அதிரையின் பிரதான பள்ளிகளான காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள், பெண்கள்) மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (ஆண்கள் பெண்கள்) மாணாக்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்.
வழமைபோல் மாணவிகளின் ஆளுமை வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிப்பதில் முன்னனியில் இருக்கிறார்கள், இதுபோல் வரும் காலங்களில் மாணவர்களும் தொடர்ந்து தங்களது நிலைகளை மேலும் உயர்த்திக் கொண்டு தங்களின் படிப்பில் கவனம் சிதைக்கும் எக்காரியத்திலும் ஈடுபடாமல் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ் !
முதல் மூன்று இடங்களை எடுத்தவர்கள் மட்டுமல்ல பதின்ம பருவத்தின் சவலாக இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி கண்ட அனைத்து மாணாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றொர்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.
மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.
அன்பு மாணவச் செல்வங்களே ! பெற்றோர்க்கு உகந்த பிள்ளைகளாகவும், அவர்களின் உள்ளம் குளிரும் நன்மக்களாகவும் இருந்து அவர்களுக்கு நற்பெயரை என்றென்றும் நிலைத்திருக்க வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !