Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label எல்லை. Show all posts
Showing posts with label எல்லை. Show all posts

விடியலை நோக்கி..! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2013 | , , , , , ,

இலக்கினை நோக்கியே எழுவாய்,
இதய வயலினை உழுவாய்,
நல்வழி என்றுமே வழுவாய்,
நன்னெறி கைப்பிடி வலுவாய்.

சிறுதுயர் வந்ததும் சிதையாய்,
முயலொடு ஆமையின் கதையாய்
முயன்றிடில் வெற்றி உனதாய்
அமைந்திடும் அதைநீ மறவாய்!

சிறைக்குள் இருப்பதா  சிந்தை?
சிறகுகள் இழந்திடல் விந்தை!!,
வரைக்குள் அடைந்திடும் எண்ணம்-இருப்பின்
வாழ்க்கை அதனினும் சின்னம்.

எல்லை வகுத்திடல் சரியே!!
எதற்கது என்பதில் தெளிவு
இல்லாது போவது தகுமோ?
நல்லன செய்யுதற் கன்று!

உள்ளுவ தெல்லாம் உயர்வாய்
உள்ளுதல் இருப்பின் உயர்வாய்.
வள்ளுவம் சொன்னது இதையே,
வாழ்க்கையின் தத்துவம் உணர்வாய்.

முகிலினில் நிறையும் நீரும்
மழையாய் வெளி யேறும்.
புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.

தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!

உள்ளம் என்பது ஆழி
உலகில் அதற்கேது வேலி?
அலைகள் வருதல் இயற்கை,
அதன்மேல் விரிப்போம் இறக்கை..

அதிரை என்.ஷஃபாத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு