தொடர் பகுதி - இருபத்தி ஆறு

இப்படி , இஸ்ரேல் என்ற யாருக்கும் அடங்காத சீமைக்காளையை வளர்த்து வரும் அந்த வெள்ளையம்மாள், இராமநாதபுரத்து சாயல் குடியில் இல்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் . இந்த வெள்ளை மாளிகை வளர்க்கும் இந்த மிருகம் ஒரு காளை அல்ல ; ஒரு காவல் நாய் . எண்ணெய் வளம் கொழித்திருக்கும் அரபு நாடுகளுக்கு மத்தியில், அவற்றைக் கண்காணித்து அவ்வப்போது குரல் கொடுத்துக் குரைத்து தனது அமெரிக்க எஜமானுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுக்க ஏவப்பட்ட காவல் நாய்தான் இஸ்ரேல்.
ஆயுதங்கள் என்றும் ஆதரவு என்றும் இந்தக் காவல் நாய்க்குப் போடப்படும் எலும்புத் துண்டுகளை கவ்விப் பிடிக்கும் இந்தக் காவல்நாய் மனிதாபிமானங்களை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு மனிதர்களை வேட்டையாடி வருகிறது. குழந்தைகள் கொல்லப்படுகின்றன; வயோதிகர்கள் வன்முறைக்கு பலியாகிறார்கள்; மக்கள் மந்தைகளாக நடத்தப் படுகிறார்கள். வானில் பறக்கும் கழுகு போல் விமானங்கள் நடு இரவில், உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கூட உன்மத்தம் பிடித்து குண்டுகளைப் பொழிகின்றன. நாட்டின் பகுதிகளில் நடமாடும் உரிமையும், கடற்கரைப் பிரதேசங்களில் கப்பலேறும் உரிமையும், விவசாய நிலங்களில் விளைவிக்கும் உரிமையும், மொத்தத்தில் மூச்சுவிடக் கூட முன் அனுமதி பெற்று வாழவேண்டிய நிலைமைக்கு பாலஸ்தீனத்தின் பாரம்பரிய மக்கள் தள்ளப்பட்டு பாவிகளின் கரங்களில் சிக்கி படாத பாடு பட்டு வருகிறார்கள். இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா, உலகுக்கு மனித உரிமைகள் பற்றி போதனை நடத்தி வருகிறது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்ப அல்ல கதறிக் கண்ணீர் விடும் பாலஸ்தீன மக்களின் நிலையைக் காணும் மக்களின் மனங்களில் இயல்பாக எழும் கேள்வி ஒன்று உண்டு. பாலஸ்தீனத்து மக்களோ பிறப்பால், மார்க்கத்தால், இனத்தால் அரபுகள். அவர்களும் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரபு நாடுகளோ அந்த அல்லலுறும் மக்களைச் சுற்றி அரசமைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மினி லக்ஸ் சோப் அளவில் இருக்கும் இஸ்ரேலை சுற்றிலும் இருக்கும் இந்த அரபு நாடுகளால் அதட்டி வைக்க இயலாதா? என்பதே அந்தக் கேள்வி.
இயலாது என்பதல்ல; இயலும் என்று ஈடுபடக் கூட இல்லை என்பதே வேதனையான உண்மை. காரணமென்னவென்றால், அரபியர்களின் சகோதரத்துவம் என்பது ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது ; அது அரசியல் சார்ந்ததல்ல என்பதற்கு பல உலக வரலாற்று உதாரணங்களை நாம் காட்ட இயலும். ஹஜ் போன்ற கடமைப் பயணங்களில் ஆன்மீக ரீதியில் அகில உலக முஸ்லிம்களையும் சமத்துவத்துடன் சகோதரர்களாக அரவணைக்கும் அரபுதேசங்கள் , முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் அரசியல் ரீதியாக ஒரு சிறு ஆட்டம் கண்டாலும் அந்த ஆட்டத்தைப் போக்க ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடுவதில்லை.
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதெல்லாம் அரபியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அறிமுகமில்லாத உள்ளுணர்வுகள் ஆகும். தங்களின் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட மக்களின் நலனில் காட்டும் அக்கறையை அடுத்த நாட்டு முஸ்லிம்களின் மீது காட்டி அரவணைப்பது அவர்களுக்கு அரப்புத் தூளைக் கண்ணில் கொட்டும் அளவுக்கு அருவருக்கும் விஷயம்தான். தங்களின் எண்ணெய் வளத்துக்கு எந்த வல்லரசாலும் எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவற்றின் தலையாயக் கவலை. அதை விட்டுவிட்டு சகோதரர்கள் என்று பாவம் புண்ணியம் பார்க்கத் தொடங்கினால் சதாம் ஹுசேனுக்குக் கிடைத்த தூக்குக் கயிறுதான் அவர்களுக்கும் பரிசாகத் தரப்படுமென்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே வைத்து இருக்கிறார்கள் என்பதே உண்மையிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஊனமில்லாத உண்மை.
அதனால்தான் இன்று பொருளாதார வலிமை வாய்ந்த அரபு நாடுகளின் மத்தியில் போக்கிடம் இன்றி பாலஸ்தீனர்களும் உண்ண உணவின்றி சோமாலியர்களும் எத்தியோப்பியர்களும். வேலைவாய்ப்பின்றி இதர ஆப்ரிக்க முஸ்லிம்களும் அல்லல் படுகின்றனர். ஆனால் அரபு நாடுகளோ ஆங்கிலப் புத்தாண்டுக்கு வான வேடிக்கைகள் விட்டு அதில் கின்னஸ் ரிகார்டு படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் கூட ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளால் அன்றாடம் அவதியுறும் முஸ்லிம் மக்களைக் கண்டும் காணாமல் அந்த மக்களை அவதிக்குள்ளாக்கும் வல்லரசுகளுடன் கை குலுக்கி கை கோர்த்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஓமான் நாட்டு மண்ணிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் நடமாடிய சவூதி அரேபியாவின் மண்ணிலும் யூதர்களைப் பாலூட்டி வளர்க்கின்ற அமெரிக்க இராணுவம் தங்களது முகாம்களை அமைத்துக் கொள்ள இராஜதந்திரம் என்ற பெயர் சூட்டி இடம் கொடுத்து உதவி இருக்கின்றன.
வட்டி, சூது, மது ஆகிய இஸ்லாத்தால் தடுக்கப்பட்ட பாவச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்காத அரபு தேசங்கள் எங்கே இருக்கின்றன? தேடித் பாருங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். விபச்சாரம் போன்ற தீயச் செயல்களும் குதிரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களும் நடத்தும் நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதற்குப் பெயர் சுற்றுலா வளர்ச்சி.
ஆனால் சொந்த சகோதரர்கள் சாவதைக் கண்டு , ஹராம், முஷ்கீல், அல்லாஹ் கரீம் என்கிற ஆறுதல் வார்த்தைகளை மட்டும் உதட்டளவில் உதிர்க்கும் அரபுகளே அநேகம். இதோ ஒரு கவிமாமணியின் கோபம் இப்படி வெளிப்படுகிறது.
மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !
ஆப்கன் விதைஎடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடிமுந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !
அலிப்
எழுத்துப்போல சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே ...
ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில் மூழ்கிப்போகும்
யூத - அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !
மேலும்... மற்றொரு கவிதையில்..
காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !
அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .
மேலும்... மற்றொரு கவிதையில்..
காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !
அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .
(எனது மரியாதைக்குரிய பேராசிரியர் தி. மு. அ. காதர்)
இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தின் முதல் வரிகளை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறி திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இரு புறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை?
மேற்கண்ட வரிகளின் அடிப்படையில்தான் பல அரசியல் கலந்த வரலாற்று அம்சங்கள் கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாக முதல் பாகமாக அலசப்பட்டன.
எவ்வளவுதான் அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் என்றும் நிலைத்து நிற்பவை எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளும் அவனது அனைத்துத் திருத்தூதர்களின் வார்த்தைகளும்தான் என்கிற கருத்தை நிலை நிறுத்தி இந்தத் தொடரை இப்போது நிறைவு செய்வோம்.
இறைவனின் வாக்குகளின் அடிப்படையிலும் பெருமானார் (ஸல் ) அவர்களின் மொழிகளின் அடிப்படையிலும் நாம் நிலை நிறுத்த விரும்ம்பும் கருத்து யாதெனில் , இன்று இஸ்ரேல் அமைக்கப்பட்டிருப்பதும் யூதர்கள் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து இருப்பதும் ஒரு தற்காலிகமாக மலர்ந்துள்ள மலர்தான் என்பதே . இஸ்ரேல், இன்று அமெரிக்க செடியில் மலர்ந்துள்ள மணம் வீசும் பூவாகத் தோன்றலாம். ஆனால் இது உலக அழிவுக்கு முன்னரே உதிரும் பூ என்பதுதான் இறைவனின் திட்டமும் சட்டமும்.
ஆது மகன் ஸதாது குலவலிமை பெருவாழ்வு அழியாமல் நிலை நின்றதோ?
அஷ்ட திசையும் வளைத்த சமூது கூட்டத்தின் அநியாயம் நிலைநின்றதோ?
மூது கடல் நம்ரூதெனும் கொடியவனின் முடியரசு நிலைநின்றதோ?
மூஸா நபிக்கெதிரியான பிர்- அவ்ன் தளம் முடியாமல் நிலை நின்றதோ?
வாது கொடும் சூது புகழ் பாதகன் அபுஜஹல் வஞ்சகம் நிலைநின்றதோ?
வள்ளல் ஹுசேனாரின் சிரம் வாளால் அறுத்த பழி வாங்காமல் நிலை நின்றதோ?
நூஹுக்குப் பின் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்துகொள்வதற்கு உங்கள் இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவை இல்லை). அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனும் உற்று நோக்கியவனுமாக இருக்கிறான் . ( அல் குர்-ஆன் 17 : 16- 17 ).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“முஸ்லிம்களாகிய நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். - நூல்.முஸ்லிம். 5598.
நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த முன்னறிவிப்பு நிகழப்போகும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளம் தான் இந்த பாலஸ்தீன ஆக்கிரமிப்பு.
பாலஸ்தீனத் தொடரில் இதுவரை அரசியல் வரலாற்று செய்திகள் . இனி, ஆன்மீக வரலாற்றுச் செய்திகள் மற்றும் ஆய்வுகள்; அல்லாஹ் மற்றும் அவனது அருள் தூதரின் மொழிகளில் எதிர்கால பாலஸ்தீன் மற்றும் கிருத்தவ- யூதர்கள் மற்றும் அவர்களுடைய கூஜாதூக்கிகளின் நிலை. எங்கே போகும் இந்தப் பாதை? என்ற கேள்வியுடன் .
முதல் பாகம் நிறைவுற்றது !
இரண்டாம் பாகம் - இன்ஷா அல்லாஹ் தொடரும்... !
இபுராஹீம் அன்சாரி