தலையணை மந்திரம்
தனையனை எந்திர மாக்கிட
தாம்பத்யம் தந்திர மானது
தந்தையும் தாயும்
தொந்தர வாயினர்
முந்தின இரவிலோ
மூர்க்கம் கூட்டி
மந்திரித்த பின்
தாயிடம் வந்தனன் மகன்
பேயிடம் கற்றதைச் சொல்லிட…
அவர்களைப் போலவே
அநேக ருள்ளதால்
பேசவும் பழகவும்
வாகாகிப் போகுமாம்
உண்ணவும் உடுக்கவும்
உதவிக்கு ஆளுண்டாம்
உறக்கம் மட்டுமே
தனிமையின் சவாலாம்
மாலையில் நடக்க
மயக்கும் சோலையாம்
புட்கள் விரித்த
பூமியே பாதையாம்
வார மொருமுறை
வந்து பார்ப்பானாம்
வேறு விடுமுறை
வந்தாலும் வருவானாம்
சுமந்து ஈன்றவள்
சுமையாகி நின்றிட -அவன்
தந்தை சொல்வது
விந்தையாய் தோன்றிட
ஆயா வேண்டாமென்று
அலுவலகம் துறந்தவள்
அவனை வளர்த்தெடுக்க
அல்லல் பல பட்டவள்
மகனின் மகிழ்ச்சியே
மனதார வேண்டுபவள்
மறுத்தா பேசுவாள்
மடி கொடுத்த மாதரசி
தந்தை முறையிட்டும்
தானதைக் கேட்டாளா
தம்மகன் சொன்னதுபோல்
தயாரானாள் தாயவள்
மந்திரம் பொய்த்ததோ
மாங்காய் புளித்ததோ
மறுநாள் மகனிடம்
மருமகள் சொன்னாளாம்
அத்தையை காப்பகத்திற்கு
அனுப்பிடல் வேண்டாமென
அன்பைப் பொழிந்தாளாம்
அரிதாய் மருமகளும்
சேனியன் குடுமி
சும்மா ஆடாதே
மருமகளின் பாசப்
பின்னனிப் புரியவில்லை
கடின வேலை யேதும்
கண்டிப்பாய் கூடாதாம்
காலையும் மாலையும்
கட்டாய ஓய்வாம்
வீட்டு வேலை செய்யவும்
கூட்டிப் பெருக்கவும்
வேலைக்காரி வைத்து
கூலி தர இயலாதாம்
என்ன ஏதென்று
பதறிய மகனுக்கு
மருத்துவச்சி சொன்னதாக
மருமகள் சொன்னாள்:
“உண்டாயிருக்கேன்”
தனையனை எந்திர மாக்கிட
தாம்பத்யம் தந்திர மானது
தந்தையும் தாயும்
தொந்தர வாயினர்
முந்தின இரவிலோ
மூர்க்கம் கூட்டி
மந்திரித்த பின்
தாயிடம் வந்தனன் மகன்
பேயிடம் கற்றதைச் சொல்லிட…
அவர்களைப் போலவே
அநேக ருள்ளதால்
பேசவும் பழகவும்
வாகாகிப் போகுமாம்
உண்ணவும் உடுக்கவும்
உதவிக்கு ஆளுண்டாம்
உறக்கம் மட்டுமே
தனிமையின் சவாலாம்
மாலையில் நடக்க
மயக்கும் சோலையாம்
புட்கள் விரித்த
பூமியே பாதையாம்
வார மொருமுறை
வந்து பார்ப்பானாம்
வேறு விடுமுறை
வந்தாலும் வருவானாம்
சுமந்து ஈன்றவள்
சுமையாகி நின்றிட -அவன்
தந்தை சொல்வது
விந்தையாய் தோன்றிட
ஆயா வேண்டாமென்று
அலுவலகம் துறந்தவள்
அவனை வளர்த்தெடுக்க
அல்லல் பல பட்டவள்
மகனின் மகிழ்ச்சியே
மனதார வேண்டுபவள்
மறுத்தா பேசுவாள்
மடி கொடுத்த மாதரசி
தந்தை முறையிட்டும்
தானதைக் கேட்டாளா
தம்மகன் சொன்னதுபோல்
தயாரானாள் தாயவள்
மந்திரம் பொய்த்ததோ
மாங்காய் புளித்ததோ
மறுநாள் மகனிடம்
மருமகள் சொன்னாளாம்
அத்தையை காப்பகத்திற்குஅனுப்பிடல் வேண்டாமென
அன்பைப் பொழிந்தாளாம்
அரிதாய் மருமகளும்
சேனியன் குடுமி
சும்மா ஆடாதே
மருமகளின் பாசப்
பின்னனிப் புரியவில்லை
கடின வேலை யேதும்
கண்டிப்பாய் கூடாதாம்
காலையும் மாலையும்
கட்டாய ஓய்வாம்
வீட்டு வேலை செய்யவும்
கூட்டிப் பெருக்கவும்
வேலைக்காரி வைத்து
கூலி தர இயலாதாம்
என்ன ஏதென்று
பதறிய மகனுக்கு
மருத்துவச்சி சொன்னதாக
மருமகள் சொன்னாள்:
“உண்டாயிருக்கேன்”
- சபீர்


