அதிரை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு என்று ஓர் கல்விக் கருவூலமாக 60 வருடங்களுக்கு முன்னர் அதிரையின் கல்வித் தந்தை மர்ஹூம் SMS அவர்களால் சமுதாய அக்கரையுடனும் எதிர்கால சந்ததியர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி இன்று காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியாக கம்பீரமாக தலை நிமிர்ந்து வைரவிழா தருணத்தில் நிற்கிறது.
அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள் என்று உருவாக்கிய இடம்.
அப்படியே நெஞ்சில் நிற்கும் வகுப்பறைகள் ! 1980களில் தலைமை ஆசிரியர் அலுவலகம், அறிவியல் பிரிவிற்கான சோதனைக்கூடம், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு அறைகள்...
மறக்கத்தான் முடியுமா ? இந்த வகுப்பறைகளை !?
பொலிவுடன் கானும் புதிய பள்ளிக் கட்டிடத்தின் நேர்த்தி மீண்டு அழைக்கிறது பள்ளிப் படிப்புக்கு வரச் சொல்லி !
மாநில அளவில் இதுநாள் வரை நடைபெற்ற ஓட்டப்போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளிக்கு பெருமையை தேடித்தந்த மாணவர்களின் பட்டியல்கள்.
அரசுப் பொதுத்தேர்வில் இப்பள்ளியின் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கிய மாணவர்களின் பட்டியல்கள்.
மஸ்ஜித் - காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி :
ஆரம்பிக்கட்ட கால கட்டங்களில் ஓலைக் கூரையாக இருந்த அல்லாஹ்வின் பள்ளி இன்று அழகுற எழுந்து நிற்கும் இம்மஸ்ஜித்தில் மாணவர்களுக்கு தொழுகைகள் மற்றும் தீனியாத் வகுப்புகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு மைதானம், எண்ணற்ற அற்புதமான விளையாட்டு சாதனை வீரர்களை உருவாக்கிய இடம்
சத்துணவுக்கூடம்
கழிப்பறை
குடிநீர் தொட்டி
கிளறிவிட்ட நினைவுகளோடு - வாங்க பள்ளிக்கூடம் போகலாம் !
- அதிரைநிருபர் குழு
படங்கள் : சேக்கனா M. நிஜாம் மற்றும் அபூபக்கர் (அமேஜான்)