Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஊர் பார்வை. Show all posts
Showing posts with label ஊர் பார்வை. Show all posts

மண் வாசனை :: ஊர் பார்வை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2012 | , , ,

பார்வை - 1

கல் தோன்றி மண்தோன்றா காலம் தொட்டே  சமூக சூழலில் இயல்பாக எவராலும் நேசிக்கப்படுவது “மண், பொன், பெண்” இது காலந்தொட்டு தொடர்வதே… நமது ஊர் என்றல்ல எங்குமே காசு கொடுத்தால் எதனையும் வாங்கி விடலாம் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது (இந்த மலையேற்றம் என்றால் என்வென்று யாராவது சரியான விளக்கம் கொடுங்களேன்).அவசியமேற்படும்போது விவசாய நிலங்களை சீர் செய்வதற்கு அதாவது மேடு-பள்ளங்களை சமநிலபடுத்தி அதனை சரி செய்வதற்கு இருமன் ஏரி குளங்களில் தேவைக்கேற்ப முன்பு வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.  

இன்று நிலைமை தலைகீழ் இருமண் தேவைப்படுபவர்களின் பாடு பரிதாபம் காரணம் அரசு அதிகாரிகளின் தேவையற்ற கெடிபிடிதான் இதே நிலைமை நீடித்தால் இனி இறுமண் தண்ணீர் பாக்கெட்டு போல் போட்டு ஏதோ போதை பொருள் விற்பதுபோல் திருட்டுத்தனமாக விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள். ஊரில் ஏரி குளங்கள் தூர்-வாறாது கால்பந்து திடலகவும் கிரிக்கெட் மைதானமாகவும் மாறி போய் விட்டது. இறுமண் தேவைபடுபவர்களை மண் எடுக்க அனுமதித்தால் ஏரி குளங்களில் உள்ள இரு மண்களை அள்ளினால் ஏறி  குளங்கள் ஆழமாகும் மலைக் காலங்களில் விரயமாக கடலில் கலக்கும் நீரை இந்த ஏரி குளங்களில் தேக்கி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம் மேலும் நீரை அதிக அளவில் தேக்கி வைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் ஆள் துளை கிணறுகளின் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும்.

உழவுக்கும் தொழில்லுக்கும் வந்தனம் செய்வோம் என்று கூறும் அரசு அதிகாரிகள் ஏரி குளங்களை தூர்வாறவும் விட மாட்டோம் இறுமண் தேவைபடுபவர்களை தூர்வாறவும் விடமாட்டோம் என்று அடாவடி செய்யும் அரசு அதிகாரிகளை என்னவென்று சொல்வது !?


நாயை வைக்கோல் போருக்கு காவல் போட்டால் மாட்டையும் திங்க விடாது நாயும் திங்காது.

--------------------------------------------------------------------------------------

பார்வை – 2

இவைகளை விடுத்து அடுத்த கட்டமாக மண் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட டிராக்டர்களின் அடாவடியையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஊரில் ஆற்று மணலை அள்ளிக்கொண்டு போகும் டிராக்டர்களின் வேகம் படு அமர்க்களமாக ஃபார்முலா ஒன் டிராக்கில் ஓட்டுவது போன்ற நெனப்புபோல. டிப்பரில் மணலை நிரப்பிக்கொண்டு ரோட்டில் போகும்போதும் வரும்போதும் நடுரோட்டில் சொல்லும் அனைவருக்கும் மணலால் குளியல்தான். நம் கண்களை மணலால் நிரப்பி கண் டாக்டர்களுக்கு நல்ல வருமானத்தை உண்டாக்கி கொடுக்கின்றார்கள் என்னதான் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு பைக்கில் போனாலும் நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மணல் நம் கண்களுக்குள் மண் புகுந்து வீடுகட்டி விடுகின்றது.

பைக்கில் பட்டுக்கோட்டைக்கு ஒரு எட்டு போய்வந்தால் கண்களில் கால்படி மண் கரை ஒதுங்கியிருக்கும். இவ்வாறான சுற்றுபுறச் சூழலை பலரும் அரசு அதிகாரிகளுக்கு எடுத்து சொல்லிய பிறகு மணல் அள்ளிக்கொண்டு போகும் டிப்பரில் பிளாஸ்டிக் படுதா கட்டவேண்டும் என்று அரசு அதிகாரிகள் கட்டளை இட்டனர் இந்த கட்டளை செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

ஒரு சில நேரங்களில் டிப்பரில் மணல் நிரப்பி கைக்குட்டை அளவு தார்ப்பாய் கட்டிக்கொண்டு மணல் டிராக்டர்கள் பறந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் கண்களை பணம் மறைத்துவிடுகின்றன சாதாரண மக்களின் கண்களை இந்த மணல்கள் மறைத்துவிடுகின்றன.


நாய் விற்ற காசு குறைக்கவாபோவுது என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கும் மாறவேண்டும் 

Sஹமீது
அதிரையிலிருந்து...


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு