Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மதிப்பெண்கள். Show all posts
Showing posts with label மதிப்பெண்கள். Show all posts

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரை பள்ளி மாணாக்களின் எழுச்சி ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2013 | , , , ,

அதிரையின் பிரதான பள்ளிகளான காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள், பெண்கள்) மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (ஆண்கள் பெண்கள்) மாணாக்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்.

வழமைபோல் மாணவிகளின் ஆளுமை வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிப்பதில் முன்னனியில் இருக்கிறார்கள், இதுபோல் வரும் காலங்களில் மாணவர்களும் தொடர்ந்து தங்களது நிலைகளை மேலும் உயர்த்திக் கொண்டு தங்களின் படிப்பில் கவனம் சிதைக்கும் எக்காரியத்திலும் ஈடுபடாமல் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

முதல் மூன்று இடங்களை எடுத்தவர்கள் மட்டுமல்ல பதின்ம பருவத்தின் சவலாக இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி கண்ட அனைத்து மாணாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றொர்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.

அன்பு மாணவச் செல்வங்களே ! பெற்றோர்க்கு உகந்த பிள்ளைகளாகவும், அவர்களின் உள்ளம் குளிரும் நன்மக்களாகவும் இருந்து அவர்களுக்கு நற்பெயரை என்றென்றும் நிலைத்திருக்க வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

மாணவப் பருவம் :: பசுமைப் பருவம் ! - விவாதக் களம் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2012 | , , , , , ,


சமீபத்தில் உலுக்கிய ஓர் சம்பவம் மாணவ சமுதாயத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று ஒருசாரார், இல்லை பெற்றோரின் வளர்ப்புதான் என்று மற்றொரு சாரார், அப்படியெல்லாம் இல்லை சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்துமீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம் என்று வேறொரு சாராரும் மாறி மாறி அலசுவதில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அதற்கான தீர்வாக தீர்க்கமாக சிலரும் யோசிக்கத்தான் செய்கின்றனர் அவ்வகையில், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாம் பழக்கப்பட்டவர்களாக இருப்பதனால் இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் மாணவப் பருவத்தை கடந்து வந்தவர்கள் அல்லது இன்றைய மாணவமணிகளாக இருக்கலாம்.

பெற்றோர் ஆசிரியர், ஆசிரியர் மாணவர்கள் உறவுகள், மாணவர்களுக்குள்ளேயே நட்பு பாராட்டுவது, மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கான உறவு முறைகள் அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கனும் என்று விவாதிக்கலாம்.

கவனிக்க! இது எந்த தரப்பையும் குற்றம் கண்டெடுத்து குத்திக் காட்டுவதற்கு அல்ல, நம்மை விட நல்ல கருத்துடைய அறிவுடைய சான்றோர் நம்மைச் சுற்றியிருப்பதனால் அவர்களின் கருத்துக்கள் இளம் பெற்றோர்களுக்கும், மாணவாமணிகளுக்கும் பயனளிக்கும் என்ற நன்னோக்கில்தான் இவ்விவாதம்.

தயைகூர்ந்து நடந்துவிட்ட அசம்பாவிதத்தை மீண்டும் இங்கே நினைவு படுத்தி விமர்சிக்காமல், ஆசிரியர் மற்றும் மாணவ சமுதாயத்தின் உறவுமுறைகள் எப்படி இருக்கிறது, அதனை எவ்வாறு பேணுவது, மார்க்கம் காட்டும் வழியில் நம் நடத்தைகள் எவ்வாறு இருக்கனும் என்று நளினமாக எடுத்து வையுங்கள்.

தனிமனித அல்லது பள்ளி நிர்வாகத்தினை குறைகூறும் களமாக இதனைக் கருதாமல், எம்மக்கள் என்றும் சிறந்த மக்களாக இருந்திட முயல்வோமே இன்ஷா அல்லாஹ்...

-அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு