Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label உழை. Show all posts
Showing posts with label உழை. Show all posts

உழை ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2011 | , , ,


விடிகிறது மற்றொருநாள் சகோதரா
முடிகிறது ஓய்வுநேரம் விழித்திடு
வடிகிறது இலைநுனியில் பனித்துளி
மடிநீங்க குளிர்நீரில் குளித்திடு

காரிருள் உழைத்துக்களைத்து விலக
கதிரவன் கதிர்பரப்பி உழைக்க
ஊரெலாம் விழித்துழைப்பைத் துவக்க
உனக்கும்தான் விடிகிறது ஊனுழைக்க

தூக்கமே பாய்களில் பற்றினால்
தாக்குமே நோய்கள் தொற்றினால்
உறக்கம் கலையனும் தோழரே
உழைத்து நிலைக்கனும் வாழ்விலே

உழைக்காமல் வயிற்றை வளர்த்தால்
தழைக்காது உன்றன் உடல்நிலை
மழைக்கால மண்குடில் போல
குலைந்திடும் நின்றன் தலைமுறை

ஓரிறு பருக்கைக ளாயினும்
ஓர்உழைப்பினில் கிடைத்த தாகனும்
ஒருவாய்க் கஞ்சியே யாயினும்
ஓர்உழைப்பின்றி கிடைக்காது சாகனும்

ஓசியில் வளர்க்கின்ற குடலும்
தாசியின் வகைகெட்ட உடலும்
காலத்தின் பிடிதனில் சிக்கிடும்
கடும் நோய்கண்டு சிதைந்தேபோய்விடும்

சிற்றெரும்புச் சாரைகள் காண்பீரே
சிறகடிக்கும் நாரைகள் காண்பீரே
சிறுதுரும்பென உணவுக்குக் கூட​
சுறுசுறுப்பாய் உழைத்துபின் உண்ணும்

உழவனின் உழைப்பின்றிப் போனால்
உலகுக்கு ஏதையா உணவு
உழைத்து வழிகின்ற வியர்வையில்தானே
உருவாகும் உனக்கென்று வாழ்வு

கரும்பச்சையம் முதலீடு செய்து
கரியமில வாயுவும் சேர்த்து
கதிரவக் கதிர்களின் சாட்சியில்
கானகத்தின் உழைப்பே கனிகள்

கண்களின் உழைப்பே காட்சிகள்
கால்களின் உழைப்பே கடவுகள்
இருவரின் உழைப்பே இல்லறம்
இதயத்தின் உழைப்பே இவ்வுயிர்!

உயிர்வாழும் அர்த்தமே உழைப்புத்தான்
உயர்வாகும் வாழ்க்கையே உழைத்துத்தான்
உழைக்கின்ற வர்க்கத்தினுள் நுழை
உன்கரங்களை நம்பியே உழை!



- சபீர்
Sabeer abuShahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு