(*) பெற்றால் தான்
பிள்ளையா? - இது
தத்து எடுப்பவர்களின்
தத்துவம்.
பிள்ளை பெறாதவளும்
பெண்பிள்ளை என்பதை
ஏற்க மறுக்கும்
சமுதாயத்தின்
தத்துபித்துவம்.
(*) இன்பத்தின் விளைவாய்
விளைவது மகவு.
மகவு என்பது
மட்டுமல்ல
இன்பத்தின் அளவு.
(*) பேறு பலவகைகளுள்
"பெறுதல்" ஒருவகை.
"பெறும்" பேறில்லாதோர்
பெறும் பெயர்
கணக்கில் இடம்
பெறுதல் கடினம்.
(*) திருமணமாகி சில
திங்கள் கடந்தவுடன்,
"புழுபூச்சி உண்டா" என
விசாரிப்பவர்கள்..
அவர்களை அறியாமலேயே
இருமனங்களுக்குள்
புயலொன்றை உருவாக்கிப்
போகிறார்கள்.
(*) சூல்கொள்ளா சூழ்நிலையில்
உள்ளங்களில் அப்புயல்
சூழ்ந்து அவர்களை
சுழற்றிக் கொண்டிருக்கும்
தலைகீழாய்..
(*) நலம் விசாரிப்பவர்களின்
நலமில்லா கேள்விகளில்,
சுற்றத்தில் நிகழும்
சந்தோஷ நிகழ்வுகளில்,
உறவினர் வீடுகளில்
பிறக்கும் ஒவ்வொரு
குழந்தையின் பிறப்புகளில்
குழந்தை இன்மை
சுட்டிக்காட்டப் படும்போதெல்லாம்
மனம் உணருகின்ற வலி,
பிரசவ வலியின்
பன்மடங்காக இருக்கக்கூடும்.
(*) குத்திக் காட்டலும்
குறையை சுட்டிக்காட்டலும்
குறையின்றி செய்யும்
கொடூர சமூகம்.
(*) கருகொள்ள சில
காலம் ஆனதும்
அவர்களுக்குள்
உருகொள்ளும் உணர்வே..
உரு-கொள்ளும் உயிரையும்,
கொல்லும்!!
(*) எண்பதிலும் தந்தை
ஆன நபி
இப்றாஹீம்(அலை)இன்
மா-வரலாற்றை
மறந்தவர்கள் இவர்கள்.
(*) எண்பதில் நடந்தது
"இனிமேல் இல்லை"
என்பதிலும் நடக்கலாம்,
இறைவனின் நாட்டம்
இப்படித்தான் என்றிருப்பின்.
(*) குழந்தைப்பேறு
இல்லாதோருக்கு
குறைவின்றி
கொடுக்கப்படவேண்டியது...
மருந்துகள் அல்ல.
"இறைநம்பிக்கையும்"!!
"தன்னம்பிக்கையும்"!!
(*) இக்கைகள் வேண்டியே
இருகைகள் ஏந்திவிட,
கைகளில் தவழும்
ஓர்
கைக்குழந்தை (இன்ஷா அல்லாஹ்).
-அதிரை என்.ஷஃபாத்
பிள்ளையா? - இதுதத்து எடுப்பவர்களின்
தத்துவம்.
பிள்ளை பெறாதவளும்
பெண்பிள்ளை என்பதை
ஏற்க மறுக்கும்
சமுதாயத்தின்
தத்துபித்துவம்.
(*) இன்பத்தின் விளைவாய்
விளைவது மகவு.
மகவு என்பது
மட்டுமல்ல
இன்பத்தின் அளவு.
(*) பேறு பலவகைகளுள்
"பெறுதல்" ஒருவகை.
"பெறும்" பேறில்லாதோர்
பெறும் பெயர்
கணக்கில் இடம்
பெறுதல் கடினம்.
(*) திருமணமாகி சில
திங்கள் கடந்தவுடன்,
"புழுபூச்சி உண்டா" என
விசாரிப்பவர்கள்..
அவர்களை அறியாமலேயே
இருமனங்களுக்குள்
புயலொன்றை உருவாக்கிப்
போகிறார்கள்.
(*) சூல்கொள்ளா சூழ்நிலையில்
உள்ளங்களில் அப்புயல்
சூழ்ந்து அவர்களை
சுழற்றிக் கொண்டிருக்கும்
தலைகீழாய்..
(*) நலம் விசாரிப்பவர்களின்
நலமில்லா கேள்விகளில்,
சுற்றத்தில் நிகழும்
சந்தோஷ நிகழ்வுகளில்,
உறவினர் வீடுகளில்
பிறக்கும் ஒவ்வொரு
குழந்தையின் பிறப்புகளில்
குழந்தை இன்மை
சுட்டிக்காட்டப் படும்போதெல்லாம்
மனம் உணருகின்ற வலி,
பிரசவ வலியின்
பன்மடங்காக இருக்கக்கூடும்.
(*) குத்திக் காட்டலும்
குறையை சுட்டிக்காட்டலும்
குறையின்றி செய்யும்
கொடூர சமூகம்.
(*) கருகொள்ள சில
காலம் ஆனதும்
அவர்களுக்குள்
உருகொள்ளும் உணர்வே..
உரு-கொள்ளும் உயிரையும்,
கொல்லும்!!
(*) எண்பதிலும் தந்தை
ஆன நபி
இப்றாஹீம்(அலை)இன்
மா-வரலாற்றை
மறந்தவர்கள் இவர்கள்.
(*) எண்பதில் நடந்தது
"இனிமேல் இல்லை"
என்பதிலும் நடக்கலாம்,
இறைவனின் நாட்டம்
இப்படித்தான் என்றிருப்பின்.
(*) குழந்தைப்பேறு
இல்லாதோருக்கு
குறைவின்றி
கொடுக்கப்படவேண்டியது...
மருந்துகள் அல்ல.
"இறைநம்பிக்கையும்"!!
"தன்னம்பிக்கையும்"!!
(*) இக்கைகள் வேண்டியே
இருகைகள் ஏந்திவிட,
கைகளில் தவழும்
ஓர்
கைக்குழந்தை (இன்ஷா அல்லாஹ்).
-அதிரை என்.ஷஃபாத்

