Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 16 28

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2012 | , ,

இஸ்லாமிய வரலாற்றில் – குறிப்பாக, நபி வரலாற்றில் – மக்கா வெற்றி என்பது, முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி மட்டுமன்று; மானம் காத்த வெற்றியுமாகும்! ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் புத்தமைப்புச் செய்யப்பெற்ற தொடக்க காலத்தில், அவர்களின் உண்மை மார்க்கத்தில் இணைந்த ஒரு சிலர் நுகர்ந்த துன்பங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் எழுதத் துணிந்தால் நம் கண்கள் குளமாகும்! 


யாசிர் என்ற யமன் நாட்டு அடிமையைக் கயிற்றால் பிணைத்து அடித்தார்கள்!  அதிலும் ஆறுதல் அடையாத மக்கத்துக் குறைஷிகள், இறுதியாக அவரின் இரு கால்களையும் இரண்டு ஒட்டகைகளில் கட்டி, அவற்றை எதிர் எதிர்த் திசைகளில் ஒட்டிவிட்டார்கள்!  என்னவாகும்? இரு கூறாகக் கிழிக்கப்பட்டது அவரின் உடல்!


அவருடைய மனைவியை இரக்கப்பட்டு விட்டார்களா? இல்லை! அவரையும் கட்டிப் போட்டு, அவருடைய மறைவிடத்தில் அம்பெய்து கொன்றார்கள்!  பெண்ணொருத்தியை வதை செய்வதன் உச்சகட்டமல்லவா இது?


இக்குடும்பக் கொழுந்தான அம்மார் என்ற சிறுவரையுமல்லவா கயிற்றால் பிணைத்துக் கசையடி கொடுத்தார்கள்!   குடும்பமே துன்பத்தின் எல்லையில் துவண்டு போயிற்று!  அந்த நிலையில், தமக்கு வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்காதா என்றெண்ணி, நபியவர்களிடம் யாசிர் முறையீடு செய்தபோது, صبرا يا آل ياسر   (யாசிரின் குடும்பத்தவரே!  பொறுமை செய்க!) என்று மட்டுமே அந்த நபியால் ஆறுதல் சொல்ல முடிந்தது.


இப்படி, மக்கத்துக் குறைஷிக் கொடுமனத்தவர்களின் படுபாதகச் செயல்களால் வதை செய்யப்பட்டவர்களின் பட்டியல் – பிலால், கப்பாப், இப்னு மஸ்ஊத், அபூபக்ர், உஸ்மான், சுஹைப், அபூசலமா, உம்முசலமா என்று – நீண்டுகொண்டே செல்கின்றது!  இத்தகைய தொல்லைகளை எல்லாம் விட்டு விடுதலை பெறுவதற்காக, அம்மக்களுள் பலர் புலம் பெயர்ந்து, கடல் கடந்து ஆபிரிக்காவின் அபிசீனியாவுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்!  இப்படி, எட்டாண்டுகளின் போராட்டத்திற்கும் பொறுமைக்கும் பிறகு, ஒரு வெற்றி கிட்டுகின்றது என்றால்...?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினாயிரம் வீரர்களோடு, வெற்றி வீரராக மக்காவினுள் நுழைகின்றார்கள்! எனினும், உண்மையாகத் திருந்தி வந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறார்கள்! கஅபாவினுள் நுழைந்தவர்களுக்குக் காவல் வழங்குகின்றார்கள்! இதற்கெல்லாம் பின்னரும் வழிக்கு வராத வன்மனத்தோரைத் தண்டிப்பது முஸ்லிம்களின் கடமையல்லவா? காலித் பின் வலீத், ஜுபைர் முதலான தம் தளபதிகளுக்கு மக்காவுக்குள் நுழையக் கட்டளை பிறப்பிக்கிறார்கள். அடுத்து நடந்ததோ, அருமையான தண்டனை! ‘செத்தோம், பிழைத்தோம்’ என்று தலை தெறிக்க ஓடுகின்றனர் குறைஷித் தலைவர்கள்!


அவர்களுள் சலமத் இப்னு மைலா என்பவரும் ஒருவர்.  இவர் மக்காவின் புறநகர்ப் பகுதியில் இருந்த தனது வீட்டுக்கு ஓடோடி வந்து நுழைந்து மூச்சிரைக்கத் தன் மனைவியிடம், “விரைந்து கதவை மூடு!” என்றார்.  “எங்கிருந்து இப்படித் தலை தெறிக்க ஓடி வருகின்றீர்?” என்ற மனைவியைப் பார்த்துக் கீழ்க்காணும் கவிதையடிகளைக் கூறுகின்றார்:

إنك لو شهدت يوم الخندمه ،   إذ فر صفوان و فرعكرمة
وابو يزيد قائم كالموتمه ،  واستقبلتهم بالسيوف المسلمة
يقطعن كل ساعد وجمجمة ،  ضربا فلا يسمع إلا غمغمه  
لهم نهيت خلفنا وهمهمه ،  لم تنطقي في اللوم أدنى كلمة 


இதன் தமிழ்க் கவியாக்கம்:

என்னடி பெண்ணே! அறிந்திலையோ? 
இறையின் தூதர் வருகின்றார்!
மன்னர் போலே இப்புனித
மக்கா விற்குள் நுழைகின்றார்!
உன்னருந் தலைவர் உமையாவின்
ஒருமகன் சஃப்வான் ஓடுகிறார்!
இன்னொரு வர்அபு ஜகில்மைந்தர்
இக்ரிமா ஓடி ஒளிகின்றார்!

அதிர்ச்சி யுற்று நிற்கின்றார் 
அம்ரின் மகனார் சுஹைலென்பார்!
முதிர்ச்சி யுற்ற பெருவீர
முஸ்லிம் வாட்கள் ஓங்கினவே!
விதிர்த்து நிற்கும் குறைஷிகளை 
வெட்டிச் சாய்த்து மாய்க்கின்றார்!
எதிர்த்து நிற்க முடியாமல் 
எங்கும் அச்சம் அச்சம்தான்!

இடிபோல் அங்கே ஒவ்வொருவர் 
இதயம் அடித்துக் கொள்வதனால்
தடுமாற் றத்தில் நிற்கின்றோம்! 
தடுத்து வைப்பார் யாருமிலை!
எடுத்துப் பேச எவருமிலை! 
இழித்து ரைத்தால் பழியாகும்!
உடைந்த சிலைகள் ஒவ்வொன்றும் 
ஒருசொல் கூடப் பேசவிலை!

(சான்றுகள்: சீரத்துன்நபி – இப்னு ஹிஷாம் / ஜாதுல் மஆத் – இப்னு கய்யிம்)


உயிர்ப் பிச்சை கேட்டு முஸ்லிம்களிடம் வந்தவர்கள், தலை தெறிக்க மலைகளின் மீது ஏறி ஓடியவர்கள், கஅபாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்கள், தத்தம் வீடுகளுக்குள் புகுந்து தாழிட்டுக்கொண்டவர்கள், அபூ சுஃப்யானின் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ஆகியோர் தவிர, மக்கா வெற்றிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு!  வெறுமனே பண்ணிரண்டுதான்!  இந்தக் கொலை நிகழ்வும்கூட, நபியவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நிகழ்ந்தது!  அந்த நாள்வரை, மக்கத்துக் குறைஷிகள் வதை செய்ததும் கொலை செய்ததுமாக, முஸ்லிம்கள் அடைந்த இழப்போ எண்ணிக்கையில் அடங்காதது!  இதனால்தான், இத்தொடரின் தொடக்கத்தில், மக்கா வெற்றியை, ‘மாபெரும் வெற்றி’ என்றும் ‘மானம் காத்த வெற்றி’ என்றும் குறிப்பிட்டேன். 

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது

மாற்றம் ஏற்றமா ஏமாற்றமா – அனுபவம் பேசுகிறது. 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | , , , , ,


மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது என்று கூறுவார்கள். விதைகள் தளிர்களாவதும், தளிர்கள் தழைத்து செடிகளாவதும், கொடிகளாவதும், பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் மாற்றங்களே. மனிதவள மேம்பாட்டுதுறையில் மாற்றம் என்பது பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் என்று பலவகைப்படும். சில மாற்றங்களை அவரவரின் தகுதி, திறமை, பொறுப்புகளை நிறைவேற்றும் தன்மைகள் ஆகியவற்றை அளவிட்டு நிறுவனங்களே செய்யும். சில மாற்றங்களை நாமே செய்து கொள்ளலாம். அப்படி நாமே செய்து கொள்ளும் மாற்றம்தான் ஒரு பணியிலிருந்தோ, ஒரு நிறுவனத்திலிருந்தோ விலகி நாம் தேடும் அதிக நன்மைகளுக்காக வேறொரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது ஆகும்.

பல நேரங்களில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்கள் உண்டு. சில நேரங்களில் நல்ல தகுதி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புக் கிடைக்காதவர்களும் உண்டு. ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டு ஏதாவது காரணத்துக்காக அல்லது ஒரு மாற்றத்தைத்தேடி இடம் பெயர நினைப்பவர்கள் உண்டு. “ அது இருந்தால் இது இல்லே- இது இருந்தால் அது இல்லே- அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கு இங்கே இடமில்லே” என்பதுதான் பல சமயங்களில் நடக்கும் சம்பவங்களாகும். இங்கே நாம் விவாதிக்க இருப்பது எல்லாம் நன்றாக அமைந்து ஒரு நிறுவனத்தில் இருந்து பதவி விலகி- அடுத்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றிய சில அனுபவ குறிப்புகள்.  

பொதுவாக சொல்லப்போனால் ஒரு நிறுவனத்திலிருந்து மறு நிறுவனத்துக்கு வேலைக்குப்போகும் நமது மனநிலை கிட்டத்தட்ட ஒரு புதுப்பெண்ணின் மன நிலையாகத்தான் இருக்கும். பல சமயங்களில் பெரும் சவாலாகவும் அச்சமூட்டும் வகையிலும் அமைந்து இருக்கும். மணப்பெண்ணுக்கு சலங்கை கொலுசு போட்ட கால்கள் தடுமாறும்- நமக்கு சாக்சும்  ஷூவும்  போட்ட கால்கள் தடுமாறும். மணமகனை மணமேடையில் பார்த்த அனுபவத்தின் அளவுதான் நேர்காணலில் முதலாளியையோ , மேலாளரையோ பார்த்ததும் இருக்கும். மணம் முடிந்து மாமியார் வீட்டில் அடிஎடுத்துவைக்கும் போது இருக்கும் அச்சம், நாணம, மடம், பயிர்ப்பு அனைத்தும் புதிய அலுவலகத்தில் அடி எடுத்து வைக்கும்போதும் இருக்கும்.  ஒரு புதிய பொறுப்புக்கும், ,சூழ்நிலைக்கும் தயாராவதுடன் புதிய நண்பர்களை மட்டுமல்ல புதிய மேலாளரையும் சந்திக்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவேண்டும். நாம் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தை முதல் கணவனுக்கோ மனைவிக்கோ ஒப்பிட்டால் அடுத்து நாம் போக இருக்கும் நிறுவனத்தை இரண்டாவது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஒப்பிடலாம். முதல் கணவன் கோபப்படும்போது முகத்தில் பச்சைத்தண்ணிர் குவளையை வீசி இருக்கலாம். அதைவைத்து அடுத்தவன் சுடு நீர் குவளையை விட்டு எறிவான் என்று எண்ணி பயப்படக்கூடாது. பூக்களையும் வீசலாம் திராவகத்தையும் வீசலாம். எதுவும் நடக்கலாம். 

புதிய நிறுவனத்தில் நேர்காணலின்போது உங்களுக்கு அந்த நிறுவனத்தின் கொள்கைகள், வேலைச்சூழ்நிலைகள் ( POLICIES, CORPORATE CULTURE, WORK ENVIRONMENTS) ஆகியன பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகமே தந்து இருப்பார்கள். இவைகள் அந்த நிறுவனத்தின் முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முழுதுமாக உதவாது. நீங்கள் அங்கு பணியில் சேர்ந்து நடைமுறையில் அவற்றோடு இணைந்து பணியாற்றும்போதுதான் உங்களால் அந்த நிறுவனம் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.  சாம்பார்  வைப்பது எப்படி என்று டி வி யில் சொல்லித்தருவதை கேட்டு கவனிப்பதற்கும் நாமே  அடுப்பங்கரையில் குக்கரைப் பற்றவைத்து பருப்பை வேகவைப்பதில் ஆரம்பிப்பதற்கும் உள்ள வித்தியாசம். 

புதிய நிறுவனத்தின் முதல் நாள் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். உங்களைப் பற்றிய ஒரு தோற்ற, பழக்க முறைகளைப்பற்றிய ஒரு முதல் கணிப்பையும் தீர்ப்பையும் உங்கள் மேலாளரிடத்திலும், உடன் பணியாற்றுவர்களிடத்திலும் உருவாக்ககூடியதாக இருக்கும். இந்த முதல் கணிப்பு உங்களின் பணிக்காலம் முழுதும் கை கொடுக்கக்கூடியதாக அமையும். ( THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION ) .

வேலைக்கு சென்று சேருவதற்கு முதல்நாள் இரவு விரைவிலேயே படுக்கச் சென்று நன்றாக தூங்கி விடுங்கள். சிலர் விடிய விடிய உட்கார்ந்து ஐ பி எல் மேட்சையோ , ஆஸ்திரேலியாவில் நடு இரவில் நடக்கும் ஒருநாள் மேட்சையோ பார்த்துவிட்டு காலையில் அழுது வழிந்து கொண்டிருக்கும் முகத்துடன் புதிய அலுவலகம் வராதீர்கள். இது தவிர்க்கப்படவேண்டும். அத்துடன் புதிய நிறுவனத்தின் வேலை தொடங்கும் நேரத்தை அறிந்துவைத்துக்கொண்டு தாமதமில்லாமல் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். வேலை நேரம் தவறி தாமதமாக வருவது முதல்நாளே ஒரு கரும்புள்ளியை உங்களின் உச்சந்தலையில் குத்திவிடும். அத்துடன் நேரத்தில் வருவது உங்களை ஒரு நேரம் தவறாதவரென்றும், நல்ல விதமாக பயின்றவர் என்றும் ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும். ( WELL ORGANIZED AND PUNCTUAL ) .அதுமட்டுமலாமல் நல்ல எடுப்பான தோற்றம் தரும் ஆடைகளை அணிந்து வருவதும் இன்றியமையாதது. நீங்கள் எவ்வளவுதான் அனுபவமும், அறிவும், தகுதியும் பெற்றவராக இருந்தாலும் உங்களின் தோற்றமும் அதற்கேற்றபடி இல்லாவிட்டால் உங்களின் அத்தனை தகுதி, அனுபவம், திறமைகளும் வேஸ்ட்தான் என்பதை உணரவேண்டும்.  தகுதி, திறமைகள் வெளிப்பட நாளாகும். ஆனால் நீங்கள் அணிந்து வந்திருக்கும் ஆடைகளைப்பற்றிய விமர்சனம் உடனே அலுவலகத்தில் பிளாஷ் நியூஸ் ஆகும். 

அடுத்து உங்களுக்கு சொல்ல விரும்புவது , தரப்பட்ட வேலையில் கவனம் செலுத்துவது,உங்களுடைய இருப்பிடங்க்களை வசதியாக அமைத்துக்கொள்வது, உங்களுடன் பணியாற்றும் மற்றவர்கள் நீங்கள் பணி செய்வதை நோக்கும்போது உங்களுடைய வெளிப்பாடுகள் நீங்கள் ஒரு சிறந்த தேர்வுதான் என்பதை காட்டுவதாக இருக்க வேண்டும். ‘போயும் போயும் ஒரு பொழப்பத்தவனை’கொண்டு வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்துவிடக்கூடாது.  உங்களை ஒரு நல்ல அனுபசாலி என்றும், பொறுப்பானவர் என்றும் மதிக்கும் விதத்தில் காட்டிக்கொள்ளவேண்டும். பழைய நிறுவனத்தில் நீங்கள் செய்த வீரப்பிரதாபங்களை அளந்து விடாமல் இருப்பது நல்லது. ரீல் சுற்றுவதாக மற்றவர்கள் நினத்துவிடாமல் அடக்கி வாசிப்பதே நல்லது. சில நேரங்களில் உங்களுக்கு சில விபரம் தெரியாது என்று நினைத்து சிலர் தாமாகவே உதவ முன்வருவார்கள். அவர்களிடம் பக்குவமாக உங்களுக்கு தெரியும் என்பதை தெரிவிக்கலாம் அல்லது தெரியாததுபோல் கேட்டும் கொள்ளலாம். மிக்க முக்கியமாக உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. இதற்காக யாரும் பிரம்பை எடுத்து , கையை நீட்ட சொல்லி அடிக்க மாட்டார்கள்.  . ஆர்வமுடன் உங்களுக்கு விபரங்கள் சொல்லித்தரவே முனைவார்கள் என்பதே அனுபவம்.  அப்படி சொல்லித்தருவதன் மூலம் ஏற்கனவே வேலை செய்து வருபவர்களும் அவர்களின் மேதா விலாசத்தை உங்களிடம் காட்டிக்கொள்ள முனைவார்கள் என்பதும் ஒரு காரணம்.  

ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கிடையில் உறவுப்பாலம் வளர்ப்பதை வேறுபாடுகளாகவும் வித்தியாசமான முறைகளிலும் வைத்திருப்பார்கள். சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. சில இடங்களில் ஒருவருக்குள் ஒருவர் உரையாடுவதைக்கூட விரும்பாமல் கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். ஸி.டி. வி  வைத்து கண்காணிக்கக்கூடிய நிறுவனங்களும் உண்டு. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இருவழியிலும் அலுவலக நேரங்களில் வருவதை கட்டுப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. ஊழியர்களுக்கு தேநீர் வழங்குவதில் கூட முறைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் மேலாளர்களுடன் தகவல் பரிமாற்றத்திலும் சில முறைகள் மாறுபடும். சில மேலாளர்களுடன் நேராக சென்று உரையாடலாம். வேறு சிலருடன் அவருடைய செயலாளர் மூலம்தான் உரையாட முடியும். ஆகவே நீங்கள் புதிதாக சென்று சேரும் நிறுவனத்தின் முறைகளை பொறுமையுடன் முதலில் கவனியுங்கள். அதன்பின் பின்பற்றுங்கள்.  நீங்கள் உங்களை இயக்குவதற்கு எது அந்த நிறுவனத்தின் நடைமுறை என்பதை அறிந்து அதன்படி பின்பற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் பழைய நடைமுறைகளையே பின்பற்றுபவராகவும் , அத்துமீறாதவராகவும் உங்களை நீங்கள் காட்டிக்கொள்ள முடியும். 

வேலைக்குப்போய் சேர்ந்த உடனே நீங்கள் கொண்டுபோன பழைய சட்டிகளைப்போட்டு உடைக்கத் தொடங்கிவிடாதீர்கள். மேலும் நீங்கள் கால ஊன்ற முன்பே நீங்கள் விரும்புகிற அல்லது முன் நிறுவனத்தில் புழக்கத்தில் இருந்த நடைமுறைகளை புதிய இடத்தில் திணிக்க முயலாதீர்கள். உங்களை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்வதற்கு என்று ஒரு காலக்கட்டம் இருக்கிறது. உங்களை அங்கீகரிப்பதற்கும் ஒரு காலகட்டம் நிச்சயம் இருக்கிறது. அவைகளை நீங்கள் அடைந்துவிட்டோம் என்ற உறுதி வரும்வரை சீர்திருத்த செம்மலாகிவிடாதீர்கள். நதியின் ஓட்டத்தோடு வளைந்து போகும் நாணல் பயிர் மட்டுமே எத்தனை வெள்ளம வந்தாலும் நின்று தழைத்து வளரும். 

அடுத்து நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள். இந்த காரியம் சிலருக்கு வெகு சுலபம் சிலருக்கு மிகக் கடினம். சிரித்தமுகம், பக்குவமான அணுகுமுறைகள் நண்பர்களை தேடித்தரும். உம்மணா மூஞ்சிகளுக்கு நண்பர்கள் கிடைப்பது கஷத்திலும் கஷ்டமே. அதேபோல் கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கும் நண்பர்கள் சந்தையில் டிமாண்ட் மிகக்குறைவே. பல சமயங்களில் நண்பர்கள் அமைவது, நாடு, மொழி , இனம் ஆகியவைகளைப் பொருத்தும் அமையும்.  நண்பர்களை தேடிக்கொள்ள மதிய உணவு வேலைகளும் – மதிய உணவுக்கூடங்களும் மிகவும் உதவும். உங்களை அறியாத மனிதர்களானாலும் அவர்களைப்பார்த்து நீங்கள் பூக்கும் ஒரு புன்முறுவல் நண்பர்களைப்பெற்றுத்தரும் தூண்டிலாகும்.  அத்துடன் நடைமுறையில் உள்ள உலகச்செய்திகளைப்பற்றி உணவு இடைவேளைகளில் பழைய ஊழியர்கள் உரையாடும்போது நல்ல பொருத்தமான கருத்துக்களைக்கூறி அவர்களுடன் இணைந்து கொள்வதும் நண்பர்களை தேடிக்கொள்ள உதவும். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றெல்லாம் உளறி வைக்காதீர்கள். கொஞ்ச காலத்துக்காவது அரசியல் கருத்துக்களைக் கூறாமல் ஒதுங்கி இருப்பது உங்களின் (GAME) கேமை பாதுகாப்புடன் தற்காப்புடன் விளையாட உதவும். கூடியவரை ஆரம்ப மவுனம், அடக்கி வாசித்தல் உங்களுக்கு எதிர்காலத்தில் நண்பர்களை தானாக தேடிவரவழைக்கும். கரும்பு கட்டோடு கிடந்தால் எறும்பு தானாக வரும் என்று கூறுவார்கள். 

இவற்றுடன் புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்புகளைத் ( ORGANAIZATION CHART) கேட்டு வாங்கி படித்துத் தெரிந்துகொள்வதும் முக்கியம். பொதுவாக ஒரு புதிய நபர அலுவலகம் வரும்போது அவரை எல்லா துறைகளுக்கும் அழைத்துச்சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது மனிதவளத்துறை அதிகாரியின் முக்கிய பொறுப்பாகும். இத்தகைய ஆரம்ப அறிமுகம் ஒரு சடங்குதான். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களைத்தேடிச்சென்று உங்களின் நிறுவனத்தின் செயல்பாடுகளைப்ப்ற்றி ஒரு சிறு விளக்கங்கள் கேட்டுத்தெரிந்து கொள்வதும் உங்களின் தன்னார்வத்தை வெளிப்படுத்தும். 

சில சமயங்களில் உங்களுக்கு முன் உங்களின் இடத்தில் பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்திலோ அல்லது வேறு ஒரு கிளையிலோ தொடர்ந்து இருக்கலாம். அவரைத் தேடிச்சென்றோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைப்ப்ற்றி ஒரு சிறிய முன்னோட்டமும் தேவைப்பட்டால் அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தால் அவரும் மகிழ்வதுடன் நிர்வாகத்தினரிடமும் ஒரு வார்த்தை நல்லபடியாக சொல்லி வைப்பார்.  யார் கண்டது இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு என்று அந்த சீனியர் நினைக்கலாம். நல்லதுதானே. 

ஆகவே

1. PREPARE YOURSELF FOR YOUR FIRST DAY,
2. CONCENTRATE ON YOUR WORK
3. LISTEN AND OBSERVE
4. MAKE FRIENDS 
5. HUNTING FOR A CORPORATE KNOWLEDGE
6. CONSULTING WITH PREDECESSOR

ஆகியவை அடிப்படையான டிப்ஸ்களாகும். 

கூடியவரை மிகக்குறைந்த பொருளாதார நன்மைகளுக்காக- அந்த சிறு பொருளாதார நன்மையை இந்திய பேங்க் ரேட்டில் பெருக்கிப் பார்த்துவிட்டு பல ஆண்டுகளாக வேலைபார்த்த  நிறுவனத்தை – நண்பர்களை- சூழ்நிலைகளை விட்டு விலகி புதிய இடத்தில் சேர்வது பலருக்கு அக்னிப் பரிட்சைதான். புதிய பூதத்தைவிட பழைய பேயே தேவலை என்கிற நிலைமை பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. தூரத்துப்பச்சைகள் கண்ணுக்கு அழகாய்த் தோன்றிடும். ஆகவே மாற்றங்களை தேடிப் போகும்போது அந்த மாற்றங்கள் நமக்கு ஏற்றங்களைத்தருமா என்று சிந்தித்து செயல்படவேண்டும் மாற்றங்கள்  ஏமாற்றங்களாகப் போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

-இப்ராஹீம் அன்சாரி.

பழகு மொழி - 08 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | ,

(1):5 சொல்லின் முதலில் இடம்பெறும் எழுத்துகள் (அல்லது)வருக்கம்:

(1):5:1 உயிர் வருக்கம்
, , , , , , , , , , , ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வருக்கமாக வரும்.
ஆத்திச்சூடியிலிருந்து காட்டுகள்:

றஞ்செய விரும்பு, றுவது சினம், யல்வது கரவேல், வது விலக்கேல், டையது விளம்பேல், க்கமது கைவிடேல்,ண்ணெழுத் திகழேல், ற்ப திகழ்ச்சி, ய மிட்டுண், ப்புர வொழுகு, துவ தொழியேல், ஒளவியம் பேசேல்.

(1):5:2 உயிர்மெய் வருக்கம்
, , , , , , , , வ ஆகிய எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும்.

ண்டொன்று சொல்லேல், னி நீராடு, ந்தைதாய்ப் பேண், ன்றி மறவேல், ருவத்தே பயிர்செய், ண்பறித் துண்ணேல், ஞ்சகம் பேசேல்.

"எல்லாரிடமும் இணங்கி, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்க" என்று அறிவுரை கூறுமுகமாய், "ப்போல் வளை" என்பதாக ஆத்திச்சூடியில் வருகிறது. எனினும், இக்கால எழுத்து வழக்கில் '' வருக்கமாய் வருவதில்லை; ஆனால், காட்டுகளாகப் பயன்படுவதுண்டு: "ஞண நமன எனும்புள்ளி முன்னர்" (- தொல்காப்பியம் - எழுத்து 
25); "ஞண நமன வயலள ஆய்தம்" (- யாப்பருங்கல விருத்தி).

ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ, ஆகியன மட்டும் சொல்லுக்கு முதலில் வரும். ஞகரத்துக்குக் காட்டாக, "யம்பட உரை" என்று ஆத்திச்சூடியில் வருகிறது. "நயம்பட உரை" என்பதன் முதற்போலியாக அங்கு '' பயன் படுத்தப் பட்டுள்ளது. எனினும் "மலி" (நாய்) எனும் நல்ல தமிழ்ச் சொல், ''வில் தொடங்குவது ஈண்டு நோக்கத் தக்கது. மேலும்,ஞாலம்=உலகம், ஞெகிழி=கொள்ளிக்கட்டை,ஞொள்கல்=இளைத்தல் ஆகிய அரிய சொற்களும் தமிழில் உள.

யகர வரிசையில் ய, யா ஆகிய இரு எழுத்துகள் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் முதற்போலியாகவும் யு, யூ, யோ, யௌ ஆகிய எழுத்துகள் வடமொழிச் சொற்களுக்காகவும் சொல்லின் முதலில் வருவதுண்டு:

எமன்=மன், ஆனை=யானை. இவையன்றி, யாங்கனம் (எவ்வாறு) யாது (எது) என வினா எழுத்தாகவும் யாகாரம் பயன்படுத்தப் படுவதுண்டு. யகர வரிசை வருக்கத்தில் வடமொழிச் சொற்களான யுகம், யூகம், யோகம், யௌவனம் ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளவையாம்.

வகர வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்:

ரிசை, வாஞ்சை, விறகு, வீடு, வெண்ணெய், வேடன்,வைகறை.

(1):5:2:1 ககர வருக்கம்
டிவது மற, காப்பது விரதம், கிழமைப்பட வாழ், கீழ்மை யகற்று,குணமது கைவிடேல், கூடிப் பிரியேல், கெடுப்ப தொழி, கேள்வி முயல், கைவினை கரவேல், கொள்ளை விரும்பேல், கோதாட் டொழி, கெளவை அகற்று.

(1):5:2:2 சகர வருக்கம்
க்கர நெறி நில், சான்றோ ரினத்திரு, சித்திரம் பேசேல், சீர்மை மறவேல், சுளிக்கச் சொல்லேல், சூது விரும்பேல், செய்வன திருந்தச்செய், சேரிடம் அறிந்து சேர், சையெனத் திரியேல்,சொற்சோர்வு படேல், சோம்பித் திரியேல்.

குறிப்பு:
ச்+அ=; ச்+ஐ=சை; ச்+ஔ=சௌ ஆகிய மூன்றும் தமிழ்ச் சொல்லின் முதலில் இடம் பெறா என்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது:

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே (தொல் - எழுத்து 29).


ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: ங்கு, ட்டை, ட்டம், ருகு, ரடு,த்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'ந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது. அஃது, இரு சொற்கள் சந்திக்கும்போது ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பதாகும். அதைப் "புணரியல்" என்றும் கூறுவர்.

(1):5:2:3 தகர வருக்கம்
க்கோ னெனத்திரி, தானமது விரும்பு, திருமாலுக் கடிமைசெய்,தீவினை யகற்று, துன்பத்திற் கிடங்கொடேல், தூக்கி வினைசெய்,தெய்வ மிகழேல், தேசத்தோ டொத்துவாழ், தையல்சொல் கேளேல், தொன்மை மறவேல், தோற்பன தொடரேல்.

(1):5:2:4 நகர வருக்கம்
ன்மை கடைப்பிடி, நாடொப்பன செய், நிலையிற் பிரியேல்,நீர்விளை யாடேல், நுண்மை நுகரேல், நூல்பல கல், நெற்பயிர் விளை, நேர்பட வொழுகு, நைவினை நணுகேல், நொய்ய வுரையேல், நோய்க்கிடங் கொடேல்.

(1):5:2:5 பகர வருக்கம்
ழிப்பன பகரேல், பாம்பொடு பழகேல், பிழைபடச் சொல்லேல்,பீடு பெறநில், புகழ்ந்தாரைப் போற்றிவாழ், பூமி திருத்தியுண்,பெரியாரைத் துணைக்கொள், பேதைமை யகற்று, பையலோ டிணங்கேல், பொருடனைப் போற்றி வாழ், போர்த்தொழில் புரியேல்.

(1):5:2:6 மகர வருக்கம்
னந்தடு மாறேல், மாற்றானுக் கிடங்கொடேல், மிகைபடச் சொல்லேல், மீதூண் விரும்பேல், முனைமுகத்து நில்லேல்,மூர்க்கரோ டிணங்கேல், மெல்லினல்லாள் தோள்சேர், மேன்மக்கள் சொற்கேள், மைவிழியார் மனையகல், மொழிவ தறமொழி,மோகத்தை முனி.

(1):5:2:7 வகர வருக்கம்
ல்லமை பேசேல், வாது முற்கூறேல், வித்தை விரும்பு, வீடு பெறநில், வெட்டெனப் பேசேல், வேண்டி வினைசெயேல்,வைகறைத் துயிலெழு.

(1):5:2:8 பிறமொழிச் சொற்களுக்கு
பிறமொழிச் சொற்களுக்காக டகரம், ரகரம், லகரம் ஆகியன சொல்லின் முதல் எழுத்தாகப் பயன் படுவதுண்டு:

ச்சு, கசியம், ஞ்சம் போன்றவற்றை அப்படியே எழுதுவதில் தவறில்லை. இடச்சு, இரகசியம், இலஞ்சம் என இகரம் சேர்த்து எழுத வேண்டுவதில்லை.


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

அசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2012 | , ,

அதிரையின் “விருந்து” உபசரிப்புகள் !

விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஓன்று. நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன...............?

1. திருமண வலீமா விருந்து
2. வீடு குடிபுகுதல் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்காக வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6. பெருநாள் விருந்து

என விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது.


லுஹர்" தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன. ஊரிலே “கலரிச் சாப்பாடு” என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு. 

இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை, பணக்காரான் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே “சஹனில்” (கூட்டாக) ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து கறி” என்று விருப்பமாக அழைக்கப்படும் இவ்வுணவை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கூடுதல் சிறப்பாகும். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் (! ! !) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே (!?) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவைகள் ஒரு வகையாகவும்......

மற்றொன்று “பிரியாணி” நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிற “பிரியாணி” சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் (சட்டினி) ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாகும். 

“தால்ச்சா”...! இதன் ருசியே தனி, “ஐந்து கறி, “பிரியாணி” போன்ற சாப்பாடுகளுக்கு கூடுதல் இணைப்பாக இவை அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக....................

1. சேமியாவில் தாயாரிக்கப்படுகிற “பிர்னி” 
2. “பீட்ரூட்”டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு 
3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு 
4. ரவாவில் தாயாரிக்கப்படுகிற “கேசரி”
5. பேரிட்சை பழத்தில் தாயாரிக்கப்படுகிற இனிப்பு 

போன்றவற்றில் ஏதாவது ஓன்று “ஐந்து கறி” மற்றும் “பிரியாணி” உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் இடம் பெற்றிருக்கும். 

“ஐந்து கறி” , “பிரியாணி” போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது என இதுபோன்ற தினங்களில் மதிய உணவு ஏற்பாடு செய்து ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்த்தப்பட்டு உபசரிக்கப்படுவார்கள்.  

மறு சோறு” போதும்........ போதும்........ என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள். 

வாங்க காக்கா” !

"பேப்பரு தாங்க...."

"மூணு பேரா உட்காருங்க...(!!!)"

"அங்கே ஒரு சஹன் வைங்க" ! 

"எங்கே தால்ச்சா ?" 

"இங்கே சோறு பத்தலே...."

"எங்கே மறுசோறு ?"

"இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க ஹாக்கா !" 

இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் “கலரிச் சாப்பாட்டில்” அங்காங்கே ஒலித்துக் கொண்டே இருக்கும்....

என்ன சகோதர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்தாதா...?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :

வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்ம்பிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும்.

உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதிலும் விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம் (இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.......

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 12 20

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

''நல்லதை ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின் கூலி போன்றது அவருக்கும் உண்டு'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: (அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 173)

'தான் விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறை விசுவாசியாக மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 183)

'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்  (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)
  
''பாதைகளில் உட்காருவதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பாதைகளில் சிறிது நேரம் பேசுவதற்காக உட்கார வேண்டியது ஏற்படுகிறது' என்று கூறினார்கள். 'உட்காரும் நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையில் அதற்குரிய உரிமையை வழங்கி விடுங்கள்' என்று நபி(ஸல்) கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்றால் என்ன?' என்று கேட்டார்கள். ''பார்வையை தாழ்த்துவது, இடையூறு தருவதை நீக்குவது ஸலாமிற்கு பதில் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதை விட்டும் தடுப்பது தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 190)

'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)

''போரில் மிகச் சிறந்தது, அநீதிக்கார அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்'' என் நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள்  ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 194)

'மறுமையில் ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும் போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து, இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி, தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர், ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை. தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்'' என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 198)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் : 3:104)

நம்பிக்கை கொண்டோரே! உங்களை காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. (அல்குர்ஆன்: 5:105)

வேதத்தைப் படித்துக் கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் :2:44)

யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது.
(அல்குர்ஆன் : 45:15 ) 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

 
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

-S.அலாவுதீன்

அஹ்மத் தீதத் 9

அதிரைநிருபர் | April 26, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

அஹ்மத் தீதத் அவர்கள், 
  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ் பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.

இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    



1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.

Debate Title: Is the Bible God's Word?


அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார்.


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.

அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              


2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "


என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.

அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.  


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான்  அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுபானல்லாஹ்...


அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...    

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthwaydottv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 

1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.

உங்கள் சகோதரன்

ஆஷிக் அஹ்மத் அ.
நன்றிhttp://www.ethirkkural.com/2010/03/blog-post_16.html


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு