அதிரை தக்வா பள்ளியில் சமீபத்தில் நடந்தேறிய மவ்லூது கச்சேரிக்கான போட்டியல்ல இது, மாறாக அதற்கு நேர் எதிரானது, அதுவும் கிரவ்னுடைய வரிகள் நிரம்ப சுடத்தான் செய்யும் அது நெருப்பென்று தெரிந்தும் அங்கே குளிர் காய்பவர்களுக்கு மட்டுமே.
இது
மடைமை பாடும் ராகம்!
கபுரில்
இருளை நாடும் சோகம்!
மார்க்க அறிவினை
அழித்திடும் கரையான்!
மெய்ஞானமில்லாத்
தேடல்!
------------------------------
சலவாத்துச் சொல்லும் வாயில்
ஷிர்க்கின் வாசனை!
வல்லவன் அல்லாஹ்வின் ஆற்றைலை
சந்தேகிக்கும் கேனை!
சிறப்பான இஸ்லாம் வழியில்
நடவாத ஊனம்!
உயிருக்கு மேலான நபி(ஸல்)க்கு வேண்டாமே
சாத்தான் கானம்!
------------------------------
வெற்று கத்தலிலே
ஈமான் பூ மலருமா?
கட்டு கதை படித்தால்
கல்லறைப் பரிட்சையில் தேறமுடியுமா?
------------------------------
நடந்தவரை போகட்டும்
தவ்ஹீத் ஒளியில் நன்மைதேடு!
இப்படிதான் செல்வேன் என்றால்
இம்மையிலும் மறுமையிலும் தொடரும் கேடு!
உன் சகோதரன் என்பதால்
உரக்கச்சொல்கிறேன்!
இப்படித்தான் சாவேன் என்றால்
உன் வழி நாசம்!
------------------------------
உயிர் உள்ள போதே
தெளிந்து தேறு!
சந்தனம் என்று எண்ணி
பூசுவது சேறு!
கண்னை மூடிக்கொண்டு
வெளிச்சம் தேடுவதா?
------------------------------
சகோதரா!!
என் கடமை
நன்மையை ஏவி தீமையை தடுப்பது!
கேட்டுத் தெளிந்தால்
சுவர்கம்!
இல்லையேல்
நிரந்தர நரகம்!
CROWN


