Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label media. Show all posts
Showing posts with label media. Show all posts

ஊடக போதை ! 54

அதிரைநிருபர் | December 08, 2011 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பானவர்களுக்கு....
முகவுரை:
இன்று நேற்று என்றில்லாமல் நீண்ட காலமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலையில் உலகில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள் என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும் அவைகளை பொருட்படுத்தாமல், பின் விளைவுகளை அலசி ஆராயாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றால் நாம் அடைந்து வரும் இன்னல்களுக்கு அளவே இல்லை. வருங்கால சந்ததியினரும் இந்த கேடுகெட்ட ஊடகங்களால் பல கொடிய இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அநேக ஊடகங்களின் அட்டூழியங்களை அவ்வப்போது கட்டவிழ்த்து விடும் நிகழ்வுகளை வைத்து அலசி ஆராயும் விதமாக இந்த பதிவை தொடராக பதியலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
பொய்யை மற்றும் ஆபாசத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு செயலாற்றி வரும் உலக, இந்திய, தமிழ் ஊடகங்களை எதிர்த்திடும் அல்லது களையெடுக்கும் வேலையை நாம் செய்ய உணர்ச்சிகளின் வேகம் ஒரு புறமிருந்தாலும். அவ்வப்போது அதிரையில் இணைய மற்றும் தினசரி ஊடகத்துறையில் சாதனை படைக்க துடிக்கும் பலருக்கு ஊக்கமும், உற்சாகமும் தந்து நல்ல படிப்பினைகளுடன் கூடிய வழிகாட்டலுடன், யாருடைய மனதையும் புண்படுத்தாமல், மாறாக பண்படுத்தி. நட்புரீதியான விமர்சனங்களை எடுத்து வைத்து அவர்களை மெருகூட்டவும் ஒரு வழியை ஏற்படுத்தலாம் என்ற கோணத்திலும் இந்தப் பதிவு ஒரு தொடராக பயணிக்க உள்ளது.
ஊடகம் (தினசரி பத்திரிக்கைகள், வாரப்பத்திரிக்கைகள், மாதப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, சினிமா, இணையம், மின்னாடல் குழுமம்) என்ற போர்வையில் நடைபெரும் விரட்டியடிக்கப்பட்ட சைத்தானியத்தனத்துக்கும், முனாஃபிக்தனத்துக்கும் (நயவஞ்சகத்திற்கும்) சாட்டையடி கொடுக்கும்விதமாக (நமக்குள்) தனிமனிதச் சாடல்கள் எவ்விதத்திலும் கலந்துவிடாமல் அதே நேரத்தில் அழகிய பெயர்களைக் கொண்டு அல்லது அழைக்கும் பெயரே அழகென்றால் உங்களைப்பற்றிய தனிமின்னஞ்சல் அறிமுகம் செய்து கொண்டு அனைத்து வாசக நேசங்களும் மேலான கருத்துக்களை பதியலாம்.
அதிரை ஊடகங்கள்:
முதலில் வெளி ஊடகங்களை அவதானிக்கும் முன் இணைய ஊடகத்தில் அதிரைவாசிகளின் பங்கு எவ்வாறு உள்ளது?. வலைப்பூக்களின் எண்ணிக்கையும் அதனை கையாளும் விதமும், நுட்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏறிய விலையை குறைக்க அரசுகள் முழி பிதுங்குவதுபோல் எண்ணிக்கையை குறைப்பது சாத்தியமாகுமா என்பது கேள்விக் குறியே. தகவல்கள் / செய்திகளின் தரத்தை வைத்து நாமும் கனிசமான எண்ணிக்கையில் அதிரை வலைத்தளங்கள் / இணையதளங்களின் பக்கம் சென்று நமக்கு தேவையான நல்லவைகளை எடுத்துக் கொண்டு, நல்லவை அல்லாதது என்றறியப்படுபவைகளை அப்படியே ஒதுக்கி வைக்கிறோம்.

இது ஒரு புறமிருந்தாலும் போலியான புனைபெயர்களை விரும்பிய வகையில் வைத்துகொண்டு உண்மையின் / நேர்மையின் / சாடுவதற்கு ஒதுங்கும் நிழல்களாக வெகு சில சகோதரர்கள் ஏதோ சமூகத்தையும் ஊடகத்துறையிலும் மாற்றம் செய்யலாம் என்றும் துடிக்கிறார்கள். இது சரியா / தவறா என்பதை விரிவாகத்தான் பார்க்க வேண்டும்.
போலிப் புனைபெயர்களில் (தங்களை யாரென்றே தெரியப்படுத்தாதவர்கள்) எழுதுபவர்களாகட்டும், அப்படி எழுதுபவர்களை ஊக்குவிப்பவர்களாகட்டும். அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் அல்லது நல்ல / எதிரான கருத்துக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், முகம் / நிஜப் பெயர் தெரியாத நிழலாக கருத்துரையாடுவதால் பின்னூட்டத்தில் பின்னால் ஒட்டவும் / ஊக்கம் ஊட்டவும் செய்வதில் என்ன பயன் என்பதை உணர்ந்துதான் அவ்வாறு போலிப் புனைபெயர்களில் எழுதுகிறார்களா என்பது வினாவுக்குரியதே !
மற்றொரு பார்வையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நன்மையை நாடி இதுபோன்று போலியான புனைபெயர்களில் வலம் வருகிறோம் என்ற ஒரு வாதத்தை எடுத்துக் கொண்டால். உண்மையை ஒளிந்துக்கொண்டு எடுத்துச்சொல்ல இஸ்லாத்தில் அனுமதியுண்டா? அப்படியிருக்குமாயின் அதனைச் சான்றாக எடுத்துக் காட்டிவிட்டு போலியான புனைபெயரில் எழுதுவதில் நியாயம் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் போலி புனைபெயர்வாதிகளின் எழுத்துக்கள் நல்ல ரசனைக்காக படிப்பதற்கும் ஆராவரமாக இருக்கும்படியான நகைச்சுவையுடன் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் போலி புனைபெயரில் விழிப்புணர்வு என்பது நம்பகத் தனமையற்ற முற்றிலும் போலித்தனமான ஊடக நயவஞ்சகம் என்று சொல்லுவதை விட வேறு என்னதான் சொல்ல முடியும். மொத்தத்தில் நிழலோடு உரையடுவதால் நேர விரையமே மிச்சம்.
'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார் ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.

உண்மை விசுவாசி தன் நாவினாலோ அல்லது கரத்தாலோ சக முஸ்லீமுக்கு அநீதி இழைக்க மாட்டான் என்பது மேல் சொன்ன நபிமொழியின் மூலம் உணர்த்தப்படுகிறது.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்;  (அவனே) மனிதர்களின் அரசன்;  (அவனே) மனிதர்களின் நாயன்; பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்); அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்;  (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.  அல்குர்ஆன் 114:1 முதல் 114:6 வரை.
உண்மையான இறை விசுவாசி சைத்தனின் செயலான ஒழிந்து பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்க மாட்டான் என்பது மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் உணர்த்தப்படுவதை கவனிக்கலாம். நன்மை செய்கிறோம் என்றும் விழிப்புணர்வு செய்கிறோம் என்றும் சொல்லி மக்களிடையே வீண் குழப்பம் ஏற்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நம்பகத் தனமையை நிலைநாட்டாமல் போலிப்பெயர்களில் வலம் வருபவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சைத்தானின் சூழ்ச்சியில் சிக்கியிருக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'  மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி Volume :2 Book :43
இரட்டை முகத்தவன் (மனிதர்களின் மிகவும் மேசமானவன்), விவாதம் புரிந்தால் நேர்மை தவறி தனிமனித தாக்குதல் செய்பவன்(நயவஞ்சகத்தனம்), தேவையாற்ற வீண் பேச்சால் அதிகம் கேள்வி கேட்பவன் (விலக்கப்பட்ட செயல்) என்று மேலே சொல்ல பட்ட ஹதீஸ்களுடன் வலைத்தளங்களில் வெளியிடும் / அனுமதிக்கப்படும் சில போலிப் புனைபெயர் பின்னூட்டங்களை சற்றே அலசிப் பார்த்தால் மேற் சொன்ன மூன்று தன்மைகளில் ஒன்றோ அல்லது மூன்றுமோ ஒத்துபோவதை நம்மால் உணராமல் இல்லை. இது போன்ற வீண் சந்தேகங்களை குழப்பங்கள் விளைவிக்கும் போலி புனைபெயர்வாதிகளை ஊக்கப்படுத்துவதும் நேர விரயமே என்பதும் தெளிவே.
அழகிய பெயர்களை விரும்புபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மேல் சொன்ன செய்திகளை மனதில் கொண்டு போலி புனை பெயர்வாதிகளின் நல்ல துணைப் பெயருடைய வாதிகளாக மாற்றிட, கருத்துக்களை நியாயமாக பரிமாறி நம் உண்மை பெயர்களில் அல்லது (அறிமுகப்படுத்தப்பட்ட) அடையாளப் பெயர்களில் வந்து நாமும் தெளிவுற்று மற்றவர்களையும் முடிந்தவரை தெளிவுற செய்யலாம். இது முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நண்மையின் பக்கம் அழைப்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
முக்கியமாக ஒன்றினை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் நம் சமுதாயச் சகோதரர்கள் அனைவரும் சமுதாய பற்றுடையவர்களே, அவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களே. அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவ்ன். வேதனைக்குறிய விஷயம் நம் சமுதாயச் சகோதரர்களின் பெயர்களிலேயே, ம்மைப் போன்றே முகமுன் கூறியே (காவிக்)குரோதக் கும்பல் குழப்பங்களை விளைவிக்கும் நோக்குடன் நம்மிடைய ஒன்றுவிட்டு நன்றாக பழகி நம் வலைத்தளங்களிருந்தே தகவல்களை திரட்டி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதையும் சமீபத்தில் கண்டறியப்பட்டது தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போன்றே நிகழ்ந்தது. இவைகளை மனதில் நிறுத்தி நெஞ்சுரம் உடையவர்களாக நாம் நிமிர்ந்து நின்று ஊடக போதை போக்கி அங்கே இலகுவாக வலம் வருவோம், அந்தக் (காவிக்)கும்பலின் சதிவிளையாட்டை முறியடிப்போம் கைகோர்ப்போம்.
நம்மில் போலிப்பெயர் பின்னூட்டங்களின் வாயிலாக அறிந்தோ அறியாமலோ குழப்பங்களோ / சிந்தனைச் சிதறல்களிலோ ஈடுபட்டிருந்தால் அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்திக் கொள்வோமாக. போலி புனைபெயர்கள் வாயிலாக உண்டாகும் குழப்பங்களால் பாவ செயல்களிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக என்று பிரார்த்தனை செய்தவர்களாக இந்த பதிவை நிறைவு செய்கிறோம்.
இணைய தொழில் நுட்பத்தால் இணையத்தில் அறியமுடியாதது என்று இருப்பது அரிதே என்று சொல்லும் அளவுக்கு நுட்பங்கள் நிறைந்திருக்கும் இக்கால கட்டத்தில்.இணையத்தின் தொடுப்பு எங்கிருக்கிறது அதன் மடிப்புகள் எங்கெல்லாம் மயங்குகிறது, அவைகள் எவ்வாறு செல்கிறது அடுத்து எங்கே வைக்க இருக்கிறது வேட்டு. இப்படியாக புரியாதவர்களுக்கு சூன்யமாக இருக்கும் வலைச் சிக்கலில் சிக்கியவர்களை மீட்டெப்பதும் சாத்தியமே அதனை அடுத்த பதிவுகளில் காணலாம் இன்ஷா அல்லாஹ்.
- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு