Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label Sஹமீது. Show all posts
Showing posts with label Sஹமீது. Show all posts

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2016 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

உலகம் எப்படி உருவானது ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2016 | , , ,


உலகம் எப்படி உருவானது  என்ற சோதனை நடக்கின்றது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்  இந்த சோதனையை நடத்துகிறது.  உலகம் எப்படி உருவானது(ரூம் போட்டு யோசிப்பான்களோ ) என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல  பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகள் கூட்டு சேர்ந்து இந்த  டீம் வொர்க் நடக்கின்றது.(இதில்  நீங்கள் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும்  ஒரே பைப்பில் ஓட உட போறிங்க நாங்க பல வருசத்துக்கு முன்பே ஒரே பைப்பில் நல்ல தண்ணியையும் சாக்கட தண்ணியும் மோத விட்டு என்னென்ன நோய்கள் பொது மக்களுக்கு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டோம்)


தடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித  ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு  கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன் தயார் செய்யப்பட்டு உள்ளது (நீங்களெல்லாம் இரும்புக்கு ரசாயனம் தடவுரிய நாங்க கோழிக்கு மசாலா தடவுறோம் )

இது அணுக்களைp பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். இதன் செயல்பாடும்  ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். (என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியே போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ)

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். (அந்த கரண்டை கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் திருப்பி விட்டா நாங்க கொசு கடி இல்லாம நிமதியா தூங்குவோம்) அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர்வ் செய்து  அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள். இதை சிம்பிளா சொன்னா வட்டில் அப்பம் வைக்க தெரியாதவக சும்மா நாலு முட்டைக்கு வட்டில் அப்பம் வைத்து பார்ப்பதுபோல்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அதாவது கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம  ஊர் பூனை அடுபங்கரையை  சுற்றி சுற்றி வருவதுபோல்  இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிக் கொள்வதுபோல்) இப்போது புரிகிறதா. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்று. 

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால்  குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து   சிதறடிக்கப்படும்   மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு   ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில்  எந்த  விசயமாக  இருந்தாலும்  நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கெல்லாம் வேலை இல்லை) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம்  வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள்  செயலில் இறங்கி உள்ளனர்   ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடங்குள  கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கெளப்பியும்  அவுத்தும்  விடுகின்றார்கள் 

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு  சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல்  . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது 

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல  அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.  

ஒரு சிறிய பட்டாணிக்கடலை   சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று  கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு  நான்கு  ஐந்து நிலாக்கள்  எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம்  ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைதான்  கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் எந்த ஒரு நாட்டில்   விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.

இத்தனை பணம் செலவு செய்து உலகையே பணயம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சூராவை பார்க்காதது ஏனோ !!!!! 

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

50:38   وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ

50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை

57:4   هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا  ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்

Sஹமீது

சரி வாங்க நாம பேசுவோம் படங்களோடு ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2016 | , , ,

அதிரைநிருபரில் பேசும் படங்களோடு உறவாடிய தருணங்களை மீட்டெடுக்க அவ்வப்போது நினைவலைகளோடு அசைபோடவும் வேண்டியிருக்கிறது, வலைப்பூக்களின் வாசம் முகநூல் ஒப்பனைத் தோற்றத்திலும் அதன் வாசத்திலும் மயங்கிக் கிடக்கும் இளைய பழைய பழகிய சகோதரர்களை தூண்டில் போட்டு இழுக்க இன்னும் உழைக்கத்தான் வேண்டும்.

இருப்பினும், வேலைப் பளு கால ஓட்டங்களில் அன்றாட நிகழ்வுகளின் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் பொழுதுகளோடு நாட்களும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது....

அதனால் என்ன !? எடுத்த பணியும் இணைந்த கூட்டணியும் சந்தர்ப்பவாதம் பேசாத சமயச் சூழலுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைத்து களமாடும் கம்பீரமான கூட்டணி இருப்பதால்... (தேர்தல் நேரமாதலால் பொருத்தருள்க).

சரி வாங்க நாம பேசுவோம் படங்களோடு!


பூங்காவில் பூத்திருப்பது பூக்கள் மட்டும் அல்ல மனிதர்களும்தான்


கலர் பார்க்க கண்ணாடி போடுவோம் இங்கே கண்ணாடியோ கலர்கலராக


கையில் சிக்காத இந்த கானகத்து மேகம் கேமராவில் சிக்கியது


பார்வையில் ரசனை இருந்தால்  பார்ப்பது எல்லாம் அழகாய் தெரியும் (படம் கடற்க்கரை மணல் சிப்பிக்கள் சிதறிக்கிடப்பது)


முல்லைப்பெரியார் பார்ப்பதற்கு கொள்ளைப்பிரியமாய் இருக்கும்


இப்படி எல்லாம் இயற்கையை ரசிப்பதற்கு "குடுப்பினை" வேண்டும்

Sஹமீது

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2015 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

மாமரம் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2015 | , , , ,

ஒருமுறை ஊர் சுற்றிவிட்டு (டூர்) ஊர்  வரும் வழியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, நாட்டுமங்கலம் என்ற போர்டை பார்த்ததும் பண்ணை உள்ளே சென்று பார்க்க முடிவு செய்து காரை உள்ளே செலுத்தினேன் உள்ளே சென்றதும் பண்ணைக்கே உரித்தான பசுமை நிழலாடியது பண்ணையின் பசுமை மனதுக்கு இதமாக இருந்தது 

பண்ணை அதிகாரியை அணுகி ஒட்டு மாங்கன்னு ஒண்ணு வேணும்முன்னு சொன்னதும்  நுப்பது ரூபாய்க்கு பில் போட்டு கொடுத்துவிட்டு ஒரு மாங்கன்னு ஒன்றையும் கொடுத்தார் கொடுத்தவர் சொன்னார் இது உயர் ரக ஒட்டு மாங்கன்னு மூன்று வருடங்களில் காய்த்துவிடும் என்றார் 

ஒட்டு ரகம் என்றால்  என்ன என்று  கேட்டதும் அப்படியோ ஒட்டும்  இடத்திற்கு எங்களை ஓட்டி சென்றார் 


ஹை-பிரீடு என்ற ஆங்கில  சொல்லுக்கு தமிழில்    வீரிய ஒட்டு ரகம் என்ற   பெயர் காரணத்தை சொல்லிவிட்டு .ஒ ட்டும் விசயத்திற்கு வந்தார் அதாவது  ஒரே வகை மரத்தில்  வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டுரகங்களை வைத்து உருவாக்கப்படுவதுதான் இந்த வீரிய ரக ஒட்டு ரகம். ஒரு மரம் ஆணாகவும், மற்றொரு மரம்  பெண்ணாகவும்   பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு ஒரு மாமரத்தை  எடுத்துக் கொள்வோம். ஒருமாமரம் , நோய் எதிர்ப்புத் சக்தி  கொண்டதாக இருக்கும். ஆனால், காய்ப்பு  குறைவாக இருக்கும். மற்றொருமாமரம் , அதிக காய்ப்பு  தரும். ஆனால், நோய் எதிர்ப்பு திறன் இருக்காது. இப்படிப்பட்ட இரண்டு ரகங்களையும் ஒட்டு சேர்த்து உருவாக்கக் கூடிய முதல் தலைமுறைக்கு பெயர்தான் வீரிய ஒட்டு ரகம். என்று விளக்கம் கொடுத்தார் அத்தோடு ஒட்டும்  முறையும் விளக்கினார் 

முதலில் நோய் எதிர்ப்புத் சக்தி அதிகம்  கொண்ட மாங்கொட்டையை ஒரு பாலித்தின் பையில் மண் நிரப்பி ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை வளர்க்கின்றனர் அது வளர்ந்து ஒரு குறிப்பிட்ட  உயரம் வந்ததும் அதன் அடிபகுதியில் ஒரு நான்கு அல்லது ஐந்து அங்குளம் விட்டு நம் ஊரில் வாலை  மீன் வெட்டுவதுபொல் கிராசக வெட்டி விட்டு வேறு காய்ப்பு திறன் அதிகமுள்ள மாமரத்தின் நொனி கிளையை  (கொப்பு)கிரசக வெட்டி கொட்டையில்  இருந்துவெட்டி எடுத்த அந்த மேல் பகுதி மீது இந்த கொப்பை நன்றாக இணைத்து அசையாது கட்டி வைத்துவிடுகின்றனர்  மாங்கொட்டையில் இருந்து வரும்  சக்திகளை மேலே உள்ள இணைப்பு பெற்றுக்கொண்டு வளர தொடங்கும் என்று விவரித்தார் 

மேலும் கூறினார் இந்த  ரகத்திலிருந்து கிடைக்கும் விதையினை மீண்டும் விதைத்தால் நாம் எதிர்பார்க்கும் வகையில் காய்ப்பு இருக்காது அதற்க்கு காரணம் அங்கு  விதையில் பல  குழப்பங்கள் உருவாகும். இந்த விதை வாப்பா , அப்பா , முப்பாட்டன் போன்றவர்களின் குணாதிசயத்துடன் எக்கு தப்பாக இருக்கும். ஆகவே, முதல் தலைமுறையில் உருவான வீரிய ஒட்டு ரகங்களை மட்டுமே பயிரிடவேண்டும்.இது  சாதாரண ரகங்களைக் காட்டிலும்  50% வரை கூடுதல்காய்ப்பினை  கொடுக்கும்  என்று சொல்லி முடித்தார் 

அங்கு வாங்கி வந்த ஒட்டு  மாங்கன்றை வீட்டு கொல்லையில் வைத்து தினமும் நீர் ஊற்றி வளர்த்து வந்தேன் மரம் ஜம்முன்னு வளர்ந்ததே தவிர மூன்று வருடம் தாண்டியும் காய்க்கவில்லை ஒரு வேலை ஒட்டு மரம் என்று அட்டு மரத்தை தந்துவிட்டானோ  என்ற சந்தேகமெல்லாம் வந்தது வருஷ வருஷம் மரமாத்து வேலை செய்வதே பெரிய வேலையாய்  இருந்தது 

காய்க்கவே  மாட்டேங்குதே வெட்டி விடுவோம்  என்று முடிவெடுத்து  தோப்புக்காரனை  கூப்பிட்டு வெட்ட சொல்லிவிட்டேன் அவன் வந்து பார்த்துவிட்டு இப்படி பசுமையான மாமரத்தை ஏன் வெட்ட சொல்றிய முதலாளி என்று கேட்டான் நான் சொன்னேன் பல வருடம் ஆகியும் காய்க்கவில்லை என்றேன் அதற்க்கு அவன் சொன்னான் அடுத்த வருடம் காய்க்க வைத்துவிடுவோ மொதலாளி என்று சொன்னவன் விறுவிறு என்று  மாமர  தூரில் இருந்து ஒரு அடி விட்டு ஒரு அடி மேல மரத்தை சுற்றி ஒரு அடிக்கு மாமரத்தின் பட்டையை (மேல் தோல்)  பட்டையை சீவிவிட்டான் 

தோப்புக்காரன் சொன்னது போல் மாமரம் போன வருடம்  பூ பூத்து காயும் காய்த்தது. காய்களில்  ஒரு சில காய்களை மீன் ஆனத்தில் போட்டு சாப்பிட்டதில் உள்ள சுகத்தை இங்கு என்னால் விவரிக்க முடியவில்லை அத்தனை சுவை இந்த வருஷ சீசனுக்கு தற்போது பூ  பூத்துள்ளதாக செய்தி ஊரில் இருந்து வந்ததில் இருந்து மனதில் ஆனந்தம் ஆற்பரிக்கின்றது 

Sஹமீது

மூன்றாம் கண் பார்வை ! - பேசும்படம்... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2014 | , , , ,

ஆங்காங்கே அதிரையில் நடந்த விவாதப் படம் ஓடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் நாமும் நம் பங்கிற்கு பேசும்படம் போடலாமேன்னு முடிவாயிடுச்சு !


சாலைகளில் கொண்டை ஊசி வளைவு, U வளைவு, L  வளைவு பார்த்திருப்போம் இந்த வளைவு Y வளைவு.


ஒரு பக்கம் மலைகள் மறுபக்கம் மழை மேகங்கள்.


அதிரைநிருபர் வாசகர்களுக்காக சாரல் மழையை கேமராவில் கொண்டு வந்தேன்.


மரங்களுக்கெல்லாம் இங்கே இயற்கை A / C போட்டு கொடுத்துள்ளது.


இதுபோன்ற இடங்களில் இளைமைப் பருவதில்தான் கிடைக்கும் நிம்மதியோ அலாதி.


ஹேர்  ஸ்டைல் நல்லா இருக்கான்னு  பார்த்து சொல்லுங்கள்.


தண்ணீரில் மட்டும் குளிர்ச்சி இல்லை இது போன்ற இடங்களை காண்பதிலும் மனதுக்கு குளிர்ச்சியை கண்டதுண்டு.


காலில் சாக்ஸ் எல்லாம் போட்டு இருக்கே இங்கிலீஷ் மாடோ  என்று நினைத்து விடாதீர்கள் இது கொடைக்கானல் காடுகளில் திரியும் காட்டு மாடு.


நம்ம ஊரு பக்கம் மழை காலங்களில் இந்த காளான்களை போய் குடை என்று சொல்லுவோம்.

Sஹமீது

மலர் வலம் - பேசும்படம் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2014 | , , ,

அதிரையில் மழை என்று ஆங்காங்கே அதிரை வலைப்பூக்களை அலங்கரிக்கும் அழகிய செய்திகள், அசத்தும் மழையில் ஊரே நனைகிறது. அயல்நாட்டில் இருப்பவர்களுக்கோ ஊர் (மழைச்) செய்திகள் அனைத்தும் அமிர்தமாக தெரிகிறது... அதனாலென்ன அதிரைநிருபரில் மழைத் தமிழ் அதனைத் தொடர்ந்து மலர்களின் வலம் நடக்கிறது.













Sஹமீது
மூன்றாம் கண்ணுடன்...

பேசும் படம் - இது ஒரு விழியின் மொழி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2014 | , , ,

பேசும் படம் மவுன விரதம் இருந்ததாக சரித்திரம் இல்லை, பார்த்ததும் பேசத்தூண்டும் அழகு பெண்மைக்கு மட்டுமா இருக்கனும், இதோ இந்தப் படங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.


பேரிக்காய் இரண்டும் நல்லாத்தான்  இருக்கு அதுக்கு பின் பக்கம் ரவுண்டா ஓட்டை ஓட்டையா இருக்கே அது என்ன காய் என்று  கேட்டுறாதிய !


கலர் படம் கலர் படம்ன்னு சொல்வாங்களே அது இதுவா என்று கொஞ்சம் பாத்து சொல்லுங்க !


வண்ணாத்தி பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் என்றால், பூக்களின் இதழ் மேல் வண்ணாத்தி பூச்சி ஓவியம் அதிசயத்திலும் அதிசயம் !


சூரிய வெளிச்சம் மேகத்தின் ஓட்டம் இவை  அனைத்தும்  இறைவனின் நாட்டம் 


கொடைக்கானலுக்கு குடை பிடிக்கும் வானவில், அதில் ஊஞ்சல் கட்ட கவிஞர்களுக்கு இந்தப் படம் ஓர் அழைப்பு!




இனி ரசனையாளர்களின் சாய்ஸ்...

Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு