(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)

அல்லாஹ்!
ஊண் உருகி உடல் குறுகி
உயிர் ஒடுங்கி உளம் நடுங்கி
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிற யாருமில்லை
உயிர்த்திருக்கும் அவன்
நிலைத்திருப்பதில் நிகரற்றவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பதில் நிரந்தரமவன்!
சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனுக்கில்லை!
வானங்களும் பூமியும்
வளி மண்டல நிரப்பிடமும்
விண்வெளியும் வெற்றிடமும்
சிந்தைக்கு எட்டாத
சித்தாந்தங்களு மென
யாவும் அவனுக்கே உரியன!
அவன்
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பில் பரிபாலனையில்
விதிப்பதில் வழங்குவதில்
காப்பதில் கற்பிப்பதில்
அவன் நாட்டமின்றி
எவரும் எதையும்
நிகழ்த்துதலோ
நிகழ்த்த முனைதலோ
நடவாதது!
அவன்
படைத்த படைப்பினங்களின்
முன்பும் பின்பும்
முன்னரும் பின்னரும்
இன்னும்
இடைப்பட்டவற்றிலுமான
யாவையும் பற்றிய
ஞானம் மிகைத்தவன்!
கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பெரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்து கொள்ளல் இயலாது!
எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகள் இல்லா
எழில்ப் பரிமாண இருக்கை
எம்மிறையாம் அவனுக்காய்
பூமிக்கும் வானங்களுக்குமென
வியாபித்திருப்பதாகும்!
வானங்களும் பூமியுமாகிய
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமல்ல
எந்தவொரு சிரமமுமில்லை
அவன்
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்புகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

அல்லாஹ்!
ஊண் உருகி உடல் குறுகி
உயிர் ஒடுங்கி உளம் நடுங்கி
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிற யாருமில்லை
உயிர்த்திருக்கும் அவன்
நிலைத்திருப்பதில் நிகரற்றவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பதில் நிரந்தரமவன்!
சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனுக்கில்லை!
வானங்களும் பூமியும்
வளி மண்டல நிரப்பிடமும்
விண்வெளியும் வெற்றிடமும்
சிந்தைக்கு எட்டாத
சித்தாந்தங்களு மென
யாவும் அவனுக்கே உரியன!
அவன்
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பில் பரிபாலனையில்
விதிப்பதில் வழங்குவதில்
காப்பதில் கற்பிப்பதில்
அவன் நாட்டமின்றி
எவரும் எதையும்
நிகழ்த்துதலோ
நிகழ்த்த முனைதலோ
நடவாதது!
அவன்
படைத்த படைப்பினங்களின்
முன்பும் பின்பும்
முன்னரும் பின்னரும்
இன்னும்
இடைப்பட்டவற்றிலுமான
யாவையும் பற்றிய
ஞானம் மிகைத்தவன்!
கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பெரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்து கொள்ளல் இயலாது!
எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகள் இல்லா
எழில்ப் பரிமாண இருக்கை
எம்மிறையாம் அவனுக்காய்
பூமிக்கும் வானங்களுக்குமென
வியாபித்திருப்பதாகும்!
வானங்களும் பூமியுமாகிய
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமல்ல
எந்தவொரு சிரமமுமில்லை
அவன்
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்புகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்