Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வீட்டுப் பாடம். Show all posts
Showing posts with label வீட்டுப் பாடம். Show all posts

வீட்டுப் பாடம் (home work) 31

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2013 | , , ,

அரிச்சுவடி வகுப்புப் பாடம்;
ஆத்திச்சூடி வீட்டுப் பாடம்

இலகுவான
இரண்டாம் வாய்ப்பாடை
வகுப்பில் படி;
எசகுபிசகான
ஏழாம் வாய்ப்பாடோ
வீட்டுப் பாடம்

வசதியாக
வாய்ப்பாடம் வகுப்பில்;
மெனக்கெடும்
மனப்பாடம் வீட்டில்

இரண்டோடு மூன்றைக் கூட்ட
வகுப்பில் போதனை:
வீட்டுப் பாடத்திலோ
ஏழையும் ஒன்பதையும்
கூட்டச் சொல்லி சோதனை

வகுப்பறையோ
நேரிடையாகக்
கழித்தல் கற்க;
வீட்டுப் பாடத்தில்
கடன் வாங்கிக் கழி

சொச்சமில்லாப் பெருக்கல்கள்
வகுப்புப் பாடம்
ஸ்தானம் மாற்றிப் பெருக்கும்போது
மறவாமல்
சொச்சத்தையும் கூட்டச் சொல்
வீட்டுப் பாடத்தில்

வகுப்பறை வகுத்தல்களில்
ஈவு மட்டுமே விடை;
வீட்டுப் பாடத்தில்
மீதியும் மிஞ்சும்

மூன்று கோணங்களோடு
மூன்று பக்கங்களே முக்கோணம் என்பது
வகுப்புப் பாடம்;
பல டிகிரிகளிலும் சென்ட்டிமீட்டரிலும்
முக்கோணங்கள் செய்ய வேண்டியது
வீட்டுப் பாடத்தில்

புதிய
ஆங்கிலச் சொல்லொன்று
அறிமுகம் செய்வது வகுப்பில்;
அதை
வாக்கியத்தில் அமைப்பதே
வீட்டுப் பாடம்

கோடிட்ட இடங்களை
பாடத்திலிருந்து
குறிப்பெடுத்து நிரப்ப வகுப்புப் பாடம்;
அந்தப்
பாடத்தின் உட்கருத்தை
சுருக்கி வரைக என வீட்டுப் பாடம்

ஏழு வர்ணங்களே வானவில்
வகுப்பரையில் கற்பது;
அதை
வரைந்து வருவதும்
வார்த்து வருவதும்
வீட்டுப் பாடம்.
வானப் பின்னணி
பேணப்படாவிடில்
பத்துக்கு ஒன்பது
மட்டும்தான் கிட்டும்.

உல்லாசமாகச்
சுற்றுலா செல்வது
வகுப்புப் பாடமெனில்;
அதைக் கட்டுரையாக்குவது
வீட்டுப் பாடம்

நாட்குறிப்பேடு என்னும்
ஓலை வழியாக
பெற்றோருக்குச் சுமையாக
வீட்டுப் பாடத் திட்டங்கள்

அடிப்படைகளை வேண்டுமானால்
வீட்டுப் பாடமாக்குங்கள்
அதற்குமேற்கொண்டு
ஐயன்மாரே
எங்களை வதைக்காமல்
வகுப்பில் நடத்துங்கள்!

வீட்டுக்கு ஓர் ஆசான்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு