எழுத்தறிவித்தவன் இறைவன்
எடுத்தறிவித்தோர் நீவிர்
சொல்லையும் எழுத்தையும் கோத்து
சிந்தனை விதைத்தீர் யாத்து

அன்னை கற்பித்த ஒலிகளுக்கு
அர்த்தம் கற்பித்த ஆசான்களே
தந்தை போதித்த வார்த்தகளை
தரமாய் விளக்கிய வாத்திமாரே
முன்னேற்றம் வானுயரம்
முதற்படியாய் வாய்த்தோரே
முத்தமிழும் அறிவியலும்
கணக்கோடு கற்பித்தீர்
பயணப்பட்டு செல்லுகையில்
பயிற்றுவித்தப் பாடங்களே
வழித்துணையாய் வாய்த்திடவே
வாரித்தந்த வள்ளல்களே
அறியாமை பிணி நீக்கி
அழியாத கல்வி தந்தீர்
கல்லாமை இழி வகற்றி
காலமெல்லாம் வாழச் செய்தீர்
கணிதம் சொல்லித் தந்ததொரு
மனிதருள் மாணிக்கம்
வாழ்க்கையின் புதிர்களுக்கும்
சூத்திரம் சொன்னவர் நீங்கள்
இயற்பியல் பாடத்தில்
ஈர்ப்பு இயல்பானது
பெளதீக வாத்தியாரின்
புல்லரிக்கும் போதனையால்
கணக்கியலை கசடற
கற்பொழுக கற்பித்தீர்
கணினிமுன் அமர்ந்தாலும்
கற்றதனைத்தும் கைகொடுக்கிறது
வணிகவியலும் வாழ்வியலுக்கு
வரமென்று வார்த்தெடுத்தீர்
வருமானம் பெருக்கியெடுக்க
வசந்தங்களை வரவைத்தீர்
கான்வெண்ட் ஆங்கிலமோ
நுணிநாக்கில் தடுமாற
கல்வெட்டென பதிந்தது
கற்றுத்தந்த தோரணை
‘இன்’முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
‘தமிழ்’தாஸானோம்
பன்முகம் கொண்டோம்
அரசியலிலும் சமூகவியலிலும்
அத்தனை கல்வியிலும்
அடிப்படைகள் கற்றுத்தந்தீர்
அகிலத்தை வென்றிடவே
எழுத்தறிவித்தீர் ; எழுந்து நின்றோம்
நீதிபோதித்தீர் ;நேர்கொண்டு பார்த்தோம்
நடத்தியப் பாடத்தால் ; நிமிர்ந்து நடந்தோம்
மாக்களாகிப்போகாமல் ; மக்களாக்கி மகிழ்ந்தீர்கள்
தங்களை வருத்தி
எங்களை உயர்த்திய
அத்துணை ஆசான்களும்
அன்பான நன்றியும் அக்கறையோடு துஆவும்
நீங்கள் நிடூழி வாழ்க!!!
Sabeer Ahmed abuShahruk
எடுத்தறிவித்தோர் நீவிர்
சொல்லையும் எழுத்தையும் கோத்து
சிந்தனை விதைத்தீர் யாத்து

அன்னை கற்பித்த ஒலிகளுக்கு
அர்த்தம் கற்பித்த ஆசான்களே
தந்தை போதித்த வார்த்தகளை
தரமாய் விளக்கிய வாத்திமாரே
முன்னேற்றம் வானுயரம்
முதற்படியாய் வாய்த்தோரே
முத்தமிழும் அறிவியலும்
கணக்கோடு கற்பித்தீர்
பயணப்பட்டு செல்லுகையில்
பயிற்றுவித்தப் பாடங்களே
வழித்துணையாய் வாய்த்திடவே
வாரித்தந்த வள்ளல்களே
அறியாமை பிணி நீக்கி
அழியாத கல்வி தந்தீர்
கல்லாமை இழி வகற்றி
காலமெல்லாம் வாழச் செய்தீர்
கணிதம் சொல்லித் தந்ததொரு
மனிதருள் மாணிக்கம்

சூத்திரம் சொன்னவர் நீங்கள்
இயற்பியல் பாடத்தில்
ஈர்ப்பு இயல்பானது
பெளதீக வாத்தியாரின்
புல்லரிக்கும் போதனையால்
கணக்கியலை கசடற
கற்பொழுக கற்பித்தீர்
கணினிமுன் அமர்ந்தாலும்
கற்றதனைத்தும் கைகொடுக்கிறது
வணிகவியலும் வாழ்வியலுக்கு
வரமென்று வார்த்தெடுத்தீர்
வருமானம் பெருக்கியெடுக்க
வசந்தங்களை வரவைத்தீர்
கான்வெண்ட் ஆங்கிலமோ
நுணிநாக்கில் தடுமாற
கல்வெட்டென பதிந்தது
கற்றுத்தந்த தோரணை
‘இன்’முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
‘தமிழ்’தாஸானோம்
பன்முகம் கொண்டோம்
அரசியலிலும் சமூகவியலிலும்
அத்தனை கல்வியிலும்
அடிப்படைகள் கற்றுத்தந்தீர்
அகிலத்தை வென்றிடவே
எழுத்தறிவித்தீர் ; எழுந்து நின்றோம்
நீதிபோதித்தீர் ;நேர்கொண்டு பார்த்தோம்
நடத்தியப் பாடத்தால் ; நிமிர்ந்து நடந்தோம்
மாக்களாகிப்போகாமல் ; மக்களாக்கி மகிழ்ந்தீர்கள்
தங்களை வருத்தி
எங்களை உயர்த்திய
அத்துணை ஆசான்களும்
அன்பான நன்றியும் அக்கறையோடு துஆவும்
நீங்கள் நிடூழி வாழ்க!!!
Sabeer Ahmed abuShahruk