அழுது கேட்பவன்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்
தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்
எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல
தொழுது வணங்கி – முகச்
செழுமை யடைகிறான்
பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்
எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்
அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்
அழுது கண்ணீர் வடித்து
மெழுகாய் ஒளிர்வது போல
அழுதே அக்காலமாய்
மின்சாரம் தருகிறான்
எல்லை தாண்டி
இவ்வுலகில் பிறப்பினும்
ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்
மெல்ல மெல்ல நல்
வசனம் இணைக்கிறான்
பெருதற் கரிய பல்
அறிவை வளர்க்கிறான்
தானடைந்த செல்வம்
தானமாய் பகிர்கிறான்
தான் பெற்ற நலன்
தம்பிக்கும் தருகிறான்
சுட்டு புண்படுமுன்
வாங்கி இருத்திடுவான் 'பர்னால்'
ருசிக்கும் நாவிற்கு
சுவைக்கும் உணவிடுவான் ஆனால்
ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!
M.H.ஜஹபர் சாதிக்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்
தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்
எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல
தொழுது வணங்கி – முகச்
செழுமை யடைகிறான்
பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்
எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்
அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்
அழுது கண்ணீர் வடித்து
மெழுகாய் ஒளிர்வது போல
அழுதே அக்காலமாய்
மின்சாரம் தருகிறான்
எல்லை தாண்டி
இவ்வுலகில் பிறப்பினும்
ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்
மெல்ல மெல்ல நல்
வசனம் இணைக்கிறான்
பெருதற் கரிய பல்
அறிவை வளர்க்கிறான்
தானடைந்த செல்வம்
தானமாய் பகிர்கிறான்
தான் பெற்ற நலன்
தம்பிக்கும் தருகிறான்
சுட்டு புண்படுமுன்
வாங்கி இருத்திடுவான் 'பர்னால்'
ருசிக்கும் நாவிற்கு
சுவைக்கும் உணவிடுவான் ஆனால்
ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!
M.H.ஜஹபர் சாதிக்