Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label குறுந்தொடர். Show all posts
Showing posts with label குறுந்தொடர். Show all posts

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (3) 12

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2015 | , , , , , ,

இந்தியா சுதந்திரம் பெற்றதும் அரசியல் நிர்ணய சபையில் பசுவதை பற்றி பெரிய விவாதமே நடந்தது. பண்டிட் தாகூர் தாஸ், சேட்  கோவிந்த தாஸ்,ஷிவன்லால் சக்சேனா, ராம் சகாய் போன்றவர்கள் எல்லாம் பசுவதை தடையை அரசியல் அமைப்பு  சட்டத்தின் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் ( LIST OF FUNDAMENTAL RIGHTS ) சேர்க்கவேண்டுமென்று “ மாட்டுவால் சூப் “ குடித்தவர்கள் போல், வாதிட்டனர்; போரிட்டனர். ஆனால் டாக்டர். அம்பேத்கார் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாட்டுக்கறியை மிளகுபோட்டு வறுத்து( PEPPER FRY) சாப்பிட்டது போன்ற  தெம்புடன்  ஓரணியில் நின்று பசுவதை தடையை மாநிலங்களின் உரிமை என்கிற பட்டியலில் சேர்த்து “அம்போ” என்று விட்டனர் . இல்லாவிட்டால் பேச்சுரிமை, சொத்துரிமை போல பசுவதை தடையும் அடிப்படை உரிமைகள் என்கிற பட்டியலில் வந்து இருக்கும்.

11.3 It is apparent from the debate, that the Members were keen on including the provision in the chapter on Fundamental Rights but, later as a compromise and on the basis of an assurance given by Dr. Ambedkar, the amendment was moved for inclusion as a Directive Principle of State Policy. 

( Ref: Lensch. Propleme Dr. Chapter 44. Prospects of Cattle Husbandry in India )

மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி உண்ணுவதும் தவறு என்று வாதிடும் கூட்டத்தார் அந்த மாட்டுக்கு கொடுக்கும் மரியாதை  என்ன என்பதை அவர்கள் அன்றாடம் சென்று   கும்பிடும் கோயில் கோபுரங்களில்  இருக்கும் சிலைகள், சிற்பங்கள் நமக்கு சொல்லும். அவைகளை அவர்கள்  கண்ணால் கண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பல பெண்களும் இந்த தளத்தில் வரும் கட்டுரைகளை படிக்கிறார்கள் என்பதால் அவையடக்கம் கருதி சிலவற்றை அவிழ்த்துவிட முடியவில்லை. தூரத்தில் இருக்கும் கஜுரோக போக  வேண்டாம் பக்கத்தில் இருக்கும் வேதாரண்யம் சென்று மட்டும் ஒருமுறை பாருங்கள்.   

பசுவை தாய் என்போர் பெற்ற தாயை முதியோர் இல்லத்திலும் , பசுக்களை பராமரிப்பு இன்றி நடுத்தெருக்களிலும், சாலைகளிலும்  அலைய விடுவது ஏன்? சானா பாநாவின் சகோதர கட்சி ஆளும் மாநிலங்களிலாவது இந்த காட்சிகல்  மறைந்து  இருக்கின்றனவா?

பசுவதை கூடாது என்கிற  மதரீதியான வாதம்  அடிப்படை இல்லாமல் அடிபட்டுப்போகிறது. பொருளாதார ரீதியாக பார்த்தாலும் பொருளற்றுப் போய்விடுகிறது. எந்த ஒரு விவசாயியும், தனது வயலில் உழுதுகொண்டிருக்கும் மாட்டை- தனக்காக வண்டி இழுக்கும் மாட்டை- தனக்காக பால் கறந்து தரும் மாட்டை பிடித்து அறுத்து சாப்பிட நினைப்பதில்லை. தனக்கு உபயோகப்படாது இந்த தொத்தை  மாடு என்கிற நிலைக்கு வந்தபின்  காயலாஙகடைக்குப் போகவேண்டிய நிலைக்கு இருப்பதை விற்று அல்லது அறுத்து  தனது உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தவறில்லை என்கிற பொருளாதார வாதம் ஏன் சில அடிமாடுகளுக்குப் புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை. இப்படி பயன்படுத்த முடியாத  நிலையில் இருக்கும்   கால்நடைகளை – பால் வற்றிப்போன மாடுகளை வைத்து ஏழை  விவசாயியால் காலத்துக்கும் கட்டிப்போட்டு, பராமரித்து தீனி போட முடியுமா? அல்லது அந்த மாடுகள் உணவின்றி சாவது இவர்களுக்கு சம்மதமா?

உண்ண உணவில்லாத  ஒரு நாட்டில் – ஊட்டச்சத்து இல்லாமல் ஒலிம்பிக்குகளில் ஓடமுடியாத மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் -புரதச்சத்து மிகுந்த ஒரு உணவைத் தடைசெய்ய தத்துவ ரீதியாகவோ ,தார்மீக ரீதியாகவோ என்ன  முகாந்திரம் இருக்கிறது?. நான் உயர்ந்த சாதி நான் என்ன சொன்னாலும் ஏன் என்று எதிர்கேள்வி கேட்காமல்   நீ அடிபணிந்து நடக்கவேண்டுமென்கிற ஆதிக்க சக்திகளின் பூஷ்வா மனப்பன்மையைத்தவிர வேறு என்ன இருக்கிறது? முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்டோர்களும் உண்ணும்  ஒரு வசதியான, இலகுவில் கிடைக்கக்கூடிய ஒரு உணவில் மண்ணை அள்ளிப்போட  வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன இருக்கிறது?    

பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆச்சாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சி சூப்  குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார். ( REF: DR. D. N JHA- THE MYTH OF HOLY COW )

கேரளத்தில், உயர்ந்த, தாழ்ந்த எல்லா  சாதிகளையும் சேர்த்து மொத்தம்  எழுபத்திரண்டு சாதிகள் இருக்கின்றன.   ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் இந்த அத்தனை சாதிகளைச் சார்ந்தோரும்  மாட்டிறைச்சியைத் தான் விரும்பி  தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை. இதே கேரளத்தில்தான் புகழ்பெற்ற அனந்த பத்மநாத சுவாமி கோயிலும் , குருவாயூர் கோயிலும், ஐயப்பன் கோயிலும் இருக்கின்றன. இந்த கோயில்களுக்கு  அருகாமையிலேயே போத்துக்கறி வியாபாரம் கொத்துக்கறி போட்டு அமோகமாக நடக்கின்றது. அத்துடன் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து மாடுகள் லாரி லாரியாக தினமும்  கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்தில் சானா பானா திறந்து வைத்திருக்கிற அரசியல் கடை இன்னும் முதல் போனிகூட ஆகாமல்  இருப்பதற்கு அது வலியுறுத்தும்  பசுவதை தடை கொள்கையும் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

அதே போல் மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டிறைச்சி ஒரு பிரதான உணவுப்பொருளாகும். எல்லா மலைசாதி மக்களுக்கும் மாட்டிறைச்சி ஒரு விலைகுறைந்த இலகுவாக கிடைக்கக்கூடிய இன்றியமையா உணவுப்பொருளாகும். அதே போல் தலை நகர்  டில்லியில் சந்து சந்தாக மாட்டிறைச்சி தொங்குவதை சந்து பொந்துகளிலும்  காணலாம். பம்பாயில் சிவாஜி நகர் ( கோவண்டி) பகுதியில் மாட்டை அறுப்பதற்காக நவீன இறைச்சிக்கூடம், அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதிகளுடன் இருப்பதைக்காணலாம்.  மத்திய அரசு அதிகமான மாட்டிறைச்சி தொடர்பான உணவுப்பொருள்களை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மிகவும் ஊக்கம் கொடுத்து வருகிறது. இதற்கு இளஞ்சிவப்பு புரட்சி  என்று பெயரிட்டு இருககிறார்கள்.( PINK REVOLUTION). இந்த இளஞ்சிவப்பு புரட்சியின் மூலம் அந்நிய செலாவணி குவிவது சில காவிகளுக்குப் பிடிக்கவில்லை. 

குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் வட்டிக்கு வாங்கி ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் சில இனத்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிற கோஷத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  ஏழைகளிடமிருந்து சுரண்டிய வட்டிப்பணம் நிறைய இருக்கிறது அதைவைத்து பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட முடியும்; லஸ்ஸியும் லட்டும் பருகவும் தின்னவும் முடியும். ஏழை உணவான மாட்டுக்கறியில் இப்படி ஏன் கைவைத்து ஏழைகளின் அடிவயிற்றிலும் அடிப்படை உரிமையிலும் இடி  இறக்க எத்தனிக்க வேண்டும்?               

பசுக்களை காப்பற்ற விரும்பும் காவிகள் முதலில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்து கொண்டிருக்கும் மாடுகளை பராமரிக்க தங்கள் சானா பானா சக்திகளை தூண்டட்டும். குப்பை கூளம் கொட்டும் இடங்களில் கூட்டமாக மேயும் மாடுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பட்டும். சாப்பிடுவது என்பது ஒரு தனி மனித உரிமை. என்ன சாப்பிடுவது என்று தீர்மானிக்க வேண்டியது  தனி மனிதனே அன்றி சட்டமன்றம் அல்ல. . அறிவியல் ரீதியாக ஆபத்து இல்லாத ஒன்றை அரசாங்கம் தடை செய்ய நினைப்பது, அல்லது தூண்டுவது, அதற்காக போராடுவது என்பது கேலிக்கூத்து. சாராயக்கடையை விடவா சால்நா கடை தீங்கு விளைவிக்கிறது? 

உயிர் வதை செய்தல் கூடாது என்று கூக்குரல் இடுவோர் முதலில் தன்னை கடிக்கும் கொசுவை , இரவில் தன் மேல் ஊறும் மூட்டைப்பூச்சியை , தெருவில் கடிக்க வரும் வெறிபிடித்த நாய்களை, நோய் பரப்பும் பன்றிகளை, விவசாயப் பயிர்களை தின்று தீர்க்கும்  வெட்டுக்கிளிகளை, எலிகளை, தண்ணீரில் குடி இருக்கும் பாக்டீரியாக்களை, கொத்தவரும் பாம்பை, கடிக்க வரும் பூரானை, கொட்ட வரும்   தேளை என்ன செய்கிறார்கள்? பாலூட்டி பழம் கொடுத்து    வளர்க்கிறார்களா? வாழ்த்துப்பா  பாடுகிறார்களா? மலேரியா மற்றும் டெங்குக் காய்ச்சளைப்பரப்பும் கொசுக்களைக் கொல்லாமல் குருமாவும் புரோட்டாவுமா கொடுக்க முடியும்? கொல்லாமை எல்லா இடத்திலும் சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டால் தண்ணீரைக் கூட தண்ணீராகவோ வெந்நீராகவோ குடிக்க முடியுமா? 

மாட்டின் இறைச்சிக்கு ஒரு நியாயம் வைத்திருப்போர் அதன் பாலுக்கு என்ன நியாயம் வைத்து இருககிறார்கள்? மாட்டின் மடி சுரக்கும் பால் நமக்கா அதன் கன்றுக்கா? அந்தப்பாலைக் குடம் குடமாக குடிக்கும்போது வராத பச்சாதாபம் அதன் கறியை சாப்பிடும்போது மட்டும் எங்கிருந்து பொத்துக்கொண்டு வருகிறதாம்? பாலைக்கறந்து குடித்து பசுவின் கன்றுக்கு பச்சை துரோகம் செய்யலாம்;  எருதின் கழுத்தில் கலப்பையைப்  பூட்டி வெயிலில் போட்டு வதைக்கலாம்; இழுக்க முடியாத சுமைகளை ஏற்றி காளைகளை வண்டி இழுக்கச் செய்யலாம். ஆனால் இயலாத நிலையில் இந்த மாடுகளை இன்னும் போட்டு வதைக்காமல் உணவாக உபயோகப்படுத்த மட்டும் கூடாதா? இந்த கருத்தை சொன்னால் அது அரசியலா? மத உணர்வை மதிக்கவில்லை என்கிற பட்டமா?

முதலாவதாக பசுவதை தடை மசோதா என்கிற பெயரே ஒரு கடைந்தெடுத்த மூடுமந்திரச்சொல்  ஆகும். .  இந்த பசுவதை என்பது வெளி உலகுக்கு மட்டுமே பசுவைக் காப்பாற்ற. ஆனால் உண்மையிலேயே இந்த வார்த்தைக்குள்  காளை, எருமை முதலிய எல்லா கால்நடைகளும் அடக்கம். மராட்டியத்தில் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் அமுல் படுத்தப்படாத/ முடியாத  இந்த மசோதா  ஒட்டுமொத்த  இந்தியாவுக்கும் பொருந்தாது. இதை வைத்து மக்களின் உணர்ச்சியைத்தூண்டும் பித்தர்களின் சித்துவேலைகள் வெற்றி பெறாது. பசுவதை தடை சாத்தியம் இல்லாத தத்துவம். இது ஒரு செத்துப்போன பிணம். இதைக்கொண்டுபோய் புதைக்காமல் இன்னும் ஒப்பாரி வைப்பது சானாபானவின் சறுக்கும் அரசியல் சரித்திரம். எனவே நாம் எல்லோரும்  மாட்டுக்கறிக்கு ஒட்டுப்போடுவோம்.  
குறுந்தொடர் நிறைவுற்றது.
இபுராஹீம் அன்சாரி

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1) 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 10, 2015 | , , , , , ,


மாட்டுக்கறி என்ற பெயர் கேட்டதும் சும்மா அதிருதா? அதிர வேண்டாம் ; பதற வேண்டாம்; இந்த ஆக்கத்துக்கு அதிரை வேண்டாம். போபாலில் ஆரம்பித்து, அகில இந்தியாவில் மாட்டுக்கறி என்கிற பிரச்சனையைத்தான் அலசப் போகிறோம்.  இந்த அலசல்  அதிரை என்கிற குண்டு சட்டியில் குதிரை ஓட்ட அல்ல. பன்னெடுங்காலமாகவே மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி வியாபாரம் செய்வதும் சாப்பிடுவதும் மாபாதகம் என்றும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே இவை தொடர்பான தொழில்களில், நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்,அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஜீவகாருண்யம் அற்றவர்களாகவும், இரக்கமற்ற பாவிகளாகவும் சித்தரித்து தீட்டப்பட்டுள்ள கபட சித்திரங்கள் யாவற்றையும் அழிக்கும்  நோக்கில்தான். நாம் முதலில் போபாலுக்குப் போகப்போகிறோம். பிறகு புதுடில்லிக்கும் போவோம்.

பி ஜெ பி அரசாளும் மத்தியப் பிரதேச அரசு பசுவதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. இம்முடிவின் மீது  நடுநிலை மற்றும் நன்னெறி பரப்பும் அறிஞர்களால் எதிர்ப்புக்கனை தொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபர சுதந்திரத்தில் அரசின் அப்பட்டமான தலையீடு என்றும், ஏழைகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கொடுமை என்றும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையில்  'பசுவின் புனிதத்தன்மை' பற்றிய புராண இதிகாச சாஸ்திர சம்பிரதாய மற்றும் வரலாற்று குறிப்புகள்  பற்றியும் அந்த குரிப்புகளை வைத்து சானா பானாக்கள் நாட்டைத் துண்டாட எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தோர் மேலும்   உயர்சாதியினர் இந்த பசுவதை, மாட்டுக்கறி ஆகிய அஸ்திரங்களை எப்படி உபயோகிக்கின்றனர் என்பதைப் பற்றியும் சற்று ஆதாரங்களோடு அலசலாம்.           (இவர்களின் ஊளா  பாலாக்களை அலசி அலசியே நமக்கு  தண்ணீர் பில் எகிறிவிட்டது).

முதல் ஓவரை வீசும்  முன்பு,  ஒரு சிறு கவனக் குறிப்புத் தந்து விட எண்ணுகிறேன். இந்த ஆக்கத்தில் சில இராமாயண,  மஹாபாரத காட்சிகளை, ஆதாரங்களை குறிப்பிட்டு இருப்பேன்.இந்த ஆதாரங்கள் கம்ப இராமயணத்தில் இல்லையே, இராஜாஜி எழுதிய வியாசர் விருந்திலும், பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்திலும் இல்லையே என்று தமிழ் புலமை படைத்த / படித்த யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.  இந்த இதிகாசங்களில் இருந்து என்னால் காட்டப்படும் ஆதாரங்கள் ஒரிஜினல் இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. கம்பர் எழுதியதும், இராஜாஜி, பாரதியார் எழுதியதும் தழுவல்கள் மட்டுமல்ல அவைகள் வழுவல்கள்; வளவலாக்கள்.; கொழகொழாக்கள்; பசப்பல்கள்; ரீல்கள்; புருடாக்கள்; காதில் சுற்றும் பூக்கள். தமிழ்ப் பண்பாடு கருதி மறைக்கப்பட்ட உண்மைகள். உதாரணமாக இராவணன் சீதையை எங்கே கை வைத்து தொட்டு தூக்கிச்சென்றான் என்பதை வால்மீகி ராமாயணம்  குறிப்பிடும் விதமும் இடமும் வேறு; அந்த இடம் வித்தியாசமானதல்ல ஆனால்  விபரீதமானது. இருந்தாலும், ஒரு பெரும் எடையுள்ள பெண்ணை  கடல் கடந்து ஆகாயத்தில்  தூக்கிச்செல்ல வசதியானது. இந்த சம்பவத்தை கம்பராமாயணம் குறிப்பிடும் விதம்  தமிழ்பண்பாட்டை ஒட்டியது. தொடாமல் தூக்கினானாம்; ஆகாயத்தில்  பறந்தானாம். நம்பமுடியுமா? ஆகவே இந்த ஆக்கத்தில் ஒரிஜினல் இதிகாசங்கள் குறிப்பிடும் ஆதாரங்களையே கையாண்டு இருக்கிறேன்.     

முதலாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்று சானா பானாவினர் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கும் முன் காலத்திலிருந்தே மாடுகளை உணவுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும், யாகங்களுக்காகவும் அறுத்து பலியிட்டு புசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இதிகாச,  பிராமண, சமண, புத்த இலக்கியம் மற்றும் வரலாறுகளில் இருந்து சான்றுகள் இருக்கின்றன. 

விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய 'அக்கினித் தேயம்' என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது. 

பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய 'அசுவமேத யாகத்'தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும் அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும். இந்த இருபத்தியொரு பசுக்கள் கொல்லப்படாவிட்டால் அந்த யாகம் பொய்த்துவிட்டதாக அர்த்தம். அத்துடன் இராஜசூய யாகம், வாஜ்பேய யாகம் ஆகியவற்றிலும் விலங்குகள் பலியிடப்படும். இதேபோல் மற்றொரு முதன்மையான யாகமாக கருதப்படும் கொசவ யாகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகள்  பயமுறுத்தும் தேவதைகளுக்காக பலியிடப்பட்டன. ஆகவே எல்லாவகையான யாகங்களிலும் பசுக்கள் கொல்லப்பட்டன. அவை புசிக்கப்பட்டன.   

'வேதக் கருத்துகளிலும் தர்மசாத்திரங்களிலும் உணவுக்காக பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 'பசு விருப்பமான உணவு' என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர் கூற்றின்படி , பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போ என்று தகப்பன் தசரதன் ஆணையிட்டான்  என்று இராமனுக்கு சொல்லப்பட்டபோது இராமனுடைய உடனடி பதிலாக இருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவது “ நான் நாட்டையும், மணிமுடியையும் , அரண்மனை வாசத்தையும் இழப்பதுடன் சுவைதரும் மாமிச உணவுகளையும் துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு வருடங்கள் காய்களையும் பழங்களையும் புசிக்க வேண்டுமா?” என்பதுதான்.               
(AYODHYA KANDAM  CHAPTERS 20, 26, 94).

அது மட்டுமா? வால்மீகி கூறுவதையும், நாம்  எடுத்துக்காட்டுவதையும் ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால்  ஒருவர் இருக்கிறார் அவர் கூறுவதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அவர்தான் வீரத்துறவி என்று பெயர் பெற்ற சுவாமி விவேகானந்தர். இதோ அவரே கூறுகிறார். 

"You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it."  “ வேதக் கருத்துக்களின் அடிப்படையில் மாட்டுக்கறியை உணவாகக் கொள்ளாத ஒருவர் நல்ல ஹிந்துவாக இருக்க முடியாது என்று நான் கூறினால் நீங்கள் திகைப்படைவீர்கள். சில சமய சடங்குகளில் ஒரு ஹிந்து ஒரு காளை மாட்டை அறுத்து பலியிடுவதோடு உட்கொள்ளவும் வேண்டும் ” என்று விவேகானந்தர் கூறுகிறார். 

"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;"  இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது.   இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

மேலும் கீழ்க்கண்ட விளக்க நூல் எப்படி மாட்டை அறுப்பது என்று பிராமணர்களுக்கு வழிகாட்டுகிறது. 
[Aitareya Brahman, Book 2, para 6 and 7]

அடுத்து,  Purv Mimansa Sutra Adhyaya 3, Pada 6, Sutra 18, the Shabarbhasya says,
संति च पशुधर्माः- उपाकरणं, उपानयं, अक्ष्णया बंधः, यूपे नियोजनम्, संज्ञपनं, विशसनमित्येवमादयः 

There are also certain details to be performed in connection with the animals, such as (a) Upaakaranam [Touching the animal with the two mantras], (b) Upaanayanam [Bringing forward], (c) Akshanyaa-bandhah [Tying with a rope], (d) Yoope niyojanam [Fettering to the Sacrificial Post], (e) Sanjnapanam [Suffocating to death], (f) Vishasanam [Dissecting], and so forth.

அதாவது அறுக்கப்படப்போகும் மாட்டை எங்கே தொடுவது, எப்படிக் கொண்டுவருவது, கழுத்திலும் அறுக்கப்படும் கம்பிலும் கயிற்றால் எப்படிக் கட்டுவது, எப்படி அறுப்பது என்கிற வழிமுறைகளை இந்த ஸ்லோகம சொல்லித்தருகிறது.   
[Shabhar bhashya on Mimamsa Sutra 3/6/18; translated by Ganganath Jha]

இந்த ஆதாரங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.மிகவும்  விரிவாகப்போனால் இந்த ஆக்கம் வீங்கிவிடும்.பல முகமூடிகள் கிழிந்துவிடும். யாராவது எதிர்த்து விளக்கம்  கேட்டால் விபரம் சொல்வேன்.

வேதகாலத்தை அடுத்து, இடைக்கால வரலாற்றுக் குறிப்புகளிலும் நமது வாதத்துக்கு வலு சேர்க்க  ஏராளமான சான்றுகள்  இருக்கின்றன.  ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுசாத்திரம்  கூறுகிறது. 

படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரத்தில்  முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள்தான்.  இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று தெரிகிறது.  

மதம் சார்ந்த இலக்கியங்களில் மட்டுமல்ல. மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், ஸ்ரீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
(ஆதாரம் : THE MYTH OF THE HOLY COW BY DR. D.N. JHA).

இப்படியெல்லாம் தங்களால் சப்புக்கொட்டி சுவைக்கப்பட்ட மாட்டுக்கறி , அந்த கறி தரும் மாடு எப்படி மதவாதிகளால் புனிதத்தின் அடையாளமாக்கப்பட்டது?

தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (3) 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2012 | , , , , , ,


இந்தியா சுதந்திரம் பெற்றதும் அரசியல் நிர்ணய சபையில் பசுவதை பற்றி பெரிய விவாதமே நடந்தது. பண்டிட் தாகூர் தாஸ், சேட்  கோவிந்த தாஸ்,ஷிவன்லால் சக்சேனா, ராம் சகாய் போன்றவர்கள் எல்லாம் பசுவதை தடையை அரசியல் அமைப்பு  சட்டத்தின் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் ( LIST OF FUNDAMENTAL RIGHTS ) சேர்க்கவேண்டுமென்று “ மாட்டுவால் சூப் “ குடித்தவர்கள் போல், வாதிட்டனர்; போரிட்டனர். ஆனால் டாக்டர். அம்பேத்கார் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாட்டுக்கறியை மிளகுபோட்டு வறுத்து( PEPPER FRY) சாப்பிட்டது போன்ற  தெம்புடன்  ஓரணியில் நின்று பசுவதை தடையை மாநிலங்களின் உரிமை என்கிற பட்டியலில் சேர்த்து “அம்போ” என்று விட்டனர் . இல்லாவிட்டால் பேச்சுரிமை, சொத்துரிமை போல பசுவதை தடையும் அடிப்படை உரிமைகள் என்கிற பட்டியலில் வந்து இருக்கும்.

11.3 It is apparent from the debate, that the Members were keen on including the provision in the chapter on Fundamental Rights but, later as a compromise and on the basis of an assurance given by Dr. Ambedkar, the amendment was moved for inclusion as a Directive Principle of State Policy. 

( Ref: Lensch. Propleme Dr. Chapter 44. Prospects of Cattle Husbandry in India )

மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி உண்ணுவதும் தவறு என்று வாதிடும் கூட்டத்தார் அந்த மாட்டுக்கு கொடுக்கும் மரியாதை  என்ன என்பதை அவர்கள் அன்றாடம் சென்று   கும்பிடும் கோயில் கோபுரங்களில்  இருக்கும் சிலைகள், சிற்பங்கள் நமக்கு சொல்லும். அவைகளை அவர்கள்  கண்ணால் கண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பல பெண்களும் இந்த தளத்தில் வரும் கட்டுரைகளை படிக்கிறார்கள் என்பதால் அவையடக்கம் கருதி சிலவற்றை அவிழ்த்துவிட முடியவில்லை. தூரத்தில் இருக்கும் கஜுரோக போக  வேண்டாம் பக்கத்தில் இருக்கும் வேதாரண்யம் சென்று மட்டும் ஒருமுறை பாருங்கள்.   

பசுவை தாய் என்போர் பெற்ற தாயை முதியோர் இல்லத்திலும் , பசுக்களை பராமரிப்பு இன்றி நடுத்தெருக்களிலும், சாலைகளிலும்  அலைய விடுவது ஏன்? சானா பாநாவின் சகோதர கட்சி ஆளும் மாநிலங்களிலாவது இந்த காட்சிகல்  மறைந்து  இருக்கின்றனவா?

பசுவதை கூடாது என்கிற  மதரீதியான வாதம்  அடிப்படை இல்லாமல் அடிபட்டுப்போகிறது. பொருளாதார ரீதியாக பார்த்தாலும் பொருளற்றுப் போய்விடுகிறது. எந்த ஒரு விவசாயியும், தனது வயலில் உழுதுகொண்டிருக்கும் மாட்டை- தனக்காக வண்டி இழுக்கும் மாட்டை- தனக்காக பால் கறந்து தரும் மாட்டை பிடித்து அறுத்து சாப்பிட நினைப்பதில்லை. தனக்கு உபயோகப்படாது இந்த தொத்தை  மாடு என்கிற நிலைக்கு வந்தபின்  காயலாஙகடைக்குப் போகவேண்டிய நிலைக்கு இருப்பதை விற்று அல்லது அறுத்து  தனது உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தவறில்லை என்கிற பொருளாதார வாதம் ஏன் சில அடிமாடுகளுக்குப் புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை. இப்படி பயன்படுத்த முடியாத  நிலையில் இருக்கும்   கால்நடைகளை – பால் வற்றிப்போன மாடுகளை வைத்து ஏழை  விவசாயியால் காலத்துக்கும் கட்டிப்போட்டு, பராமரித்து தீனி போட முடியுமா? அல்லது அந்த மாடுகள் உணவின்றி சாவது இவர்களுக்கு சம்மதமா?

உண்ண உணவில்லாத  ஒரு நாட்டில் – ஊட்டச்சத்து இல்லாமல் ஒலிம்பிக்குகளில் ஓடமுடியாத மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் -புரதச்சத்து மிகுந்த ஒரு உணவைத் தடைசெய்ய தத்துவ ரீதியாகவோ ,தார்மீக ரீதியாகவோ என்ன  முகாந்திரம் இருக்கிறது?. நான் உயர்ந்த சாதி நான் என்ன சொன்னாலும் ஏன் என்று எதிர்கேள்வி கேட்காமல்   நீ அடிபணிந்து நடக்கவேண்டுமென்கிற ஆதிக்க சக்திகளின் பூஷ்வா மனப்பன்மையைத்தவிர வேறு என்ன இருக்கிறது? முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்டோர்களும் உண்ணும்  ஒரு வசதியான, இலகுவில் கிடைக்கக்கூடிய ஒரு உணவில் மண்ணை அள்ளிப்போட  வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன இருக்கிறது?    

பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆச்சாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சி சூப்  குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார். ( REF: DR. D. N JHA- THE MYTH OF HOLY COW )

கேரளத்தில், உயர்ந்த, தாழ்ந்த எல்லா  சாதிகளையும் சேர்த்து மொத்தம்  எழுபத்திரண்டு சாதிகள் இருக்கின்றன.   ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் இந்த அத்தனை சாதிகளைச் சார்ந்தோரும்  மாட்டிறைச்சியைத் தான் விரும்பி  தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை. இதே கேரளத்தில்தான் புகழ்பெற்ற அனந்த பத்மநாத சுவாமி கோயிலும் , குருவாயூர் கோயிலும், ஐயப்பன் கோயிலும் இருக்கின்றன. இந்த கோயில்களுக்கு  அருகாமையிலேயே போத்துக்கறி வியாபாரம் கொத்துக்கறி போட்டு அமோகமாக நடக்கின்றது. அத்துடன் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து மாடுகள் லாரி லாரியாக தினமும்  கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்தில் சானா பானா திறந்து வைத்திருக்கிற அரசியல் கடை இன்னும் முதல் போனிகூட ஆகாமல்  இருப்பதற்கு அது வலியுறுத்தும்  பசுவதை தடை கொள்கையும் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

அதே போல் மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டிறைச்சி ஒரு பிரதான உணவுப்பொருளாகும். எல்லா மலைசாதி மக்களுக்கும் மாட்டிறைச்சி ஒரு விலைகுறைந்த இலகுவாக கிடைக்கக்கூடிய இன்றியமையா உணவுப்பொருளாகும். அதே போல் தலை நகர்  டில்லியில் சந்து சந்தாக மாட்டிறைச்சி தொங்குவதை சந்து பொந்துகளிலும்  காணலாம். பம்பாயில் சிவாஜி நகர் ( கோவண்டி) பகுதியில் மாட்டை அறுப்பதற்காக நவீன இறைச்சிக்கூடம், அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதிகளுடன் இருப்பதைக்காணலாம்.  மத்திய அரசு அதிகமான மாட்டிறைச்சி தொடர்பான உணவுப்பொருள்களை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மிகவும் ஊக்கம் கொடுத்து வருகிறது. இதற்கு இளஞ்சிவப்பு புரட்சி  என்று பெயரிட்டு இருககிறார்கள்.( PINK REVOLUTION). இந்த இளஞ்சிவப்பு புரட்சியின் மூலம் அந்நிய செலாவணி குவிவது சில காவிகளுக்குப் பிடிக்கவில்லை. 

குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் வட்டிக்கு வாங்கி ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் சில இனத்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிற கோஷத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  ஏழைகளிடமிருந்து சுரண்டிய வட்டிப்பணம் நிறைய இருக்கிறது அதைவைத்து பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட முடியும்; லஸ்ஸியும் லட்டும் பருகவும் தின்னவும் முடியும். ஏழை உணவான மாட்டுக்கறியில் இப்படி ஏன் கைவைத்து ஏழைகளின் அடிவயிற்றிலும் அடிப்படை உரிமையிலும் இடி  இறக்க எத்தனிக்க வேண்டும்?               

பசுக்களை காப்பற்ற விரும்பும் காவிகள் முதலில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்து கொண்டிருக்கும் மாடுகளை பராமரிக்க தங்கள் சானா பானா சக்திகளை தூண்டட்டும். குப்பை கூளம் கொட்டும் இடங்களில் கூட்டமாக மேயும் மாடுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பட்டும். சாப்பிடுவது என்பது ஒரு தனி மனித உரிமை. என்ன சாப்பிடுவது என்று தீர்மானிக்க வேண்டியது  தனி மனிதனே அன்றி சட்டமன்றம் அல்ல. . அறிவியல் ரீதியாக ஆபத்து இல்லாத ஒன்றை அரசாங்கம் தடை செய்ய நினைப்பது, அல்லது தூண்டுவது, அதற்காக போராடுவது என்பது கேலிக்கூத்து. சாராயக்கடையை விடவா சால்நா கடை தீங்கு விளைவிக்கிறது? 

உயிர் வதை செய்தல் கூடாது என்று கூக்குரல் இடுவோர் முதலில் தன்னை கடிக்கும் கொசுவை , இரவில் தன் மேல் ஊறும் மூட்டைப்பூச்சியை , தெருவில் கடிக்க வரும் வெறிபிடித்த நாய்களை, நோய் பரப்பும் பன்றிகளை, விவசாயப் பயிர்களை தின்று தீர்க்கும்  வெட்டுக்கிளிகளை, எலிகளை, தண்ணீரில் குடி இருக்கும் பாக்டீரியாக்களை, கொத்தவரும் பாம்பை, கடிக்க வரும் பூரானை, கொட்ட வரும்   தேளை என்ன செய்கிறார்கள்? பாலூட்டி பழம் கொடுத்து    வளர்க்கிறார்களா? வாழ்த்துப்பா  பாடுகிறார்களா? மலேரியா மற்றும் டெங்குக் காய்ச்சளைப்பரப்பும் கொசுக்களைக் கொல்லாமல் குருமாவும் புரோட்டாவுமா கொடுக்க முடியும்? கொல்லாமை எல்லா இடத்திலும் சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டால் தண்ணீரைக் கூட தண்ணீராகவோ வெந்நீராகவோ குடிக்க முடியுமா? 

மாட்டின் இறைச்சிக்கு ஒரு நியாயம் வைத்திருப்போர் அதன் பாலுக்கு என்ன நியாயம் வைத்து இருககிறார்கள்? மாட்டின் மடி சுரக்கும் பால் நமக்கா அதன் கன்றுக்கா? அந்தப்பாலைக் குடம் குடமாக குடிக்கும்போது வராத பச்சாதாபம் அதன் கறியை சாப்பிடும்போது மட்டும் எங்கிருந்து பொத்துக்கொண்டு வருகிறதாம்? பாலைக்கறந்து குடித்து பசுவின் கன்றுக்கு பச்சை துரோகம் செய்யலாம்;  எருதின் கழுத்தில் கலப்பையைப்  பூட்டி வெயிலில் போட்டு வதைக்கலாம்; இழுக்க முடியாத சுமைகளை ஏற்றி காளைகளை வண்டி இழுக்கச் செய்யலாம். ஆனால் இயலாத நிலையில் இந்த மாடுகளை இன்னும் போட்டு வதைக்காமல் உணவாக உபயோகப்படுத்த மட்டும் கூடாதா? இந்த கருத்தை சொன்னால் அது அரசியலா? மத உணர்வை மதிக்கவில்லை என்கிற பட்டமா?

முதலாவதாக பசுவதை தடை மசோதா என்கிற பெயரே ஒரு கடைந்தெடுத்த மூடுமந்திரச்சொல்  ஆகும். .  இந்த பசுவதை என்பது வெளி உலகுக்கு மட்டுமே பசுவைக் காப்பாற்ற. ஆனால் உண்மையிலேயே இந்த வார்த்தைக்குள்  காளை, எருமை முதலிய எல்லா கால்நடைகளும் அடக்கம். மராட்டியத்தில் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் அமுல் படுத்தப்படாத/ முடியாத  இந்த மசோதா  ஒட்டுமொத்த  இந்தியாவுக்கும் பொருந்தாது. இதை வைத்து மக்களின் உணர்ச்சியைத்தூண்டும் பித்தர்களின் சித்துவேலைகள் வெற்றி பெறாது. பசுவதை தடை சாத்தியம் இல்லாத தத்துவம். இது ஒரு செத்துப்போன பிணம். இதைக்கொண்டுபோய் புதைக்காமல் இன்னும் ஒப்பாரி வைப்பது சானாபானவின் சறுக்கும் அரசியல் சரித்திரம். எனவே நாம் எல்லோரும்  மாட்டுக்கறிக்கு ஒட்டுப்போடுவோம்.  

குறுந்தொடர் நிறைவுற்றது.
இபுராஹீம் அன்சாரி

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1) 34

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2012 | , , , , , ,


மாட்டுக்கறி என்ற பெயர் கேட்டதும் சும்மா அதிருதா? அதிர வேண்டாம் ; பதற வேண்டாம்; இந்த ஆக்கத்துக்கு அதிரை வேண்டாம். போபாலில் ஆரம்பித்து, அகில இந்தியாவில் மாட்டுக்கறி என்கிற பிரச்சனையைத்தான் அலசப் போகிறோம்.  இந்த அலசல்  அதிரை என்கிற குண்டு சட்டியில் குதிரை ஓட்ட அல்ல. பன்னெடுங்காலமாகவே மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி வியாபாரம் செய்வதும் சாப்பிடுவதும் மாபாதகம் என்றும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே இவை தொடர்பான தொழில்களில், நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்,அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஜீவகாருண்யம் அற்றவர்களாகவும், இரக்கமற்ற பாவிகளாகவும் சித்தரித்து தீட்டப்பட்டுள்ள கபட சித்திரங்கள் யாவற்றையும் அழிக்கும்  நோக்கில்தான். நாம் முதலில் போபாலுக்குப் போகப்போகிறோம். பிறகு புதுடில்லிக்கும் போவோம்.

பி ஜெ பி அரசாளும் மத்தியப் பிரதேச அரசு பசுவதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. இம்முடிவின் மீது  நடுநிலை மற்றும் நன்னெறி பரப்பும் அறிஞர்களால் எதிர்ப்புக்கனை தொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபர சுதந்திரத்தில் அரசின் அப்பட்டமான தலையீடு என்றும், ஏழைகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கொடுமை என்றும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையில்  'பசுவின் புனிதத்தன்மை' பற்றிய புராண இதிகாச சாஸ்திர சம்பிரதாய மற்றும் வரலாற்று குறிப்புகள்  பற்றியும் அந்த குரிப்புகளை வைத்து சானா பானாக்கள் நாட்டைத் துண்டாட எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தோர் மேலும்   உயர்சாதியினர் இந்த பசுவதை, மாட்டுக்கறி ஆகிய அஸ்திரங்களை எப்படி உபயோகிக்கின்றனர் என்பதைப் பற்றியும் சற்று ஆதாரங்களோடு அலசலாம்.           (இவர்களின் ஊளா  பாலாக்களை அலசி அலசியே நமக்கு  தண்ணீர் பில் எகிறிவிட்டது).

முதல் ஓவரை வீசும்  முன்பு,  ஒரு சிறு கவனக் குறிப்புத் தந்து விட எண்ணுகிறேன். இந்த ஆக்கத்தில் சில இராமாயண,  மஹாபாரத காட்சிகளை, ஆதாரங்களை குறிப்பிட்டு இருப்பேன்.இந்த ஆதாரங்கள் கம்ப இராமயணத்தில் இல்லையே, இராஜாஜி எழுதிய வியாசர் விருந்திலும், பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்திலும் இல்லையே என்று தமிழ் புலமை படைத்த / படித்த யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.  இந்த இதிகாசங்களில் இருந்து என்னால் காட்டப்படும் ஆதாரங்கள் ஒரிஜினல் இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. கம்பர் எழுதியதும், இராஜாஜி, பாரதியார் எழுதியதும் தழுவல்கள் மட்டுமல்ல அவைகள் வழுவல்கள்; வளவலாக்கள்.; கொழகொழாக்கள்; பசப்பல்கள்; ரீல்கள்; புருடாக்கள்; காதில் சுற்றும் பூக்கள். தமிழ்ப் பண்பாடு கருதி மறைக்கப்பட்ட உண்மைகள். உதாரணமாக இராவணன் சீதையை எங்கே கை வைத்து தொட்டு தூக்கிச்சென்றான் என்பதை வால்மீகி ராமாயணம்  குறிப்பிடும் விதமும் இடமும் வேறு; அந்த இடம் வித்தியாசமானதல்ல ஆனால்  விபரீதமானது. இருந்தாலும், ஒரு பெரும் எடையுள்ள பெண்ணை  கடல் கடந்து ஆகாயத்தில்  தூக்கிச்செல்ல வசதியானது. இந்த சம்பவத்தை கம்பராமாயணம் குறிப்பிடும் விதம்  தமிழ்பண்பாட்டை ஒட்டியது. தொடாமல் தூக்கினானாம்; ஆகாயத்தில்  பறந்தானாம். நம்பமுடியுமா? ஆகவே இந்த ஆக்கத்தில் ஒரிஜினல் இதிகாசங்கள் குறிப்பிடும் ஆதாரங்களையே கையாண்டு இருக்கிறேன்.     

முதலாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்று சானா பானாவினர் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கும் முன் காலத்திலிருந்தே மாடுகளை உணவுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும், யாகங்களுக்காகவும் அறுத்து பலியிட்டு புசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இதிகாச,  பிராமண, சமண, புத்த இலக்கியம் மற்றும் வரலாறுகளில் இருந்து சான்றுகள் இருக்கின்றன. 

விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய 'அக்கினித் தேயம்' என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது. 

பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய 'அசுவமேத யாகத்'தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும் அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும். இந்த இருபத்தியொரு பசுக்கள் கொல்லப்படாவிட்டால் அந்த யாகம் பொய்த்துவிட்டதாக அர்த்தம். அத்துடன் இராஜசூய யாகம், வாஜ்பேய யாகம் ஆகியவற்றிலும் விலங்குகள் பலியிடப்படும். இதேபோல் மற்றொரு முதன்மையான யாகமாக கருதப்படும் கொசவ யாகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகள்  பயமுறுத்தும் தேவதைகளுக்காக பலியிடப்பட்டன. ஆகவே எல்லாவகையான யாகங்களிலும் பசுக்கள் கொல்லப்பட்டன. அவை புசிக்கப்பட்டன.   

'வேதக் கருத்துகளிலும் தர்மசாத்திரங்களிலும் உணவுக்காக பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 'பசு விருப்பமான உணவு' என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர் கூற்றின்படி , பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போ என்று தகப்பன் தசரதன் ஆணையிட்டான்  என்று இராமனுக்கு சொல்லப்பட்டபோது இராமனுடைய உடனடி பதிலாக இருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவது “ நான் நாட்டையும், மணிமுடியையும் , அரண்மனை வாசத்தையும் இழப்பதுடன் சுவைதரும் மாமிச உணவுகளையும் துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு வருடங்கள் காய்களையும் பழங்களையும் புசிக்க வேண்டுமா?” என்பதுதான்.               
(AYODHYA KANDAM  CHAPTERS 20, 26, 94).

அது மட்டுமா? வால்மீகி கூறுவதையும், நாம்  எடுத்துக்காட்டுவதையும் ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால்  ஒருவர் இருக்கிறார் அவர் கூறுவதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அவர்தான் வீரத்துறவி என்று பெயர் பெற்ற சுவாமி விவேகானந்தர். இதோ அவரே கூறுகிறார். 

"You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it."  “ வேதக் கருத்துக்களின் அடிப்படையில் மாட்டுக்கறியை உணவாகக் கொள்ளாத ஒருவர் நல்ல ஹிந்துவாக இருக்க முடியாது என்று நான் கூறினால் நீங்கள் திகைப்படைவீர்கள். சில சமய சடங்குகளில் ஒரு ஹிந்து ஒரு காளை மாட்டை அறுத்து பலியிடுவதோடு உட்கொள்ளவும் வேண்டும் ” என்று விவேகானந்தர் கூறுகிறார். 

"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;"  இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது.   இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

மேலும் கீழ்க்கண்ட விளக்க நூல் எப்படி மாட்டை அறுப்பது என்று பிராமணர்களுக்கு வழிகாட்டுகிறது. 
[Aitareya Brahman, Book 2, para 6 and 7]

அடுத்து,  Purv Mimansa Sutra Adhyaya 3, Pada 6, Sutra 18, the Shabarbhasya says,
संति च पशुधर्माः- उपाकरणं, उपानयं, अक्ष्णया बंधः, यूपे नियोजनम्, संज्ञपनं, विशसनमित्येवमादयः 

There are also certain details to be performed in connection with the animals, such as (a) Upaakaranam [Touching the animal with the two mantras], (b) Upaanayanam [Bringing forward], (c) Akshanyaa-bandhah [Tying with a rope], (d) Yoope niyojanam [Fettering to the Sacrificial Post], (e) Sanjnapanam [Suffocating to death], (f) Vishasanam [Dissecting], and so forth.

அதாவது அறுக்கப்படப்போகும் மாட்டை எங்கே தொடுவது, எப்படிக் கொண்டுவருவது, கழுத்திலும் அறுக்கப்படும் கம்பிலும் கயிற்றால் எப்படிக் கட்டுவது, எப்படி அறுப்பது என்கிற வழிமுறைகளை இந்த ஸ்லோகம சொல்லித்தருகிறது.   
[Shabhar bhashya on Mimamsa Sutra 3/6/18; translated by Ganganath Jha]

இந்த ஆதாரங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.மிகவும்  விரிவாகப்போனால் இந்த ஆக்கம் வீங்கிவிடும்.பல முகமூடிகள் கிழிந்துவிடும். யாராவது எதிர்த்து விளக்கம்  கேட்டால் விபரம் சொல்வேன்.

வேதகாலத்தை அடுத்து, இடைக்கால வரலாற்றுக் குறிப்புகளிலும் நமது வாதத்துக்கு வலு சேர்க்க  ஏராளமான சான்றுகள்  இருக்கின்றன.  ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுசாத்திரம்  கூறுகிறது. 

படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரத்தில்  முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள்தான்.  இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று தெரிகிறது.  

மதம் சார்ந்த இலக்கியங்களில் மட்டுமல்ல. மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், ஸ்ரீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
(ஆதாரம் : THE MYTH OF THE HOLY COW BY DR. D.N. JHA).

இப்படியெல்லாம் தங்களால் சப்புக்கொட்டி சுவைக்கப்பட்ட மாட்டுக்கறி , அந்த கறி தரும் மாடு எப்படி மதவாதிகளால் புனிதத்தின் அடையாளமாக்கப்பட்டது?

தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

பயணங்களில் பரவசம் ! குறுந்தொடர் - 1 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2012 | , , , ,


ஊருக்குச் செல்லனும் என்று முடிவெடுத்தாகி ஊருக்கும் சென்றாகி விட்டது, நோன்பு நெருங்கி விட்டதால் நண்பர்கள்  டூர் போவதற்கு நெருக்கடி கொடுத்தனர் நோன்புக்கு முன்பே ஒரு டூர் போய் வர வேண்டும் என்றும் சால்ஜாப் காரணம் சொன்னனர்.  நோன்பு முடிந்ததும் புறப்படும் நெருக்கடி வந்துவிடும் என்பதால்   நண்பர்களின் விருப்பமும் நியாயமானதாக(!!?) இருந்ததால் போடு ஒரு டூர் பயணம் என்று ஒரே மனதாக(!!!) முடிவானது.

செல்ல வேண்டிய இலக்கு – குற்றாலம், முன்பெல்லாம் அதிரையிலிருந்து  குற்றாலம் செல்ல அறந்தாங்கி புதுக்கோட்டை வழியாக மதுரை, அதன் பின்னர் குற்றாலம் போய் வருவோம் தற்போது E.C.R.ரோடு விரித்து கிடப்பதால்  ராமநாதபுரம் வழியாக போகலாம் என்று வழி நிர்ணயம் செய்து ஊரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டோம் 

என் வழி அமைதி வழி என்று போகாமல் எனக்கு இது புது(மையான) வழி என்பதால் நிதானமாகவே  இன்னோவாவை செலுத்தினேன். E.C.R.ரோடு நன்றாக  இருந்ததால் கூட வந்த நண்பார் வேகமா போப்பா என்று உற்சாக மூட்டினார். அவர் கொடுத்த உற்சாகம் என் காதில் விழுந்ததே தவிர அது என் காலுக்கு விழவில்லை அதனால் இன்னோவா அமைதியின்  ஆளுமையாகவே (என்ன பன்றது அந்திரைநிருபர் அப்படித்தான் பக்குவப் படுத்தி வைத்திருக்கிறது) பயணித்துக் கொண்டிருந்தது.


இப்படியே போய் கொண்டிருந்தபோது ராம்நாடு தாண்டி ஏர்வாடி என்ற பெயர் பலகை வந்ததும்..

ஏர்வாடியா? அது இந்தப் பக்கமா  இருக்குது?” என்று கூட வந்த அப்பாவி நண்பர் கேட்க. 

“ஏன் உனக்கு தெரியாதா முக்கியமா இது உன் போன்றவர்களுகுத்தானே இந்த   இடம் நன்றாக விளங்கி இருக்கணும்”  என்று விபரமான நண்பர் டபாய்க்க. 

முடிவாக அனைவரும் (என்னை தவிர !!!??) அங்கே செல்வதென்று முடிவானது. 

நான் கேட்டேன் “ஏம்ப்பா இந்த ராத்திரி நேரத்தில் அங்கே பார்க்க என்ன இருக்கு போக வேண்டாம்” என்றேன்.

அதற்கு விபரமான(!!??) நண்பர் சொன்னார் “இரவில்தான் விசேசமா இருக்கும் வண்டியை திருப்புபா” என்றார். 

“ஓகே திருப்புறேன்.ஆனால் அங்கே தர்காவிர்ற்கு போய் யாரும் சி(லி)ர்க்கு(ம்) வேலை(களைப்) பார்த்தால் அங்கேயே உங்களை  கட்டி போட்டு விட்டு வந்து விடுவேன்” என்ற கண்டிசன் போட்டு விட்டு   E.C.R.ரில் போன வண்டி யு டென் எடுத்து ஏர்வாடிகுள் நுழைந்தது. 

ஏர்வாடி தர்காவை நெருங்கியதும் அந்த இரவிலும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. (பவர் கட் (ஆக்வே)இல்லை ) மக்கள் நடமாட்டமும் அதிகம் இருந்தது  டீ கடையில்  வியாபாரம்   சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது அந்த நள்ளிரவிலும்.  தர்கா நுழைவாயில் கட்டிக் கொடுத்தவரின் பெயர்தாங்கி இங்கே கம்பீரமாய் நின்றது (மறுமையில் இதற்கெல்லாம் பதில் சொல்லியாகனும்)     இன்னும் மக்கள் திருந்தவில்லையோ  என்பது புரிந்தது. காரணம்  நுழைவாயிலை தாண்டியதும் மணலில் மக்கள் நேர்த்திக்கடனுக்காக கொத்துக்கொத்தாக கால்நடை ஜீவராசிகள் படுத்து கிடப்பதுபோல் படுத்து கிடந்தனர் 

தூங்கி கொண்டிருந்தவர்களை மிதித்து விடாமல் நடந்து  செல்வது  பெரும்பாடாகி விட்டது. இதில் விபரமான(!!?) நண்பர் வேறு புளியை கரைத்தார் (கொட்டை எடுத்த புளியா கொட்டை எடுக்காத புளியான்னு கேட்டுபுடாதிய).

“படுத்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களில் யார் பைத்தியம் யார் நல்லவர் என்று தெரியாது பட்டுன்னு எழும்பி வேட்டியை பிடித்துவிடும்” என்று கிளியை கிளறிவிட்டார்.

இதைக்கேட்டதும் அனைவரும் வேட்டியை இறுக்கி பிடித்தவாறு அருகே இருந்தா பள்ளிவாசலை நோக்கி  நடந்து சென்றபோது (தர்கா உள்ளே ஒரு பள்ளிவாசல் உள்ளது) ஒரு அதட்டலான குரல் நம்மை நோக்கி வந்தது.

“டேய் இங்கே வாங்கடா” என்று குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் திரும்பி பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டோம் அனைவரும் அப்படி ஒரு காட்சியை  அங்கே கண்டோம் அப்படியா கடப்பாசியாக உரைந்து விட்டோம்.
தொடரும்….
Sஹமீது

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள்! - குறுந்தொடர் - 1 24

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2012 | , ,


அதிரைநிருபர் வலைத்தளம் வாயிலாக உறவாடும் உறவுகள் பற்றிய சுருக்கமான என் கருத்துகளை வைக்க ஆவலுடன் தொடர்கிறேன்..

என்னுள் எழுந்த எண்ன ஓட்டங்களும் கருத்துகளும் ஒரு வரியெனில் அதிரை உறவுகள் நீங்கள் கூறும் / கூறப் போகும் கருத்துகள் ஏராளமிருக்குமென என நம்புகிறேன். 

உறவுகள் பலவிதம், தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாயின் உடன்பிறப்புகள் தந்தையின் உடன்பிறப்புகள் அவர்கள் வழிச்சொந்தம் என்று. அனைத்து உறவுகளையும் அலசிப்பார்த்து விடுவோமா.?

இவைகள் நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்.    பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக நீங்களும் கருத்துக்களை தொடருங்கள்.  நமது உறவுகள் எப்படி இருந்தது, அவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். எந்த உறவுகள் நமது அணுகுமுறையால் எவ்வாறெல்லாம் மேம்படும் என்பதையும் விவாதிப்போம். இதில் வாசிப்பவர்களில் உங்களனைவரின் பங்களிப்பே கூடுதலாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இறைவன் படைத்த படைப்புகளிலே மேலான படைப்பு மனித இனம்தான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு காணப்படும் மனித இனம் பெற்றுள்ள ஆறாம் அறிவான பகுத்தறிவு மிக நுணுக்கமானது. இதன் தேவைகள் உடல் சம்மந்தமானது கிடையாது. உள்ளம் பற்றிய தேவைகள் உடையது. நம் உள்ளத்திற்கு, விருப்பு, வெறுப்பு, அன்பு, நேசம் காட்டுதல், நேசம் பெறுதல், ஆவல், என மனதின் தேவைகள் சூழ்நிலைகேற்ப மாறுபடும். இந்த உணர்வுகள் மனித அரும்புகளின் வளர்ச்சிக்கு காலத்திற்கு ஏற்றார் போல் தேவை படுவதுதான் கால வினோதம். 

உறவுகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்...

தாய்-மகன் உறவு.... 

குடும்ப தலைவி தனது தாம்பத்திய வாழ்வின் வெற்றியாக கருதும் தாய் என்ற அற்புதமான பதவி அந்த தாய் என்ற பேரினை கொடுத்த பிள்ளை(கள்) மேல் காட்டும் பாசம், பரிவு அன்பின் வெளிப்பாடு அளவிட முடியாதது. முதல் மூன்று வயதில் அவர்களின் அன்பு அளவிட முடியாத அன்பு. அந்த அன்பின் வெளிப்பாட்டை மழலையர்களாக இருக்கும் பிள்ளைகள் அறிந்திட முடியாதது என்பது மனோதத்துவ நிபுணர்களின்  கருத்து. பிள்ளைகள் அந்த தருணத்தில் எல்லா தேவைகளையும் தாயிடமே கேட்கும். தாயின் அரவணைப்பே அந்த குழந்தையின் உறவுப்பாலம்.

மூன்று வயது கடந்த பிள்ளை தனது சுய தேவைகளை கேட்க ஆரம்பிக்கிறது. ஆனால், என் பிள்ளைக்கு இந்த உணவுதான் பிடிக்கும். இந்த ஆடை உடுத்திப் பார்க்கனும், என்று தனது ஆவலையே பூர்த்தி செய்கிறாள். அது இயற்கையான அன்பு, பள்ளி கூடங்களில் சேர்ப்பது கூட அவளது தேர்வாகவே இருக்கும். இப்படியாக தாயின் பாசம் சற்றும் குறையாமல் மகன் வாலிபனாகிய பின்பும் தனது மகனுக்கு வாழ்க்கை துணை தனது தரப்பு தேர்வாகவே இருக்க வேண்டும் என இருப்பதும் அதில் பிடிவாதமாக இருப்பதும் உண்டு. இது தாயின் நிலை.

மகனோ, ஐந்து வயது வரை தாயே உலகம். எதுவானாலும் தாய்தான். ஐந்து வயது தாண்டிய பின் பள்ளிகூட வாழ்க்கை துவங்குகிறது .அங்கு புது உறவுகள் பிறக்கிறது அங்கே நண்பன், ஆசிரியர் போன்ற புது உறவு. அங்கும் விருப்பு, வெறுப்பு போன்ற புது உணர்வுகள் பிறக்கிறது கற்கும் இடம் என்பதால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதுப்புது கருத்துக்களை அந்த மழலை உள்ளம் நுகர ஆரம்பிக்கிறது. ஐந்து வயது வரை நமது வீடு, நம் சொந்தம், என்ற சொல்லே மேலோங்கி இருக்கும். பள்ளிக்கூடம் சென்ற பின் தன்னை தாயிடமிருந்து தன்னை பிரித்து காட்டும் விதமாக எங்கள் பள்ளி   எங்கள் ஆசிரியர். எனது நண்பன். எனது புத்தகம் என்று தன்னை பிரித்து காட்டுவான் அப்படி கூறும் போது அதனை தாய் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாள். மாறாக மகிழ்ச்சியால் உள்ளம் பூரிப்பாள்

நாம், நம், என்ற சொல் என், எனது, என்று மாறியது என்பது உணர்வுகளின் வேறுபாடு என்பதை அத்தருணத்தில் தாய் உணர்வதில்லை முற்றிலும் தனது  பிள்ளை என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். வளர்ந்து வாலிப பருவம் ஆன பின்பு கூட உறவு விட்டு போக கூடாது. நான் கூறும் இடத்தில் தான் நீ  மணமுடிக்க வேண்டும் என்று கூறும்போது  நடக்கும் போராட்டம் மிக குறைவு என்றாலும் 95% திருமணங்கள் நன்மையாகவே வெற்றிகரமாகவே அமைகின்றன. என்றாலும் 5 சதவிகித திருமணங்கள் தோல்வியையே தழுவுகின்றன. தோல்வி கண்டவர்கள் தாய் மீது கோபம் கொள்ளாமல் தாயிடமே தஞ்சம் கொள்வது தான் வினோதம். அதே நேரத்தில் தாய் சொல்படி மணமுடித்து வாழ்வில் வென்றவர்கள் தாயை மறந்து தனது வழியை பார்த்து கொண்டு செல்வதுதான் வினோதம்..!

(இன்ஷா அல்லாஹ்... தாய் மகள் உறவு பற்றி அடுத்த தொடரில்.... )
அதிரை சித்தீக்

தொட்டால் தொடரும் ! - குறுந்தொடர்-2 14

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2012 | , ,


1960 வருட வாக்கில் துபாய் நாட்டுக்கு நம்மவர்கள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்கள். அதுவே லேட்டுதான்.அதற்கு முன்னரே மேலை நாட்டவர்களும் இந்தியாவின் உயர் ஜாதி இந்துக்களும் அங்கே காலூன்றி விட்டார்கள். அவர்களின் எடுபிடிகளாகவும் அல்லது அவர்களின் ஆளுமையின் கீழும் முஸ்லிம்கள் வேலை செய்தார்கள். சில வருடங்களில் அரபு நாடு தமிழ் முஸ்லிம்களின் மற்றொரு சிங்கப்பூர் மலேசியாவாகிவிட்டது. சிங்கப்பூர்வாசிகளைப் பார்த்து ஏக்கப்பார்வை பார்த்தவர்கள் வேட்டியை மாற்றி கால்சராயைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். 1970 க்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் மக்கள்போய் துபாயை பிரபலமாக்கி விட்டார்கள். நமக்கு முன்னால் அங்கே போய் பழம் தின்று கொட்டையும் போட்ட மலையாளிகளுக்கு இது பெருங்கடுப்பு. அவர்களோடு போட்டிப் போட்டுத்தான் நம்மவர்கள் படிப்படியாக உயர முடிந்தது.அப்புறம் நடந்த நிகழ்வுகள் முஸ்லிம் சமுதாயத்தில் உச்சகட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது.


அரபு நாட்டில் என்ன வேலை என்பதை பற்ற யாரும் கவலைப் படவில்லை. என்ன சம்பளம் என்பதுதான் குறி. சம்பளம் குறைவாக இருந்தாலும்கூட அரேபியாவில் தங்கள் மகனும் வேலை பார்க்கிறான் என்பது சமூக அங்கீகாரத்துக்கான அடையாளம் ஆகிப்போனது.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை பாஸ்போர்ட்டுடன் கண்ட தாய் "

என்பது தாய்மார்களின் புதுக் குறளாகிப்போனது. ஆறாம் வகுப்போ பத்தாம் வகுப்போ "நீ படிச்சுக் கிழிச்சது வரை போதும், அரேபியாவுக்குப்போ" என்று பிள்ளைகளை அடித்து விரட்டாதக் குறையாக அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள் பெற்றோர்கள். 1975 லிருந்து 1995 வரை கிட்டத்தட்ட இருபது வருட காலம் இந்த நிலை சமூகத்தில் நீடித்தது. இந்த காலகட்டத்தில் மாட்டியவர்களின் படிப்பு அதோகதியானது. ஆனால் குடும்பங்களில் "வறுமை" துரத்தப்பட்டு "செழுமை" தலைகாட்டத் துவங்கியது. கல்யாணப் பேச்சுக்களில் எல்லாவற்றையும் விட "மாப்பிள்ளை அரேபியாவில்" என்ற மந்திர வார்த்தைக்குத்தான் பெண்வீட்டுக் குடும்பம் வசப்பட்டது.

ஒரு மறுக்க முடியாத உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும்....அது...புதிதாக அரபு நாட்டுப் பணம் வந்த அந்த ஆரம்ப வருடங்களில்தான் வரதட்சணை அதிகமாக கேட்டு வாங்கும் வழக்கம் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால், ஒரு இடத்தில் பெண்பேசி முடிவு செய்தபிறகு மற்றொரு வீட்டில் அதைவிட பல மடங்கு அதிக "வரதட்சணை" தருவதாகக் கூறியதும் நிச்சயம் செய்த பெண்ணை வேண்டாம் என்று சொன்ன சம்பவங்கள் நிறைய உண்டு. ( இடையூறுக்கு மன்னிக்கவும்...இன்ஷா அல்லாஹ்.தொடருவேன்.) கடைகளில் வேலை பார்த்தவர்கள், வேலையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள் , ஏழைகள் என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது அரேபிய புவிஈர்ப்பு மையம். பெட்ரோலால் வளம் கொழிக்கும் வையம். இதில் பெரிய வேடிக்கை...அரசு வேலை பார்த்தவர்கள்கூட ஐந்து வருடம் லீவு போட்டுவிட்டு அரேபியாவுக்குப் போய் நல்ல முறையில் சம்பாதித்து விட்டு மீண்டும் பணியில் சேர்ந்து இப்போதும் ஓய்வூதியம் வாங்கி வருகிறார்கள். மற்றும் சிலர் கணிசமான "ரியால்"களை இழக்க மனமில்லாமல் அரசு வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு மீண்டும் அரபுநாட்டு வேலைக்கே சென்று விட்டார்கள்.

ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாப்பா உம்மாவிடம் அடிவாங்கிய பையன்களிடம் "பணம்" புரளத் துவங்கியதும் "குணம்" புரளத் துவங்கியது. விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் அதிகப்படியாகவே "அலம்பல்" போட்டார்கள். சமுதாயத்தின் கலாச்சாரம் மாறத் துவங்கியது. பணம் இல்லாதபோது அடக்கத்தோடு வாழ்ந்தவர்கள் அது வந்தபிறகு அடியோடு மாறிவிட்டார்கள். எல்லோருக்கும் பணத்தின்மீது அதீத காதல் ஏற்பட்டது. அதுவும் அரேபியா பணத்தின்மீது. "அல்லாஹும்ம சல்லி.." என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் "சல்லி...சல்லி..." என்று மட்டும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். குடிசைகள் "கான்க்ரீட்" வீடுகளாக மாற ஆரம்பித்தன....பாதி அரேபிய பணத்திலும் மீதி டவ்ரி பணத்திலும். அவர்களுக்கு, "இது ஒரு பொன்மாலைப் பொழுது...." 

ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் மூன்று பேரையோ நான்கு பேரையோ அனுப்பி காசு பார்த்தார்கள். மூன்றோ நாலோ பெண்பிள்ளைகளை மட்டும் பெற்று ஆண்பிள்ளை பெறாத பெற்றோர்கள் துடித்துப் போய்விட்டார்கள். அவர்கள் அழுத அழுகையின் "நிஜம்" என் நெஞ்சில் இன்றும் "நிழலாடுகிறது." ஒரு பெண்பிள்ளையை கல்யாணம் கட்டிக் கொடுக்க செந்நீரை சிந்தியவர்கள் மூன்று நாலு பெண்களை கட்டிக் கொடுக்க எங்கே போவார்கள்? ஊரில் எல்லோரும் அரேபியா மாப்பிள்ளைகள். அவர்களுக்குக் "கூலி" கூடுதல். மண்டபத்தில் கல்யாணம்,பெண்வீட்டுச் சாப்பாடு, சீர் செனத்தி என்று அப்போதே பல லட்சம் செலவில் கல்யாணக் கலாச்சாரம் "விஸ்வரூபம்" எடுத்தது. இந்த ஏழைகள் படும் பட்டைப் பார்த்து மனம் வெதும்பி நான் எழுதிய கவிதையின் ஓரிரு வரிகளை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். 

அன்றைய திருமணங்களில் கலந்து கொண்டோருக்கு /

பெருமானார் வழிகாட்டுதலில் வந்தது / 

வலிமா விருந்தெனத் தெரிந்திருந்தது!

இன்றையத் திருமணங்களில் /

உண்டு கலைவோருக்கு /

தாங்கள் உண்டதும் குடித்ததும்/ 

பெண்ணைப் பெற்ற/ 

ஏழைத் தகப்பனின் /

சதையும் ரத்தமும் எனத்/ 

தெரியாமல் போனது...."

பெண்ணைப் பெற்ற காயல்பட்டணம் ஏழை காவேரிப் பட்டணத்திலும் கோட்டைப் பட்டணம் ஏழை கோட்டாறிலும் தங்கள் மகளின் கல்யாணத்துக்காக "பிச்சை" எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது அரேபியா பணத்தால் அரேபிய மாப்பிள்ளைக்கு மகளை கட்டிக் கொடுக்க வந்த ஆசையால் வந்த மிகப் பெரிய விபரீதம். "ரத்தக் கண்ணீர்" என்பார்களே, அது இந்த ஏழைகள் வடித்தக் கண்ணீர்தான். இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து கொடுத்தாலும் சில மாப்பிள்ளைகள் "ஷோக்" அனுபவித்துவிட்டு பொறுப்பற்று நடக்க ஆரம்பித்தார்கள். "காணாததைக் கண்டால் தோணாதது தோணும்" என்பதுபோல் இந்த மைனர்கள் சுகம் அனுபவித்துவிட்டு, மனைவியின் நகை, பணம்,வீடு எல்லாவற்றையும் "குளோஸ்" பண்ணிவிட்டு அவர்களை வறுமையில் வாட விடுவதும் வாடிக்கையாக நடைபெறும் சம்பவங்களாகி விட்டன.

வெளிநாட்டு வருமானம் பலரை நன்றாக்கி இருக்கிறது. ஏழைகளாக இருந்த பலர் தங்கள் கடின உழைப்பால் தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார்கள். அவர்களுக்கும் அரபு நாட்டில் நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார்கள். 2000க்குப் பிறகு சமுதாயத்தில் "கல்லாமை" ஒழிந்தது. வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளப் போட்டிப் போட்டனர். பெண்களும் "டாக்டர்" "இஞ்சினியர்" படிப்பு படித்து கல்யாணமாகி கணவனோடு வெளிநாட்டில் செட்டிலாகி அடுக்களையில் சமையல் செய்து சந்தோசமாக குடித்தனம் நடத்துகின்றனர்.(நல்லா இருக்கட்டும்.அல்ஹம்துலில்லாஹ்)

அரபு நாட்டில் சம்பாதிக்கும் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்களா?

"இல்லை". நிறைய படித்தவர்களுக்கு "ஓரளவு" வருமானமும் படிப்பே இல்லாத சிலருக்கு "எண்ணி"பார்க்க முடியாத அளவுக்கு வருமானமும் வருவது ஒரு விசித்திரம். மேலும் ஒரேசீரான வருமானம் இல்லாததால் சமுதாயத்தில் மிகப்பெரிய "மேடு பள்ளம்" ஏற்பட்டு விட்டது. ஏற்றத் தாழ்வுகள் தலை தூக்கி விட்டன. ஒரு புறம் செல்வத்தின் உச்சம். மற்றொரு புறம் தேவைக்கே போதிய வருமானம் இல்லாத சோகம். இரண்டுக்கும் இடையே சிக்கி குடும்பங்கள் பல அவதியும் அவமானமும் அடைகின்றன.பத்தோ இருபதோ வருடங்கள் அரேபியாவில் சம்பாதித்தும் முழுமையான வெற்றியை வாழ்வில் பெற முடியாமல் "இன்னும் ஒரு பத்து வருஷம் தாக்குப் பிடித்து கடைசி மகளையும் கட்டிக் கொடுத்து வீட்டையும் கட்டி முடிச்சுடலாம்" என்ற நம்பிக்கையில் பலர் வாழ்கிறார்கள்.இவர்கள் "உடல் சுகத்தை" குர்பானி செய்தவர்கள். மனைவி மக்களுக்காக இளமையை, இன்பத்தை தியாகம் செய்தவர்கள். ஒரு சந்தர்பத்தில் "அதற்காக" ஆசைப்பட்டு, கிடைக்காமல் துவண்டு, பொறுமையோடு வாழ்பவர்கள். (அல்லாஹ் - அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்). 

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பின்படி இவர்களால் இப்போதைக்கு ஊரில் செட்டிலாக முடியாது. இப்போது வெளிநாட்டில் வாழும் 95 சதவீத முஸ்லிம்களால் "சம்பாதித்தது போதும், ஊருக்குப் போகலாம்" என்று மூட்டையை கட்ட முடியாது. கட்டவும் கூடாது. ஏன்?

(இன்ஷா அல்லாஹ் ---- தொடரும்)
-அபூஹாஷிமா

தொட்டால் தொடரும் ! - குறுந்தொடர்-1 21

அதிரைநிருபர் பதிப்பகம் | April 19, 2012 | , ,


இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரங்கூன் போன்ற நாடுகளுக்கு "திரை கடலோடி திரவியம் தேடச் சென்றார்கள். அப்படிப் போன பலபேருடைய குடும்பம் "நல்லா" இருந்தது. அவர்கள் "ஜக்காத்" கொடுத்தார்கள். மற்றவர்கள் வாங்கினார்கள். அவர்கள் "ஹஜ்" செய்தார்கள், மற்றவர்கள் அவர்களை "ஹாஜியாரே" என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்., கார் வாங்கினார்கள், பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல், தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள். 


அந்தக்குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வழங்கப் பட்டது. சென்ற இடமெல்லாம் அவர்களை கவுரவிக்க பலர் காத்திருந்தார்கள். அங்கேஅவர்களின் "பணம்" அவர்களின் தகுதியைப் பேசியது. பலர் அவர்களை அண்டி வாழ்ந்தார்கள், மற்றும் சிலர் அவர்களைப் பார்த்து பொறாமைப் பட்டார்கள். தங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதே அதற்குக் காரணம். ஏனென்றால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் கதவுகள் அடைபட்டு விட்டன. புதிதாக யாரும் அங்கே போக முடியாது. உள்ளூரில் அந்த "முதலாளிகளின்" கடைகளில் பலர் வேலைப் பார்த்தார்கள். பெரும்பாலான மக்கள் கூலி வேலையும் "சாப்பாடு கழிந்தால் போதும்" என்ற அளவுக்கு வருமானமுள்ள வேலையும் பார்த்தார்கள். 

அந்த வசதிமிக்கக் குடும்பத்திலும் பல பிரச்சினைகள். பணம் தேடச் சென்றவர்கள் அங்கே மற்றொரு பெண்ணை மணமுடித்து அங்கேயும் பல பிள்ளைகளைப் பெற்றார்கள். தங்கள் ஊரிலுள்ள மனைவி மக்களை மறந்து போனார்கள். அவர்களின் பணம் அங்கேயும் கவுரவமாகத்தான் பேசப்பட்டது. கணவனால் மறந்துபோன குடும்பப் பெண்கள் பட்ட துன்பத்துக்கு அளவே கிடையாது.கிட்டத்தட்ட "கைம்பெண்கள்" போல் அவர்கள் வாழ்வு அமைந்தது. சிலர் "அங்கேயும் இங்கேயும்" நீதமாக நடந்து கொண்டார்கள். அந்தக் குடும்பகளுக்கு பாதிப்பில்லை.இவ்வளவு பிரச்சினைகள் சமுதாயத்தில் இருந்தபோதும் "வரம்பு மீறுவது" "வேலி தாண்டுவது" போன்ற "கலாச்சாரங்கள்" குறைவாகத்தான் இருந்தது.

சமுதாயம் ஏழைகளால் நிரம்பி இருந்தது. இந்த ஏழைகளுக்கு பல குழந்தைகள். அவர்களை படிக்க வைக்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. S .S .L .C . பாசான சிலர் அரசு வேலைக்குப் போனார்கள். அன்றைய நிலையில் "வக்கத்தவனும் வகையத்தவனும்" தான் அரசு வேலைக்குப் போவார்கள் என்ற பேச்சு மக்களிடம் இருந்தது. சம்பளம் மிகவும் குறைவு என்பது அதற்கொருக் காரணம். இப்படி பல ஏற்றத் தாழ்வுகள் அன்றைய மக்களிடம் இருந்தது. பணக்கார பிள்ளைகள் பெரிய படிப்பும் பாவப்பட்ட பிள்ளைகள் சாதாரண பள்ளிப் படிப்பும் படித்தார்கள். தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் தங்கள் வாழ்க்கை வசதிகளை வகுத்துக் கொண்டார்கள். வாழ்க்கை நெருடலில்லாமல் எல்லோருக்கும் இனிமையாகத்தான் அமைந்தது.

மக்களிடம் அன்பு, பணிவு, ஒற்றுமை, ஆடம்பரமின்மை, இபாதத்து, இக்லாசு எல்லாம் செல்வமாக இருந்தது. வரதட்சணை மோகம் இல்லை. பளிங்கு மண்டபத்தில் நாட்டம் இல்லை. டிவி கிடையாது. கூட்டுக் குடும்பம். மொத்தத்தில். "இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தார்கள்" 

வழக்கம்போல் தங்கள் கடமைகளை முடித்து உறங்கப்போன அந்த மக்களை திடீரென்று வீசிய "புயல்" திக்கு முக்காட வைத்துவிட்டது. தங்கள் வாழ்விலும் இப்படி ஒரு "வசந்தச் சூறாவளி" வீசும் என்று தெரியவே தெரியாத அந்த மக்களை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீசியப் "பாலைவனப் புயல்" எங்கேயோ கொண்டுபோய் உட்கார வைத்து விட்டது.......

(இன்ஷா அல்லாஹ் ---- தொடரும்)
-அபூஹாஷிமா

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - நிறைவு! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , , ,

குறுந்தொடர் - நிறைவு

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் , இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை.  ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான் சமுதாயத்துக்குள்ளே பிளவுகளும்,கட்சிகளும்,இயக்கங்களும் அதிகமாகிவிட்டன. தலித் இனங்களின் மக்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவானதும், கட்டுக்கோப்பானதுமான சக்திவாய்ந்த சங்க்பரிவார் அமைப்புபோன்ற எதிரிகள் இருக்க, அவர்களுக்கு வெண்சாமரம் வீசி, இந்த இன மக்கள் அடித்துக்கொள்வது தங்களின் சொந்த இனமக்களுடனே என்பது மிகவும் வேதனை தரும் நிலைமையாகும். 

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், வன்னியர் சங்கம், பாட்டாளி இயக்கம், பூவை செங்குட்டுவன், பொன் குமார் தலைமயில் உள்ள சிறு சிறு இயக்கங்கள் என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டோருடைய அமைப்புகளும், விவசாய அணிகளும், மீனவர் அமைப்புகளும், முஸ்லிம் லீக், தேசியலீக், தமிழ்நாட்டு லீக், த.த.ஜ. , இ.த.ஜ. , த. மு.க. , ம.நே.ம.க , பாபுலர், எஸ். டி. பி. ஐ. என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், தலித் கிருத்துவ அமைப்பு, நாடார் கிருஸ்துவ அமைப்பு என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இதர சிறுபான்மை அமைப்புகளும் ஓர் அணியில் நின்றால் ஆண்டாண்டுகாலமாக ஆட்டிப்படைத்து வரும் ஆரிய விஷத்தை முறிக்கும் மருந்தாக அமையும்.  இந்த மாற்று அரசியல் புரட்சிதான் இதற்கு விடிவாக இருக்க முடியுமே தவிர நாலு அரசுப்பதவிகள் கிடைத்துவிட வழிவகுக்கும் இட ஒதுக்கீடு மட்டும் போதும் என்பது அழுகிற பிள்ளைக்கு ஐஸ் கிரீம் கொடுப்பதற்கு சமமானது. ஆதிக்க வர்க்கங்கள் பால் என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும். அதிகாரங்களை மீட்டெடுக்க அமைப்பும் குறிக்கோளும் ஆழமாக இருந்திட வேண்டும். 

தலித்துகள் அவர்களுக்கு சரிநிகர் சமூக அந்தஸ்தை தருகிற இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் பக்கம் திரண்டு வரவேண்டும் என்று நான் வெளிப்படையாக அழைப்பு விட விரும்புகிறேன். 

அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். பிறப்பிலேயே பேதம் கற்பித்த முந்தைய ஆரிய மனுதர்மம் சார்ந்த சமூக அமைப்புக்கும்,  இஸ்லாமிய இறைவேதம் வரையறுத்துச் சொல்கிற....
  • அவனே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான் (4:1).
  • உங்களை அன்னையரின் வயிற்றிலிருந்து படைத்தான்.காதும், கண்ணும், இதயமும் வழங்கினான் (16:78-83).

என்கிற திருகுர்-ஆன் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்ந்து ஆராயவேண்டும். இஸ்லாம் கூறுகிற ஐந்து கடமைகளின் அடிப்படையே சமத்துவமும், சகோதரத்துவமும் என்பதை தலித் சமுதாயத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தலித்துகள் தானாக விளங்கிக்கொள்வார்களா?

இஸ்லாமிய இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு சகோதர யுத்தம் நடத்துகிறவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதில் இனி தங்கள் சக்திகளை செலவிடவேண்டும். கிருஸ்துவ அமைப்புகளைப் பாருங்கள். மனிதன் துன்பப்படுகிற இடங்களான மருத்துவமனைகளையும், சிறைக்கூடங்களையும் தேர்ந்தெடுத்து நோக்கிச் சென்று தங்கள் மதத்தை பரப்புகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாமோ மாறுபட்ட  இயக்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வன்முறை ஏவுகிறோம்- வசைபாடும் சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மார்க்க கடமையை மறந்தே போனோம்.  

இஸ்லாமிய இயக்கங்களில் சிதறிக்கிடந்து தங்கள் சக்திகளை வீணர்களை புகழவும், அவர்களுக்காக கோஷம் போடவும், கொடிப்பிடிக்கவும், நம்மைத்தாக்கி நாமே வெட்டிக் கொள்ளவும், சுட்டுக்கொள்ளவும்,  துணிந்து நிற்கும் அருமை இளைஞர்களே! இந்த நல்ல காரியத்துக்கு ஒன்று திரளுங்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் அந்த சக்திகளை செலவழிப்போம்! மதமாற்றதடைச்சட்டம் என்பதெல்லாம் மண்ணோடு மக்கிப்போய் நெடுநாள் ஆகிவிட்டது.நம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக – அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் கை கோர்ப்போம். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும் அதுவும் காலத்தின் கட்டாயமான தேவையான நடவடிக்கையாக இருக்கும். 

அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் மற்றும் கட்சிகளைச் சார்ந்த தலித் இன உண்மை தமிழ் சகோதரர்களே!

ஆண்டாண்டு காலமாக ஆரிய நச்சுப்பாம்புகளின் வர்ணாசிரம- வர்ணபேத- பிரித்தாள்கின்ற சூழ்ச்சிகளில் சிக்கி அடக்கப்பட்டு- ஒடுக்கப்ப்பட்டு- இடுப்பில் துண்டுகட்டி- பல்லக்குத்தூக்கிகளாக பழக்கப்பட்டுப்போன பழந்தமிழ் இனமே! 

ஆலயம் கட்டினாலும் அதில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அடக்குமுறைக்கு ஆளான இனமே!

தனி வீதி, தனித்தெரு, தனிக்குவளை, தனிக்குளம் என்று தடுத்துவைக்கப்பட்ட தமிழினமே!

தொட்டால் பாவம்! எதிரில் வந்தால் தீட்டு ! காலிலே பிறந்தவன் என்றெல்லாம் பிரித்துவைக்கப்பட்ட இனமே!

உங்களை இஸ்லாம் அழைத்துக் கொண்டே இருந்தது. எங்களுடன் அரசியலில் கைகோர்க்க மட்டுமல்ல... 

ஒரு தட்டில் நாம் அனைவரும் இருந்து உண்ணும் சமத்துவத்தை தர! உறவு முறை வைத்து அழைத்துக்கொள்ள! எங்கள் பெயரே உங்களுக்கும் சூட்டப்பட!  

ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களை தொழுகைக்கு நீங்கள் அழைப்புவிட!அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள! நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறைவனை தொழ! ஓர் குரலில் கலிமாவும் ஆமீனும் முழங்க!

வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.!
உரசல் உறவுக்குள் அழைக்கிறது...
-இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு