவர்.  பிழை அவர்களிடம் இல்லை;  நம்மவர்கள் மீதுதான் உண்டு என்று உரத்துக் கூற முடியும்.

இரண்டும் எதிரெதிர்த்   துருவங்கள்!   இனி ஏதேனும் பாதிப்போ, வெறுப்பிற்குரிய நிகழ்வோ நமக்கு ஏற்பட்டால், இந்த அரசு ஊழியர்களிடம் ‘நல்ல பெயர்’ வாங்க முடியாது!  முன்னதற்குப் பின்னதும் ஈடாகாது!  

“இறைவனின்  மனித படைப்பினங்கள் அனைத்தும் ஆதமின் குடும்பத்தவர்களே” எனும் அடிப்படையில்தான் சேவை செய்பவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றே  இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. அப்போதுதான் அந்தச் சேவைகள் நமக்கு நன்மையை ஈட்டித் தரும்.  மாறாக, உணர்ச்சி வயப்பட்டும் காழ்ப்புணர்வு கொண்டும் நடந்துகொண்டால், நாம் செய்த சேவைகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப் போகும்.

இவ்வாறு ‘மோட்டுத் தனமாக’ நடந்து கொள்பவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமாயின், அவர்கள் கல்வியில் குறைந்தவர்கள் என்பதையும், பெற்றோரின் வளர்ப்பில் எதோ கோளாறு உடையவர்கள் என்றும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

அதிரை அஹ்மது
Pictures : supplied

உணவுக்கான அவசர உதவி கோரி மடல் 4

அதிரைநிருபர் | December 27, 2012 | , , , ,

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


என் அன்புச் சகோதரர்களுக்கோர்  வேண்டுகோள்..

السلام عليكم ورحمة الله وبركاته

தற்போது இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதனால் மக்கள் அடைந்துவரும் சிரமங்களும் செய்தி ஊடகங்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் எமது ஊரான மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்குட்பட்ட கரடிக்குளி மற்றும் அதைச்சூழவுள்ள பகுதிகளான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி போன்ற பகுதிகள் நான்கு பக்கங்களும் வெள்ளத்தினால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் சுமார் ஓரு வார காலமாக மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எற்கனவே 22 வருட அகதி வாழ்வை அனுபவித்த இவர்கள் மிக அண்மையில் தான் ஓலைக்குடிசைகளில் மீண்டும் தம் வாழ்வை தொடங்கினார்கள். இதற்கிடையில் மீண்டுமொரு சோதனை.


இந்நிலையிலிருந்து விடுபட இவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வதோடு. முடியுமாக இருந்தால் இந்த மூன்று ஊர்களிலும் மொத்தம் 800 குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். மின்சாரம் போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் இதுவரை அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களின் மிக அத்தியாவசியமான உணவுக்கு தங்களில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ ஏற்பாடு செய்தால். அதனை மிக அவசரமாக கடல் வழியாக அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராகவுள்ளோம்.




இது மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக செய்யப்பட வேண்டிய உதவியாகும். குறைந்தது மூன்று நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாட்டினை மூன்று கிராமங்களுக்குமோ அல்லது மூன்றில் ஒரு கிராமத்துக்கோ செய்வதற்கு உதவி செய்யுமாறு தங்களை அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம். அண்ணளவாக சராசரி ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அவசியமான பொருட்களும் அதற்கான பெறுமதிகளும்


5 kg அரிசி (1 kg70/) 350

2 kg கோதுமை மாவு (1 kg100/) 200

2 kg சீனி 105(1 kg105/) 210

1 250g பால்மா 200/ 200

1 மீன்டின் 96/ 105

250g பருப்பு 55

200g தேயிலை 70

மொத்தம் 1190 (இலங்கை ரூபாய்)

ஒரு குடும்பக்கிற்கு சராசரி 1190 (இலங்கை ரூ) தங்களின் இயல்புக்கு ஏற்ப குடும்பங்களை பொறுப்பேற்கலாம்

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 2442


தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்

மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217

தௌபீக் ஆசிரியர் 0094713555993

அஸ்மல் டெய்லர் 0094775993812

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka

தகவல்: மௌலவி முஹம்மது நாஸர்

தொலைபேசி 0094774224217
Email: ttmnasar@yahoo.com / ttmnasar@gmail.com
Website / www.onlinenasar.com

நன்றி: AIM


இலங்கை முஸ்லீம்களின் வரலாறு... உண்மை நிலவரம்.. அவசியம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.


இருதய சிகிச்சைக்காக உதவி நாடியவரின் - நன்றி [காணொளி] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2012 | , , ,

கடந்த 29.09.2012 அன்று இருதய சிகிச்சைக்கு உதவி வேண்டி பதிவு  அதிரைநிருபரில் சாகுல் ஹமீதுடைய வேண்டுகோள் காணொளியுடன் பதியப்பட்டது. இந்த பதிவு அதிரையின் மற்ற தளங்களிலும் மீள்பதிவு செய்யப்பட்டது.

இந்த மாதம் 7ம் தேதி அன்று (07.10.2012) இருதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் சாகுல் ஹமீதுடன் அதிரைநிருபர் குழு சகோதரர்களும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளையராஜா அவர்களை சந்தித்து விபரம் கேட்டோம்.

சாகுல் ஹமீதிற்கு அறுவை சிகிச்சை தற்போதைக்கு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்றும் ஆறு மாத காலம் கழித்து அவருக்கு eco test எடுத்து பார்த்த பிறகு அறுவை சிகிச்சை செய்வதா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்றும் கூறினார். சாகுல் ஹமீதுக்கு மேலும் இரண்டு வகையான மாத்திரைகளை வழங்கியுள்ளார். அதிகாலை நடை பயிற்சி நன்றாக செய்ய வேண்டும், உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகள் சரியாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆறுமாதம் கழித்தோ அல்லது அதன் பிறகோ, சாகுல் ஹமீதுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யும் சூழல் உருவானால் தமிழாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இலவசமாக ஆபரேசன் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று த.த.ஜ. மாவட்ட நிர்வாகியான சகோதரர் அன்வர் அலி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சகோதரர் சாகுல் ஹமீத்  தனக்கு இதுவரை பொருளாதர உதவி செய்தவர்களுக்கு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கும் காணொளி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.



உதவி பெறப்பட்ட பணம் அவருடைய இருதய சிகிச்சை செலவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சகோதரர் சாகுல் ஹமீத் உறுதி அளித்துள்ளார். மேலும் தன்னுடைய அன்றாட செலவுகளுக்கும், மருந்து செலவுகளுக்கும்  தினமும் செய்து வரும் கொத்தனார் தொழிலிருந்தே செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருக்காக பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!. சகோதரர் சாகுல் ஹமீத் பரிபூரண குணமடைய எல்லா வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

அதிரைநிருபர் குழு

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி… 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , , , ,


இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.


படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : +91 8220351291), இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.





குறிப்பு : அதிரைநிருபர் வலைத்தளம் நிதி உதவியென்று நேரடியாக எவ்வகை பரிந்துரையோ அல்லது நித்யுதவி வேண்டி வரும் வேண்டுகோளை பதிவதில்லை என்ற நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறது. இந்த வேண்டுகோளை வைத்த சாகுல் ஹமீத் என்பவரின் குடும்பச் சூழலை நேரில் ஆராய்ந்து பரிந்துரை செய்த சகோதரர்களின் வேண்டுகோளும், அவர்களின் ஆதரவு இவருக்கு இருப்பதை நினைவில் நிறுத்தி இதனை பதிந்திருக்கிறோம்.

அதிரைநிருபர் குழு

ஹஜ் யாத்திரையும் தன்னார்வளர்களின் உதவியும் 2

அதிரைநிருபர் | November 10, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அன்பானவர்களுக்கு,


இந்த வருடத்திற்கான ஹஜ் புனித யாத்திரை நிறைவடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். உலகெங்குமிருந்து 4 மில்லியன் மக்களுக்கு மேல் இந்த வருடத்திற்கான புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வின் உதவியால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அனைவரையும் பாதுகாத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.


கடல் கடந்து, அரசு மற்றும் தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமும் உலகின் பல பகுதிகளிலிருந்து புனித மக்கா மதீனாவுக்கு  வருடா வருடம் ஏராளமான முஸ்லீம்கள் சென்று வருகிறார்கள். சவுதி அரசாங்கமும் தங்களின் நாட்டிற்கு வருகைத ரும் விருந்தினர்களான ஹஜ் யாத்திரியர்களுக்கு தேவையான அதிகபட்ச வசதிகள் பல செய்துவருகிறது.


மறைமுகமாகவோ நேரடியாகவோ ஏராளமான தன்னார்வளர்கள், இவ்வுலகில் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஹஜ் யாத்திரியர்களுக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையுன் செய்த, சவுதி அரேபியாவில் வேலை செய்துவரும் நம் சகோதரர்கள் அனைவரையும் இங்கு மனதார பாராட்டியே ஆகவேண்டும். அல்லாஹ் இச்சகோதரர்களுக்கு நல்லருள் புரிவானாக. நேரம் காலம் பாராமல் இவர்களின் உதவியால் பயனடைந்த ஹஜ் யாத்திரியர்கள் நிச்சயம் அவர்களின் கைமாறாக அந்தச் சகோதரர்களுக்காக துஆ செய்திருப்பார்கள்.


அன்மையில் அதிரை ஹஜ் யாத்திரிகர்களில் கபீர் ஆலிம்சா அவர்களைk காணவில்லை என்றும், மற்றும் மு.மு. முஹம்மது இப்றாஹிம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பtடுள்ளார்கள் என்ற ஒலிச் செய்தியை சகோதரர் ஜாபருல்லாஹ் அவர்கள் நம் சகோதர வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸின் வாயிலாக தெரிவித்திருந்தார்கள். உண்மையில் இச்செய்தியைக் கேள்விபட்ட நம் எல்லோருக்கும் பதற்றமாகவே இருந்தது. அல்லாஹ்வின் உதவியால் காணாமல் போன கபீர் ஆலிம்சா அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் வேலையில் நம் அதிரையை சேர்ந்த சகோதரர்கள் செய்த முயற்சியை யாராலும் மறக்க முடியாது.


இதுபோல் அதிரையைச் சேர்ந்த மு.மு. முஹம்மது இப்றாஹிம் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அவர்களை மருத்துவமணைக்குக் கொண்டு சொல்லப்பட்டார்கள், ஆனால் அவர்கள் எந்த மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக அதிரைச் சகோதரர்கள் எடுத்த முயற்சியை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. முமு. முஹம்மது இப்றாஹிம் அவர்ளுடைய மகளாரும் ஹஜ் பயணம் செய்துள்ளார்கள், தகப்பனாரின் உடல் நலக்குறைவால் பதற்றத்துடன் இருந்த இச்சகோதரிக்கு உதவியாக நம் அதிரை சொந்தம் ஒன்று உதவியாக இருந்து இவர்களின் ஹஜ் கடமையை நிறைவேற்ற உதவியிருந்திருக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்கும்போது உண்மையில் சிலிர்க்கிறது. ஹாஜிகளுக்காக உதவிகள் செய்தவற்கு என்று அல்லாஹ் இவர்களைப்போன்ற நல்லவர்களை அந்த புனித மண்ணில் வைத்துள்ளான்.


ஹஜ் பயணம் செய்தவர்களுக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இவர்கள் இச்சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.


ஏற்கனவே பலமுறை ஹஜ் கடமையை நிறைவு செய்த சிலர் அதிரையிலிருந்து வந்த சகோதரர்கள், தன்னார்வத்துடன் முன் வந்து உள்ளூர்வாசிகள் பெரும்பாலோருக்கு அவர்களின் ஹஜ் கடமையை இனிதே சிறப்பாக சிரமமின்றி நிறைவேற்ற உதவியுள்ளார்கள் என்ற செய்தியை ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் உறவினர்களிடமிருந்து அறிய முடிகிறது. இச்சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.


இது போல் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தங்களின் செயல்களால் மறைமுகமாக ஹாஜிகளுக்கு உதவிகள் பல செய்த / செய்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நிச்சயம் பாராட்டுவதோடு அல்லாமல். அவர்களுக்காக நாம் எல்லோரும் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

- அதிரைநிருபர் குழு






நன்றி: http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=121447

காரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப்பெரியவர்கள்.. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2011 | , , ,

சொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திற‌ம்ப‌ட‌ வடித்திருந்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் இந்த‌ அந்த‌ஸ்த்தை அடைய‌வ‌த‌ற்குள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், துன்ப‌ங்க‌ளையும், துய‌ரங்க‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், நோய்நொடிக‌ளையும், ச‌ண்டைச‌ச்ச‌ர‌வுக‌ளையும், பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் மற்றும் ப‌ல‌ பிண‌க்குக‌ளையும் ச‌ந்திக்காம‌ல் வந்து விடுவதில்லை.

அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌த்துட‌ன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்கு ஏதேனும் துன்ப‌மும், நோய்நொடிக‌ள் வ‌ந்து விட்டால் துடித்துப்போகிறார்க‌ள். 'என் ஈர‌க்குலையே; என் தாம‌ர‌ங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவ‌ர்க‌ள் பாச‌த்தின் உச்சிக்கே சென்று த‌ன் தூக்க‌த்தையும் தொலைத்து விடுவார்க‌ள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.

ஆனால் அவ‌ர்க‌ள் யாருக்காக‌ ப‌ரிவும், பாச‌மும், இர‌க்க‌மும் கொண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நாளை வ‌ள‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ பாச‌ ம‌ழை பொழிய‌ச்செய்த‌ வீட்டுப்பெரிய‌வ‌ர்களை சிறிதும் ம‌திப்ப‌து இல்லை மாறாக‌ ம‌ரியாதையில் மிதி ப‌டுவ‌தை நாம் ஆங்காங்கே காண‌ முடிகிற‌து. பெரிய‌வ‌ர்க‌ள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்க‌த்துடனும் உள்ள‌த்தில் இறுக்க‌த்துட‌னும் அவ‌ர்க‌ள் இறுதி நாட்க‌ளை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் க‌ட‌த்துவ‌தை காணும் ச‌ம‌ய‌ம் நாம் ம‌ன‌ வேத‌னைப்ப‌டுவ‌தை த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ இய‌லும்?

"காய்ந்த‌ தென்ன‌ந்தோகையைப் பார்த்து ப‌ச்சைத்தோகை ஏள‌ன‌மாக‌ சிரித்த‌தாம் தானும் ஒரு நாள் காய்ந்த‌ தோகையாக‌ ஆக‌ இருப்ப‌தை ம‌ற‌ந்து" என்ற‌ ப‌ழ‌மொழி தான் இங்கு ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து.

கால‌ப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ள் முற்றி வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் வாழ்ந்து அனுப‌வித்த‌ வீட்டை விட்டே வெளியேற்ற‌ நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது ம‌ட‌த்த‌ன‌த்தின் உச்ச‌ க‌ட்ட‌ம். ம‌னித‌ நேய‌த்தின் பெரும் வீழ்ச்சி.

பாதிக்க‌ப்ப‌ட்ட அப்பெரியவர்களின் உள்ள‌க்குமுற‌லும், வேதனையின் வெளிப்பாடான‌ க‌ண்ணீரும் த‌ண்ணீருக்குள் அழும் மீன்க‌ளின் க‌ண்ணீர் போல் இவ்வுல‌குக்கு தெரியாம‌ல் போக‌லாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் ப‌டைத்த‌ இறைவ‌னுக்கு தெரியாம‌ல் போய் விடுமா என்ன‌?

பெரிய‌வ‌ர்க‌ள் வ‌யோதிக‌த்தாலும், சுய நினைவு/உண‌ர்வு இன்றி ப‌டுக்கையில் கிட‌த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு, அவ‌ர்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேத‌னையின் உச்ச‌ கட்ட‌ம். இந்த‌ நிலை நாளை யார்,யாருக்கு வ‌ரும் அல்ல‌து வ‌ராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிப‌டுத்திக்கூற‌ முடியுமா? அதற்கே ஏதேனும் சக்தி உண்டா? இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட‌ முடியுமா?

அவ‌ர்க‌ளை க‌வ‌னிக்க‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கு தான் மார‌டிப்பார்க‌ளே அன்றி பாச‌ ம‌ழை பொழிந்து விடுவார்க‌ளா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.

சில‌ இட‌ங்க‌ளில் இது போல் ப‌டுக்கையில் கிட‌த்தப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌த்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய‌ வ‌ய‌தின‌ர் ஏதோ கார‌ண‌த்தால் தீடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டு ப‌டுக்கையில் கிட‌ப்ப‌வ‌ருக்கு முன்பே இவ்வுல‌கை விட்டு சென்று விடுவ‌தை காண‌ முடிகிற‌து.

ப‌டுக்கையில் இருந்தாலும் ம‌னித‌ன் ப‌ல்ல‌க்கில் சென்றாலும் ம‌ர‌ண‌த்திற்கு என்ன‌ விதிவில‌க்கு?

பெரிய‌வ‌ர்க‌ள் த‌ன‌க்கு ஏற்ப‌டும் இழிநிலைக்கும், கேவ‌ல‌த்திற்கும், ப‌ரிவ‌ற்ற‌ சூழ்நிலைக்கும், வேத‌னைக‌ளுக்கும், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌லுக்கும் த‌ட்டிக்கேட்க‌வோ அல்ல‌து த‌ண்டிக்க‌வோ அவ‌ர்க‌ளுக்கு ச‌க்தியும், ம‌ன‌திட‌மும் இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண்ணீருக்கு இறைவ‌னிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய‌ ச‌க்தி நிச்சயம் இருக்க‌த்தான் செய்யும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.

நாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் வீட்டின் பொக்கிச‌ங்க‌ளாக பெரும்பாலும் க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை மாறாக‌ ச‌மைய‌லில் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்திற்கு ப‌ய‌ன்படுத்தப்படும் க‌றிவேப்பில்லை போல் ம‌ட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ம் அறியாத‌வ‌ர்க‌ளாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

வாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ? இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ?

வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளைப்போற்றுவோம்; வாழ்வில் உன்ன‌த‌ நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....

- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்! 0

அதிரைநிருபர் | August 29, 2010 | , , ,

புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை.                               பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை மட்டும் ஒதுக்கும் ஒரு செயலாகும். ஆனால் தவிக்கும் வாயிக்குக் கூட பட்டிணிபோட்டு வறியவர் படும் துன்பத்தினை வள்ளலுக்கும் உணர்த்தும் அரிய ஒரு மகத்துவம் புனித ரமலான் நோன்பு ஆகும். ஈகையினை உள்ளத்தில் உதிக்கச் செய்து எப்படி பாலைவனத்தின் மணலைத் தோண்டும் போது நீர் சுரக்குகிறதோ அதே போல இல்லாதவருக்கு ஜக்காத், சதக்கா போன்ற கொடையினை அள்ளி அள்ளி வழங்கத் தூண்டும் ஒரு சிறந்த பண்பான கடமைதான் நோன்பு. ஆனால் எத்தனை வள்ளல்கள் தனது செல்வங்களை ஏழை, எளியவர்க்கு வாரி வழங்குகிறார்கள்? நமது சமுதாயத்தில் செல்வந்தர்கள் இல்லையா? ஏன் சகர் நேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் தங்க நகைகடை, ரியல் எஸ்டேட்ஸ், லாட்ஜ், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கட்டுகள், கோரியர் சர்வீஸ்கள், குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம், பொது விளம்பரத்தில் தடுக்கப்பட்ட பீடி-பாக்கு நிறுவனங்கள், தங்களுக்குத் தாங்களே டாக்கடர் பட்டம் சூட்டிக்கொள்ளும் யுனானி மருத்துவ மாமணிகள், கல்வி நிறுவனம் நடத்தும் வள்ளல்கள் போன்ற செல்வந்தர்கள் பட்டியல் வரிசை நீண்டு கொண்டே போகிறது.. சகர் நேரத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் கால் வாசி விளம்பரங்கள் முக்கால்வாசி என்று சொல்லும் அளவிற்கு விளம்பரம் செய்யும் செல்வந்தர்கள் நம்மிடையே இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் நோன்பு நேரத்தில் தங்கள் செல்வத்தினை கணக்கிட்டு ஜக்காத், சதக்கா கொடுக்கிறார்களா என்றால் சந்தேகமே! அவர்கள் கொடுப்பதெல்லாம் நோன்பு நேரத்தில் கையேந்துபவர்களுக்கு காசு, குறைந்த விலையில் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வெறும் தர்மம் செய்ததாக ஜம்பம் அடிப்பார்கள். அது தான் உண்மையிலே ஏழைகளுக்குச் செய்யும் தொண்டா?

ஓரு உண்மை சம்பவத்தினை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான்கு வருடத்திற்கு முன்பு சென்னையில் வாழும் எனது தூரத்து அட்வகேட் உறவனர் மகள் பிளஸ்2 பரீட்சையில் 1200 மார்க்குக்கு 1148 மார்க் வாங்கி பள்ளியிலே முதலாவதாகத் தேறியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு அதிக கட்டாப் மார்க் இருப்பதால் நிச்சயம் அரசின் ஒதுக்கீடிலே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் அவள் ஒரு முஸ்லிம் இன்ஜினீரியங் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என தீர்மானித்து அந்தக்கல்லூரிக்கும் மனு செய்தார். இண்டர்வியூக்கும் தந்தையினைக் கூட்டிச் சென்றாள். ஆனால் அங்கு கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் எத்தனை லட்சம் டொனேசன் தருவீர்கள்? என்பது தான். அந்தப் பெண்ணின் தந்தையே என்மகள் நல்ல மார்க்கில் தேர்வாக உள்ளாள் அவள் மற்ற கல்லூரிக்கு அரசு ஒதுக்கீடு இலவச சீட்டில் செல்வதிற்குப் பதிலாக முஸ்லிம் கல்லூரியில் படிக்க விரும்புகிறாள் ஆகவே அவளுக்கு ஃபிரீ சீட் தாருங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் பல லட்சம் டொனேசன் கேட்டதால் அதனை மறுத்துவிட்டு அரசு ஒதுக்கீடு செய்த வெங்கடேஸ்வரா இன்ஜினீரயங் கல்லூரியில் சேர்ந்து முதல் வகுப்பிலும் தேரி டி.சி.எஸ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளாள.. இது எதனைக் காட்டுகிறது.? ஏழை முஸ்லிம்களுக்காக மைனாரிட்டி கல்லூரி நடத்துகிறோம் என்று லட்சத்தில் பணம் அள்ளும் முதலைகளாக அந்த வள்ளல்கள் இருக்கின்றார்கள். ஆனால் விளம்பரம் மட்டும் விமரிசையாக வள்ளல் என போட்டு நோன்பின் மாண்பு-மகிமையினை பாழடிக்கிறார்கள் என்றால் மிகையாகுமா? அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஒரு ஏழை முஸ்லிம் கிராமத்தினை தத்தெடுத்து அவர்களுக்கு தொழில் வைத்து முன்னேற ரூ10000 வீதம் 100 குடும்பங்களுக்குக் கொடுத்து தன்னிறைவு பெற உதவுகிறார்கள். அது போன்று ஏழைக் குடும்பங்கள் முன்னேற எதாவது நிலையான திட்டங்கள் எவராலும் செய்யப்பட்டுள்ளதா? நகை வியாபாரிகள் நூறு ஏழைக்குமர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குமருக்கும் ஒரு பவுன் தாலிச் செயின் மற்றும் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய திருமணத்தினை நடத்தித் தரக்கூடாது? மைனாரிட்டி கல்வி நிறுவனங்களில் சிறப்பான கல்வித் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ்-டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி பரீட்சை எழுத பயிற்சி அளிக்கக்கூடாதா? எப்படி முன்னாள எம்.எல்.ஏ சைதை துரைசாமி மட்டும் அவ்வாறு இலவச பயிற்சி கொடுத்து வருடா வருடம் 100க்கு குறையாத மாணவர்களை முதன்நிலைத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய முடிகிறது? ஏன் குடி தண்ணீர் சப்ளை விளம்பரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கேன்கள் குடி தண்ணீர் தங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி-மதரஸாவிற்கு இலவச தண்ணீர் சப்ளை செய்யக்கூடாது? அதுபோல் கூரியர் சர்வீஸ்-டிராவல்ஸ்-ஹோட்டல்ஸ் நடத்தும் உரிமையாளர்கள் அரசு பரிட்சை எழுத வரும் மாணவர்கள் தங்கி பரீட்சை எழுத இலவசமாக வாகனம்-இடம் கொடுக்கக்கூடாது? டீ.வி. நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப்பிரியர் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நாம் சமைத்துசாப்பிட ‘பைத்துல்மால்’ அமைப்பினை ஏற்படுத்தி தங்களுடைய முகங்களை பலருக்கு பளிச்சென்று வெளிச்சம் போட்டு பறையடிக்கிறார். அதுதான் இஸ்லாம் சொன்ன தான தர்மமா?

உதவும் கரஙகள் எப்படி இருக்க வேண்டும் என்பதினை; இரண்டு சம்பவங்களினை மட்டும் உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம் என நினைக்கிறேன்:

1) படத்தில் உள்ள கனடா நாட்டு பிரதமர் மார்ட்டினுடன் தலை நிமிர்ந்து நிற்கும் சிறுவன் யார் தெரியுமா ‘யூனிசெப்’ ஜக்கிய நாடு குழைந்கைகள் படிப்பு- சுகாதாரம் பாதுகாப்பிற்கான ஒரு சபையாகும். அந்த சபையால் கவுரவ அம்பாசாடர் என்ற பட்டம் வழங்கப்பட்ட கனடா நாட்டு இந்திய வம்சா வழி பதிமூன்றே வயதான அம்மான் என்ற தந்தைக்கும், சமீம் என்ற தாய்க்கு மகனாகப் பிறந்த அருந்தவப் புதல்வன் தியாகச் செம்மல் ஹஜரத் பிலால் அவர்கள் பெயரைத் தாங்கியவன். அவன் அப்படியென்ன அருஞ்செயல் செய்தான் என நீங்கள் கேட்க உங்கள் ஆவல் தூண்டும். இந்திய நாட்டில் குஜராத்தில் புர்ஜ் நகரினை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் சொன்னது போல புரட்டிப்போட்டு மாடி வீடுகளெல்லாம் மண்ணாகி பலர் மடிந்தும் போன கதை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது கனடா தலைநகர் டொரனடாவில் வசித்த அந்தச் சிறுவனுக்கு வயது நான்குதான். அந்த பூகம்பத்தினை தொலைக்காட்சியில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் அதிர்ச்சியிட்டு மிகவும் துயரம் அடைந்தான்.

அன்றிலிருந்து அவன், அவனது பொற்றோர் மற்றும் பாட்டனாருடன் தெருவில் இறங்கி ஆரஞ்சு பழங்கள் விற்று அதன் மூலம் கிடைத்த 332 டாலர்களை யூனிசெப் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு எட்டு வயதான போது 2004 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது தன் தந்தையின் ரொட்டிகளை எடுத்து தெரு தெருவாக விற்று அதில் கிடைத்த வருமானத்தினை அந்த நாட்டுக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். அதன்பின்பு ஆப்பிரக்கா நாட்டு குழந்தைகள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து காகித தட்டுகளை செய்து விற்று அதன் மூலம் கிடைத்த 1100 டாலர்களை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். இது போன்ற உதவிகளை செய்ய ‘ஹேண்ட் பார் ஹெல்ப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை நிறுவியும் உள்ளான். 2009ஆம் அண்டு ‘கால் நடை இயக்கம் ஒன்றை’ ஆரம்பித்து தன் பள்ளித் தோழர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கனடா தலைநகர்டொரண்டோவில் உள்ள பூங்கா, சூப்பர் மார்க்கட், கல்வி நிறுவனங்களுக்கு கால் நடையாக சென்று வசூலித்து அதனை உலக குழந்தைகள் கல்வி, சுகாதாரம், பசி, பட்டிணி போக்க உதவியும் உள்ளான். அவன் அளித்த உதவித் தொகை எவ்வளவு தெரியுமா சொந்தங்களே? 5மில்லியன் டாலர் தொகையாகும். தற்போது அடில்லாலானி என்ற 20 வயது வாலிபருடன் சேர்ந்து சுடோகோ.காம் என்ற விளம்பர இணைய தளத்தினை ஆரம்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை ‘வோல்ட் புட் பரோகிராம்’ அதாவது உலக உணவுக்கழகத்தின் பசி போக்கும் திட்டத்திற்கு உதவி வருகிறான் என்றால் பாருங்களேன். ஒரு முஸ்லிம் சிறுவனால் செய்ய முடிந்ததினை நான் மேற்கோடிட்டுக் காட்டிய செல்வந்தர்களால் ஏன் முடியாது முஸ்லிம் ஏழை மக்களுக்கு, ஏழை குமர்களுக்கு, அனாதை சிறுவர்களுக்கு, அறிவுசால் மாணவர்களுக்கு வாழ்வில் ஓளியேற்ற?

2)அடுத்த ஒரு சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு 2000 பேர் இறந்தும், 1.கோடியே எழுபது லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை தினந்தோறும் பத்திரிக்கை-எலக்ரானிக் மீடியாக்கலில் பார்த்து-படித்து தெரிந்திருப்போம். அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் சர்தாரி கட்சியும், எதிர்கட்சியான எம்.க்யூ.எம் சட்சிகள் செய்த உதவி தலா 5 மில்லியன் டாலர் மட்டுமே, ஆனால் ஹாலிவுட் நடிகை ஆஜ்லினா ஜோஸி செய்த உதவி 8 மில்லியன் டாலர் ஆகும். சொந்த நாட்டினர் தனிப்பட்டு செய்த உதவியினை விட ஒரு தனிப்பட்ட அயல் நாட்டுப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்தாளென்றால் ஏன் கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் நோன்பு நேரத்தில் கூட இது போன்ற உதவியினைச் செய்யக்கூடாதா என்பதே என் ஆதங்கம். ஆகவே தான் நாம் மட்டும் மகிழ்வுடன் இருக்கக்கூடாது மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்தக்கட்டுரை எழுதினேன்.

-- முகம்மது அலி ஐ.பீ.எஸ் (ஓ)
 
நன்றி: முதுவை ஹிதாயத்

கிரையோஜெனிக் ராக்கெட் 26

தாஜுதீன் (THAJUDEEN ) | July 19, 2010 | , , , ,

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும்.    அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.                                            என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள்

நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.

இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது


(இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும்

அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்


இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் .

ராக்கெட்டுக்குள் கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும். அப்போது 3,000 டிகிரி செல்சியஸ்( வேகாத கோழி மட்டன் இவை எல்லாம் ஒரு செகடில் பஸ்பம் ) அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது.

விஷயத்துக்கு வருவோம்  "அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்(குர்ஆன் 6:125)

அது என்ன விண்வெளியில் பயணம் செய்பவனின் மனதை போல் சுருங்கி இருக்குமாம் நாம் இந்த பூமி இன் இலுவிசையை தாண்டினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சுருங்கிவிடும் என்பதை சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே இறைவன் அறிவித்துள்ளான் மனிதர்களுக்கு விண்வெளியில் பயணம் செய்யகூடிய அறிவை வழங்கிவிட்டதாக இதை நாம் எடுத்து கொள்ளலாம் அல்லவா.

நோன்பு வருகின்றது அல்லாஹ்வின் பொருத்ததை அடைவதற்காக ஜகாத்தின் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை வசதியற்ற உற்றார் உறவினர்களுக்கும்,  ஈமான் கொண்டவர்களுக்கும் செய்திடுங்கள்.


ஆக்கம் - SHAHULHAMEED
 தம்மம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு