Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா. Show all posts
Showing posts with label இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா. Show all posts

சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓதுகிறோமா? [காணொளி] 6

அதிரைநிருபர் | September 24, 2014 | ,

தொடர் - 6
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் மனனம் செய்து உணர்ந்து ஓதுகிறோமா?

திருக்குர்ஆனில்  முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும், இதன் சிறப்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் உணர்ந்து ஓதியிருக்கிறோம்? 

சூரத்துல் ஃபாத்திஹாவின் முழுமையான அர்த்தத்தை மனனம் செய்திருக்கிறோமா? 

நாம் ஒவ்வொரு தொழுகையின் ரக்காத்துகளில் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா சூராவை அழகிய உச்சரிப்புடனும் பிழையின்றியும் ஒதுகிறோமா? இதோ இந்த காணொளியை பாருங்கள்.

காணொளியை கேட்ட உச்சரிப்புகளுடனும் பிழையின்றியும் நாம் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா உள்ளதா? என்பதை  நாம் சிந்திக்க வேண்டும். இதன் அர்த்தத்தை முழுமையாக மனனம் செய்து, அதன் பொருள் உணர்ந்து இவ்வுலகை விட்டு மரணிக்கும் வரை அதனை மறக்காமல் இருக்க வல்லமை நிறைந்தன அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்களின் நடைமுறைகள், அவர்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 17, 2014 | , , ,

தொடர் - 5
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!'

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா?

மனித இனத்திற்கு முன் மாதிரியான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களை அறிந்த நம் சமூகத்தில் உள்ள பலர், தானும் பாவம் செய்து, பிறரையும் செய்து காட்டத் தூண்டும் சமூகமாக மாறிவருகிறது என்பது வருத்தமான செய்தி.

இஸ்லாத்தை உண்மை மார்க்கம் என்று நம்பவைக்க அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் போன்று வேறு யாரும் இவ்வுலகிற்கு வேண்டுமா? நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதிப் பேருரையில் இந்த மார்க்க பரிபூரணமாக்கப்பட்டுள்ளது என்று கூறியவுடன் இஸ்லாம் முழுமைபடுத்தபட்டது. இதில் எந்தவித கூடுதலோ குறைவோ இல்லை என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளோம். ஆனால், அன்மைக் காலங்களில் தமிழகத்தில் நமது சகோதரர்களில் ஒரு சாரார் இஸ்லாத்தை உண்மைப் படுத்துகிறோம் என்று சொல்லி, சிலரை பாவம் செய்யத் தூண்டுகிறார்கள் என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.

நிகழ் காட்டாக, தமிழகத்தின் உள்ள ஒரு இயக்கம் சூனியக்காரர்களுடன் சூனிய ஒப்பந்தம் செய்திருப்பது இன்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களிடம் மட்டுமல்ல, ஏனைய சமூகத்தின் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பாவத்தை செய்யத் தூண்டும் 'சூனியச் சவால்கள்' தற்போதைய காலச் சூழலில் தேவைதானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணம் இன்று உலக அளவில் முஸ்லீம்களுக்கு ஏற்படுள்ள சவால்கள் ஒரு புறம் இருந்தாலும் இந்தியாவில் பாசிச சக்திகளின் மத்திய ஆட்சியில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம். ஆனால் கேடுகெட்ட சூனியக்காரர்களுடன் சவால்கள் இன்றையச் சூழலில் அவசியமற்றது. இது செய்வது பாவம் என்ற வாதம் வைக்கப்பட்டால், அதற்கான ஆதாரமாக ஒரு சில குர்ஆனில் வசனங்களை (பார்க்க: குர்ஆன் 20:60-70) வைத்து மூஸா நபி சூனியகாரர்களுடன் போட்டி போட்டார்கள் ஆகவே ஒரு நபியின் வழிகாட்டல் உள்ளதால் நாங்களும் அவ்வாறே ஒரு சூனியக்கார்ர்களிடம் சவால் விட்டு போட்டி போடுகிறோம் என்று தங்களின் செயலை நியாப்படுத்துகிறார்கள். 

குர்ஆன் மற்றும் ஷஹீஹான அடிப்படையில் சூனியம் செய்வதும் செய்யத் தூண்டுவதும் பாவம், சூனியம் கற்பதோ கற்பிப்பதோ பாவம், சூனியக்காரனால் தான் நினைத்ததை செய்ய முடியும் என்று நம்புவது மிகப் பெரிய பாவம் ஷிர்க் (இறை மறுப்பு), குஃப்ரு. ஆனால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு, அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் செய்ய இயலாது (பார்க்க குர்ஆன் 2:102).

மேலே குறிப்பிட்ட இரண்டு குர்ஆன் வசன எண்களில் உள்ள குர்ஆனிய வசனங்களின் அடிப்படையில் நாம் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவனை சூனியம் செய்து காட்டு என்று சவால் விடுவது சரியா? தவறா? என்பது புரியும்.

வஹியின் அடிப்படையில் மூஸா நபி செய்ததும், போலி பகுத்தறிவின் ஆய்வென்ற பெயரில் தமிழகத்தில் நம் சகோதரர்களில் ஒரு சாரார் செய்துள்ள சூனியச் சவால் ஒப்பந்தம் செய்ததை மேலும் விளங்குவதற்காக இதோ சில ஒப்பீடு.

முதலாவது ஓப்பீடு..!

கெட்டவனான காஃபிரான ஃபிரவ்ன், அல்லாஹ்வின் தூதர் நபி மூஸா அவர்களை நபி இல்லை என்பதற்காக சூனியக்காரர்களை வைத்து முஸா நபிக்கு சவால் விட்டான்.. முதலில் சவால் விட்டது பிர்அவுன், நபி முஸா அவர்கள் அல்ல.

இன்றோ காஃபிரான அகோரி மணிகண்டனிடம்,  தமிழகத்திலுள்ள அந்த இயக்கத் தலைவர் எனக்கு சூனியம் செய்துப் பார் என்று சவால் விட்டிருக்கிறார். அந்த அகோரியை இறைமறுப்பிலிருந்து விலக்கி எடுக்காமல் மேலும் ஷிர்க்கில் நிலைத்திருக்கவும் தொடர்ந்து செய்யத் தூண்டும் ஒப்பந்தம் போட்டுள்ளார். 

இரண்டாவது ஓப்பீடு...!

அல்லாஹ்வின் தூதரான முஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் (வஹியை) கொண்டே அந்த காஃபிர் பிரவ்ன் விட்ட சவாலை ஏற்கிறார்கள், அல்லாஹ்வின் கட்டளையை (வஹியை) கொண்டே தன்னுடைய ஒவ்வொரு அனுகுமுறைகளையும் செய்து காட்டுகிறார்கள்..

அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனிடமும் சூனிய ஒப்பந்தம் செய்துள்ள அந்த இயக்கத்தின் தலைவருக்கு அல்லாஹ்விடம் வஹி வந்து சூனியச் சவால் விடவில்லை, அவரின் சூனிய ஒப்பந்தம் இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ்விடம் இருந்து வஹி வரவில்லை. அந்த இயக்கத்தின் தலைவர் நபியோ, மலக்கோ அல்ல.

இந்த இரு ஒப்பீடுகளையும் பார்த்தால் நபி மூஸா ஷிர்க் செய்யத் தூண்டினார் என்றால் அல்லாஹ் ஷிர்க் செய்யத் தூண்டினான் என்று சொல்ல வேண்டும், அல்லது ஷைத்தான் முஸா நபியை ஷிர்க் செய்யத் தூண்டியதாக நீங்கள் சொல்ல வேண்டும். இவ்விரண்டையும் அல்லாஹ்வை நம்பி வஹியின் அடிப்படையில் செயல்படும் நபிமார்களை ஏற்றுள்ள எந்த முஃமீனும் சொல்ல மாட்டார், காரணம் நபி மூஸா அவர்கள் வஹியின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையே எந்த முஃமீனும் நம்புவார்.

சூனிய ஒப்பந்தம் செய்துள்ள இயக்கத்தவர்கள் முழுக்க முழுக்க தங்கள் பகுத்தறிவைக் கொண்டு செய்த சூனிய ஒப்பந்தத்தை தனக்கு சதகமாக்கிக் கொள்வதற்காக, முஸா நபி செய்தது ஷிர்க் இல்லையா? என்ற குதர்க்கமான அறிவுக்கு பொருந்தாத வாதத்தை எடுத்து வைத்து தங்களின் நிலையையை நியாப்படுத்துகிறார்கள். அது தவறு என்பதை அல்லாஹ் இன்றில்லா விட்டாலும், ஒரு நாள் அவர்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

வஹியின் அடைப்படையில் நபி மூஸா செய்ததை, தன் போலி பகுத்தறிவின் மூலம் அந்த இயக்கத்தின் தலைவர் செய்வதோடு ஒப்பிடுவது அடிப்படையிலே தவறு என்பது 100 % நிரூபமனமாகிறது. காரணம் அந்த இயக்கத்தின் தலைவர் வஹியின் அடைப்படையில் தன் செயல்களை அல்லாஹ்வின் கட்டுப்பாடுடன் செய்யும் இறைத்தூதர் அல்ல.

நபி மூஸா அவர்கள் செய்தது தவறே அல்ல என்று நிரூபனமாகும் போது, ஷிர்க்கு செய்ய முஸா நபி தூண்டினாலும் அந்த இயக்கத்தின் தலைவர் தூண்டினாலும் அது தவறு தவறுதான் என்று சூனியச் சவால்விட்ட இயக்கத்தவர்களின் ஒப்பீடு அர்த்தமற்றது என்பது நான் மேலே இட்ட ஒப்பீட்டின் மூலம் நிரூபனமாகிறது. 

அகோரி மணிகண்டனையும், அதுல்தீனையும் ஷிர்க்கிலிருந்து விடுவிக்க தூண்டாமல் மாறாக சூனியம் என்ற ஷிர்க் மேலும் செய்யத் தூண்டி அந்த கொடிய பாவத்தை இயக்கத்தின் தலைவரும் சுமந்துள்ளார், அவர்களின் தலைவருடைய செயலை ஆதரிக்கும் சகோதரர்களும் அதற்கு துணை போகிறார்கள். இதனை அவர்கள் அனைவரும் உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அவர்களுக்கு நாளை மறுமையில் நலன் கிடைக்கும். 

சூனியச் சவால்கள் என்ற இவ்வாறான தவறான அனுமுறைகள் ஒன்றும் இஸ்லாத்திற்கு செய்யும் அர்ப்பனிப்பு அல்ல. மாறாக, இது போன்ற வீண் சவால்களை வைத்து இஸ்லாத்திற்கு நன்மை பயக்கும் என்பதை காட்டி இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் செயலாகவே எடுத்துச் சொல்லும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒப்பீடுகள், தனது பகுத்தறிவை குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரண் இல்லாமல் அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்கும். பகுத்தறிவை குர்ஆன் சுன்னாவுக்கு முரணாக அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்குவது கடினம் அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் நிச்சயம் விளங்கும். தயவு செய்து பாவம் அது எந்த பாவமாக இருந்தாலும், செய்வதும், செய்யத் தூண்டுவதும் தவறே.

கேவலமானவனும் நாம் அனைவரும் வெறுக்கக்கூடியவனுமான சைத்தானின் தந்திரத்திற்கு துனைப் போகுவிதமாக தன் சிறுநீரையும், தன் உள்ளாடைகளையும், தலை முடிகளையும் கேவலப்பட்டு கொடுத்திருப்பதால், கொடுத்தவர்களை பார்த்து சைத்தான் நிச்சயம் சந்தோசப்படுவான். காரணம் சைத்தான் அல்லாஹ்வை ஏற்றுள்ளவர்கள் கேவலப்படுவதை மிகவும் விரும்புகிறவன் என்பது நான் சொல்லி அந்த சகோதரர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

கால்களை, கைகளை முடக்குவோம், தற்கொலை செய்ய வைப்போம், குருடனாக ஆக்குவோம், பைத்தியம் ஆக்குவோம், இன்னும் என்னவெல்லாமோ..., என்று கூறியுள்ள அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனுடைய சூனிய ஒப்பந்ததிற்கும் குர்ஆன் சுன்னா பார்வையில் சூனியத்திற்கு தாக்கத்திற்கும் ஒரு துள் அளவும் சம்பந்தமும் இல்லை. இதனை ஒரு பொருட்டாகவே எந்த ஒரு முஃமீனும் எடுக்கக்கூடாது. கேடுகெட்டவர்கள், அயோக்கியர்கள், சைத்தானின் கூட்டாளிகள் செய்யும் சூனியம் அல்லாஹ் நாட்டமிருந்து அது பலித்தாலும் அல்லது அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் பலிக்கவிட்டாலும், 1400 வருடத்திற்கு மேலாக பாதுகாக்கபட்டுள்ள குர்ஆன் வசனங்களிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி சொல்லப்பட்டுள்ளவைகளில் எந்தவித மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதை நினைவூட்டுகிறேன். அல்லாஹ் போதுமானவன்.

மற்றுமொரு முக்கிய தகவலை பதிவு செய்கிறேன். சூனியச் சவால் விட்டுள்ள இயக்கத்தின் தலைவருக்கு கேடுகெட்ட அகோரி மணிகண்டன் மற்றும் கோமாளி திருப்பூர் அதுல்தீன் செய்யும் சூனியம் பதிக்கக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பம். அந்த இயக்கத்தின் தலைவர் குர்ஆன் சுன்னா வழியில் எவ்வாறு 10 வருடங்களுக்கு முன்பு ஷஹீஹான ஹதீஸ்களை மறுக்க வேண்டியதில்லை என்றிருந்தாரோ அதே கொள்கையோடு திருந்தி வர வேண்டும். மீண்டும் ஏகத்துவ எழுச்சி தமிழ முழுவதும் அனைத்து ஏகத்துவ சகோதரர்களின் அர்பணிப்புடன், வீரியத்துடன், இஹ்லாசுடன் செயல்பட வேண்டும் என்பதும் நம் அனைவரின் விருப்பம். இதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துனை புரிவானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்களின் அனுகுமுறைகள், அவர்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவேனும் நாம் அர்ப்பணித்திருக்கிறோமா ? என்ற சுயபரிசோதனை வினாவை நமக்குள் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

என்றுதான் படிப்பினைபெறப் போகிறோம்? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தொடர் : 4
"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! "

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த அத்தியாயமும் தொடர்கிறது.

என்றுதான் படிப்பினைபெறப் போகிறோம்?

அல்லாஹ் யாரை நேர்வழிபடுத்த நாடுகிறனோ, அவர்களை யவராலும் வழிகெடுக்க முடியாது, அல்லாஹ் யாரை வழி தவற செய்கிறானோ அவர்களை யாராலும் நேர்வழிபடுத்த முடியாது. அல்லாஹ் யாரை நேர்வழிபடுத்தினானோ அவர்கள் ஈமானில் உறுதியோடு இருப்பதற்கு வல்லவன் ரஹ்மானில் அருள் உண்டு என்பதற்கு இந்த சகோதரியின் வாழ்வு ஓர் உதாரணம்.

ஆரம்பத்தில் இஸ்லாத்தை வெறுத்தவர், பின்னர் ஹிந்து மதத்தில் உள்ள பல கடவுள் கொள்கை வேண்டாம் என்று சொல்லி கிருஸ்தவத்திற்கு சென்றார், அதிலும் பல கடவுள் கொள்கை மேலோங்கி இருப்பதை அறிந்தார். ஒரு நாள் ஒரு நாளிதழில் நபி(ஸல்) அவர்கள் ஈசா(அலை) அவர்களைப் பற்றி நன்மதிப்போடு கூறிய செய்தியை வாசிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு ஏற்படுகிறது, நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு நல்ல மனிதரா? என்ற கேள்வியோடு தன் தோழி ஒருவரிடம் இஸ்லாம் பற்றி கேட்டு அறிந்து கொண்டு. பின்னர் இஸ்லாத்தை ஏற்கிறார். இஸ்லாத்தை ஏற்ற பின்பு தான் அவருக்கு காத்திருந்தது எண்ணிலடங்கா துன்பங்கள் அச்சுறுத்தல்கள், இந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களை கேட்கும்போது நம்மை அரியாமலே கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலாது.


இந்த காணொளியில் கேட்ட இந்த சகோதரி (ஆய்ஷா ஃபாத்திமா) அனுபவித்தது போல் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திலிருப்பதனாலோ அல்லது அந்த கொள்கையில் நிலைத்து நின்று ஏற்றதற்காக அனுபவித்திருக்கிறோமா?

உம்மா வாப்பா அப்பா உம்மம்மா சாச்சா பெரியப்பா இவர்களுக்கு  பயந்து எத்தனை ஷிர்க்கான பித் அத்தான காரியங்களை அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம்? அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபி(ஸல்) அவர்களின் வழி முறையை மீறியிருப்போம்?

காணொளியில் காணும் இந்த சகோதரி பட்ட கஷ்டங்களை காதுளால் கேட்டதும் நம் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறதே! ஆனால் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் மக்கத்து காபிர்களால் கொடுமைப் படுத்தப்பாட்டார்களே, அவைகள் எப்படிப்பட்ட கொடுமைகளாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியுமா நம்மால்?

இந்த சகோதரி செய்த தியாகத்தில் எத்தனை சதவீதம் இஸ்லாத்திற்காக நாம் என்ன தியாகம் செய்தோம் என்ற கேள்வியை இப்போது நம்மை பார்த்துக் கேட்டுக் கொள்வோம்.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொள்வோம். இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2014 | ,

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? - 3 

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா?

இஸ்லாமிய வரலாற்றில் பொறுமைக்கும், அமைதிக்கும், சகிப்புத்தன்மைக்கும் எடுத்தகாட்டாக வாழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களை முன்னுதாரணமாக கொண்ட நம் முஸ்லீம் சமூகம் கண்டதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படும் சமூகமாக மாறி வருவதை நாம் அன்றாடம் அவதானிக்க முடிகிறது. உலகலாவிய அளவில் ஒரு சிலர் முஸ்லீம்கள் என்ற போர்வையில் எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவதாக சித்தரிக்கப்பட்டு, நம்மை ஒரு தனிமைப் படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்ற மிகப்பெரிய சூழ்ச்சி யூத நஸாராக்களால் கட்டவிழ்த்தப்படுகிறது என்ற நிலையை மறுக்க முடியாத உண்மை.

இந்தியா, இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், செச்சன்யா போன்ற பிரதேசங்களில் முஸ்லீம்கள் தங்கள் உரிமைக்கு போராடினார்கள் என்று வரலாற்று புத்தகத்தை புரட்டினால், அவைகளில் உண்மை சம்பவங்களை மறைத்து, முஸ்லீம்கள் பொறுமை காக்கவில்லை என்பதையே பதிவு செய்யப்படுகிறது யூத நஸாராக்களின் சூழ்ச்சிகளால்.

ஆனால் ஒரு காலத்தில் ரஷ்யாவை அடக்க அல்கயிதா உருவாக காரணமாக இருந்தது அமெரிக்கா, ரஷ்யாவை ஒடுக்கியபின், அல்கயிதா இஸ்லாமியர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தவுடன், அவர்களின் அதீத வளர்ச்சிக்கு அஞ்சி, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மேல் போர் தொடுத்து அப்பாவி முஸ்லீம்களை தங்களின் பொட்டைத்தனமான வான்வழி தாக்குதலால் கொன்று குவித்தார்கள். பின் தன்னால் வளர்த்து விடப்பட்டவன் தனக்கு காலம் முழுக்க அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாத காரணத்தால், அமெரிக்கா அல்கயிதாவை அழிக்க திட்டம் தீட்டி. தான் வைத்திருக்கும் மீடியா பலத்தால், அல்கயிதாவை கொடூர இயக்கமாக சித்தரித்து முஸ்லீம்கள் மத்தியிலும் அல்கயிதாவின் மீது வெறுப்பை உருவாக்கி, பின்னார் அதன் தலைவரையும் கொலை செய்தது. இருப்பினும் அல்கயிதா தலைவரை கொன்றால், அல்கயிதாவையும் அழித்துவிடலாம் என்று கட்டம் கட்டிய அமெரிக்காவுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரும் சவாலாக உலக அளவில் உருவெடுத்துள்ளது தான் யூ எஸ் ஏ வின் செல்லப்பிள்ளை என்று முதலில் அறிமுகப்படுத்தபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.

இஸ்லாமிய வரலாற்றில், நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பின்னர் சத்திய சஹாபாக்கள், பின்னர் இமாம்கள், ஏராளாமான நல்லாட்சியாளர்கள் இஸ்லாமிய வழி முறையில் தங்களின் ஆட்சியை மிகச் சிறப்பாக செய்து மக்களுக்கு நன்மைகள் பல செய்து உலக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். இருப்பினும் சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் இஸ்லாத்திற்கு அவபெயர் தரும்விதமாக தங்களின் சுய லாபத்திற்காக வழிதவறி ஆட்சி செய்தார்கள். இவ்வாறானவர்களின் ஆட்சி முறைகளை எடுத்துக்காட்டி முஸ்லீம்களை கொடூரக்காரர்கள், கேவலமானவர்கள் என்று சித்தரித்து அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை இவ்வுலகை விட்டு அழித்தொழிக்க அன்றாடம் திட்டம் தீட்டியவண்ணம் உள்ளனர் காவித் தீவிரவாதிகளும், யூத நஸாராக்கூட்டனியும். அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க இந்த சுண்டக்காய்கள் செய்யும் சூழ்ச்சியால் ஒன்று செய்ய முடியாது. மாறாக இன்று வளர்ந்து வரும் கொள்கையில் முதன்மையாக இருப்பது இஸ்லாமிய கொள்கையே என்பதை மேற்கத்திய நாடுகள் இன்று அவர்களின் குடிமக்கள் இஸ்லாத்தை அதிகமதிகம் ஏற்கிறார்கள் என்ற அத்தாட்சிகளை கண்டு அதிர்ந்து போய் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்கத்திய யூத நஸாராக்களின் சூழ்ச்சிகள் ஒரு புறமிருக்க, முஸ்லீம்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டுள்ள ஷியாக்களும் தங்களுடைய வழிகெட்ட கொள்கையை சதாகமாக்கிக் கொள்வதற்காக, இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்து, அவ்வபோது முஸ்லீம்களை உணர்ச்சிவசப்பட வைத்து வேடிக்கை பார்த்து வருகிறது என்று வரலாற்றில் மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரும் மோசடியாக கருத்தப்படுகிறது. ஒரு புறம் சிரியாவிலும், ஈராக்கிலும் கொத்து கொத்தாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், முஸ்லீம்களை உணர்ச்சி வசப்பட வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள் ஷியா அடி வருடிகளான பஸ்ஸார் அல் அசத், ஈரானிய அரசு, ஹிச்பல்லா இயக்கம். மேலும் இவர்களின் இந்த இனப்படுகொலை செயலை கண்டிக்கக்கூட துப்பற்றவர்களாக இன்று கிலாபத்தை (ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லாத)  முன்னிலைப் படுத்தி அரசியல் சாக்கடையில் விழும் இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் பற்றி பரவலாக தகவல்கள் மீடியாக்களில் அவ்வபோது வெளிவந்த வண்ணம் உள்ளது. அவைகளில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். இஸ்லாம் எந்த மனிதனையும் அநியாயமாக கொலை செய்யக்கூடாது என்கிறது. ஒருவன் செய்யும் பாவத்தை மற்றவன் ஏற்க வேண்டும் என்ற விதி இஸ்லாத்தில் இல்லை. மேலும் பழிவாங்குவதையே முன்னிலைப்படுத்துவதை விட மன்னிப்பை முன்னிலைப்படுத்தும் அழகிய மார்க்கம் இஸ்லாம். ஐ எஸ் ஐ எஸ் இஸ்லாமிய கிலாபத்தை அறிவித்திருப்பது மார்க்கப்படி சரியா? தவறா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய விசயம் என்றாலும். இன்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் அங்குள்ள மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்களை, சமையல் எரிவாயு போன்றவைகளை மலிவு விலையில் விநியோகித்து, பசி பட்டினியால் சாகக்கிடக்கும் ஏராளாமான மக்களை அல்லாஹ்வின் உதவியுடன் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை காணொளிகள், புகைப்படங்களில் காண முடிகிறது. ஆனால் அவர்கள் பெயரில் வரும் மாறுபட்ட சில செய்திகள், அதாவது அப்பாவிகளை கொல்லுவது போன்ற காட்சிகள் முஸ்லீம்களிடம் ஐஎஸ்ஐஎஸ் போராளி இயக்கம் வெறுப்பை சம்பாதிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. உண்மையில் ஈராக்கிலும், சிரியாவிலும் என்ன நடக்கிறது என்பது யாருக்கு தெரியாது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் பற்றிய செய்திகளை ஆய்வு செய்யாமல் அர்வக் கோளாற்றால் முகநூலில் எதிராகவும் சார்பாகவும் மனதில் தோன்றியதை எழுதி வருகிறார்கள்.

இது போல் காஸாவில் 1000க் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை எந்த ஒரு மனிதாபமான உள்ளவனாலும் சகிக்க முடியாது. இது ஒரு புறமிருக்க, உணர்ச்சிவசப்படும் சில முஸ்லீம்கள் சிரியா, ஈராக்கில் போராளிகள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட தாக்குதல் காணொளி காட்சிகளை வெளியிட்டு, இது ஹமாஸ் இஸ்ரேலுக்கு பதிலடி என்று பொய்யான செய்திகளை பரப்பி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் பல்வேறு நாடுகளில் அப்பாவி முஸ்லீம்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள், தொந்தரவுகள் இருக்கும் இந்நிலையில். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்து சூனியம். இன்று முஸ்லீம்களுக்கு தேவைப்படும் ஏதோ ஒரு மிகப்பெரும் ஆபத்துப் போன்று பொய்யாக சித்தரித்து மக்களை வழிகெடுத்து வருகிறது ஒரு கூட்டம். இதற்கெல்லாம் காரணம் நம் சமூகத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு பக்கம் சாயும் தக்லீத் கூட்டம் இருப்பதால்.  குர்ஆனிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி வந்துள்ளதால், நபி(ஸல்) காலம் முதல், ஸஹாப்பாக்கள் காலம் தொடர்ந்து இன்று வரை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்லும் அனைத்து மார்க்க அறிஞர்களும் சூனியத்திற்கு தாக்கம் உண்டு, அல்லாஹ் நாடினால் மட்டுமே அதற்கு தாக்கம் ஏற்படும் என்று சொல்லி வருகிறார்கள். மேலும்  சூனியம் செய்யக்கூடாது, சூனியம் கற்கவோ கற்பிக்வோ கூடாது, சூனியக்காரனிடம் சூனியம் வைக்கவோ வெட்டவோ கூடாது.. சூனியம் அவனுக்கு செய், எனக்கு செய் என்று ஒருவனை தூண்டக்கூடாது, அது மிகப் பெரிய பாவம், குப்ரு, ஷிர்க் ஆனால் குர்ஆனிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி ஏராளமான சம்வங்கள் வந்திருப்பதால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு அது அல்லாஹ்வின் நாட்டமின்றி அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது. இது தான் துளி அளவு முரண்பாடுகள் இல்லாத சரியான நிலைபாடு என்பதை குர்ஆன் ஹதீஸ் வழியில் நாம் அறிந்துள்ளோம்.

உணர்ச்சிகளை தூண்டி உலக அளவில் முஸ்லீம்களை இஸ்லாமிய வாழ்க்கையை விட்டு வழிதவற செய்ய மேற்கத்திய சக்திகள் ஒரு புறமும், மற்றொரு புறம் ஸஹாப்பாக்களை சபிக்கும் ஷியாக்கூட்டமும் ஏராளமான சூழ்ச்சிகள் செய்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். இது போல் தமிழ் முஸ்லீம்களிடமும் உணர்ச்சிகளை தூண்டி, பொய்யான தவறான விளக்கங்களை குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களுக்கு கொடுத்து ஏனைய முஸ்லீம்களை முஷ்ரிக்குகளாக்க மிகப்பெரிய சூழ்ச்சிகளை அறிந்தோ அறியாமலோ ஒரு கூட்டம் செய்து வருகிறது. ஒரு ஆபத்தான காலகட்டத்தில் உலக முஸ்லீம்களும் இந்திய முஸ்லீம்களும் உள்ளனர் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் வழிகேட்டு சிந்தனைக்கு மிக முக்கிய பங்கு ஒரு தலைவனை தக்லீத் செய்யும் ஒரு கூட்டம் இருந்து வந்ததே. அல்லாஹ் நம் எல்லோரையும் எவனையும் இவ்வுலகில் தக்லீத் செய்து வழிகேட்டுக்கு செல்லாமல் பாதுகாப்பானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? - 2 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, முன் மாதிரி என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இரண்டாவது அத்தியாயம் தொடருகிறது.

“திருக்குர்ஆனை மதிக்கிறோமா?”

திருக்குர்ஆன் இவ்வுலகில் அல்லாஹ்வால், நபி(ஸல்) அவர்கள் மூலம் நமக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம் என்பதில் நம் யாருக்கு மாற்றுக் கருத்தில்லை. குர்ஆன், சுன்னா என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் நம் சமுதாயம் நமக்கு கிடைத்த காலத்தால் அழியாத அருட்கொடை திருக்குர்ஆனுக்கு உரிய மரியாதை கொடுத்து, நம்முடைய வாழ்வை திருக்குர்ஆனுக்காக கொஞ்சமாவது ஒதுக்கி இருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இந்த பதிவு ரமளான் நெருங்கிக் கொண்டிருப்பதற்காக மட்டுமல்ல. ஒரு சிலர் ரமளானில் திருக்குர்ஆனை ஓதிவிட்டு பெருநாளோடு மூடிவிட்டு அடுத்த ரமளானுக்குத் தான் திறந்து பார்ப்பார்கள். இன்னும் சிலரோ ரமளானின் முதல் இரண்டு நாட்கள் திறப்பார்கள், பின்னர் மூடிவிட்டு இறுதி மூன்று நாட்களுக்கு மட்டும் மீண்டும் திறந்து மூடுவார்கள். திருக்குர்ஆனை திறப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட திருக்குர்ஆனை மூடுவதில் மிக ஆர்வம் காட்டுகிறோம் என்பது நம்முடைய ஒவ்வொருவரின் மனசாட்சிக்கு தெரியும்.

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேத வசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும் என்பதை அல்லாஹ் பின் வரும் வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது

குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? 
(அல்குர்ஆன் 54:32)

சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் - மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 10:57)

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.  (அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி)

இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)

இது போல் திருக்குர்ஆனின் சிறப்புகள் பற்றி திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் தேடினால் ஏராளம் காணலாம். ஆனால் நாம் எந்த அளவுக்கு திருக்குர்ஆனோடு நெருங்கியுள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆன் புரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ் நமக்கு எளிதாக்கி வைத்துள்ளான் என்பதை அறிந்த நாம், அந்த திருக்குர்ஆனை ஒரு பாரமாக நினைக்காமல், திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதி புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாமே!

இன்றைய காலகட்டத்தில், நம்முடைய இதயத்தில் ஏற்படும் நோய்களுக்கு நிவாரணம் என்பதை அறிந்துள்ள நாம் திருக்குர்ஆனை ஓதி, பொருள் உணர்ந்து நம்முடைய நோயை குணப்படுத்த முயற்சிக்கலாமே!

மனிதர்களில் சிறந்தவர், திருக்குர்ஆனை தானும் ஓதி, பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே என்ற நபிமொழியை அறிந்த நாம், இனி நாமும் ஓதி பிறருக்கும் ஓத கற்றுக்கொடுக்க முயற்சிக்கலாமே!

திருக்குர்ஆனைக் கொண்டே அல்லாஹ் ஒரு சிலரை உயர்த்துகிறான், ஒரு சிலரை தாழ்த்துகிறான். திருக்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி, அதனை நம் வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு அல்லாஹ் உயர்த்தும் அந்த நல்ல மனிதர்களாக நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே!

திருக்குர்ஆனை நாம் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டும், பொருள் உணர்ந்து ஓதவேண்டும், கற்றவைகளை நம் வாழ்வில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

திருக்குர்ஆனை அழகிய குரலில் ஓதிய 11 வயது சிறுமி ஹாபிழ் பராஆ, புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைத்தார் என்பது நாம் அறிந்தது. இந்த சிறுமியின் குரலில் வெளிவந்து உலக புகழ்பெற்ற சூரத்துர் ரஹ்மான் கிராஅத்தை தமிழ் மொழியாக்கத்துடன் காணொளிக் காட்சியாக தயாரித்துள்ளேன். இதோ உங்கள் பார்வைக்கு.


சிறுமி ஹாபிழ் பராஆ அவர்கள் தூய இஸ்லாத்திற்காக திருக்குர்ஆனை ஓதி தன்னுடைய அழகிய குரலை அர்பணித்து இவ்வுலகை விட்டு மறைந்துள்ளார். ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் இந்த தூய இஸ்லாத்திற்காக நாம் என்ன அர்பணிப்பு செய்துள்ளோம்? இந்த கேள்வியை உங்களுக்கும் எனக்குமாக கேட்கிறேன்.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு