Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பஸ்ஸுப் பயணம். Show all posts
Showing posts with label பஸ்ஸுப் பயணம். Show all posts

பஸ்ஸுப் பயணம்... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2014 | , , , , ,


உம்மா வோடும் வாப்பா வோடும்
ஊரை விட்டுப் புறப்பட்டோம்
சும்மா இருந்து பஸ்ஸுக் குள்ளே
சுகமாய்ப் பயணம் செய்தோமே.

பட்டுக் கோட்டை முதலில் வந்து
பரவச மாகப் போயதனை
விட்டுச் சென்ற பின்னர் ஓட்டுநர்
விளக்கை அணைத்தார் ஊர்திக்குள்.

பார்வை ஓய்ந்து பயணம் தொடரப்
பசியும் நீங்கிக் கண்ணயரப்
போர்வை கொண்டு போர்த்திக் கொண்டு
பொதியைப் போன்று கிடந்தோமே.

நடுராத் திரியில் நின்றது பஸ்ஸும்
நாங்கள் விழித்துப் பார்க்கையிலே
படியில் இறங்கிப் போனார் சிலபேர்
பார்த்தான் காக்கா ஹாமீதும்.

வாப்பா மதராஸ் வந்தது” வென்று
வாயால் கத்திக் கூப்பிட்டான்
போப்பா இன்னும் வரவிலை” என்று
போர்த்திய வாப்பா கண்ணயர்ந்தார்.

பாதிப் பயணம் முடித்த பஸ்ஸும்
பாய்ந்தது பெட்ரோல் ஊற்றியபின்
மீதிப் பயணம் தொடர்ந்த போது
மீண்டும் உறங்கிப் போனோமே.

தாம்பரம், சென்னை விமான நிலையம்
தாண்டிய போது கண்விழித்தோம்
மாம்பலம் தாண்டி மண்ணடி வந்து
மகிழ்வோ டிறங்கி நடந்தோமே.

அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு