Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே செல்கிறது இந்த பாதை? பகுதி - 3 14

தாஜுதீன் (THAJUDEEN ) | June 30, 2010 | , , ,

நேற்று அதிரையில் இரயில் மறியல் போராட்டம் இனிதே நடைபெற்றது என்பது அதிரைவாசிகள் நாம் அறிந்தது.                                                         

                                                                          
அரசிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு இன்னும் கண்டுக்கொள்ளப்படாத நம் பகுதி அகல இரயில் பாதை போக்குவரத்தை மீண்டும் எற்படுத்துவதற்காக இந்த இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் 250 பேர் கூடிய கூட்டத்தில் 20 பேர் மட்டுமே கைதானார்கள், மற்றவர்கள் தாங்கள் கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அன்று இரவு 9.00 மணியளவில் தான் விடுதலை செய்யப்பட்டார்கள். இது அதிரை பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போரட்டம், எந்த தனிப்பட்ட இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல என்பது அதிரை மக்களுக்கும். காவல்துறைக்கும் நன்றாக தெரியும்.

ஊருக்கு நல்லது நடப்பதற்கு ஒரு போராட்டம் நடைப்பெறுவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள் அதிரை அரசியல் வட்டாரத்தில் காட்டப்பட்டுள்ளதை நேற்றய இரயில் போராட்டத்தை முறியடிப்பதற்காக காவல்துறையினரின் கடைசி நேர கொடுபிடிகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக கைதான அன்பு சகோதரர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்..

ஆட்சி அதிரகாரத்தில் இருப்பதால் நிறுத்தப்பட்ட இரயில் போக்குவரத்தை மீண்டும் எற்படுத்துவதற்காக வீதீயில் வந்து போராடக்கூடாது என்று வேடிக்கை காட்டிவரும் இந்த ஆளும் மற்றும் ஆளாத அரசியல்வாதிகள் எப்போது திருந்தப் போகிறார்களோ, தெரியவில்லை.

பொது நலனுக்காக மக்களை ஒன்று சேர விடாத அரசியல்வாதிகளை இன்னுமா நாம் நம்பிக்கொண்டிக்க வேண்டும்?

எப்போது நம்மூர் இரயிலடி அதிரைவாசிகளை வழியனுப்பி,  வரவேற்கப் போகிறது?

எங்கே செல்கிறது நம் பாதை????????????????????????

தகவல்: தாஜுதீன்

ஜூன் 30, 2010

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? 5

தாஜுதீன் (THAJUDEEN ) | June 27, 2010 | , , ,

கீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்" இருக்கலாம்.                                                                                     
இது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தான்.
                                                                                                        
இன்றைய கால நவீன உலகில் பல புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளொன்றாக உலக வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தான் கைபேசி/மொபைல் போன்கள். உலக உருண்டை என்னும் ஒரு வீட்டை விரல் நுனி என்னும் சாவி கொண்டு திறந்து விடலாம் என்பது போல் வகைவகையான, வண்ணவண்ண கைபேசிகள் இன்று வந்து விட்டன.

அதை ப‌ட்டி தொட்டிக‌ளில் எல்லாம் பாமரனும் பயன்படுத்தச் செய்வ‌த‌ற்காக உள்நாட்டு ம‌ற்றும் ப‌ன்னாட்டு தொலைத்தொட‌ர்பு நிறுவ‌ன‌ங்க‌ள் போட்டி போட்டுக்கொண்டு அத‌ன் சேவையை அறிமுக‌ப்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌. அதன் தொலைத்தொட‌ர்பு சேவை த‌ங்குத‌டையின்றி ந‌க‌ர‌ங்க‌ள் ம‌ட்டுமின்றி கிராம‌ப்புற‌ங்க‌ளிலும் கிடைக்க‌ச்செய்ய‌ அத‌ன் உய‌ர்ந்த‌ கோபுர‌ங்கள் மூலம் செய‌ற்கைக்கோளிலிருந்து மின்காந்த‌ அலைக‌ளைப்பெற்றுத்த‌ருவ‌த‌ற்காக‌ எல்லா இட‌ங்க‌ளிலும் அத‌ன் உரிமையாள‌ர்க‌ளிட‌ம் ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் (மாத‌ம் ஒரு க‌னிச‌மான‌ தொகையை இட‌த்தின் உரிமையாள‌ருக்கு கொடுக்கும் வ‌கையில்)நிறுவ‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

ச‌மீப‌த்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள‌ ப‌ற‌வைக‌ள் பாதுகாப்பு மையம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட‌ ஒரு நீண்ட‌ ஆய்விற்குப்பிற‌கு ஒரு அதிர்ச்சியான‌ த‌க‌வ‌லை த‌ந்துள்ள‌து. அது என்ன‌வெனில் உய‌ர‌மாக‌ நிறுவ‌ப்ப‌டும் அதிக‌ மின்காந்த (அலை) ச‌க்தி கொண்ட‌ செல்போன் கோபுர‌ங்க‌ளால் ப‌ற‌வையின‌ம் மெல்ல‌,மெல்ல‌ அழிந்து வ‌ருவ‌தாக‌வும் குறிப்பாக‌ சிட்டுக்குருவி இன‌ம் விரைவில் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ள‌து. அம்மைய‌ம் ந‌ம் நாட்டில் கேர‌ள‌ மாநில‌த்தின் ஒரு ப‌குதியில் இக்கோபுர‌ங்க‌ள் கார‌ண‌மாக‌ ப‌ற‌வைக‌ள் இன‌ம் குறிப்பிட்ட அப்பகுதியில் அழிந்து விட்ட‌தாக‌ தெரிவித்துள்ள‌து. (தகவல்: தினமணி)

இதுபோன்ற‌ உய‌ர்காந்த‌ மின்ன‌லை கொண்ட‌ கோபுர‌ங்க‌ளை நிறுவுவ‌தால் வ‌ரும் வ‌ருமான‌ங்க‌ள் ம‌ட்டுமே ந‌ம் க‌ண்க‌ளுக்கு தெளிவாக‌ தெரிகிறதே தவிர‌ அத‌னால் வ‌ரும் ப‌ல‌ விப‌ரீத‌ங்க‌ள் க‌ண்க‌ளுக்குத்தெரிவ‌தும் இல்லை. அதை தெரிந்தாலும் பெரிது ப‌டுத்த‌ ந‌ம் உள்ள‌ம் என்றும் விரும்புவ‌தில்லை.

இன்று ம‌னித‌ இனம் புற்றுநோயின் ப‌ல‌ வ‌கைக‌ள் மூல‌ம் சொல்லாத்துய‌ரை அடைந்து அன்றாடம் ம‌டிந்து வ‌ரும் இவ்வேளையில் வாயில்லா ஜீவ‌ன் சிட்டுக்குருவிக்கு ம‌ட்டும் விதிவில‌க்கா என்ன‌? என்று நாம் கேட்க‌வில்லை அறிவிய‌லின் ந‌வீன‌ க‌ண்டுபிடுப்புக‌ள் கேட்க‌லாம்.

க‌டைசி மூச்சு உள்ள‌வ‌ரை எல்லாத்தீங்குக‌ளிலிருந்தும், விப‌ரீத‌ங்க‌ளிலிருந்தும், கொடிய‌ நோய்க‌ளிலிருந்தும் ந‌ம்மையும், பெற்றோர், உற்றார், உற‌வின‌ர்க‌ளையும், சிறார்க‌ளையும் ந‌ம்முட‌ன்/ந‌ம்மைச்சார்ந்து வாழ்ந்துவ‌ரும் எத்த‌னையோ வாயில்லா ஜீவ‌ன்க‌ளையும் வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீன் காத்த‌ருள‌ வேண்டும்.


தகவல் - மு. செ. மு. நெய்னா முகம்மது

உமர்தம்பிக்கு விருது - புகைப்படங்கள் 7

தாஜுதீன் (THAJUDEEN ) | June 27, 2010 | , , ,

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது  நேற்று மாலை 6:00 மணியளவில் வழங்கப்பட்டது.
                                                                                                                                                                  
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

விருது வழங்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...



மறைந்த அதிரை உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

உமர்தம்பி அரங்கம் புகைப்படங்கள் 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 26, 2010 | , , ,

தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள்.                                                          



                                                                                                   
தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது, துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார், உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இன்று அதிரையில் வெளியிடப்பட்ட நன்றி நோட்டீஸ் 3

தாஜுதீன் (THAJUDEEN ) | June 25, 2010 | , , , ,

அதிரை உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் – நன்றி மடல்

தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.


நம் அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.


தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் உத்தமம் அமைப்புக்கும், தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.


இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற நமதூரைந் சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். காஞ்சி முரளி அவர்களுக்கும் மிக்க நன்றி.


இம்முயற்சியில் தனிப்பட்ட முறையில் கவணம் செலுத்தி தமிழக முதல்வர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்த தமுமுக தலைவர் பேராசிரியர். ஜாவாகிருள்ளாஹ் அவர்களுக்கும், தமுமுக அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி


இம்முயற்சியை முதன் முதலில் ஆரம்பித்துவைத்த அதிரைக்காரன் என்ற அதிரை சகோதரருக்கும், மற்றும் கோரிக்கை செய்திகளை இணையக் கடலில் நீந்தவிட்டு தமிழ் இணைய உலக கவணத்தை உமர்தம்பி பக்கம் திரும்ப வைத்த அனைத்து வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி.


உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் திருக்குர்ஆன் மாநாட்டில் மூலமாக தமிழக அரசின் கவணத்திற்கு எடுத்துசென்ற அதிரை பைத்துல்மால் நிறுவனத்துக்கு மிக்க நன்றி.


உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில் செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும் மிக்க நன்றி.


இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் ஐயா. ஆல்பர்ட் அவர்களுக்கு மிக்க நன்றி.


இறுதியாக


அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்து உலகத்தமிழர்களுக்கு இக்கோரிக்கையை எடுத்துச் சொன்ன சகோதரர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி. இம்முயற்சிக்கு உறுதுனையாக இருந்த நம் அதிரைவாசிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.


அன்புடன்


தாஜூதீன் மற்றும் உமர் தம்பி அவர்களின் குடும்பம்
அதிரைமணம் வலைப்பூ திரட்டி http://adiraimanam.blogspot.com


Thanks to

FUTURE NOW கம்ப்யூட்டர் கல்வி நிலையம்
ABM பில்டிங், ஆஸ்பத்திரி ரோடு, அதிராம்பட்டினம்.
போன்; 04373 – 241300, 9942739282, 9842466800
ஈமெயில்; info@futurenow.in

அதிரை உமர் தம்பி - நன்றி மடல் 2

தாஜுதீன் (THAJUDEEN ) | June 24, 2010 | , , ,

தமிழ்கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர் தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகிவிட்ட போதிலும் இவ்விசையத்தில் இதற்காக உண்மையில் உழைத்த தன்னலமற்ற தனிப்பட்ட நபர்கள் முக்கியமாக கூறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள். உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது விசையத்தில் இறைவனுக்கு தெரியும் யார் உண்மையில் உழைத்து என்று

அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.

இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரையை சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். காஞ்சி முரளி அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இவர்களின் முயற்சி தொடர்பான முழு விபரங்கள் சகோதரி மலிக்கா அவர்களின் நீரோடை வலைப்பூவில் விபரமாக பதிவாகி உள்ளது.

தற்போதைய செய்தி ‘துபாய் உமர்தம்பி அரங்கு’ என்ற பெயரை பார்த்ததும் எனக்கு சிறிய வருத்தம், உமர் தம்பி இந்திய குடிமகன், ஒரு தமிழர், இம்மண்ணில் பிறந்து இம்மண்ணில் மறைந்துள்ளார். ‘அதிரை உமர் தம்பி அரங்கு’ என்று போட்டிருக்கலாம், இல்லாவிட்டாலும் தேனீ எழுத்துரு தந்தவரை ‘தேனீ உமர் தம்பி அரங்கு’ என்றாவது போட்டிருக்கலாம். ‘சந்தோசத்திலும் துக்கம் இருக்கத்தான் செய்யும்’ என்ற நினைப்புடன் மனதை சமாதானம் செய்து தானே ஆக வேண்டியுள்ளது இக்காலத்தில்.

உமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 24, 2010 | , , , ,

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்
செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்
மிக்க நன்றி.

இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத
உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.

உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக
அரசுக்கும், தமிழ முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர்கள் அவர்களுக்கும் மிக்க நன்றி.

இம்முயற்சியில் தனிப்பட்ட கவணம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அரசின் கவணத்துக்கு எடுத்திச் சென்ற தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றி.

இறுதியாக இம்முயற்சியில் முழு கவணம் செலுத்தி தமிழக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரை கவிஞர் சகோதரி 'அன்புடன் மலிக்க' அவர்களுக்கும், அவரின் முயற்சிக்கு பெருதவி செய்த அன்பு சகோதரர் திரு. காஞ்சி முரளி அவர்களுக்கும், திருவாரூர் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் எங்களின் அன்பான கோடான கோடி நன்றிகள்.

வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.

தாஜூதீன்

ஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

Coimbatore: His creative work has been accepted globally. But, he failed to get due recognition locally even after his death. He is Umar Thambi, the pioneer, who contributed to Unicode by developing fonts for Tamil computing.
Bringing to light Umar's pioneering effort at a press briefing in Coimbatore, M H Jawahirullah, state president, Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) said that he had written a detailed letter to Chief Minister M Karunanidhi detailing the contributions made by Umar Thambi for the cause of Tamil computing.

Interestingly, Umar developed the Tamil fonts using Unicode for Tamil computing without any basic collegiate education.
It was Umar Thambi, who took the initiative to take Tamil worldwide through web format. Initially, Tamil remained as palmscripts and later in book form.
His Tamil fonts using Unicode system was well received by netizens across the globe.
Hailing from Adirampattinam in Thanjavur district, Umar was born on June 15, 1953 to Abdul Hameed and Rokkaiyya.
A bright student at Khader Moideen Higher Secondary School at his native place, Umar used to meddle with radio sets since he had a craze for electronics.
After his schooling, Umar left for Dubai in search of greener pastures. Even while working, he spared time to learn the basics of software and later started updating his knowledge on computer technology.
Back home in 2001, Umar devoted himself to software development.
Finally, Umar accomplished the mission of developing the fonts using Unicode for Tamil computing method.
Jawahirullah said that Umar Thambi had worked for the development of Tamil without any government assistance.
It would be a fitting tribute to honour Umar Thambi during the World Classical Tamil meet by instituting awards or education assistance to students pursuing their research in Tamil computing.
D Sekar Annadurai, a Tamil enthusiast and a regular Tamil internetuser, said that Umar's contribution to Tamil computing should not go unrecognised as he had paved the way for others, who are keen in improving Tamil computing taking cue from his initiatives.
Echoing similar views, several admirers from abroad through emails in Tamil internet magazines have appealed to the Tamil Nadu government to recognise Unicode Umar Thambi at the Tamil meet.

தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்: 

உமர் தம்பி June 15,1953 - July 12,2006 



தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. மின்னணுவியலாளரான இவர் தமிழில் ஒருங்குறி படியெடுத்த காலத்தில் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான 'தேனீ' இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார். ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்கு



எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும். தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு வலைத்தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் பெரும்பாலானோர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைத்தளம், வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.



தமிழ் உலகம் ம‌ட‌ற்குழு, தமிழ் மணம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறிக் குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி அவர்கள் உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன. எல்லா வகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி ஒருங்குறி மாற்றி, தேனீ ஒருங்குறி எழுத்துரு வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு வைகை இயங்கு எழுத்துரு என்பனவற்றோடு தமிழா-இ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.



இப்படியாக தமிழ் இணையத்தோடு இணைந்த உமர் தம்பி அவர் வடிவமைத்துத் தந்த தமிழ் மென்பொருள்கள் மூலம் தமிழ் இணையத்தில் மங்காப் புகழை எய்தியவர்!

முரசொலி மாறன்

தமிழ் இணைய மாநாட்டை 1999ம் வருடம் நடத்த பெரு முயற்சி எடுத்துவர்களில் ஒருவர் அமரர் முரசொலி மாறன். இவ்வகையில் தமிழகத்தில் உத்தம நிறுவனத்தை மக்களிடைய பிரபலப்படுத்திய பெருமை இவரைச் சாரும். மின் வழி தமிழ் வளர மென்பொருள் பல தமிழர்களுக்காகத் தயார் செய்திட வழி வகுத்தவர் இவர். தமிழ்நாட்டில் நடந்த இணைய மாநாடுதான் ஒருங்குறி இல்லாத காலத்தில் தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்துவதற்கு வழிகோலியது எனலாம். ஆங்கிலம்-தமிழ் என்னும் இருமொழியில் அமைக்கப்பட்ட தாப் என்னும் எழுத்துருவும் தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட தாம் என்னும் எழுத்துருவும் அமைக்கு இம்மாநாட்டில்தான் வழிவகை செய்யப்பட்டது. அமரர் முரசொலி மாறன் தமிழர்களிடைய மென்பொருள்களின் தரப்படுத்தலுக்கான முயற்சியை வற்புறுத்தியவர். தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடைய பலப்பல மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தவர். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பலவும் செய்து பல சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்க வழிகோலியவர்.
தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் அமரர் முரசொலி மாறன்
அவர்களின் தமிழ்க் கணினித் தொண்டை என்றென்றும் நினைவு கூறும்.

சுஜாதா

சுஜாதா எனும் புனைப்பெயரைக் கொண்ட ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமரர் ரங்கராஜனை அறியாதோர் தமிழ் இலக்கிய உலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கிய உலகில் ஆணித்தரமான ஒரு இடத்தைப் பெற்ற சுஜாதா கணினி வழி தமிழைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த பயனாளராக விளங்கினார். இவரின் கணினி ஆர்வம் இவரை அதிக அளவில் தமிழ் நாவல்களை எழுதவைத்தது என்றால் மிகையாகாது. 1997ல் அமரர் நா. கோவிந்தசாமி ஏற்பாடு செய்த தமிழ் இணைய மாநாட்டில் பங்கு கொண்ட சுஜாதா தமிழ் இணைய வளர்ச்சியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களில் ஒருவராக ஆனார். தமிழகத்தில் இணைய மாநாடு நடக்கவேண்டும் என்னும் உறுதியோடு 1999ம் ஆண்டு தமிழகத்தில் இதை நடத்த வழிகோலினார். முரசு அஞ்சல் எனும் தமிழ்த் தட்டச்சு மென்பொருளை இடையறாது பயன்படுத்தி மற்ற எழுத்தாளர்களிடையே கணினி பயன்பாட்டைப் பற்றியும் தமிழில் கணினி பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கணினியின் அற்புதங்களை மையமாக வைத்துத் தமிழில் நிறைய கதைகளை எழுதி தமிழ் வாசகர்களை தமிழ்க் கணினிக்கு ஈர்த்தவர்! உத்தம நிறுவனத்தின் முன்னோடிகளில் பலரோடு இணைந்து பணியாற்றி உத்தமம் ஆரம்ப காலத்தில் வளர வழிவகுத்தவர் அமரர் ரங்கராஜன் அவர்கள். உத்தமம் எனும் நிறுவனம் வளர வேண்டும் என முனைந்து ஆரம்ப காலங்களில் உத்தமத்தின் குழுமத்தில் அடிக்கடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு உத்தம உறுப்பினர்களிடைய ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்.


நா. கோவிந்தசாமி

இணைய முன்னோடிகளில் ஒருவர் என பலராலும் அன்புடன் கூறப்படும் அமரர். நா. கோவிந்தசாமி சிங்கப்பூரில் தமிழாசிரயராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழில் சிறுகதைகள் பல எழுதிய இவர் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியவாதிகளின் வரிசையில் இடம்பிடித்தவர். 1946-ஆம் ஆண்டு பிறந்த கோவிந்தசாமி 'உள்ளொளியைத் தேடி', 'வேள்வியைதேடி'. ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல சிங்கப்பூரில் பிரபலமானவை. சிங்கை வானொலியில் அவர் எழுதிய அன்புக்கப்பால், அலைகள் ஓய்வதில்லை எனும் தொடர் நாடகங்கள் புகழ்பெற்றவை. இணையம் வளர்ந்த காலத்தில் தமிழுக்கு இணையத்தில் ஒரு சிறந்த இடம் வேண்டும் என்ற எண்ணத்துடன் டாக்டர் டான் டின் வீ, லியோங்க கோக் யொங் ஆகிய இரு சீனக் கணினி வல்லுனர்களோடு இணைந்து தமிழ்நெட் எனும் எழுத்துருவைப் படைத்தார். இந்த எழுத்துருவின் பிறப்பு சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல தமிழ் இணையப் பக்கங்கள் பிறக்க வழிகோலியது. ஐஈ விசைப்பலகை எனும் தமிழ்த்தட்டச்சு முறையை அமைத்து தமிழை எளிதாகக் கணினியில் தட்டச்சுச் செய்ய வழியமைத்தார். குறிப்பாக இவரின் முயற்சியில் 1997ம் ஆண்டு முதல் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. பல தமிழ்க் கணினி வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இவ்வகையில் தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் வளர வித்திட்டவர் நா. கோவிந்தசாமி! அண்ணாரின் இறுதிகாலத் தமிழ்க் கணினி முயற்சி தமிழ் இணையத்தின் முதற்கட்ட வளர்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மாரடைப்பால் இளம் வயதில் காலமான நா. கோவிந்தசாமி உத்தமத்தனரின் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

யாழன் சண்முகலிங்கம்

அப்பு ஆர்ச்சி என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் யாழன் சண்முகலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியவாதி மற்றும் மென்பொருள் பொறியியலாளரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றி அமெரக்கப் பிரஜை உரிமை பெற்று அங்கிருந்தே தனது தமிழ்த் தொண்டை ஆற்றினார். இவருடைய மிக முக்கியமான தமிழ் மென்பொருள் யாழன் தமிழ்ச் சொற்பகுப்பியாகும். இம்மென்பொருளை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்றைந்தாம் ஆண்டிலேயே எழுதி அதை உலகலவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார். இது தமிழ்வலை99 என்ற மென்பொருளுக்கு முன்னதாகவே எழுதப்பட்டது. இந்த வகையில் தமிழர்களிடையே தமிழைக் கணினியில் பயன்படுத்த முயற்சி செய்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார். தமிழ் எழுத்துரு வளராத நாட்களில் தமிழைக் கணினியில் பயன்படுத்த போதுமான வசதி இல்லாத நாட்களில் இணைய வளர்ச்சி தொடக்க்க் காலத்தில் இருந்த நாட்களில் ஒரு எளிமையான பலரும் பயன்படுத்தும் வகையில் ஒரு மென்பொருளைச் செய்து அதை தமிழர்களின் மத்தியில் பிரபலப்படுத்தியது மிகச் சாதனை என்றுதான் கூறவேண்டும். யாழன் விசைப்பலகையை இவர் 1993ம் ஆண்டு உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தது தமிழ் இணைய வளர்ச்சியின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்று எனலாம்.


நன்றி: உத்தமம்

ஜூன் 2010

உமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தேனீ உமர்தம்பி அவர்களின் பெயரில் விருது சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற மாதம் விருது வழங்கப்பட்டது இது பற்றிய செய்தியை இங்கு மீண்டும் என் வலைப்பூவில் பதிவு செய்வவதில் பெருமையடைகிறேன்.

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.


விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.


இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான், திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


நன்றி அம்மா அப்பா வலைப்பூ

தன்னலம் விரும்பாத தாய்தமிழ் தொண்டர் தேனீ உமர்தம்பி பெயரில் விருது வழங்கி சிறப்பித்த சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி திரட்டி இணையதளம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உமர்தம்பி குடும்பத்தார், நண்பர்கள் அதிரைவாசிகளின் சார்பாக அன்பான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் தமிழ் சேவை இவ்வுலகம் இருக்கும் நாள் வரை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.

இச்செய்தியை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்திய அன்பு சகோதரர் ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி

உமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.


தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது


இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.


உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.


உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்
செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்
மிக்க நன்றி.


இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத
உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.


இறுதியாக உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக
அரசுக்கும் மிக்க நன்றி.


வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.

உமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

உமர்தம்பியின் இணையத் தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழ்மணத்தை தொடர்ந்து விகடன் இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி.

இத்தருனத்தில் விகடன் நிறுவனத்தாருக்கும், யூத்புல் விகடன் ஆசிரியர் குழுவுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.

http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.asp

அன்புடன் தாஜூதீன்

யூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

மறைந்த தமிழ் கணினி ஆசான், தேனீ எழுத்துரு தந்த அதிரை "உமர்தம்பி" அவர்கள் பற்றி தமிழ் கணினி மேதை மரியாதைக்குறிய "திரு.சுரதா யாழ்வாணன்" அவர்கள் பாராட்டி 15 ம் ஆகஸ்ட் 2006ம் ஆண்டு வெளியிட்ட செய்தியை இங்கு மீண்டும் இணையத் தமிழார்வளர்களுக்கு பகிர்ந்துக்கொள்கிறேன்.

வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில் பட்டது. "உமர் மறைவு" பற்றிய செய்தி அது. சற்று திக்கித்து சுதாகரித்து சுட்டியை க்ளிக் பண்ணுவதற்குள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி மறைந்தன..

என்னவாயிற்று துபாயில்தானே இருந்தார். ஏதாவது விபத்தாகவிருக்குமே?..மத்தியகிழக்கு நாடுகளில் வேலையிலிருப்போர் விபத்து மரணம் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவிட அண்மையில் தான் கார்த்திகேயன் என்று ஒரு வலைப்பதிவர்கூட பெங்களுரில் விபத்தில் பலியாகியிருந்தார்.எனவே பல எண்ணங்கள்.

பின்னர் அந்த மறைவு பற்றிய முப்தியின் பதிவைப் பார்த்த போது கூட அதில் ஆரம்பத்தில் மறைவு தவிர வேறு போதிய விபரம் கிடைக்கவில்லை. ஆனால் உமர் என்ற தமிழ்க்கணனி ஆர்வலனின் இடம் வெற்றிடமாகியது என்ற செய்தி மட்டும் காணப்பட்டு மனதுக்குள் உறைத்தது.

நானும் மற்றவர்களைப்போலத்தான் உமருடன் தமிழ் செயலி தொடர்பான மடல் தொடர்பு வைத்திருந்தேன். ஒரு முறை அவரை தேனி தானியங்கி எழுத்துரு தொடர்பாக பாராட்டி ஒரு மடலிட்டிருந்தேன்.

அப்படி நான் பாராட்டக்கூடியவாறு உமர் என்னதான் சாதனை செய்திருந்தார்?

அநேக வலைப்பதிவர்கள் உமரின் தானியங்கி எழுத்துருவை பாவிப்பவர்கள். அதை அவரது மறைவு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் தானியங்கி எழுத்துரு செய்வது சுலபம். ஆனால் உமர் செய்தது அது அல்ல, தானியங்கி எழுத்துரு அமைக்கும்போது அந்த microsoft/weft செயலி ஒவ்வொருமுறையும் அது எந்த இணையத்தளத்திலிருந்து செயல்படவிருக்கிறது என கண்டிப்பாக கேட்கும். உதாரணமாக திசைகள்.கொம் என கொடுத்திருந்தோமேயானால் அது தில்லை.கொம் என்ற தளத்திற்கு இயங்காது. இதை ஆரம்பத்தில் கவனித்த நான் முகவரிக்குப்பதிலாக http://எனப்போட்டு அந்த ஆரம்பத்தில் வரும் அத்தனை முகவரிகளுக்கும் அந்த தானியங்கி எழுத்துரு இயங்கும் வண்ணம் முயற்சித்தேன், ஆனால் அது சரிவரவில்லை. இதே எண்ணம் உமர் மனதிலும் தோன்றி அதே http:// செயல்பாட்டை நிறுவி தேனி

எழுத்துருவை அனைத்து தளங்களிலும் அதாவது http://என ஆரம்பிக்கும் அத்தனை முகவரிகளுக்கும் செயல்படுமாறு அந்த செயலியை உடைத்து (hack) நடைமுறைப்படுத்தியிருந்தார் உமர். அவரது இந்த உத்தியைதான் நான் மிக வெகுவாக மெச்சி பாராட்டியிருந்தேன்.அதற்கு அவர் தன்னடக்கமாக எனது தானியங்கி எழுத்துரு e-lesson பற்றி சிலாகித்து மேலதிகமாக பாராட்டியிருந்தார்...

இதே போல் இன்னுமொரு சம்பவம் எல்லோரும் அன்று தமிழிற்கு யூனிகோடுதான் சரியானவழி என முனைப்பாயிருந்தார்கள்.ஆனால் அதை பலரும் பயன்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தவைக்க தயாராகவிருக்கவில்லை. கிடைக்கக்ககூடிய எழுத்துருவோ ஒன்றில் வர்த்தக நோக்கில் பணம் கட்டி வாங்கும் எழுத்துருவாகவிருந்தது அல்லது எழுத்து சீர்திருத்தமுறையில் அமைந்திருந்தது. இந்த நிலமையில்தான் யூனிகோட்டை சரளமாக எல்லோரும் பாவிக்கும் வண்ணம் செய்வதற்காக தமிழில் இதற்கான எழுத்துரு தேவை என மடலாடற்குழுக்களில் வர்த்தக எழுத்துருக்களை தவிர்த்து யூனிகோட் எழுத்து தேவை என நான் தேடும்போது சில வாரங்களில் உடனடியாக தனது தேனீ எழுத்துருவை உருவாக்கி இலவசமாக தமிழ்க்கணனி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இன்று பல யூனிகோட் எழுத்துருக்கள் அரசு ஆதரவுடனும் தனிப்பட்ட பலரது சேவை நோக்கத்துடனும் வந்துவிட்டன. ஆனால் அன்று உமர் காலமறிந்து ஆபத்பாந்தவனாக வெளியிட்ட தேனி எழுத்துரு இன்றுவரை நிற்கின்றது.

அதே போல் அன்று அந்த வசதி உமர் தந்திருக்காவிடில் தமிழில் யூனிக்கோடின் பாய்ச்சல் சற்று தாமதப்பட்டிருக்கும் என்று சொன்னாலும் மிகையல்ல..

இன்னொரு எழுத்துருவாக்க அன்பர் ஒருவர் தனது எழுத்துருவை யூனிகோட் முறைமைக்கு மாற்ற என்னிடம் தொடர்பு கொண்டபோது உமரைத்தான் நான் சுட்டிவிட்டிருந்தேன். பின்னர் உமரின் உதவியுடன் அது வைகை யூனிகோட் எழுத்துருவாகியது. அதுகூட இலவசமாகத்தான் வெளியாகியது.

இதன் பின்னர் உள்ள உழைப்பு, ஆர்வம் பயனாளிகளுக்கு ஒருபோதுமே தெரியவராது. ஆனால் இந்த உழைப்பு வீண்போகவில்லை என்பதை உமரின் பிரிவின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்திய வலைப்பதிவர்கள் நிருபித்திருக்கிறார்கள். இனி இந்த கணனி உழைப்பாளி திரும்பவரப்போவதில்லை.

ஆனால் நாளை..

உமர் உருவாக்கிய அத்தனை செயலிகளும் காலவோட்டத்தில் உபயோகமாகாமல் போகலாம். ஆனால் உமர் என்ற இந்த தமிழ்த்தொண்டனின் அந்த தமிழார்வ, கணனி உழைப்பு , சேவை அடுத்து வரும் தமிழ்கணனி ஆர்வலர்களுக்கு ஒரு உதாரணமாகத்திகழ்ந்து அவர்களும் இதேபோல் வீச்சுடன் தமிழுக்கு சேவை செய்ய ஒரு உந்துதலாகவிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

பி.கு எனக்கு இன்றுள்ள ஒரே மனச்சங்கடம் உமருடன் ஒருவேளையாவது
தொலைபேசியிருக்கலாமே என்பதுதான்.


-சுரதா யாழ்வாணன்-

நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=12890

யார் இந்த உமர்த்தம்பி? 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , , ,

கருங்குயிலும் காகமதும் ஒன்றாய்த் தோன்றும்(1)
காதுடையோர்(2) இன்னிசையால் குயிலைத் தேர்வார்
அருங்கருணை ஆண்டவனின் அன்பைத் தேக்கி
அகமுவந்து நற்றமிழின் மக்க ளெல்லாம்
பெரும்பயனை அடைந்திடவே 'தேனீ' யென்னும்
பெயர்சூட்டித் தட்டச்சில் வார்த்தெ டுத்தே
ஒருங்குறியாம் 'யூனிக்கோ' டெழுத்தைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
நாற்புலமும்(3) ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்
(4)பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே
அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்
உற்பவமாய்(5) இன்றமிழை இயங்கச் செய்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?


******

இளமையிலே நுண்ணறிவைப் பெற்ற தம்பி
இயங்காத கருவிகளைப் பழுது பார்ப்பான்
எளிமையுடன் அடுத்துள்ள பட்டுக் கோட்டை
ஏகிடுவான்; அங்கவற்றை இயங்க வைப்பான்
களிகொள்வார் கருவிகளின் உடைமைக் காரர்
காசளித்தால் வாங்கமாட்டான்; நன்றி ஏற்பான்
ஒளிகொடுக்கும் முழுமதிபோல் பயனைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

திறமையுடன் செயலாற்றி வறுமை போக்கத்
தேர்ந்தெடுத்தான் அமீரகத்தை; அங்கி ருந்து
மறுமையுடன் இம்மையையும் சேர்ந்து பெற்று
மகிழ்வோடு தன்வாழ்வை அமைத்து யர்ந்து,
பொறுமையுடன் நுண்ணறிவை வளர்த்துக் கொண்டு
புகழ்வாய்ந்த கணினிகளுள் புகுந்து மேய்ந்தான்
ஒறுமையிலாத்(6) தன்மையுடன் உயர்ந்து நின்ற
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?


******
கடைந்தெடுத்த வெண்ணெயினைப்(7) பல்லோ ருக்கும்
காசில்லாக் கொடையாகக் கொடுத்த சீலன்
அடைந்ததுவோ உயிர்கொல்லிப் புற்று நோயாம்!
அதனைத்தான் பொறுமையுடன் சகித்து வந்தான்
குடைந்ததுநோய் அவனுடலை; இயன்ற மட்டும்
குணப்படுத்தச் சிகிச்சையெலாம் செய்து பார்த்தான்
உடைந்ததுவே (8)உயிர்ப்பானை! பாவம்! அந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?


******

அருஞ்சொல் விளக்கம்:

(1) கருநிறம் கொண்டிருப்பதால், குயிலும் காகமும் பார்வைக்கு ஒன்றாய்த் தோன்றும். அதுபோல், செயற்கரிய செய்த உமர்த்தம்பி, சாதாரணமானவர் அல்லர் எனும் உவமை எடுத்தாளப்பட்டுள்ளது.

(2) காதுடையோர் = இங்குக் 'காதுடையோர்' என்பது, குயிலிசைக்கு மயங்கி மகிழும் காதையுடையவர்கள் என்பதைக் குறிக்கும். எ.கா: திருக்குறளில், 'கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்' எனும் பாட்டு இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. உண்மையில், கற்றோரே கண்ணுடையார் என்பது போல, காதால் குயிலிசையைக் கேட்பவரைக் காதுடையவர் என மிகைக் கூற்றாகக் கூறப்பட்டது.

(3) நாற்புலமும் = தமிழிலக்கியத்தின் நிலப் பகுப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலையின்றி) ஆகிய நான்கு நிலப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட அதிராம்பட்டினம்.

(4) 'பொற்குண முன்மாதிரி' = பொன்னான நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 'பிறர் நலம் பேணும்' முன்மாதிரியைக் கடைப்பிடித்துச் செயலாற்றியவர்.

(5) உற்பவமாய் = கருக் கொள்ளச் செய்து

(6) ஒறுமையிலாத் தன்மை = யாரையும் வெறுக்காத தன்மை

(7) கடைந்தெடுத்த வெண்ணெய் = பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகிய நான்கு பரிணாமங்களைப் பெற்ற பின்னர்தான், 'வெண்ணெய்' எனும் அரும்பொருள் உருவாகும். அதுபோல், கணினித் துறையில் முயன்று பாடுபட்டு முன்னேறிப் பெற்ற பயனை (ஒருங்குறி எழுத்துருவை) தமிழுலகிற்கு இலவசமாகக் கொடுத்த கொடையாளி உமர்.

(8) உயிர்ப்பானை = மனித உயிர் மாயும் தன்மையுடையது என்பதைச் சுட்ட, 'உயிர்ப்பானை' எனும் உருவகம் இங்கு எடுத்தாளப்பட்டது.

- கவிஞர் அதிரை அஹ்மது

தேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா? 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , ,

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க மீண்டும் ஒரு வேண்டுகோள்.

இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள், நம் அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.


இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன். தொடர்புக்கு tjdn77@gmail.com

இதை எழுதி, ஒலியாக்கம் செய்து, நம்மை வெளியிட அனுமதியளித்த என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.

யுனிகோடு என் பார்வையில்: உமர்தம்பி - 7 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தமிழ் இணையக் கடலில் பழைய, புதிய வலைப்பதிவாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காலம் சென்ற யுனிகோட் உமர்தம்பி அவர்கள் யுனிகோட் பற்றி எழுதிய கட்டுரை அவர்களின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன்.

யுனிகோடு – என் பார்வையில்

யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. யுனிகோடு வேண்டும்

2. யுனிகோடு வேண்டாம்

3. யுனிகோடு கடினமானது

இதில் எது சரி?

இன்றைய பாவனையில் இருக்கும் யுனிகோடை எந்தவகையில் சேர்ப்பது?
அது பற்றி அலசப்படுவது சரியான வகையில் அதைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறதா? இவைகளைப் பற்றி என் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் யுனிகோடு என்ற ஒன்று ஏன் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் தமிழில் கணினிப் பயன்பாட்டையும் அதில் எழுதப்படும் ஆக்கங்களைப் பற்றியும் ஒரு சிந்தனை வேண்டும். சமீப காலங்களில் நிறையவே தமிழில் ஆக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன; எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை உலகலாவிய அளவில் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு குழுவுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வரைமுறையின்படியே (என்கோடிங்) அமந்திருப்பதால அதை ‘உலகலாவியது’ என்று கூற இயலாது. பல மொழிகள் முன்பே இம்மாதிரியான முறைப் படுத்தப்பட்டு உலகலவில் பதிவு செய்யப்பட்ட வரைமுறைகளைக் (code pages) கொண்டுள்ளன. ஆனால் உலகலாவிய மொழிகளுக்கெல்லாம் ஒரே விதமான தரத்தைக் கொண்டுவந்துவிட்டால் இதுவரை பட்டியலில் சேராத புதியனவாக இருந்தாலும் அல்லது பழையனவாக இருந்தாலும் எக்காலத்திலும் எப்பகுதியிலும் எல்லோராலும் கையாளப்படும் அல்லவா?. இன்றைய உலகம் தகவல் அமைப்புக்களால் பிணைக்கபட்டிருப்பதால் இம்மதிரியான உலகம் முழுமைக்குமான ஒரு தரம் தேவையாய் இருக்கிறது. இதைத் தருவதுதான் யுனிகோடு.

ஆக, யுனிகோடு என்ற ஒன்று வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் அதற்கு ஆதரவும் இருக்கிறது; எதிர்ப்பும் இருக்கிறது. இதற்கு ஆதரவு காட்டுவோர் சில அடிப்படைகளை வைத்து விவாதிக்கின்றனர்:

உலகலாவிய குறியீடு- தரப்படுத்தப்படாத குறியீடுகளில் ஆக்கங்களை எழுதிக் குவித்து ஆங்காங்கே தேங்கி நிற்பதில் எந்த இலாபமும் இல்லை. மேலும் வேண்டும்போது தேடியெடுக்கும் ஒரு தகுமான பொறியும் இல்லை. இதற்கிடையில் பல்வேறு குறியீடுகளை அவரவர் விருப்பத்திற்குச் செய்து, செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பையே சிதைத்துவிடுகின்றனர். ஆக நாம் முன்னேறிச் செல்ல யுனிகோடு ஒன்றுதான் வழி.

இனி, யுனிகோடு வேண்டாம் என்று சொல்வோரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சில காரணங்களுக்காக வேண்டாம் என்று சொல்பவர். இரண்டு “அது புதியதாகவுள்ளதே, சில நேரம் வேண்டாத சிக்கல் நேருவதுபோல் தோன்றுகிறதே; இப்போதிருப்பதில் என்ன குறை?” என்று வினவி, அதைத் தொட மனமில்லாமலே தூர நிற்பவர்.

நம்மிடையே உள்ள பெரிய குறை, உண்மையை நோக்குவதைவிட கட்சி சார்ந்து கொள்வது. எனவேதான் யுனிகோடே வேண்டும் என்று ஒரு குழுவும், ஒரேடியாக வேண்டாம் என்ற ஒருபுறமும் கோஷம் எழுப்புகின்றன.

உலகலாவிய தரத்தில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்பதில் எத்தரப்பாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் அது எப்படி செயலபடுத்தபட்டது என்பதில்தான் கருத்து வேறுபாடு. இந்திய மொழிகளை யுனிகோடில் சேர்க்க முனைந்தபோது “இந்திய மொழிகள்” என்ற ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டதுதான் இந்த சிக்கலுக்கெல்லாம் மூல காரணம். ஒவ்வொரு இந்திய மொழியும் அதிலும் குறிப்பாக தமிழ், எழுதுவதிலும் கையாளப்படுவதிலும் தனக்கே உரிய சில பண்புகளைக் கொண்டுள்ளது. இப்படி இந்தியாவில் பேசப்படும் மொழிகளை “இந்திய மொழி” என்ற ஓர் அலகுக்குள் அடக்கி, அதன் சிறப்புதனமை சிதைந்துவிடக் காரணமாகிவிட்டதே என்பதுதான் அங்கலாய்ப்பு. இவ்வாறு இந்திய மொழிகளை யுனிகோடிற்குக் கொண்டுவரும்போது அது தொடர்பானர்வர்கள் சரியான பங்களிப்பைச் செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. மேலும் தமிழுக்காகத் தரப்பட்ட இடம். உயிரெழுத்துக்களுக்கும் உயிர்மெய்யெழுத்துக்களும் தவிர வெறு சில பொந்துகள் – இவைதான் ஒதுக்கப்பட்ட இடங்கள். அடிப்படையில் தமிழ் எழுத இவை போதுமென்றாலும் எல்லா எழுத்துக்களையும் யுனிகோடில் உள்ளடக்குவதால் எந்தப் பிழையும் இல்லை என்பதல்லாமல் அது நன்மை பயப்பதாகவே அமையும். குறிப்பாக மெய்யெழுத்துக்களுக்கு (எ.கா: க்) இரண்டு இடங்கள் பிடிகின்றனவே அது ஒன்றாகிவிடும். மேலும் தேடுபொறி அமைப்பை எளிதாக்கும். எடுத்துக் காட்டாக “பல” என்பதைத் தேடினால் “பல்” என்பது சேர்ந்தே வரும். காரணம் “பல்” என்பது “ப+ல+[புள்ளி]” கொண்டதாகும் இந்த அமைப்பில் முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து “பல” என்று ஆகிவிடுவதால் தேடும்போது “பல” என்பதோடு “பல்” உம் சேர்ந்து வரும். “ல்” என்பது ஓர் எழுத்தாக அமையுமானால் “ல” உம் “ல்” உம் வேறுபடுத்திக் காணப்படும். அது மட்டுமல்ல வரிசைப் படுத்துவதிலும் மேலதிகமான சிக்கல் இருக்காது.

ஆனால் மேற்சொல்லப்பட்ட வலுவான காரணங்களில்லாமல் வெறுனனே “யுனிகோடா?… தூ..தூ..” என்பவர்களை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இடம் அதிகமாகப் பிடிக்கும் என்பது ஒரு காரனமாக இருந்தாலும் இன்றைய நிலையில் இடம் என்பது ஒரு பொருட்டல்ல.

இவ்வளவு இடர்பாடுகளை வைத்துக்கொண்டு யுனிகோடிற்குப் போக வேண்டுமா? ஆமாம்; போகத்தான் வேண்டும். காரணம் இந்த உண்மைகள் இப்போது வெளியில் பேசப் படுவது வெகு காலம் தாழ்த்தித்தான். இந்த ஆய்வுகள் முன்னரே நடக்கப் பெற்று தீர்வு கண்டிருக்க வேண்டும். இப்போது எல்லா செயலிகளும் யுனிகோடை அடிப்படையாக வைத்துதுத்தான் வருகின்றன. புதுச் செயலிகளை உருவாக்குவோருக்கு பன்மொழி பயன்பாடிற்கு அவர்களின் செயலிகளைத் தருவது எளிதாகிறது. இப்போது நாம் இதில் இடம்பிடிக்க வில்லையானால் நாம் வெகு தூரத்தில் பின்னிற்கு நிற்போம். இனி யுன்கோடில் பெரிய திருத்தம் வராது என முடிவாகிவிட்டது. ஒருவேளை அப்படியரு மாற்றம் நாம் முன்னெ சொன்னபடி வருவதானால் அது வருடங்கள் பிடிக்கும். நாம் பின்னே நிற்கப்போவது நிச்சயம். ஆகையால் சில சிக்கல்களை எதிர்கொண்டு யுனிகோடைப் பயன்படுத்தி ஆகவேண்டியிருக்கிறது. கடினமாக இருந்தாலும் நம் கணிஞர்கள் சிக்கலுக்குத் தீர்வு காணாமல் இருக்க மாட்டார்கள்.

நாம் குடியிருக்கப் போகும் வீடு, நாம் விரும்பியாவாறு இல்லாதிருக்கலாம். ஒருசில ஓட்டை உடைசல்களுடன் இருப்பதால் எனக்கு வீடே வேண்டாமென்று இருப்பது எப்படிச் சரியாகும்?

ஆக்கம்: உமர் தம்பி,
நன்றி: எழில் நிலா .காம்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா? 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.pudhucherry.com/text/THENEE.eot
http://www.pudhucherry.com/text/VAIGAIU0.eot

உமர் ஒருங்குறி எழுதி

(AWC Phonetic Tamil Unicode Writer)
http://www.pudhucherry.com/pages/UmarUni.html

உமர் ஓடை எழுதி

http://www.pudhucherry.com/pages/umarrss.html

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி சகோதரர். அதிரைக்காரன்
http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html

இனிப்பும் கசப்பும் - உமர் தம்பி - 6 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

இன்று நவம்பர் 14. குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். இன்று 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் உதவியாலும் அந்நோயைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதாலும் இந்நோயைச் சமாளிப்பது சாத்தியமாகியிருக்கிறது.

இந்நோயைப் பற்றியும் குறிப்பாக அறிகுறிகள், விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ள பெரும்பாலோர் ஆர்வமாயிருக்கின்றனர். ஓராண்டிற்கு முன்னால் எழுத்தப்பட்ட இந்த கட்டுரை படிப்போருக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறேன்.

குறிப்பு:
இந்த கட்டுரை, சர்க்கரை நோயின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும்,
எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்வதற்கும் மேலும் அது
தொடர்பான வேறு சிக்கல்கள் எழாமல் பார்த்துக் கொள்வற்கும் உதவும்
தகவல்களைத் தரும் நோக்கில் எழுதப்பட்டது. இங்கு மருந்துகள் பெயரோ
பயன்படுத்தும் முறையோ தரப்படாது. ஏனென்றால் அம்மருந்துகள் மருத்துவரின் உதவியோடு அவரவருக்கு தேவையான அளவு தரப்பட வேண்டும். இக்கட்டுரையைப் படிக்கும்போது இதில் குறிப்பிடப்படும் அறிகுறிககள் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி குறுதிச் சோதனை செய்து கொள்வது நல்லது.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப்
பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ
அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:

பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்!

சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.
வகை I (Type - I):
Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM) - இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.

வகை - II (Type - II):
Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்

மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய்(gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக(glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவதுமாதிரி!). அடுத்த உணவு கிட்டதபோதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.
இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogen ஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? அவைகளைக் விரிவாகக் காண்பதற்கு முன்னால்
இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதைக் காணலாம்.

குறிப்பு:
கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.

அறிகுறிகள்:
-அதிகப்படியான தாகம்
-அடிக்கடி சிறுநீர் போதல்
-அதிகமாப் பசித்தல்
-காரணமில்லாத எடை குறைவு
-உடம்பில் வலியெடுத்தல்
-சோர்வு
-காயங்கள் எளிதில் ஆறாமை
-அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்
-சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.
மேற்கண்டவற்றில் சிலவோ அல்லது எல்லாமோ ஒருவருக்கு இருக்கலாம். இனி, இந்த குறைபாடு எப்படி வருகிறது என்பதையும் ஒவ்வொரு வகையின் தன்மையையும் காண்போம்.

வகை I
அதிகப்படியான சர்க்கரையை glycogen (கிளைக்கோஜன்) ஆக மாற்றி சேமித்து வைக்க கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் தேவையான ஒன்று என்று கண்டோமல்லவா? கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி? இந்த இன்சுலின் சுரக்கக் காரணமாக இருக்கும் beta((பீட்டா) செல்கள் கணையத்தில் மிக மிகக் குறைந்தோ, அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இப்படி, பிறக்கும்போதே கூட சில இளம் நோயாளிகளுக்கு இருக்கலாம். அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவை அழிக்கப் பட்டும் இருக்கலாம். இம்மதிரியான குறை, இளம் வயதில் (கிட்டத்தட்ட 20 வயதிற்குள்) தோன்றிவிடுவதால் இவ்வகையை Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் என்றழைக்கிறார்கள். இம்மதிரியான நோயாளிகளுக்கு இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதைத்
தவிர வேறு வழி இல்லை.

வகை II
இரண்டாவது வகை வயதானவர்களுக்கு(40 வயதிற்கு மேல்) வருவதாகும். கணையதில் இருக்கும் பீட்டா செல்கள் அளவு குறைந்தோ அல்லது இன்சுலின் போதுமான அளவு சுரந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத ஓர் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கலாம். இம்மாதிரியான குறைபாடுடையவர்கள் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் ஒரு நோயல்ல - ஒரு குறைபாடு. அந்தக் குறைபாட்டை மருந்துகள் உண்டோ அல்லது இன்சுலின் எடுத்தோ எவ்வழியிலாவது சரிசெய்ய முடியுமானால் வாழ்க்கையைச் சிக்கலின்றிக் கழிக்கலாம்.

முதல் வகையானது 10 விழுக்காடே காணப் படுகிறது. இரண்டாவது வகைதான் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒருவரின் உடற்கூறு, வாழும் வகை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் இவை எல்லாமே சர்க்கரை நோயின் அளவை நிர்ணயிக் கூடியவை.

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சர்க்கரை நோய் என்று அறிய வந்துவிட்டால்(கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற தற்காலிக வகை தவிர) அந்த 'வரத்தோடு' வாழ வேண்டியதுதான். ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள்: சர்க்கரை நோய் நம்மை ஆளுவதற்கு முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோயை treat செய்வதாகச் சொல்வதில்லை; manage செய்வதாகச் சொல்கிறோம். என்ன, முன் சொன்ன அறிகுறிகளில் சில உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு குறுதிச் சோதனை செய்து கொண்டுவிட்டீர்களா? எல்லாம் சரியாக இருக்கிறதா?
வாழ்த்துக்கள். இல்லை, இரத்தத்தில் சர்க்கரை இருப்பதாகத் தெரிய வந்ததா? கவலையை விடுங்கள். அயர்ந்து போக வேண்டாம். இந்த உலகில் நீங்கள் தனித்தவரல்லர். உங்களோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களுள் இலட்சக் கணக்கான அறிவியலாளர்களும், பேராசிரியர்களும், பொறியிலாளர்களும், கணினி வல்லுனர்களும், மருத்துவர்களும், விளையட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த நோய் கொண்டிருந்தும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களும் உண்டு. அது ஏன் -
கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப் பந்தாளர்களில் ஒருவராகத் திகழும் வசீம் அக்ரம், இன்சுலின் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை நோயாளிதானாம்!
சர்கரை நோயை முன்னறிய முடியுமா? அவற்றை தடுத்துக்க் கொள்ள முடியுமா? இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா? கடினம்தான். ஆனால் இந்த நோய் தலைகாட்டப் போகும் சற்று முன் அறிந்து கொள்ள இயலும். இதற்கு GTT - glucose tolerance test(சர்க்கரை அளவை தாங்கும் தன்மை) ஒன்றைச் செய்து கொள்ளலாம். ஓர் இரவுப் பட்டினிக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்(எடுத்துக்காட்டாக அரை மணிக்கொருமுறை) ஒரு குறிப்பிட்ட அளவு(50 - 100grams) கரைக்கப் பட்ட சர்க்கரையை(glucose)க் கொடுத்து அதே இடைவெளியில் இரத்ததை எடுத்து சோதனை செய்வர். ஒரு நோயில்லாத மனிதருக்கு சர்க்கரையின் அளவு அவ்வளவு ஒன்றும் கூடிவிடாது. ஆனால் நோய் இருக்கும் மனிதருக்கு அதன் அளவு கூடியே இருக்கும்.

பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. உடல் எடையை அளவாக வைத்துக் கொள்ளுதல், தொடர்ந்த உடற்பயிற்சி, மனச் சிக்கல்(stress) இல்லாமல் பார்த்துக் கொள்ள்ளுதல் ஆகியவை இந்த நோயைத் தூர வைப்பதற்குண்டான வழியாகும்.

சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாகியிருக்கிறது. என்றாலும் பலருக்கு இந்தோய் இருப்பது தற்செயலாகவே தெரிய வருகிறது. வேறு ஏதாவது ஒரு நோய்க்காக குறுதிச் சோதனை செய்யும்போது குறுதியில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத் தெரிய வரும்போதுதான் பலர் இந்த நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அறிய வருகிறார்கள்.

நாம் முன்பு கண்டபடி இந்நோயின் சில அறிகுறிகளோடு(தாகம், அடிக்கடி சிறுநீர் போதல், சோர்வு போன்றவை) இதன் தாக்கம் நின்று விடுவதில்லை. அவ்வறிகுறிகள் இனி ஏற்படப் போகும் சிக்கல்களுக்கான முன்னோடிகள். சர்க்கரை நோய், வேறு பல நோய்களின் தாய் என்று சொன்னேனல்லவா? அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:

-கண்பார்வை பாதித்தல்
-சிறுநீரகங்கள் பழுதடைதல்
-இதய நோய்
-கால்களில் புரையோடிய புண்

அதிர்ந்து போய்விடாதீர்கள். சர்க்கரை நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது. அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக்கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது. இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு? உடலுறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் கிட்டாது. குறிப்பாக மிக நுண்ணிய இரத்த நாளங்களைக் கொண்ட கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப் படுகின்றன. சிறு நீரகங்கள் செயல் இழக்க ஏதுவாகிறது. இதில் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை கண்கள். கண்களின் விழித்திரையில்(retina) மிக, மிக நுண்ணிய
இரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளில் ஏற்படும் அடைப்புக்களால் அவை வெடித்து கண் உள்ளேயே இரத்தம் கசியலாம். இந்த அடைப்புக்களால் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் தோன்றி அவை தடித்து விழித்திரையின் சமமான பரப்பை மேடுகளாக மாற்றலாம். அதன் விளைவாக ஒழுங்கில்லா உருவங்கள்(distorted images) தெரியலாம். இவைகளின் பின் விளைவுகள் பார்வை இழப்பாகவும் அமையும்.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இருதய நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படுவதால் இதயநோய் வருவதற்கு எளிதாக வழி வகுத்து விடுகிறது. இதய நோயாளிகளில் ஒரு கணிசமான அளவு சர்க்கரை நோய் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளிடையே ஏற்படும் மற்றொரு சிக்கல், நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதாகும். குறிப்பாக கால்களில் மெல்ல மெல்ல உணர்ச்சிகள் குறைந்து விடும். அதனால் ஏதேனும் அடித்தாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ கூட வலி தெரியாது. எனவே நோயாளி அதை கவனிக்காது அலட்சியம் செய்து விடுவார். மேலும் கால்களில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால் புண் எளிதில் ஆறாமல் விரைவில் பரவும். அதன் விளைவாக அப்பகுதியை வெட்டியெடுக்கும்படியாகக் கூட நேரலாம். இவையன்றி வேறு உறுப்புக்களும் பாதிப்படையலாம்.

சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று 'pathy' களைப் பற்றிச் சொல்வார்கள்:
Nephropathy (நெப்ரொபதி) - சிறு நீரகக் கொளாறுகள் - செய்லிழத்தல்
Neuropathy (நியுரொபதி) - நரம்புகள் பாதிக்கப் படுதல்
Retinopathy (ரெட்டினொபதி) - கண் விழித்திரை பாதிப்படைதல் - பார்வை இழத்தல்

இவையல்லாமல் அவ்வப்போது தொற்றும் சில்லரை நோய்கள். மற்றவரைவிட சாதாரணமாக நம்மிடையே புழங்கும் சிறு சிறு நோய்கள்கூட இவர்களை எளிதில் பற்றிக் கொள்ளும். இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகள் இவை.

மேற்கண்ட விளைவுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள முறையான சோதனைகள் தேவை. ஒரு முறையான - குறிப்பாக நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் தேவையான சோதனைகளைச் செய்வர். அவற்றுள் சில:

இரத்தம்:
- சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
- கொழுப்பின் அளவு
- யூரியா(உப்பு)வின் அளவு
- ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ª உதவும் சில சோதனைகள்

சிறுநீர்:
- சிறுநீரில் சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
- சிறுநீரில் புரதம், அசிடோன்
- மேலும் சில சோதனைகள்

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால்
இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப் படுகிறது.
என்ன. இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா? இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள்; இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும்
சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.

மூன்று தலையாய விடயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.
1. உணவுக் கட்டுப்பாடு
2. தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்
3. தெவையான அளவு உடற்பற்சி.

ஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை?
இந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான விடயங்களை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தால்தான் மேற்கண்ட சிக்கல்கள் தோன்றுகின்றன என்று கண்டோமல்லவா? ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால்? சிக்கல்களைத் தவிர்க்கலாமல்லவா? ஆம்; அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும்.
ஒவ்வொருவரூக்கும் தேவைப் படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல 'Dietitian"(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டு அறியத் தரக்கூடும்.

தேவையான மருந்துகளை எடுத்தல்:
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம்.

சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அள்வு எடுக்க வெண்டும்.

உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

இறுதியாக, இநோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில
தகவல்களையும் காண்போம்.

"உங்களுக்கு சர்க்கரை நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள்;கோதுமை உண்ணுங்கள்" என்றும் "கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து" என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு
மெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே(70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல; எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாளைய உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என பரிந்துரைத்தாரோ அவ்வண்ணமே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு "வாக்" உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக்
கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் "கோமா"(Coma) நிலைக்குக் கூட போகலாம். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

- உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக்
கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

- வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்க்கக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.

- HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள
வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சரசரியைக்
காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:

* 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது
* 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்
* 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு
* 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை
+ 10% க்கு மேல் - கட்டுப்பாடு மிக மோசம்

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:
- உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.
- உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

- உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.

- கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
- இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.
- வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.
எல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்!


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு