விழுது விட்டு விருட்சங்களென
எழுபத் தெட்டு பிராயங்களில்
பழுது பட்ட பார்வைகளோடு
தொழுதுவரும் மாமியும் உம்மாவும்
தத்தம் வீட்டு துணைகள்
தரணி விட்டு போனபின்னர்
தனிமைப் பேய் விரட்ட
தவிக்கின்ற தோழிமார்கள்
நீர்ச்சோறு காலையிலே
வடிச்சகஞ்சி மதியமுமாய்
சிறுபிராயக் காலங்களைச்
சிலாகித்துச் சொல்வதுண்டு
பின்னலிட்ட ஜடையும்
மின்னலொத்த நடையுமாய்
கல்விகற்க கைகோர்த்து
பள்ளி சென்ற தோழிகள்
ரெட்டைஜடை வயதினிலே
ஒற்றைஜதைத் தோழிகளாய்ச்
சுற்றித்திரிந்த நினைவுகளை
சொல்லச்சொல்லி கேட்பதுண்டு
மாமியைப் பார்த்தெழுதி
உம்மா தேர்ச்சிபெற்ற
ஐந்தாம் வகுப்புக்கதை
அழகாய்ச் சொல்லிவைப்பர்
சொல்லிச் சிரிக்கையிலே
சொக்கிப்போகும் என் மனசு
நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு
உம்மாவின் அண்ணனைத்தான்
மாமி மணந்துகொண்டார்
நாத்தனார் தோழமையில்
நல்வாழ்க்கை மாமி கண்டார்
இருவரையும் பேசவிட்டு
இரசிப்பதில் இன்பமுண்டு
நானும் மச்சான்களும்
வளர்ந்தகதை கேட்பதுண்டு
பேரன் பேத்திகளுக்கு
பெரியோரிடம் ஆர்வமில்லை
பேச்சுத்துணைக் கின்று
பெருசுகள் தவிப்பதுண்டு
உணவுண்ண உயிருண்டு
உணர்வுகளுக்கு ஆறுதலுண்டா
நினைவுகள் நிறைய உண்டு
நிஜத்தில் துணை உண்டா
தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!
Sabeer AbuShahruk
எழுபத் தெட்டு பிராயங்களில்
பழுது பட்ட பார்வைகளோடு

தத்தம் வீட்டு துணைகள்
தரணி விட்டு போனபின்னர்
தனிமைப் பேய் விரட்ட
தவிக்கின்ற தோழிமார்கள்
நீர்ச்சோறு காலையிலே
வடிச்சகஞ்சி மதியமுமாய்
சிறுபிராயக் காலங்களைச்
சிலாகித்துச் சொல்வதுண்டு
பின்னலிட்ட ஜடையும்
மின்னலொத்த நடையுமாய்
கல்விகற்க கைகோர்த்து
பள்ளி சென்ற தோழிகள்
ரெட்டைஜடை வயதினிலே
ஒற்றைஜதைத் தோழிகளாய்ச்
சுற்றித்திரிந்த நினைவுகளை
சொல்லச்சொல்லி கேட்பதுண்டு
மாமியைப் பார்த்தெழுதி
உம்மா தேர்ச்சிபெற்ற
ஐந்தாம் வகுப்புக்கதை
அழகாய்ச் சொல்லிவைப்பர்
சொல்லிச் சிரிக்கையிலே
சொக்கிப்போகும் என் மனசு
நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு
உம்மாவின் அண்ணனைத்தான்
மாமி மணந்துகொண்டார்
நாத்தனார் தோழமையில்
நல்வாழ்க்கை மாமி கண்டார்
இருவரையும் பேசவிட்டு
இரசிப்பதில் இன்பமுண்டு
நானும் மச்சான்களும்
வளர்ந்தகதை கேட்பதுண்டு
பேரன் பேத்திகளுக்கு
பெரியோரிடம் ஆர்வமில்லை
பேச்சுத்துணைக் கின்று
பெருசுகள் தவிப்பதுண்டு
உணவுண்ண உயிருண்டு
உணர்வுகளுக்கு ஆறுதலுண்டா
நினைவுகள் நிறைய உண்டு
நிஜத்தில் துணை உண்டா
தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!
Sabeer AbuShahruk