Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மனித குலம். Show all posts
Showing posts with label மனித குலம். Show all posts

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா- அலசல் தொடர் - 11 35

அதிரைநிருபர் பதிப்பகம் | September 06, 2012 | , , ,

அலசல் தொடர் பதினொன்று

கடந்த சில வாரங்களாக தோலுரித்துக்காட்டப்ப்பட்ட இந்த மனு நீதியின் அலசல் தொடர் அல்ல அவலத்தின் தொடர் முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது. பலமுறை கடலில் மூழ்கி முத்தெடுக்கும் மனநிலையில் இருக்கும் எங்களைப்போல எழுதுபவர்களுக்கு - இப்படிப் பட்ட இடர்தரும் தொடர்களை எழுதும்போது சாக்கடையில் இறங்கிய அவல அனுவபம்தான் இருக்கும். அந்த மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. ஆனாலும் ஒரு தீயை தீ என்று சுட்டிக்காட்டிய – பாம்பை பாம்பு என்று கவனப்படுத்திய மனதிருப்தியும் இருக்கிறது. 

இதுவரை எழுதப்பட்ட பத்து அத்தியாயங்களின் தொகுப்புரையை தரும் முன்பு,   தொடர்பான சில செய்திகளை இன்னும் இங்கு பகிர விரும்புகிறேன். 

கிருத்துவம் , இஸ்லாம், புத்தம் என எல்லா மதங்களும் மதவெறி பிடித்தவை. அதனால் தான் அந்த மதத்தினர் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்று ஆரிய சமாஜத்தை சேர்ந்த இருவர் அண்ணல்.அம்பேத்கரிடம் வாதம் புரிந்தனர்.

சிரித்துக் கொண்டே அம்பேத்கர் சொன்னார், நண்பர்களே, உங்கள் ஹிந்து மதத்திற்கு மதம் மாறி வருபவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்ற பிரச்சனையால் தான் உங்களால் மதமாற்றத்தில் ஈடுபட முடிவது இல்லை என்று கூறினாராம். இதுவே உண்மை. 

வரலாற்றுப் பின்னணியில் பார்ப்போமானால் இந்தியா முதலிய இதர நாடுகளில் அந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த மதங்கள் – அத்தகைய மதங்களின் சொந்த குறைபாடுகளால் –அவற்றைப் பின்பற்றிய மக்களுக்கே மனமாற்றம் ஏற்பட்டு – தூக்கி எறிந்துவிட்டு – நல் வழி காட்டும் என்று அவர்கள் நம்பிய பிற மதங்களை தழுவினர். இப்படி வெறுக்கப்பட்ட மதங்களில் தலையாய மதம் இந்து மதம்- தழுவப்பட்ட மதங்களில் தலையாய மதம் இஸ்லாம் மதம். இது வரலாறு. இப்படி மதமாற்றங்கள் ஏற்பட பெரும்பணி ஆற்றியுள்ள காரணங்களில் – கருத்துக்களில் – கொள்கைகளில் மனு நீதி தன் மதத்துக்கு  தானே மண்ணை அள்ளிப்போட்டவை  மிகப்பல. அத்துடன் அந்த மனுநீதி மற்றும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் இந்து மதத்துக்கு வைத்த கொள்ளியும் அதிகம். விட்டால் போதுமடா சாமி என்று விலகி ஓடியவர்கள் ஏராளம். 
  • 160 மில்லியன் மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கபட்டார்கள். 
  • தலித் என்ற முத்திரையும் – அரிஜன் என்ற அடையாளமும் வழங்கப்பட்டவர்கள்   கொடுமைப்படுத்தப்பட்டார்கள். 
  • கல்வி, கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டது
  • ஊரை விட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டர்கள்
  • கோயிலுக்குள்ளே நுழைவது தடுக்கப்பட்டது
  • செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புச் செய்திகளின் தலைப்புகளை ஒரு மேலோட்டமான ஆய்வு செய்தாலே என்ன நடந்தது நாட்டில் என்பது தெரியவரும்.
  • பூப்பறித்த காரணத்தால் ஒரு தலித் சிறுவன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான்
  • மூன்று நாட்களாக விசாரணை என்ற பெயரில் தலித் இளைஞர்கள் காவல்துறையால் சித்திரவதை. 
  • பீகாரில் தலித்துகள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலம்
  • கர்நூலில் காவல்துறை லாக்-அப்பில் தலித் மரணம்
  • அரியானாவில் ஏழு தலித்துகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்
  • தலித் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டனர்,
  • திண்ணியம் என்ற ஊரில் தலித்துகளின் வாயில் மலம் திணிக்கப்பட்டது 
என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன - இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் கனடாவின் வான்கோவர் நகரத்திலே நடைபெற்ற உலக தலித்துகள் மாநாட்டில் ( INTERNATIONAL CONFERENCE FOR DALITS) படிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம் இந்தியாவின் 90 சதவீதம் இருக்கும் தலித்துகளில்  95 சதவீதம் படிப்பறிவு அற்றவர்கள்; அத்துடன்  இந்திய தேசிய குற்றப் பதிவுகள் துறையின் ( INDIA’S NATIONAL CRIME RECORDS BUREAU ) புள்ளி விபரக் கணக்குப்படி கடந்த வருடம் 25,455  குற்றங்கள் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்டன. ஒரு மணிக்கு இரண்டு தலித்துகள் கை கால ஓடிக்கப்படுகின்றனர்; ஒரு நாளைக்கு மூன்று  தலித் பெண்கள் வீதம் உயர் சாதியினரால் கற்பழிக்கப்படுகின்றனர்; இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர், இரண்டு தலித்துகளின் வீடுகள் நொறுக்கப்படுகின்றன; அல்லது எரிக்கப்படுகின்றன. இந்த புள்ளி விபரங்கள் பாதி கதையைத்தான் சொல்கின்றன. சொல்ல மறந்த கதைகள்  ஏராளம். காரணம் உயர்சாதிக்கு பயந்துகொண்டு குற்றங்களை பதிவு செய்ய விரும்பாத மக்கள், மிரட்டும் காவல்துறை, கிராம பஞ்சாயத்து அமைப்புகள் பாதி கதையை விழுங்கி விடுகின்றன. 

காவல் துறையின் மீது அநியாயமாக அடித்ததாகவும், கொடுமைப்படுத்தியதாகவும், உயர்சாதியினரின் பக்கம் நின்று பாரபட்சம் காட்டியதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மறுத்ததாகவும்  பதிவு செய்யப்பட மொத்த வழக்குகள் 68,160 ஆகும். இவற்றுள் அறுபது சதவீத வழக்குகள் ஆதாரமில்லை என்று தள்ளப்பட்டன. இருபத்தாறு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 

இந்த அளவுக்கு   தலித்துகளின்  நிலை மோசமாகப்போக காரணம் என்ன என்பதை தலித்துகள்தான் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டுக்கே சொந்தமான பூர்வகுடிகள் அவர்களே. எங்கிருந்தோ ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்களுக்கு கொடுத்த இடம் இன்று தலித்துகளின் மடம் பிடுங்கப்பட்டு அடிமை வாழ்வு வாழும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. நாமெல்லாம் இந்துக்கள் என்று தலித்துக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் உயர்சாதியினர் அவர்களை ஏன் பந்தியிலே சேர்ப்பதில்லை என்பதை தலித்துகள் சிந்திக்கவேண்டும். மீனாட்சி புறத்தில் தலித்துகள் கூட்டமாக இஸ்லாத்தை தழுவியபோது ஓடிவந்து பல்லக்கு ஊர்வலம் நடத்தி பாலிஷ் போட்ட  மடாதிபதிகள் அதே மீனாட்சி புறத்தில் தீண்டாமை கொடுமை நடந்தபோது- தனிக்குவளை வைக்கப்பட்டபோது  ஏன்  கண்டிக்கவில்லை என்று  தலித்துகள் சிந்திக்க வேண்டும். தாங்கள் கல்லெடுத்து மண்ணெடுத்து கட்டிய கோயிலுக்குள் தங்களின் கால் படக்கூடாது அப்படிப் பட்டால் பரிகார பூஜை செய்யவேண்டும் என்கிற நிலையை தங்களுக்கு தந்தவர் யார் என்பதை எல்லாம்  அவர்கள்தான்  சிந்திக்க வேண்டும். 
  • பிறக்கும்போதே தங்களை கடவுள் சூத்திரனாக காலில் இருந்து படைத்தார் என்பதாகவும் – உலகம் புகழும் வள்ளுவர் போன்ற அறிஞர்களைக்கூட சாதியில் இழிவுபடுத்தியது என்றும் ,   
  • தங்கள் குலப்பெண்கள் தேவதாசிகளாகவும் பின்னர் தாசிகளாகவும்  ஆக்கப்பட்டனர் என்பதாகவும் 
  • பெயர் சூட்டுவதில் கூட இழிந்தபெயர் சூடப்பட்டன என்பதாகவும் 
  • அரசுப்பதவிகளில் அமர அருகதையற்றவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள் என்பதாகவும் சொல்லியது மனு நீதி என்றும் அத்துடன் 
  • பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டன என்பதையும்,
  • அரசாலும் உரிமைகள் மறுக்கப்பட்டன என்பதையும்,
  • அரசவைகளில், நீதிமன்றங்களில் தலித்துகளுக்கு இடம் தரக் கூடாது என்று தடுக்கப்பட்டதையும் 
  • தலித்களின் இனத்தாருக்கு தனிப்பட்ட கொடுமையான  பாரபட்சமான நீதி வழங்கப்பட்டதையும்  
  • ஒரே குற்றத்துக்கு இனம் பார்த்து நீதிவழங்கப் பட்டதையும் , 
  • மனு நீதியின் நோக்கமே நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என்று பாரபட்சம் கற்பிக்கவும், நான் கட்டளை இடுவதை சொல்வதை நீ கேட்கவேண்டுமென்ற அடிமைத்தனம் கற்பிப்பதுமே ஆகுமெனவும், 
  • அசிங்கத்தை தொட்டால் சோப்பு போட்டால் போதும் ஆனால் ஆட்கள் தொட்டால் குளிக்கவேண்டும் என்று கற்பிக்கிறது என்பதையும், 
  • மனுநீதி மனுஷனைப்பற்றி கவலைப்படவில்லை மாட்டைப்பற்றி கவலைப்படுகிறது என்பதையும்.
கடந்த பல அத்தியாயங்களில் ஆதாரங்களுடன் எடுத்துவைத்தோம். இவ்வளவையும் படித்த பிறகு தலித்துகளின் நிலை என்ன? மதியாதார் வாசல் மிதியாதே என்பதற்கொப்ப தங்களை- தங்கள் இனத்தை மதிக்காத சாஸ்திரங்கள் அடங்கிய சாக்கடையில் இன்னும் மூழ்கி இருந்து அவமானப்படப்போகிறார்களா அல்லது சமத்துவமும்-  சகோரத்துவமும் - மனிதாபிமானமும் தழைத்து வளர்ந்துள்ள மற்றொரு வாழ்வு முறையை தேடி தங்களின் மேல் சந்தனத்தை தடவப்போகிறார்களா?

  • புனை சுருட்டு குப்பை அன்றோ –பழம்
  • புராண வழக்கங்கள் யாவும் ? 
  • இனிமேலும் விட்டுவைக்காதே
  • எடு துடைப்பத்தை இப்போதே
  • தனி உலகை ஆண்டனை முன்னாள் 
  • தன் மானம் இழந்திடாதே இந்நாள .- என்றார் பாரதிதாசன் . அப்படி பழங்குப்பை  களைந்து புதுவாழ்வை நோக்கி தலித்துகள் வரவேண்டிய காலம் இனியாவது வரவேண்டும். 
நேரம் இருந்தால் நெஞ்சை உருக்கும் இந்த இணைப்புகளை பாருங்கள். 








அப்படி கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவாக- நிழலாக இஸலாம் அவர்களை அரவணைக்கக் காத்திருக்கிறது. இதை சரித்திரம் மெய்ப்பித்து இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன்று இஸ்லாத்தை நோக்கித்த் திரும்பி வருகிறது என்பது அண்மைக்கால சரித்திரமும் , புள்ளி விபரங்களும் தரும் சான்றுகளாகும். 

அண்மையில் அமெரிக்காவிலிருந்து ஒரு ஆராய்ச்சிக்குழு ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. குழு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஆப்ரிக்க மக்களுக்கிடையே கம்யூனிச கருத்துகள் பரவுகிறதா அல்லது முதலாளித்துவ கருத்துக்கள் பரவுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தருவதே. குழுவும் அறிக்கை தந்தது. அதில் சொல்லப்பட்டிருந்தது- ஆப்ரிக்க நாடுகளில் கம்யூனிசமும் பரவவில்லை; முதலாளித்துவமும் பரவவில்லை. மாறாக மிக வேகமாக  இஸ்லாம்தான்  பரவி வருகிறது என்பதே. அது உண்மையே. 



கடந்த ஜூலை நான் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவுக்கு அலுவலக வேலையாக சென்று இருந்தபோது கண்ணால் கண்டது அந்த ஜும்மா தினத்தன்று இருபத்தியோர் ஆண்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அங்கு ஜமாஅத்துடைய வேலைகள் – கூட்டமாகவோ – தனிப்பட்ட முறையிலோ சந்திப்பு ஆகிய பணிகள் நிறைவாக வும் நிறையவும்  நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் அந்த பள்ளியின் இமாமுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்தட வாரம் இஸ்லாத்தில் இணைய இருக்கும் இன்னும் இருபது பேர்களின் பட்டியலையும் காட்டினார். அந்தப் பட்டியலில் இணைய இருக்கும் சகோதரர்களின் பழைய பெயர்- சூட்டப்பட்டுள்ள புதிய பெயர் எல்லாம் இடம் பெற்று இருந்தன. அங்கு –அன்று இணைந்தவர்களுடன் நான் நடத்திய உரையாடல் – அவர்களின்  கதைகள் இன்னொரு ஆக்கத்தில் தனியாக தர இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ். அங்கோலா தலை நகரம் லுவான்டாவில் இருக்கும் ஒரே பள்ளி வசதிகள் குறைவாகவும்- பழைய பள்ளியாகவும் இருக்கிறது என்பதால் அரபு நாடுகளின் உதவியுடன் ஒரு நவீன வசதிகள் கொண்ட பள்ளி தலதொனா என்ற இடத்தில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 

பிரான்சு நாட்டின் தலை நகரமாம் பாரிஸ் நகரம் கேளிக்கைகளுக்கு உலகப்புகழ்பெற்றது . இன்று அங்கே தாவா பணிகள் சிறப்புற நடைபெற்று பலர் குறிப்பாக பெண்கள் இஸ்லாம் மார்க்கம் தழுவி வருகின்றனர். பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சாலைகளில் மக்கள் தொழுகை நடத்துவதைக்கண்ட பிரான்சு அரசு புதிய பள்ளிகளை நிர்மாணிக்க உத்தரவிட்டு இருக்கிறது. 

அரபு நாடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் வேலை செய்யும் பல்வேறு வெளிநாட்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தழுவுவது அன்றாட செய்தியாக இருக்கிறது. அவற்றுள் ஒன்று இதோ பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த இருநூறு பெண்கள் இஸ்லாத்தை தழுவிய செய்தி. 


அமெரிக்காவில் புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அங்கிருக்கும் சர்சுகள் பள்ளிவாசல்களாக பரிணாமம் பெற்று வருகின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. இதேபோல் உலகம் எங்கும் நடைபெறும் மாற்றங்களை தெரிந்துகொள்ள 



ஆகிய  வலைதளங்களில் சென்று பார்த்தால் பல வரலாறுகள் தெரியவருகின்றன. மேலும் RELIGIOUS TOLERANCE ORGANIZATION .COM என்கிற ஒரு பொதுவான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறுகிறது. 

Estimates of the total number of Muslims range from 0.7 to 1.8 billion worldwide and 1.1 to 7 million in the U.S.  3 We accept the best estimate as 1.57 billion, concluded by the Pew Forums. About 23% of all people on Earth follow Islam. The religion is currently in a period of rapid growth.

Christianity is currently the largest religion in the world. It is followed by about 33% of all people -- a percentage that has remained stable for decades. If current trends continue, Islam will become the most popular world religion sometime in the mid-21st century. 

இதன் சாராம்சம்  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் இஸ்லாம்தான் உலகின் பெரிய மதமாக புகழோச்சும்- கோலோச்சும் என்பதுதான். 

இவ்வளவையும் குறிப்பிடக்காரணம் மனுநீதியால் வதைக்கப்பட்ட தலித்துகள் தங்களின் நிலை உணர்ந்து சமத்துவம் தரும் இஸ்லாத்தின் பக்கம் திரளாக வரவேண்டுமேன்பதற்காகவே. ஏதோ நாங்கள் சார்ந்துள்ள மார்க்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக அல்ல. உலகம் திரளும் திசை நோக்கி  அனைவரும் திரள           வேண்டுமென்றே. இந்தியாவைத் தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் பிராமணீயம் போன்ற ஈயங்கள் காய்ச்சி ஊற்றப்படுவதில்லை. நாகரிகமும் , பொருளாதாரமும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களே மனம் மாறி இஸ்லாத்தை தழுவ வரும்போது ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கிடக்கும் தலித் சமுதாயம் இஸ்லாத்துடன் கை கோர்ப்பதில் என்ன தடை இருக்க முடியும்? குறைந்த பட்சம் பிராமணர்கள் மற்றும் உயர்ந்த சாதியினரின் எடுப்பார் கைப்பிள்ளையாக , அவர்கள் எறியும் அம்பாக இல்லாமல் இஸ்லாமியர்களுடன் சரிநிகர் சமத்துவ வாழ்வில் கைகோர்த்து வாழ தலித்துகளை அழைக்கிறோம். 

எந்த இஸ்லாமியர், தலித்துகளுடைய உரிமைகளை சுட்டிக்காட்டி சமஉரிமை உணர்வை தலித்துகளுக்கு ஊட்டி வருகிறார்களோ அவர்களை நோக்கி கல் ஏறிய உயர் சாதியினரால் ஏவிவிடப்பட்ட கைகள் தலித்துகள் உடைய கைகள் என்பதை குஜராத் முதலிய கலவரங்களின் வரலாறு எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இஸ்லாமிய மார்க்கம் இறைவனுடைய மார்க்கம். நன்மையை ஏவி தீமையை விலக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கும் மார்க்கம். அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களை நோக்கி கல் எறியும் கைகளைக் கொண்ட தலித்துகளையும் – அரிவாள் எடுத்த அவர்களையும் தங்களின் மார்க்கத்தில் சகோதரர்களாக  இணைத்துக் கொள்ளும் முயற்சியில்  - இஸ்லாத்தை எத்தி வைக்கும் முயற்சியில் தொடர்ந்து பணியாற்றுவோம்.  இறைவன் படைத்த மனிதனை மனிதனாகப் பார்க்கும் மாண்பு இஸ்லாத்துக்குத் தவிர வேறு எவர்க்கும் இல்லை.

இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு படித்தோமானால் காரணங்களாக புலப்படுபவை  
  • பல மகான்கள் செய்த தாவாப்பணி , 
  • அன்றைய சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்  மற்றும் 
  • இஸ்லாமியர்களாக வாழ்ந்தவர்களின் நெறிமுறை தவறாத உதாரண வாழ்வு.
ஆகியவைகள்தான் பெரும் காரணங்களாக இருந்து இருக்கின்றன. இவற்றால் ஈர்க்கப்பட்ட ஏனையோர் கூட்டம் கூட்டமாக – ஊர் ஊராக திரண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். முஸ்லிம்கள்  பெருமளவில் வாழும் அதிரையோ, காயலோ, கீழக்கரையோ, கூத்தா நல்லூரோ , நாகூரோ, பாண்டி, காரைக்காலோ, பரங்கிப்பேட்டையோ, கடைய நல்லூரோ  அரபு தேசத்திலிருந்து வந்தவர்களால் நிரப்பபட்டதல்ல. அன்றைய நாட்களில் திரளாக இஸ்லாத்தில் இணைந்தவர்களின்  வம்சா வழிகளே. இதில் என் தொய்வு ஏற்பட்டது? ஏன் அந்த போக்கு தொடரவில்லை? காரணம் மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களில் இன்றைக்கு   சமுதாயத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள் என்கிற காரணம் மட்டுமே அப்படியே இருக்கிறது. தாவாப்பணி செய்த மகான்கள் மறைந்துவிட்டனர். பின்பற்றத்தக்க  உதாரண புருஷர்களை வலைபோட்டு தேடவேண்டி இருக்கிறது. அவர்கள் இயக்க சேற்றில் சிக்கி நம்மையும் சீரழித்துக்கொண்டு இருககிறார்கள். 

மாற்று மதத்தினர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், நாணயம், நம்பிக்கை, ஈகை மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்புகளையும்  கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மவரில் ஒருவராகி நமது மார்க்கம்  தழுவினார்கள். இன்று இயக்கங்களின் தோற்றத்தால்  நமக்குள்ளேயே பிளவுகள் வந்துவிட்டன. முதலில் இந்த பிளவுகளை களைய வேண்டும். அதன்பின் ஒரு உத்வேகத்துடன் தத்தளித்துக்கொண்டிருக்கும் தலித்துகளின் கிராம குடிசைகளை நோக்கி நாம் இணைந்து சென்று அழைப்புப்பணியில் ஈடுபடவேண்டும். அதற்குமுன் அவர்களை அழைப்பதற்கு தகுதி உடையவர்களாக நம்மை ஒற்றுமைப் படுத்தி, நமக்குள்ளே சகோதரத்துவம் தழைத்துக் கொள்ளச்செய்யவேண்டும். இதுவே இன்றைக்கு இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களின் தலையாய கடமையாக இருக்கும்; இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் இறைவன் நமக்கு சூட்டிய நன்மையான சமுதாயம் என்கிற பெயருக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். 

இதுபற்றி இன்னும் கொஞ்சம் இன்ஷா அல்லாஹ்.  அடுத்த அத்தியாயத்தோடு  நிறைவுறலாம். 

அடுத்து வர இருப்பது மகாபாரதமா? மகாபாதகமா?

இபுராஹீம் அன்சாரி

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 10 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , ,

அலசல் தொடர் : பத்து.
இந்த தொடரில் இந்த வாரம் அரசர்கள் வாரம்.
முறை செய்து காப்பாற்றும் மன்னர்கள் மக்களை எப்படி நடத்த வேண்டுமென்று மனுநீதி வரையறுக்கின்றது என்பதை அலசும் முன்பு சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியது - மனுநீதி வரையறுக்கும் நான்கு வகை இனத்தில் ஷத்திரிய இனத்தில் பிறந்தவர்தான் அரசராக வரவேண்டுமென்பதாகும். இவைகள் மனு நீதியின் ஏழாம் மற்றும் எட்டாம் அத்தியாயங்களில்  சொல்லப்படுகின்றன.

2. A Kshatriya, who has received according to the rule the sacrament prescribed by the Veda must duly protect this whole world.

நாம் இதுவரை பார்த்ததுபோல் மனித இனத்தை பாகுபாடுபடுத்துபவர்களின்  ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கும் மனு சாத்திரம் அரச பதவி போன்ற உயர் பதவிகள் வகிப்போர் ,  ஆள்வோர் கைக்கொள்ளவேண்டிய வழிமுறைகளை வகை கெட்ட வகைகளில் வரையறுப்பது இந்த நாட்டை பிடித்த துரதிஷ்டம். உலகின் பல்வேறு நாடுகள் தனது அரசியல் அமைப்பு சட்டத்தை, தனது மக்களை பாகுபடுத்தாமல் சமத்துவ முறையில் வைத்திருக்கின்றன. சில நாடுகள் அயல் நாடுகளில் இருந்து நெடுங்காலம் முன்பு வந்து தங்கள் நாட்டுக்கு புலம் பெயர்ந்தோருக்கும்  குடியுரிமை வழங்கி சம உரிமையும்  கொடுக்கின்றன. ஆனால் மனு நீதிக்கு இதெல்லாம் தலை பொறுக்காதே. இந்த மண்ணில் பிறந்தவர்களுக்குள்ளேயே பேதம் கற்ப்பிப்பதற்கு கச்சை கட்டுகிறதே.

ஒரு அரசு அலுவலகத்தில் அல்லது ஏதோ ஒரு தனிப்பட்ட துறையில் தனிப்பட்டவர்களால் பாகுபாடுகள் கட்டப்படுமென்றால் அந்தச் செயலை ஓரளவு நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளும் சட்டத்திலேயே பாகுபாடு வைத்து ஒரு சட்டம் இருந்தால் அதை தீவைத்து கொளுத்தவே வேண்டும். இப்படிக் கொளுத்தப்பட முழுத்தகுதி படைத்தது மனுநீதி சட்டம்.

அரசர் என்பவர்  சாதி இனப்பாகுபாடுகளை தூக்கி நிலை நிறுத்தி காப்பாற்றுவராக இருக்க வேண்டும் என்று மனு கூறுகிறது.  இது  அரசர்களாக ஆட்சி செய்பவர்களுடைய முதலாவது தகுதியாகும்.  ஒரு அரசரின் தலையாய  கடமை தனது குடிமக்களை காப்பதோ, நாட்டை நல்லபடி ஆட்சி செய்வதோ, வளப்படுத்துவதோ, முன்னேற்றுவதோ , அல்ல. மாறாக சாதி என்கிற நரகலை அந்த அரசர் அல்லது அரசு  தனது தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்கிறது. அத்துடன் அந்தந்த சாதி மற்றும் இனத்துக்குத் தகுந்த பாகுபாடான பொறுப்புகளை தனது மக்களுக்குத் தரவேண்டும் என்பதும் மனு தரும் விதி. பார்த்தீர்களா? இது விளங்குமா? இதைத்தான் இப்படி சொல்கிறது

35. The king has been created to be the protector of the castes (varnas) and orders who, all according to their rank, discharge their several duties.

மேலும் அரசர்களின் தகுதிகளை பட்டியல் இடும்போது எதிரிகளுக்கு பணியக்கூடாது, புறமுதுகிடக்கூடாது என்பவனற்றோடு பிராமணர்களை மதிப்புமிக்க இடத்தில் வைத்து தேனும் திணை மாவும் தரத் தயங்கக்கூடாது என்பதே கூடுதல் தகுதியாகும். இதோ

87-88. A king who, while he protects his people, is defied by foes, be they equal in strength, or stronger, or weaker, must not shrink from battle, remembering the duty of Kshatriyas: Not to turn back in battle, to protect the people, to honor the Brahmins, are the best means for a king to secure happiness.

ஒரு அரசர் மற்றொரு நாட்டுடன் போர்செய்து வெற்றி பெற்றால் தனது கடவுளை வணங்குவதோடு மட்டுமின்றி தனது நாட்டின் பிராமணர்களை கவுரவப்படுத்த வேண்டும்; அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் வாயில் விரலை வைத்து சூப்பிக்கொண்டு இருக்க வேண்டும். மரம வைத்து தண்ணீர் ஊற்றுபவன் ஒருத்தன் அதன் பலனை அனுபவிப்பவன் இன்னொருத்தன். அந்த இன்னொருத்தன் எவனுமல்ல பிராமணனே. அவனவன் உயிரை பணயம் வைத்து சண்டை போடுவானாம் அதில் வெற்றியும்  பெறுவானாம். ஆனால் பிராமணனை கவுரவப்படுத்த வேண்டுமாம். இதோ !

201. When he has gained victory, let him duly worship the gods and honor righteous Brahmins; let him grant exemptions; and let him cause promises of safety to be proclaimed [to his opponents].

அதுமட்டுமல்ல நீதிக்குழு என்கிற கட்டுச்சோறு கட்டினால் அதில் கட்டாயம் ஒரு பிராமணப்பூனையும் அல்லது ஒரு பெருச்சாளியையும் வைத்துக் கட்டவேண்டும் என்கிறது மனுவின்  சட்டம். வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைத்தால் அதில் கண்டிப்பாக பிராமணர்கள் இடம் பெற்று இருக்க வேண்டுமாம். எந்த சூழ்நிலையிலும் ஒரு தாழ்த்தப்பட்டவன் நீதிபதிகளுள் ஒருவனாக ஆகமுடியாது.

A king, desirous of investigating law cases, must enter his court of justice, preserving a dignified demeanor, together with Brahmins and with experienced councilors.

அரசர்கள் நீதி வழங்குவதிலும் , தண்டனை தருவதிலும் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் மனு நீதியால் வரையறுக்கப்படுபவை அப்பட்டமான பாகுபாடுகள். மாமியார் ஆக்கினால் மட்டன் கறி; மருமகள் ஆக்கினால் மீன் கறி. ( மண்சட்டி பொன் சட்டியையே எவ்வளவு நாள் சொல்வது) என்று ஒரே வகையான குற்றத்துக்கு இனத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கச் சொல்கிறது மனு நீதி.  இவைகளைப் படிக்கும் ரோஷமுள்ள எவருக்கும் இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு குழப்பமான வழக்கு அரசரின் முன்  வந்தால் அதில் மாறுபாடுகளான சாட்சிகள் இருக்குமானால் ஒரு பிராமணன் சொல்வதையே உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிராமணன் மட்டுமே மனிதருக்குப் பிறந்தவன் மற்றவர்கள் மாட்டுக்குப் பிறந்தவர்கள் இல்லையா?

 Upon hearing contradictory testimony from witnesses, the king is advised at Manu 8.73 to rely on what the majority of witnesses say, or else the testimony of witnesses of superior qualities; if discrepancy persists, the testimony of Brahmins is to be relied upon.[

 ஒரு தாழ்ந்த சாதிக்காரன் மற்ற மூன்று உயர் சாதிக்காரர்களை தூஷனையாக அவமானித்துப் பேசினால் அந்த தாழ்ந்த சாதிக்காரனது உதடுகளை  வெட்டிவிட அரசு  உத்தரவிடவேண்டும்.

279. With whatever lip a man of a low caste does hurt to a man of the three highest castes, even that lip shall be cut off.

ஒரு உயர்ந்த சாதிக்காரனோடு அதே இடத்தில் ஒரு தாழ்ந்த சாதிக்காரன் உட்கார முயற்சித்தால் தாழ்ந்த சாதிக்காரனுக்கு இடுப்பில் சூடு போடவேண்டும் அல்லது அவன் உட்காரப்பயன்படுத்தும் உடலின் உறுப்பை ( இடக்கரடக்கல்) வெட்டிவிட வேண்டும்.

281. A low-caste man who tries to place himself on the same seat with a man of a high caste shall be branded on his hip and be banished, or the king shall cause his buttock to be gashed.

அடங்கா கோபத்துடன் உயர் சாதியினர் மேல் காரி உமிழும் ஒருவனின் இரு உதடுகளும் வெட்டப்படவேண்டும்; சிறு நீர் கழித்தால் ஆண் குறி வெட்டப்படவேண்டும்; உடலில் இருந்து துர்நாற்றம் வீசும் காற்றை ( இதற்குமேல் நாகரிகமாக எனக்கு மொழி பெயர்க்க தெரியவில்ல – அது அப்படி நாறுகிறது) அவன் மேல்  விட்டால் விட்டவனின் மலம கழிக்கும் மூலத்தை வெட்ட வேண்டும்.

282. If out of arrogance he spits on a superior, the king shall cause both his lips to be cut off; if he urinates on him, the penis; if he breaks wind against him, the anus.

ஒரு பிராமணருக்கு சொந்தமான அல்லது அவனது பாதுகாப்பில் இருக்கும் தானமாக வழங்கப்பட்ட பசுவை திருடும் தாழ்த்தப்பட்டவனின் இரண்டு கால்களின் பாதங்களும் அரைவாசி வெட்டப்படவேண்டும்.

325.  For stealing cows belonging to Brahmins, piercing the nostrils of a barren cow, and for stealing other cattle belonging to Brahmins, the offender shall forthwith lose half his feet.

பிற பெண்களை பிராமணர் மட்டும் தொட்டுக்கலாம்; பட்டுக்கலாம்; இட்டுக்கலாம்; எடுத்துக்கலாம். மற்றவர்கள் தொட்டாலும், பட்டாலும், இட்டாலும், எடுத்தாலும் மரண தண்டனை அரசால் வழங்கப்படவேண்டும்.

359. A man who is not a Brahmin ought to suffer death for adultery (samgrahana; for the wives of all the four castes must always be carefully guarded.

கீழே உள்ள 361, 362  ஆகிய இரண்டு மனுவின் சரத்துக்களை மொழி பெயர்க்க எனக்கு உள்ளம் கூசுகிறது . தெரிந்தவர்கள் படித்துக்கொள்ளுங்கள் அல்லது வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள். காரணம் கட்டிய மனைவியை அடுத்தவருக்கு தானே அனுப்பிக்கொடுப்பதற்கான மனு நீதி தரும் அனுமதி அது.
.
361. Let no man converse with the wives of others after he has been forbidden to do so; but he who converses with them in spite of a prohibition shall be fined one suvarna.

362. This rule does not apply to the wives of actors and singers, nor of those who live on the intrigues of their own wives; for such men send their wives to others or, concealing themselves, allow them to hold criminal intercourse.

இதற்குமேல் சொல்ல வேறு என்ன இருக்கிறது? இந்த பாவிகள் படைத்துவைத்த  சாத்திரங்கள் பற்றி?
374  முதல் 379 வரை குறிப்பிட்டுள்ள அரசரும் நீதித்துறையும்  கடைப்பிடிக்கவேண்டுமென்ற வரைமுறைகளை ஏற்கனவே வேறு சில அத்தியாங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அது ஒன்றுமில்லை.  நொங்கு திருடியவன்  ஓடிவிட்டான்  நோண்டித்தின்றவன் மாட்டிக்கிட்டான் என்பதே. அதாவது உயர் சாதிப் பெண்ணுடன் உறவு கொள்ளும் தாழ்ந்த சாதி ஆண்மகனின் தலை கொய்யப்படவேண்டும் ஆனால் ஒரு தாழ்ந்த சாதி பெண்ணுடன் பலவந்தமாக உறவுகொள்ளும் உயர் சாதி ஆண்களுக்கு பணம் அபராதம் – அதுவும் குலத்துக்கு ஏற்றபடி விதித்தால் போதும் என்பதே.

374. A Shudra who has intercourse with a woman of a twice-born caste (varna), guarded or unguarded, shall be punished in the following manner: if she was unguarded, he loses the offending part and all his property; if she was guarded, everything even his life.

375. For intercourse with a guarded Brahmin, a Vaisya shall forfeit all his property after imprisonment for a year; a Kshatriya shall be fined one thousand panas and be shaved with the urine of an ass.
376. If a Vaisya or a Kshatriya has connection with an unguarded Brahmin, let the king fine the Vaisya five hundred panas and the Kshatriya one thousand.

377. But even these two, if they offend with a Brahmini not only guarded but the wife of an eminent man, shall be punished like a Shudra or be burnt in a fire of dry grass

378. A Brahmin who carnally knows a guarded Brahmini against her will shall be fined one thousand panas; but he shall be made to pay five hundred if he had connection with a willing one.

379. Tonsure of the head is ordained for a Brahmin instead of capital punishment; but men of other castes shall suffer capital punishment.

இறுதியாக கீழ்க்கண்ட இரண்டு மனுநீதியின் ஷரத்துக்களை சொல்லிவிட்டு குளிக்கப் போகிறேன். இவைகளை தொட்ட நாற்றம் நீங்க இருமுறை சோப்புப் போட்டு குளிக்கப் போகிறேன்.

அரசர்கள் ஒரு காலமும் பிராமணர்களை அவர்கள் எந்த குற்றம் செய்து இருந்தாலும் கொலை தண்டனைக்கு உட்படுத்தக் கூடாது. அவ்விதம் கொடும குற்றம் செய்த பிராமணர்களை குற்றத்திலிருந்து விடுவித்து ,அவரது சொத்துக்களை திருப்பிக்கொடுத்து , உடம்பில் எவ்வித கீறல் காயம் இல்லாமல் (பல்லக்கில் ஏற்றியா)  அனுப்பி வைக்க வேண்டும். இந்த உலகில் பிராமணர்களை கொலை தண்டனை விதித்து தண்டிப்பதை விட பெரிய குற்றம் எதுவுமில்லை.  ஒரு அரசர், ஒரு பிராமணரை கொல்வதாக மனத்தால் கூட  நினைக்க கூடாது.
 
380. Let the king never slay a Brahmin, though the Brahmin has committed all possible crimes; let the king banish such an offender, leaving all his property to him and his body unhurt.

381. No greater crime is known on earth than slaying a Brahmin; a king, therefore, must not even conceive in his mind the thought of killing a Brahmin.

இதுதான் மனுநீதி. இதற்குத்தான் பரிவட்டம் கட்டி,  ஆலவட்டம் சுற்றி, பன்னீர் தெளித்து , போற்றி பாடிக்கொண்டிருக்கின்றனர் புத்தியற்றோர். டாக்டர் அம்பேத்காரால்  தீமூட்டி எரிக்கப்பட்ட  மனு நீதி , பெரியாரால் காரித்துப்பப்பட்ட மனு நீதி  இன்றும் வழிபாட்டுத்தலங்களில் விளங்காத மொழிகளில் முழங்கப்படுகிறது. அவைகள் தம்மை இழிவு படுத்தும் வாசகங்கள் என்று கூட அறியாத வகையற்றோர், கை கட்டி வாய்பொத்தி , காதால் கேட்டு, காசுகளும் போட்டு காலம் கடத்தி வருகின்றனர். இவைகளை எடுத்துச் சொல்லும் இயக்கம் இன்னும் தேவை- இந்த வகையற்றோரை நல்ல வழிகாட்டி அழைத்துவர உழைப்புத்தேவை உடனே.

இன்னும் நிறுத்தவில்லை நான்...
இபுராஹீம் அன்சாரி

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் : 9 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2012 | , , ,

அலசல் தொடர் : ஒன்பது.
கடந்த அத்தியாயத்தில் , 


//அடுத்த  அத்தியாயத்தில் உலக ஆசைகளை துறக்க நினைக்கும் துறவிகளுக்கு  மனு நீதி தனது ஆறாம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். // என்று             முடித்திருந்தேன். எனவே இந்த வாரம் “சாமியார்கள் வாரம்.

சாமியார்களைப் பற்றி பார்க்கும் முன்பு கொஞ்சம் சண்டாளர்களைப் பற்றிப் பார்க்கலாம். சாமியார்களும் சண்டாளர்கள் போல்தானே நடந்து கொள்கிறார்கள் என்று உங்களில் சிலர் புருவம் சுருக்குவது தெரிகிறது. ஆனால் சாதாரண மொழியில் சண்டாளன் என்பதும்,  சண்டாளப் பயல் என்பதும் மனு நீதியின் பார்வையில் சண்டாளன் என்பதும் வேறு வேறு. ஒரு துரோகம் இழைத்தவனை சாதாரணமாக சண்டாளன் என்போம். ஆனால் மனுநீதி, சண்டாளனுக்கு ஒரு தனிப்பட்ட  குவாளிபிகேஷனை கொடுத்து இருக்கிறது. அதாவது ஒரு தாழ்த்தப்பட்ட சூத்திரன், உயர்வகுப்பு பிராமணப் பெண்ணுடன் உடல் ரீதியில் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் அவனுக்குப் பெயர் சண்டாளன். அதே தொடர்பை , ஒரு உயர்சாதி பிராமணன், தாழ்த்தப்பட்ட சூத்திரப் பெண்ணுடன் வைத்து இருந்தால் அவனுக்குப் பெயர் நிஷாத்.

இந்த நிஷாத் என்பவனும், சண்டாளன் என்பவனும் அடிப்படையில் பிறன்மனை நோக்குவது என்கிற ஒரே ரீதியான தவறை செய்திருந்தாலும் நிஷாத் என்பவன் பிராமணனாகப் பிறந்ததால் மச்சமுள்ள கொடுத்துவைத்தவன். தண்டனைகளில் இருந்து விடுபடுகிறான். ஆனால் உயர்சாதியைத் தொட்ட சண்டாளன் என்கிற பாவி மகன் படும் பாட்டைப் பாருங்கள்.

1. உயர்சாதி பெண்ணுடன் உடல்ரீதியான தொடர்புவைத்தவன் ஊருக்கு நடுவே வாழக்கூடாது. ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாகவோ , சுடுகாட்டிலோ, மலைஅடிவாரங்களிலோ, வனங்களிலோதான் வாழவேண்டும்.

2.  சண்டாளர்கள் தங்களுடன் குதிரை, பசு ஆகிய மிருகங்களை வைத்துக்கொள்ளக் கூடாது. வேண்டுமானால் நாய்களையோ, கழுதைகளையோ வைத்துக்கொள்ளலாம் என்ற சலுகை இருக்கிறது.

3. உடம்பை ஒரு போர்வையால்தான் போர்த்திக்கொள்ளவேண்டும் . மற்ற ஆடைகள் அணியக்கூடாது.

4. உடைந்த சட்டிகளில்தான் உணவு உண்ணவேண்டும். உடையாத பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது.

5. ஆபரணமாக அணிந்து கொள்ள இரும்பு, தகரம் ஆகியவைகளைத்தான் உபயோகிக்கவேண்டும். தங்க ஆபரணம் அணியக்கூடாது.

6. ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிக்கக்கூடாது. இடம்விட்டு இடம் பெயர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

7. இரவு நேரத்தில் நகரங்களுக்குள் நுழையக்கூடாது. தன்னை சண்டாளன் என்று அடையாளப்படுத்தும் அடையாளம்  (ஐ. டி.)  அணிந்து , அரசரின் அனுமதியுடன் ஊருக்குள் நுழைந்து செத்த பிணங்களை தூக்கிச்செல்லலாம்.

8. உயர்சாதி வகுப்பினரிடம் பேசக்கூடாது. திருமணம் போன்றவற்றில் பங்க்கெடுக்ககூடாது. பசிக்கு உணவுகேட்டு பிச்சை எடுத்தாலும் உயர்சாதி வகுப்பினர் வீட்டில் வேலை செய்யும் சூத்திரர்களிடம்தான் கேட்டு   வாங்க வேண்டும்.

இப்படி சூத்திரகளை பாகுபாடு படுத்திய மனு தர்மத்தின் ஆசிரியன்தான் மாபெரும் சண்டாளன்; சண்டாளனுக்கெல்லாம் சண்டாளன். இழைக்கும் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் கூட இனப் பாகுபாடு வைத்தவன் சண்டாளப்பாவி அல்லாமல் வேறென்ன?

மனுநீதி தர்மத்தின்படி உயர்சாதிவகுப்பினன் தனது வாழ்வின் மூன்றாம்  படியில் காடு நோக்கிப் போய் தவம் இருந்து அதன்பின் நாலாம் படியாக துறவறம் மேற்கொள்ளவேண்டும். இப்படி தவ வாழ்வு வாழ்பவர்களுக்கும் , துறவறம் கொள்பவர்களுக்கும் சில ஒழுக்க முறைகளை மனு நீதி விதித்து இருக்கிறது. 

கீழே காணலாம்.  CHAPTER: 6.

33. But having thus passed the third part of a man's natural term of life in the forest, he may live as an ascetic during the fourth part of his existence, after abandoning all attachments to worldly objects.

38. Having performed the Ishti, sacred to the Lord of creatures (Prajapati), where he gives all his property as the sacrificial fee, having reposted the sacred fires in himself, a Brahmin may depart from his house as an ascetic.

41. Departing from his house fully provided with the means of purification (Pavitra), let him wander about absolutely silent, caring nothing for enjoyments that may be offered to him.

42. Let him always wander alone, without any companion, in order to attain final liberation, fully understanding that the solitary man, who neither forsakes nor is forsaken, gains his end.

44. A piece of broken pottery instead of an alms-bowl, the roots of trees for a dwelling, coarse worn-out garment, life in solitude, and indifference towards everything – these are the marks of one who has attained liberation.

45. Let him not desire to die; let him not desire to live; let him wait for his appointed time as a servant waits for the payment of his wages.

47. Let him patiently bear hard words; let him not insult anybody; and let him not become anybody's enemy for the sake of this perishable body

48. Against an angry man let him not in return show anger; let him bless when he is cursed; and let him not utter speech devoid of truth . . . .

50. Let him seek to obtain alms without explaining prodigies and omens, without using his skill in astrology and palmistry, without giving advice, and without offering exposition of the Shastras.

52. His hair, nails, and beard being clipped, carrying a broken pot, a staff, and a water-pot, let him continually wander about, controlling himself and not hurting any creature.

55. Let him go to beg once a day; let him not be eager to obtain a large quantity of alms. An ascetic who eagerly seeks alms attaches himself also to sensual enjoyments.

இந்த விதிகளின் சுருக்கமான கருத்துக்களின்படி   காடு நோக்கி தவமிருக்க சென்று , பின் துறவறம் மேற்கொண்டு சாமியாராக, முனிவராக, யோகியாகப் போகிறவர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை உடைந்த சட்டி கொண்டு பிச்சைதான்  எடுக்கவேண்டும்; கோபமாக பேசக்கூடாது; பழிவாங்க எண்ணக்கூடாது; அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல தன்னை இகழ்வாரைப் பொறுத்தல் வேண்டும்; குறி சொல்லக்கூடாது ; தனது தேவைகளுக்காக கைரேகை, ஜோசியம் ஆகியன பார்க்கக்கூடாது; வாழ்வையும் சாவையும் ஒன்றாக கருதி இறப்புக்குக் காத்து இருக்க வேண்டும்; துணைக்கு யாருமின்றி தனிமையில் வாழவேண்டும்; வீட்டை விட்டு சன்யாசம் பூண்டு வரும்போது தன்னுடன் தனக்காக ஒரு உடைத்த சட்டி, ஒரு தண்ணீர் குடுவை ஆகியன தவிர வேறு எதையும் கொண்டு செல்லக்கூடாது; மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை துறந்துவிட்டு செல்லவேண்டும்.  தனது புலன்களை புலன் ஆசைகளை விட்டும் அடக்கிக்கொள்ளவேண்டும்; தினமும் காலையில் பச்சைத் தண்ணீரில் அல்லது நதிகளில் குளித்துக்கொள்ளவேண்டும்.

மனுநீதியின் இந்த வரைமுறையை போலவே தமிழ்த்துறவியான பட்டினத்தார் இப்படி வரையறுக்கிறார்.

பேய்போல் திரிந்து  ,
பிணம்போல் கிடந்தது
இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி ,
நரிபோல் உழன்று
நன் மங்கையரை
தாய்போல் கருதி
தமர்போல் அனைவருக்கும்
தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பார் கண்டீர்
உண்மை ஞனம்தெரிந்தவரே ! – என்பதுதான் துறவிகளுக்கான பட்டினத்தார் பாடல். 

இந்த மனு நீதியின் வரைமுறைகளையும், பட்டினத்தார் பாடலையும் ‘  பற்றுக பற்றற்றான் பற்றினை என்கிற திருக்குறள் அறிவுரையையும்  நடை முறையில் நாம் கண்ணால் காண்பனவற்றையும் ஒப்பிட்டு நோக்கும்போது மனசாட்சி உள்ளவர்கள்  நாம் கண்ட அல்லது காணும் சாமியார்கள், துறவிகள் இந்த வரைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதற்கு பதில் சொல்லட்டும்.

முதலாவதாக உடைந்த மண்சட்டியில் சாப்பிடும் சாமியார்களை காட்டுங்கள். அடுத்ததாக விதவைகளான ‘ராதாக்களையாவது துணைக்கு வைத்துக்கொள்ளாத சாமியார்களை தேடிப்பிடியுங்கள். குறி சொல்லாத, ஜோசியம் சொல்லாத, வாக்கு சொல்லாத சாமியார்களை தேடி சல்லடை போட்டு சலித்துப் பாருங்கள். தினமும் குளிக்கிற- நாற்றம் இல்லாத ஒரு சாமியாரை அடையாளம் காட்டுங்கள். புலன் ஆசைகளை உண்மையிலேயே துறந்த சாமியார்களை புலனறிந்து காட்டுங்கள்.

பல ஆண்டுகளாகவே இந்தியா அரசியலில் பவர் புரோக்கர்களாக செயல்படும் சாமியார்களைக் கண்டு வருகிறோம். அவர்களில் அக்கிராசனரும், ஆபத்தானவருமான சந்திரா சாமி என்பவர் ஒரு பன்னாட்டு அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தது நாம் அறிவோம். சாமியார் சதி அரசியலில், வன்முறை அதிகாரத்தில் ஈடுபட சாஸ்திரங்கள் அனுமதிக்கிறதா?

திருச்சியிலே ஒரு சாமி ஆஸ்ரமம் நடத்தி அர்த்தசாம பூஜையில் கன்னிப்பெண்களை கற்பழித்த குற்றத்துக்காகவும், கொன்று புதைத்த கொடும் செயலுக்காகவும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அண்மையில்தான் மண்டையைப் போட்டார். இவர் லிங்கம் எடுத்த (அ) சிங்கம்.

மாலேகான் என்ற ஊரில் வெடிகுண்டு வைத்த குற்ற சதிக்காக ஒரு சாமியார் சிறையில் உள்ளார்.

காஞ்சியிலே பெரிய, சிறிய சாமிகள் இருவரும் கொலைக் குற்றத்துக்காக தண்டனையை எதிர் நோக்கி இருககிறார்கள். அத்துடன் ஜெகத்குரு என்று போற்றப்படும் பெரிய சாமியார் சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சங்கர ராமன் கொலை வழக்குக்கு முன்பாக திடீரென்று தலைமறைவு ஆகிவிட்டார். நேப்பாளத்தில் பெண்களுடன் இருந்ததாகவும், மைசூரில் காட்டு பங்களாவில் உல்லாசமாக இருந்ததாகவும் செய்திகள் வந்தன. குடியரசுத்தலைவராக இருந்த இராஜாமடம் வெங்கடராமன்வரை தலையிட்டு அவரைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்தது காவல்துறை. திருவையாறு காவிரியில் கால் அலம்பிவிட்டு அவர் காஞ்சிக்குப் போனார் . அங்கே அவர் காலில் விழ கூட்டம் கால்கடுக்க கியூவில் நின்றது. 

நடிகையுடனும், நம்பியவளுடனும் படுக்கையை பகிர்ந்த (நி)நெத்தியடி சாமியார் தொலைக்காட்சிகளில் ரஞ்சிதமாய் சிரிப்பாய் சிரிக்கிறார். பல மாநிலங்களிலும் அமெரிக்காவிலும் அவர்மேல் வழக்குகள்.

மேல் மருவத்தூரில் இனி கட்டிடம் கட்ட இடம் இல்லை எனும் அளவு ஒரு சாமியார்  உலக கோடீஸ்வரனாக வாழ்கிறார்.

அண்மையில் மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா  வைத்திருந்த பணக்கட்டுகளை அவர் இறந்த நாள் முதல் எண்ணி வருகிறார்கள். இன்னும் முடியவில்லை. இவர் வைத்திருந்த தங்கத்தட்டுகளை எடை போட்ட தராசு அறுந்து விழுந்துவிட்டதாம். சாய்பாபா ஆசிரமத்திலிருந்து திருடப்பட்ட பணம் மட்டுமே முப்பத்துநான்கு கோடி என்று பிடிபட்டு இருக்கிறது என்றால் மொத்தப்பணம் எவ்வளவு இருக்குமென்று கணக்குப்போட்டு பாருங்கள். கால்குலேட்டர் கதறாமல்  இருந்தால் உங்கள் அதிஷ்டம்.

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் சுவாமி அமிர்தானந்தா  சைதன்யா என்று கூறப்பட்ட சந்தோஷ் மாதவன் என்கிற சாமியார் பலகோடி ரூபாய் மோசடி, பல பெண்களை கற்பழித்தது மற்றும் ஏமாற்றிய வழக்கில் ஸி. பி. ஐ. யால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். ( http://cbi-nic.in/rnotice/A-177-2-2003 htm).

புதுச்சேரி அருகில் மொரடாண்டி கோயில் சாமியார் இரவில் பூஜை செய்வதாக கூறி பெண்களை வரவழைத்து சிமிஷம் செய்த செய்திகள் வெளிவந்தன. பல உண்மைகள் இன்னும் வரவேண்டி இருக்கின்றன.

திருவாவடுதுறை ஆதீனத்தில் பெரிய மடாதிபதியை, இளைய மடாதிபதி  சின்னதாக ஊசி போட்டு கொலை செய்ய முயன்றதாக வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில். கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்ட இளைய மடாதிபதி முகத்தை புகைப்படத்தில் பார்த்த அதிர்ச்சியில் மயிலும் குயிலும் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டன.

சமீபத்தில் காஞ்சிபுரம் மாசீச பெருமாள் கோயிலின்  தேவநாதன் என்கிற பூசாரி  கோயிலின் கருவறையிலேயே ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டவைகள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டன.

கடவுளின் கடைசி அவதாரம் என்று கதைவிட்டு ஒரு கல்கி சாமியார் பெங்களூரில் திரண்ட சொத்துக்கு அதிபதியாகி ஆட்சியும் ஆசிரமும் நடத்துகிறார்.

ஆண் சாமியார்கள் மட்டுமல்ல பெண் சாமியார்களும் ஆணுக்குப் பெண் சமம் என்று ஏமாற்றிய பட்டியலும் உண்டு. அதில் முதலிடம் கள்ளக்குறிச்சியில் பத்மினி என்ற பெண் சாமியார் பாமர மக்களை பல லட்சம் ஏமாற்றிய குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டார்.

இதுபோக பீர் சாமியார், பாம்பு  சாமியார், சாராய சாமியார் , அபின் சாமியார், கஞ்சா சாமியார், கருவாடு சாமியார், கத்தரிக்காய் சாமியார், புடலங்காய் சாமியார் , புல் தின்னும்  சாமியார்  என்று பட்டம்பெற்ற சாமியார்களின் பட்டியல் நீள்கிறது. காசி போன்ற புனித நகரங்களில் சாமியார்கள் ஒருவகை போதை வஸ்தை  உருண்டையாக உருட்டி பக்தர்களுக்கு கொடுப்பதாக கடந்த வருடம் சன் டி வி தனது நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. மதுரையில் ஆதீனத்தில் ஒருவகையான தண்ணீர் அருந்தக் கொடுப்பதாகவும் அதை அருந்தினால் ஆனந்த உலகத்தில் பறப்பதுபோல தோன்றுவதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது.   வெளிநாடுகளில் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் என்கிற கஞ்சாவின் உலக மொத்த வியாபார இயக்கம் உள்பட இந்த சாமியார்களின் மோசடிவித்தைகள் அரங்கேறி இருப்பவைகளையும் குறிப்பிட்டால் இந்த தளம் ஆதாரங்களைப் பார்த்து  அஜீரணம் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. “ சிந்தையிலே கள் விரும்பி சிவா சிவா  என்போர் என்று உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் போலிச்சாமியார்களை வர்ணிக்கலாம்.

இப்படி சாமியார் வேஷம் போட்டால் மிக சுலபமாக ஏமாற்றலாம் என்பது இன்று நேற்று வந்த மோசடிவித்தை அல்ல. இராமயணத்தில் சீதையை தூக்கிச்செல்ல இராவணன் வரும்போது சாமியார் வேடம் இட்டுத்தான் வந்து தூக்கிச்சென்றதாகவும், மகாபாரதத்தில் கர்ணனின் உயிரை வாங்கும்போது கடவுள் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனே பிச்சைக்கார சாமியார் வேடம் போட்டு வந்தே ஏமாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே சாமியார்கள் என்றால் சுலபமாக ஏமாற்றலாம் என்கிற விஷ விருட்சம் விதைக்கப்பட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது.  

மனு நீதி தொடர்பான தொடர் என்பதால் ஒரு வித்தியாசத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது மனுநீதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ண, பெண்ணடிமை, தொழில் பாகுபாடு, உயர் பிராமணன் , ஆகிய சட்டங்களையும் சாஸ்திரம் அடிபிறழாமல் பின்பற்றுபவர்கள் துறவிகளாகப் போகிறவர்களுக்கு மனுநீதி வரையறுத்துள்ள சட்டங்களை மட்டும் பின்பற்றாமல் “ மாதவி என்றால் மடியில் வா! கண்ணகி என்றால் காட்டுக்குப் போ “ என்கிற அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள்.  

இறை பயம் எனும் சாதாரண மக்களின் பயத்தை பயன்படுத்தும் சாமியார்களை நாமல்ல பட்டினத்தாரே இப்படிச் சாடுகிறார்

மூடரெல்லாம் கட்டிச் சுருக்கி
கக்கத்தில் வைப்பார்
கருத்தில் வையார்
பட்டப்பகலை இரவென்று சொல்லும்
பாதகர்.  – என்று சாடுகிறார்.

இத்தகைய போலிச்சாமியார்களால் அரசியல் மட்டுமல்ல ஆன்மீகமும் சாக்கடையாகிவிட்டது. நாம் கேட்க நினைப்பது – முகநூலில் ஒரு நண்பர் கேட்டது

மனைவியோட  வாழ்ந்தா இல்லறம்
மத்தவங்களோட புரண்டா துறவறமா ?
படுக்கையறையில் சிற்றின்பம்?  சின்னசாதி?
பகவான் பக்கத்துல பேரின்பமா?  பெரியசாதியா?
சாமானியர்களின் தப்பு விபச்சாரம் ?
சாமியார்களின் தப்பு ஆன்மீகமா ?
நல்ல நியாயம்யா இது ! நல்லா வெளங்கும்டா நாடு !

இப்போது விடுவதாக இல்லை.

பி.கு: இஸ்லாம் துறவறம் பற்றி என்ன சொல்கிறது என்பதை பின்னூட்டத்தில்  யாராவது குறிப்பிட அன்புடன்  வேண்டுகிறேன்.


சாட்டைக்கு இன்னும் வேலை இருக்கிறது.
இபுராஹீம் அன்சாரி

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 7 14

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2012 | , , ,

அலசல் தொடர் : ஏழு. 

மனு நீதியின் (CHAPTER : 5 : 147 TO 169 ) அத்தியாயம் ஐந்து வசனங்கள் 147  லிருந்து 169 வரை பெண்களுக்கான சட்டங்களை வரையறுக்கின்றன.   

பெண்கள் ஆண்களுக்கு பிறப்பிலும், சமூக வாழ்விலும் சமமானவர்கள் அல்ல.

பெண்களுக்கு வேதம் ஓத உரிமை இல்லை. கல்வி கற்க உரிமை இல்லை. கணவனுக்கு மனைவி வீட்டினுள்  இருந்து செய்யும் பணிவிடையே குருகுலக்கல்விக்கு சமமாகும்.  அத்தகைய பண்புள்ள பெண்ணுக்கு  மட்டுமே சொர்க்கத்தில் கணவனுடன் கைகோர்த்துப்போக “ போர்டிங் பாஸ் “ கிடைக்கும். 

எந்த வர்ணத்தை சேர்ந்த பெண்களானாலும்  கணவனே குருவுக்கு சமம். உபநயனம் என்பது திருமணமே. கணவனை கடவுளின் நிலையில் வைத்துக் கொண்டாடவேண்டும். அந்தக் கணவன் ஒரு பெண்ணின் கண்ணெதிரே வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தாலும் கணவனின் கடவுள் ஸ்தானத்துக்கு குறை வரக்கூடாது. பெண்கள் இவற்றை சகிக்கவும் ஏற்கவும் வேண்டும். கல்லானாலும் கணவன் FULL  ஆனாலும் புருஷன். ஆகாத கணவனை , ஒத்துவராத கணவனை , கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கு இல்லை. 

கணவனை விட்டு வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் பலர் காணும் நிலையில் நிறுத்தப்பட்டு  கடித்துக் குதறும் வெறி  நாய்களுக்கு இரையாக்கப்படவேண்டும். ஆண்களுக்கு வெறும் சாதி கீழிறக்கம் மட்டுமே. 

கணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இல்லை. தான் பிறந்த வர்ணத்தில் தந்தை கை காட்டும் - ஜாதகம் பொருந்தும்     சக்கரைக்கோ சப்பாணிக்கோ  கழுத்தை நீட்டவேண்டும். (சுயம்வரம் என்பது அரசகுமாரிகளுக்கு). CHOICES ARE LIMITED. 

மனைவியை  இழந்த கணவன் மறுமணம் செய்யலாம். ஆனால் கணவனை இழந்த மனைவி, பால்ய விவாகம் செய்யப்பட மனைவி  – அவள் கன்னி கழியாதவளாக இருந்தாலும் மறுமணம் செய்யக்கூடாது. கன்னி கழியாதவளாக இருந்தால் மட்டும் இறந்து போன கணவனின் சகோதரனுக்கு மட்டும் மணம் முடிக்கலாம். அப்படி யாரும் இல்லாவிட்டால் ஜென்மத்துக்கும் கிடந்தது சாகவேண்டியதுதான்.  

கணவனின் நினைவுகளில் ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி எடுத்துரைக்க முடியாத நிலையினிலே தான் மீதிக் காலத்தை கடத்தவேண்டும். கணவன் உயிருடன் இருந்த காலத்தில் அவனுக்கு பிடிக்காத எதையும் அவன் இறந்த பின்னும் செய்யக்கூடாது. கணவன் மறைந்த பின் தன்னடக்கம் உள்ளவளாகவும், அந்தரங்க ஆசைகளை திரையும் சிறையும் இட்டு மறைத்துக்கொள்பவளாகவும், கற்புக்கரசியாகவும் விளங்கி, விக்கி விக்கி சாகவேண்டும். தப்பித் தவறி எங்கேயாவது மனத்தளவில் சலனப்பட்டாலும் அவளுக்கு சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு இல்லை. 

பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு மற்றும்  உரிமை கிடையாது. கணவன் இறந்துவிட்டால்- சொத்துரிமையும் இல்லாததால்  கோயிலில் “உண்டக்கட்டி”யும் அன்னதானமும்  வாங்கித்தான் சாப்பிடவேண்டும். 

பெண்கள் தனிப்பட்ட சுதந்திரம் படைத்தவர்கள் அல்ல. இளமையில் தந்தைக்கும், மணமானபின் கணவருக்கும், முதுமையின் மகனுக்கும் கட்டுப்பட்டவர்கள். சுதந்திரமாக தனியே நடமாட பெண்ணுக்கு உரிமை இல்லை. தந்தை, கணவன், மகன் ஆகிய மூவரின் உத்தரவும் இல்லாமல் வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ நடமாடக்கூடாது. 

பெண் குடும்ப பந்தத்தால் கட்டப்பட்டவள்; கட்டுப்பட்டவள். அதை மீறக்கூடாது. பெண்கள் பாத்திரம் பண்டங்கள் கழுவுவது உட்பட்ட வீடுவேலைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் மற்ற விஷயங்களில் தலையிடக்கூடாது. அடுப்படியில் கிடந்து உப்புமாதான் கிளறவேண்டும் . குடும்ப விஷயமாக எதையும் கிளறக்கூடாது. சிந்திக்கக்கூடாது.

ஒரு தாழ்ந்த சாதி ஆணுக்கு மணமுடிக்கப்பட்டவள் , எந்த உயார்சாதி ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் அவள் இந்த உலகத்தில் சபிக்கப்பட்ட பெண் ஆவாள். அத்துடன் அவள் உயர்சாதிக்கு பரபுர்வா (parapurva) என்ற இரண்டாம் திருமணம் ஆனவளாகவும் கருதப்படுவாள். 

இப்போது வருகிறது பாருங்கள் ஒரு இடி. 

ஒரு உயர்சாதிப் பெண் அதே சாதியில் உள்ள ஆண்மகனை மணந்தவள் தன் கணவனின் சாவுக்கு முன்பாகவே புனித நெருப்பு சீதை மூட்டி, சடங்குகள் செய்து தனது உயிரை கணவனின் சாவுக்கு முன்பாகவே அந்த அக்னிஹோத்ரா சிதையில் விழுந்து உயிர் விடலாம். அப்படி அவள் உயிர் விடும் பட்சத்தில் எல்லாப் பிறவிகளிலும் அதே கணவனுக்கு அவள் மீண்டும் மீண்டும்  மணம் முடிக்கப்படுவாள். 

மேலே கண்டுள்ள கருத்துக்களின் சாராம்சம் மனு நீதியின் வார்த்தைகளில் இதோ! 

 147. By a girl, by a young woman, or even by an aged one, nothing must be done independently, even in her own house. 
148. In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a woman must never be independent. 

149. She must not seek to separate herself from her father, husband, or sons; by leaving them she would make both her own and her husband's families contemptible. 

150. She must always be cheerful, clever in the management of her household affairs, careful in cleaning her utensils, and economical in expenditure. 

151. Him to whom her father may give her, or her brother with the father's permission, she shall obey as long as he lives, and when he is dead, she must not insult his memory. 

154. Though destitute of virtue, or seeking pleasure elsewhere, or devoid of good qualities, yet a husband must be constantly worshipped as a god by a faithful wife. 

156. A faithful wife, who desires to dwell after death with her husband, must never do anything that might displease him who took her hand, whether he be alive or dead. 

158. Until death let her be patient of hardships, self-controlled, and chaste, and strive to fulfill that most excellent duty which is prescribed for wives who have one husband only. 

159-160. Many thousands of Brahmins who were chaste from their youth have gone to heaven without continuing their race. A virtuous wife who after the death of her husband constantly remains chaste reaches heaven, though she have no son, just like those chaste men. 

161. But a woman who from a desire to have offspring violates her duty towards her deceased husband brings on herself disgrace in this world and loses her place with her husband in heaven. 

162. Offspring begotten by another man is here not considered lawful, nor does offspring begotten on another man's wife belong to the begetter, nor is a second husband anywhere prescribed for virtuous women. 

163. She who cohabits with a man of higher caste, forsaking her own husband who belongs to a lower one, will become contemptible in this world and is called a remarried woman (parapurva). 

 167-168. A twice-born man, versed in the sacred law, shall burn a wife of equal caste who conducts herself thus and dies before him with the sacred fires used for the Agnihotra and with the sacrificial implements. Having thus, at the funeral, given the sacred fires to his wife who dies before him, he may marry again and again kindle the fires. 

169. Living according to the preceding rules, he must never neglect the five great sacrifices and, having taken a wife, he must dwell in his own house during the second period of his life. 

மேல்கண்ட மனுவின் சட்டங்களைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே இஸ்லாம் தரும் திருக்குர் - ஆனின்  கீழ்கண்ட வசனங்களை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. நமது பெண்மணிகள் எவ்வளவு பேறு பெற்றவர்கள்  என்று இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியவில்லை.  

ஆணாயினும் சரி , பெண்ணாயினும்  சரி, நீங்கள் ஒருவர்  மற்றவரிலிருந்து தோன்றிய ஒரே இனத்தவரே.    3:195

ஆண்களுக்கு பெண்கள் மீது இருப்பது போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமை உண்டு 2:228.

பெண்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக திருமண பந்தத்தில் வைக்காதீர்கள். 2: 231

விவாகரத்து ஏற்பட்டபின் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை நீங்கள் தடை செய்யாதீர்கள். 2:232

உங்களுடைய துணையை உங்களின் அமைதிக்கான காரணமாக ஆக்கினான். 7:189


என்கிற அத்தாட்சிகள் – இறைவனின் வாக்குகள் இஸ்லாத்தின் சட்டங்கள். 

-ஒரு முஸ்லிம் பெண், ஒரு ஆணுக்கு இருக்கும் விவாகரத்து செய்யும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் பெற்றவள். 
- ஒரு முஸ்லிம் பெண், வாரிசு உரிமை, குடும்ப சொத்தில் பங்கு ஆகியவை பெற தகுதிடையவள் ஆவாள். தனியாக வியாபார நிறுவனங்களை  உருவாக்கவும், நிர்வாகிக்கவும் , வேலைகளுக்குச் செல்லவும் உரிமை பெற்றவள். 
- ஒரு முஸ்லிம் பெண் ,தனது கணவனாக வரப்போகிறவனை சாட்சிகளின் முன்னாள் ஏற்றுக்கொண்டு சம்மதித்தால் மட்டுமே மணம் செய்து வைக்கப்படுகிறாள். 
-  ஒரு முஸ்லிம் பெண், வரதட்சணை பணம் கணவனுக்குக் கொடுத்து மணமுடிப்பது தடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக கணவனாக வருகிறவன் பெண்ணுக்குத்தான் செல்வங்களை கொடுக்கவேண்டும் .
- ஒரு விதவையான முஸ்லிம் பெண், மறுமணம் செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறாள். கணவனோடு அவளையும் அவளது அந்தரங்க ஆசைகளையும் கொன்றுவிட்டு செத்துவிடு என்று சொல்லவில்லை. 
- ஒரு முஸ்லிம் பெண் சமுதாயத்தில்  மேலான மரியாதைகளோடு நடத்தப்படுகிறாள். எந்த முஸ்லிம் பெண்ணும் உயிரோடு தீயில் எரிக்கப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள் நற் காரியங்களில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவதில்லை. 

இத்தகைய காரணங்களை படித்து, அறிந்து உணர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய , ஆப்ரிக்க கண்டங்களைச் சேர்ந்த அளப்பறிய பெண்கள், ஆண்களைவிட பெரும் கூட்டங்களாக இஸ்லாத்தை தழுவி இணைந்து வருகிறார்கள் என்பதே இன்றைய வரலாறு கூறும் நற்செய்தியாகும். நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் நாடுகளில் கல்வி மூலம் இஸ்லாம் பற்றிய இந்த விழிப்புணர்வு பெருகி இருக்கிறது. இந்தியா போன்ற கல்வியில் பின் தங்கியுள்ள நாடுகளில் உள்ள மக்களிடம் இந்த உணர்வுகளைக் கொண்டு செல்ல மிகவும் உழைக்க வேண்டி இருக்கிறது. அவைகளை அவசரமாகத் தொடங்க வேண்டும். 

சாட்டையை இன்னும் வைத்துவிடவில்லை
இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
இபுராஹீம் அன்சாரி

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 6 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2012 | , , ,

அலசல் தொடர்: ஆறு

வேதங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், புராணங்கள் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட சில அவலங்களை இந்த அத்தியாயத்தில் அலசலாம் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து மனு நீதி சொல்லும் பெண்களுக்கான சிறப்பு சட்டங்களை குறிப்பிடலாம்.   

பிராமண சாஸ்திரங்கள் கிட்டத்தட்ட பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமே வைத்து இருந்தன. மொத்த மனித குலத்தை தரம் பிரித்த  சாஸ்திரங்கள், பெண்களை அதுவும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்களை சற்று அதிகமாகவே “கவனித்தன” . ஆண்கள் என்றால் அரவணைப்பு போதும் – பெண்கள் என்றால் போர்த்திக்கொள்ளப் போர்வையும் கொடுக்கவேண்டும் என்பது இஸ்லாம் போன்ற நாகரிகம் படைத்த மாந்தரின்  மார்க்கங்கள் கற்றுத் தந்தவை.   ஆனால் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல உலக நாகரிகத்துக்கு எதிராக கணவன் இறந்தால் அவனை எரிப்பதற்காக மூட்டப்படும் தீயில் உயிருடன் இருக்கும் மனைவியும் விழுந்து சாகவேண்டும் என்ற நியதியை வைத்திருந்தது இந்த சாஸ்திரங்கள். கணவன் மனைவியை சதி - பதி என்று சொல்வார்கள் . கணவன் இறந்தால் தீயில் விழுந்து மனைவி சாகும் சடங்குக்குப் பெயரும் சதிதான். இது பெண்களுக்கு எதிரான சதியுமாகும். அதுமட்டுமல்ல தேவதாசிகள் என்று ஒரு இனத்தை உருவாக்கி உயர்சாதியினர் நுகர்வதர்காகவே “வைத்து”க்கொள்ளச் சொன்னவை இந்த சாஸ்திரங்கள். 

தேவதாசிகள் என்றால் என்ன? – கடவுளின் பெண் ஊழியர்கள் என்று பொருள். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்கள், கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டு அவர்கள் கோயில்களை கூட்டிபெருக்க, சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுமட்டுமல்ல இந்த பெண்கள், உயர்சாதி எடுப்பாருக்கு கைப்பிள்ளைகள். உயர்வகுப்பாரின் உடல்  இச்சைகளை தேவைப்படும்போது தீர்த்துவைப்பதும் இவர்களுக்கு முக்கிய வேலை. தலை முறைகளாக – வாழையடி வாழையாக இவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடவேண்டும். DEVADASI SYSTEM IS AN  OFFERING OF GIRLS TO THE DEITIES IN BRAHMANIC TEMPLES என்பது வெட்கக்கேடான விளக்கம்.  

10-11-1987 TIMES OF INDIA  வில் வெளிவந்துள்ள ரிப்போர்டின் பிரகாரம் “ The Devadasi system was set up, as a result of a conspiracy between the feudal class and the priests (Brahmins). The latter, with their ideological and religious hold over the peasants and craftsmen, devised a means that gave prostitution their religious sanction. Poor, low-caste girls, initially sold at private auctions, were later dedicated to the temples. They were then initiated into prostitution.

இதன்படி தேவதாசி அமைப்பு முறை என்பது உயர்சாதியினரும், பிராமண குருக்கள் அல்லது சாமியார்களும் சேர்ந்து செய்த சதியின் விளைவாகும். பிராமணர்கள் தங்களுடைய மத சம்பந்தமான கோட்பாடு அல்லது சாஸ்திரம் மற்றும் ஐதீகம் என்ற போர்வையில் உழைக்கும் வர்க்க மக்களின் மேல் ஒரு மத சம்பந்தமான கட்டாயத்தை திணித்து - ஒரு பச்சை விபச்சாரத்துக்கு மத சம்பிரதாயங்களே சாட்சியாகவும் புரவலராகவும் இருந்து  உலவ விட்டதாகும். இதன்படி  ஏழை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சந்தையிலே கீரைக்கட்டுகள் விற்கப்படுவதுபோல் ஏலம் கூறப்பட்டு  உயர் சாதியினரால் நுகரப்பட்டு-பின்னர் கோயில்களுக்கு மாடுகளை நேர்ந்துவிடுவதுபோல் “பொட்டுக்கட்டி” நேர்ந்துவிடப்பட்டர்கள். மலர்கள் மலரும் முன்பே கசக்கப்பட்டுக் காயப்படுத்தப்பட்டன. மணவாழ்வு மறுக்கப்பட்டது. அவர்களின் இந்த இறைப்பணி என்ற அரிச்சுவடி  விபச்சாரி என்ற முதுகலைப் பட்டதாரிகளாக அவர்களை ஆக்கி முடித்தது. . இது சமூக அவலத்துக்கு கடைக்கால் ஊன்றப்பட்ட மனம் கொதிக்கும்  வரலாறாகும்.  இந்த அகில உலக அட்டூழியத்துக்கு  ஒட்டுமொத்த ஸ்பான்சர்ஸ் : M/S. BRAHMANISM & COMPANY  . 

வரலாற்று ஆசிரியர்கள்  இந்தியாவில் தோன்றி மறைந்த புத்த மதத்தின் அழிவு, தேவதாசி முறையை வளர்த்து உரமிட்டதாக கூறுகின்றனர். புத்த மதம் தழைத்து இருந்தபோது பெண் புத்த துறவிகள் புத்த மடங்களில் வாழ்ந்துவந்தார்கள். புத்த மதம் அழியத்தொடங்கியதும், புத்த மடங்கள்  பிராமணர்களால் கோயில்களாக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெண் புத்த துறவிகள் தாழ்ந்த சாதிக்கு மாற்றம் செய்யப்பட்டு தேவதாசிகள் என்று முத்திரை இடப்பட்டு  உபயோகப்படுத்தபபட்டனர். இதோ அந்த வரலாற்றுக் குறிப்பு:  It is viewed that the "devadasis" are the Buddhist nuns who were degraded to the level of prostitutes after the temples were taken over by the Brahmins during the times of their resurgence after the fall of Buddhism.

இப்படிப்பட்ட சமூக இழிவைத்தான் பெரியாரும் பிறரும் சாடினார்கள். இவர்களில் மிக முக்கியமானவர் டாக்டர் . முத்து லஷ்மி ரெட்டி ஆவார். இவரைப் பற்றி தனி நூலே எழுதலாம். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பிறந்தவர். ஒரு பிராமணரால்  வளர்க்கப்பட்டவர். ஆனாலும் பிராமண கொள்கைகளை இவர் மணம் ஏற்கவில்லை. பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்.  ஆண்களின் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி ; மருத்துவக் கல்லூரியின் முதல் ஹவுஸ் சர்ஜன்; ஆங்கிலேயர் ஆட்சியில் சட்டமன்றத்தில் நுழைந்த முதல் பெண்மணி; சென்னை மாகாணத்தின் சமூக நலனுக்கான ஆலோசனைக்கமிட்டியின் முதல் பெண் தலைவர்; சட்டமன்றத்தின் முதல் பெண் துணைத்தலைவர்; சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தலைவர். இப்படி பல சிறப்புகளுக்கும் முதல்களுக்கும் சொந்தக்காரர். அத்துடன் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை தொடங்க தூணாக நின்றவர். 

டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி அவர்கள்தான் தமிழக சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை முன் மொழிந்தவர். 1927  ஆம் வருடம் ஆங்கில அரசால் சென்னை சட்டமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்ட முத்து லஷ்மி ரெட்டி அவர்கள் 1929 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார்.

இதை அன்றைய காங்கிரஸ் எதிர்த்தது. அன்றைய காங்கிரசின் சட்டமன்ற தலைவர் சொல்லின் செல்வர்- சத்திய மூர்த்தி ( இவர்  பெயரால்தான் தமிழக காங்கிரசின் தலைமை இடம் சத்திய மூர்த்தி பவன் என்று  பெயரிடப்பட்டுள்ளது ). ஒரு பிராமணர். நாட்டில் பெண்களுக்கு ஆதரவாக ஒரு மறுமலர்ச்சி மசோதா  கொண்டுவருவதை தான் சார்ந்த பிராமண  குல பண்புக்கு களங்கம் வராமல் தேவதாசி ஒழிப்பு முறை மசோதாவை தீவிரமாக எதிர்த்துப் பேசினார். இந்த மசோதா நிறைவேறினால் ஐதீகம் கெட்டுவிடும் என்றார். கோயிலில் கூட்டும்  வேலை, பெருக்கும் வேலைகள் எல்லாம் செய்யப்படாமல்  கோயில்கள் நாறிப்போய்விடுமே என்று ரெம்பவும் கவலைப்பட்டார். இதற்கு முத்து லஷ்மி ரெட்டி மிக கூலாக பதில் சொன்னார் “ இவ்வளவு காலம் தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள்தான் இந்தக் காரியங்களை செய்து கோயில்களை சுத்தமாக வைத்திருந்து இருக்கிறார்கள். இந்த மசோதா நிறைவேறி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் கோயில்களில்  கூளம், குப்பை  நிறைந்துவிடும் என்ற கவலை சத்திய மூர்த்தி அவர்களுக்கு இருந்தால் இவ்வளவு நாள் தாழ்த்தப்பட்டவர்கள் தேவதாசிகளாக இருந்து பார்த்துவந்த வேலைகளை கொஞ்சம் பிராமணப் பெண்களை பொட்டுக்கட்டிவிட்டு  செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாமே “ என்று சத்திய மூர்த்தி ஐயரின் மூக்கை  உடைத்தார்  என்பது My Experience as a Legislature  என்ற பெயரில் டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி தானே சுயமாக எழுதிய சென்னை சட்டமன்ற விவாத நூல்களில் காணக்கிடைக்கின்றது. 

இப்படிப்பட்ட பேறு பெற்ற சீர்திருத்தவாதிகள் போராடித்தான் தேவதாசி முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் நாட்டின் பொருளாதாரத் தலைநகரை தன்னகத்தே கொண்டுள்ள மராட்டியத்திலும், நாகரிகம் வளர்ந்த மாநிலம் என்று கூறப்படுகிற கர்நாடகத்திலும் இந்த முறை இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான்  இருக்கிறது. சொல்லப்படும் காரணம் ஐதீகம்- ஆன்மிகம்- சாஸ்திரம் -சம்பிரதாயம். கடவுளின் பெயரைச் சொல்லி நடக்கும் காமக்கூத்துகள். இதனால்தான் மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதிகளும் கர்நாடகத்தில் பிடரி, பத்மாலயா, நித்யானந்தா, சாய்பாபா, கல்கி, ராம் நகரம்  போன்ற ஆசிரமங்களும் நிறைந்து இருக்கின்றனவோ என்ற ஐயப்பாடும் மேலோங்குகின்றது.

இது மட்டுமா? பால்ய விவாகம் என்ற பெயரில் சிறு வயது பெண் மொட்டுகளை மணவாழ்வுக்கு மலரும் முன்பே பலியிடுவதை இந்த நீதி நூல்களும், சாஸ்திர தர்மங்களும் தடுக்கவில்லை; திருத்தவில்லை; கண்டிக்கவில்லை; கடிந்துரைக்கவில்லை. மாறாக, இறைவனின் பெயரால் இவை தப்பில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றன.

இளம் வயதில் கணவனை இழந்த கைம்பெண்கள் – பறக்கும்போது  அறுந்துபோன பட்டங்கள் – ஆகாயம் இல்லாமலே தரை மீது தள்ளாடும் நிலவுகள்- விதவைகள். இவர்களின் மறுமணவாழ்வை தடைசெய்தன இந்த நீதி நூல்களும், சாஸ்திரங்களும்- ஐதீகங்களும். எந்த வயதில் கணவனை இழந்து இருந்தாலும் அவள் வாழ்வு ஒரு கருகிய மொட்டாகத்தான் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வாதாடினார்கள் மேல்சாதி பண்டிதர்கள். மீறி மறுமணம் செய்தவர்களை சாதியை விட்டும் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்தார்கள். கல்லால் அடித்து விரட்டினார்கள்- கடும் தண்டனை கொடுத்தார்கள். இஸ்லாம் போன்ற மார்க்கங்களில் விதவைமணம் அனுமதிக்கப்பட்டது  . இறைவனுக்கு விருப்பமான செயலாக கருதப்பட்டது. அண்ணல நபி (ஸ்ல) அவர்கள் , தாங்களே தன்னைவிட வயதில் மூத்த விதவையை மணமுடித்து மறுவாழ்வு கொடுத்தார்கள். தங்களின் தோழர்களை அவ்விதம்  செய்யத் தூண்டினார்கள். 

ஆனால் வேத சாஸ்திரங்களின் பெயரில் விதவை மறுமணக் கருத்து சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல், விதவைகள் உடலளவிலும் மனதளவிலும் சிதைக்கப்பட்டார்கள். ( நிறைய திரைப்படங்களில் ரீ ரிகார்டிங்க் இசையுடன் பொட்டழிப்பதையும் , பூவைப்பிடுங்குவதையும் , வலையல்களை உடைப்பதுமாக கதறக்கதறக் காட்டுவார்களே!) கணவனை இழந்தவர்களின் தலைகள் மொட்டை அடிக்கப்படவேண்டும் என்றார்கள்;  நல்ல ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. நகைகள் அணியக்கூடாது.  வீட்டின் முன்பகுதிகளில் அவர்கள் வசிக்கத்தடை விதிக்கப்பட்டது. திருமணம் போன்ற காரியங்களில், மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் வெளியில் தலைகாட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மீறி வந்தால் ஏளனப்படுத்தப்பட்டார்கள். வெளியில் போகும்போது விதவை எதிரில் வந்தால் போகிற காரியம் விளங்காது என்றார்கள். மீறும் விதவைகளுக்கு குடும்ப சொத்துரிமை மறுக்கப்பட்டது. திருமணம் முடிந்து இல்வாழ்வில் ஈடுபட்டு, குழந்தைகள் பெற்ற விதவைகள் ஆனாலும், பால்ய விவாஹம் புரிந்து திருமண வாழ்வு என்றால் என்னவென்றே தெரியாத சிறுமிகள் கூட கணவனை இழந்துவிட்டாலும் இதே கொடுமைதான்.   இவ்வளவு கொடுமைகளும் விதவைகளை நோக்கி ஏவப்பட்டது ஐதீகம், ஆன்மீகம், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றின் பெயரால். 

ஆனாலும் 1856  ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த பண்டித  ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற பெருமகனின் முயற்சியால் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்து விதவை மறுமண சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆயினும் சட்டம் சட்டம் போட்ட சட்டமாகவே இருந்தது. நடைமுறையில் சாஸ்திரங்களே சட்டமாக இருந்தன. பெரும் குடும்பங்களில் கைம்பெண்களின் மறுமணம் பற்றி நினைப்பது குடும்பத்துக்கு அவப்பெயராக கருதப்பட்டது. 

பெண்களுக்கு எதிரான இரு பெரும் கொடுமைகள் ஆங்கில ஆட்சி நடைபெற்ற காலங்களில் சட்டப்படி தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. அதுதான் சட்டப்படி நிறுத்தப்பட்டுவிட்டதே அது பற்றி ஏன் எழுதி பக்கங்களை வீணடிக்கிறேன்? ஏதோ ஆங்கில ஆட்சி இருந்ததால் இந்தக்கொடுமைகள் சட்டப்படி அகற்றப்பட்டன. இந்திய அரசர்கள்- அவர்களது ராஜ ரிஷிகள் – பிராமண பட்டாளம் சூழ  இருந்திருந்தால் இவை நிறைவேறி இருக்காது. அதுமட்டுமல்ல ஆங்கில அரசாலும், சீர்திருத்தவாதிகளாலும் இந்த சட்டங்களை இலகுவாக நிறைவேற்றிட முடியவில்லை. மதவாதிகளின் தீவிர எதிர்ப்புகளைத்தாண்டித்தான் நிறைவேற்றப்பட்டன  என்கின்றன வரலாற்றின் பக்கங்கள். 

அடுத்து, நாட்டின் சட்டத்தில் தடுக்கப்பட்டவை  மனுநீதியில் மற்றும் சாஸ்திரங்களில் இருந்துகொண்டு இருக்க இன்னும் ஏன் அனுமதிக்க வேண்டும் என்பதே என் கேள்வி. இவைகளை ஏன் ஒட்டுமொத்த  தடை செய்து ஒழிக்கக்கூடாது? சட்டத்தின் ஆட்சி என்றால் சாஸ்திரத்தின் ஆட்சி ஏன்? நாட்டில் இன்னும் பலபகுதிகளில் தேவதாசி முறை இருப்பது ஏன்?  -  சட்டத்தால் ஒழிக்கப்பட்ட சாஸ்திரத்தின் வசனங்கள்  கோயில்களில் ஆறு  கால பூஜைகளில் ஆர்ப்பரிக்கப்படுவது ஏன்? நாட்டை ஆளவேண்டியது  சட்டங்களா? சாஸ்திரங்களா? சாராயக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் அவை ஒழிக்கப்பட்டுதானே ஆகவேண்டும்? அதேபோல் விதவைமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்ட பின்பு சாஸ்திரம் ஏன் அதைத்  தடுக்கவேண்டும்?  பால்ய விவாகம், தேவதாசிமுறை ஆகியவை சட்டத்தால் ஒழிக்கப்பட்ட பின்பும் சாஸ்திரத்தில் ஏன் இருக்கவேண்டும்? இந்த சாஸ்திரங்கள் சாராயக்கடைகளைப் போல் ஒழிக்கப்பட வேண்டியவை அல்லவா?

கொஞ்சம் இருங்கள் இந்த சாட்டைக்கு மாஞ்சா போடவேண்டும்.

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு