தகப்பன் என்ற உயர் பதவியை அடைந்ததும் ஒவ்வோர் ஆணும் அதன் உள்ளார்ந்த விந்தையான புனித உறவின், சந்ததிக்கான சுழி போடப்பட்டதை உணர்கிறான்.
தனது பிள்ளைகள் எவ்வாறெல்லாம் வளர வேண்டும், இருக்க வேண்டும் என்ற கனவுக் கோட்டைகள் கட்டிய தந்தைகள், கட்டிய கோட்டையை கட்டிக் காத்த மக்களையும் கண்டிருப்பர் அதற்கு மாறாக அதனை இடித்தெறிந்த மக்களையும் பெற்றிருப்பர்.
இந்த உணர்வு இருக்கும் ஆண் தனது தந்தையை எவ்வாறு கண்டிருக்கிறான், அல்லது பெண்மக்கள் தங்களது தகப்பனை எவ்வாறு கண்ணியப்படுத்துகிறார்கள்.
உழைக்கும் வர்க்கமாக கண்ட தந்தையர்களை அதிமதிகம் கொண்ட நமதூரில் “இவன் தந்தை என்னோற்றான் கொள்” என்னும் சொல்லுக்கு அர்த்தமாக நம்மில் எத்தனைபேர் முன்மாதிரி மக்களாக நடந்து காட்டியிருக்கிறோம்?.
நினைவு கூறுவோம், கண்ணியப்படுத்துவோம் நமது ஹீரோவாக இருக்கும் தந்தையரை !
இனி உங்களனைவரின் கருத்தாடல்கள் செழிப்பாக்கட்டும் இந்த பதிவை இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்


