Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label திரைகடலோடி திரவியம் தேடு. Show all posts
Showing posts with label திரைகடலோடி திரவியம் தேடு. Show all posts

திரைகடலோடி திரவியம் தேடு...??? - காணொளி பாடல்... 14

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2016 | , , ,



காசு பணங் கேட்கல
கைக் கடியாரங் கேட்கல
காத ராக்கா பொண்டாட்டியாட்டம்
கைக் கொலுசுங் கேட்கல

பட் டெடுத்துக் கேட்கல
பகட்டு வாழ்வு கேட்கல
பக்கத்து வீட்டு பாத்துமாபி
படுக்கும் மெத்த கேட்கல

கட்டி முத்தங் கேட்கல
கட்டில் சொகங் கேட்கல
கட்டிவச்ச மல்லிச் சரம்
கசங்கி உதிர கேட்கல

வூடு வாசல் கேட்கல
ஊறும் கெணறு கேட்கல
வூட்டு நடு உத்தரத்தில்
ஊஞ்சல் கட்டிக் கேட்கல

தோட்டந் தொரவு கேட்கல
தொங்கட்டானுங் கேட்கல
தோடு நடுவில் பதித்துவைக்க
தோதா வைரம் கேட்கல

காடு கழனி கேட்கல
காரு வாங்கி கேட்கல
காது ரெண்டும் ஜொலிஜொலிக்க
கனத்த நகை கேட்கல்

வாய்க்கா வரப்பு கேட்கல
வாத்து கோழி கேட்கல
வாய்க்கு ருசியா வக்கனையா
வறுத்த கறி கேட்கல

கேட்ப தெல்லாம் சொற்பமய்யா
கிடைத்து விட்டால் சொர்க்கமய்யா
கஞ்சி கூழே போதுமய்யா
கூடிக் குடிச்சா வாழ்க்கையய்யா

கண் முழிக்கும் காலையெலாம்
கனக்கும் நெஞ்ச லேசாக்க
கண் நெறைஞ்ச கணவர் உமை
காணுஞ் சொகம் கேட்கிறேன்

கத்திமுனை இளமை தனை
கடக்க துணை கேட்கிறேன்
கட்டி அவிழ்க்கும் சீலையோடு
கண்டு ரசிக்க கேட்கிறேன்

சேர்ந்து உண்ணக் கேட்கிறேன்
சிரித்துப் பேசக் கேட்கிறேன்
சாவு வந்து சேரும்வரை
சகல சுபிட்சம் கேட்கிறேன்

மாலை வெயில் சாயும்காலம்
மடியில் சாய கேட்கிறேன்
மறுபடியும் விடியும் வரை
முடியா காதல் கேட்கிறேன்

வீட்டுக்குள்ளே வெறுமையிலே
வீழ்ந்து சாக விரும்பல
வாழத்தானே வாழ்க்கைப் பட்டேன்
வாழ வைக்கக் கேட்கிறேன்

கிடைக்கும் செல்வம் போதுமய்யா
கண்ணீர் விற்க வேண்டாமய்யா
கணவன் மனைவி பொழப்புயிது
காசு தீர்க்காக் கணக்குயிது

சபீர் அஹ்மது அபுஷாரூக்
குரல் : ஜஃபருல்லாஹ்




உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு