Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வரவேற்பு. Show all posts
Showing posts with label வரவேற்பு. Show all posts

வருக...! வருக...! வருக...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2014 | , , , , , , ,

அன்றலர்ந்த மலர்களைப்போல்
அகம் திலங்கும் பாலகர்களே
'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...'

சென்றுவந்த தளங்களில்
வென்றுவந்த இறையருள்
நின்று நிலைக்கட்டுமாக
என்றும் இருக்கட்டுமாக

மக்கமா நகர்தன்னில்
மக்களோடு மக்களாக
மாண்புமிகு கஃபாவை
மனதாரக் கண்டிருப்பீர்

முதன்முதலில் கண்டபோது
முகம் மலர்ந்திருக்கும்
கண்களும் கலங்கி
கண்ணீர் உகுந்திருக்கும்

கண்டதும் கையேந்தி
கேட்ட துஆ நினைவுண்டா
நிறைவேற்றித் தருவான்
இறைவனென நம்புவீராக

கஃபாவைச் சுற்றிவந்து
தவாபைச் செய்ததுவும்
சஃப்வா மர்வாவுக்கிடை
சயீ செய்த நினைவுகளும்

இறக்கும் காலம்வரை
மறக்க மனம் ஒப்பாது
இறக்கி வைத்த பாரமென
இன்னல்கள் விலகட்டுமாக

திறவா அருட்கதவும்
அரஃபாவில் திறக்கவைக்கும்
கரமேந்திக் கேட்டுவந்த
தரமானப் பிரார்த்தனைகள்

அரஃபாத் பெருவெளியில்
அபரித வணக்கங்கொண்டு
அழுதழுது கேட்டவற்றை
அல்லாஹ் தருவானாக

ஷைத்தானுக்குக் கல்லெறிந்து
பொய்த்தான் அவன் என்றொழித்து
முடிமழித்து மொட்டையிட்டு
பலி கொடுத்தத் தியாகங்களும்

ஈருடைதனைக் களைந்து
இயல்புடைக்குள் நுழைந்து
மினாவில் நிகழ்ந்ததெல்லாம்
கனாவில் தொடர்ந்துவரும்

கடைசிக் கிரியையென
விடைபெறும் காலத்தில்
தவாபில் மனம் கணத்து
தவிப்போடு பயணித்ததும்

மாநபி(ஸல்)யின் நவபியிலே
மதினத்து அமைதியிலே
தொழுதுநின்ற நேரங்களில்
அழுதக் கண்ணில் அர்த்தமுண்டு

எல்லாவற்றையும் கண்டு வந்தும்
ஏங்க வைத்தக் குறையாக
தங்க நபி(ஸல்)யைக் காணாத
உங்கள் குறை நீங்கிடுமா

இனிச் செய்யும் செயல்யாவும்
இறைப் பொருத்தம் கிடைத்திட்டால்
மறுமையும் சிறந்திடும்
மதிப்புமிக்க ஹாஜிகளே

தங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
அதிரைநிருபர் பதிப்பகம் - wwww.adirainirubar.in

மாண்பு மிக்க நோன்பு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 19, 2012 | , , , , ,

மனிதகுலம் ஈடேற
இஸ்லாம்...
இந்த
மார்க்கத்திற்கே மகுடம்
ரமலான்!

இறையருள்
ததும்பி வழியும் மாதம்...
இது
இளையவர் முதியவர்
யாவரும் விரும்பும் மாதம்!

அமல்களால்
பகலெனத் துலங்கும் இரவுகள்...
இதில்
வணங்கியும் துதித்தும்
வல்லோனைப் போற்றும் மாதம்!

மனிதற்கு மனிதர்
முகமன் இயல்பு,
மாதத்திற்கே முகமன்
மாந்தர் யாவரும்
மகிழ்வோடு முழங்கும் மாதம்!

ஷைத்தான் கட்டப்பட்டு
மெய்தான் மிளிரும் மாதம்...
இதில்
மனங்கள் கட்டுப்பட்டு
வணங்கும் வாழ்த்தும் நாளும்!

புசிப்பதைத் தவிர்த்து
பசியினை விரும்பும் மாதம்...
இது
தாகம் தகிப்பினும்
தணிக்கத் துணியா மாதம்!

இறைமறை ஓதி
நபி வழி பேணி
இறையச்சம் மீறிடும் மாதம்...
இது
இரட்டிப்பு நன்மை
இலவசமாய் அருளும்
இரக்கம் மிக்க மாதம்!

வாயையும் வயிற்றையும்
கட்டுவதோடு...
இது
பொய்யையும் புரட்டையும்
விரட்டிடும் மாதம்!

கணக்கிட்டுக்  கொடுக்கும்
தர்மம்
தனக்கென்று சிறக்கும் மாதம்..,
இது
ஏழை எளியவர்
மேன்மை பெற்றிட
ஈகையை போதிக்கும் மாதம்!

இறைமறை இறங்கிய
இரவினைக் கொண்ட மாதம்...
இது
ஆயிரம் இரவுக்குச்
சமமென முழங்கிய மாதம்!

பசிதாகம் பொறுத்து
பாவங்கள் ஒழிந்த மாதம்...
இது
பொறுமைக்குப் பரிசாகப்
பெருநாளைத் தந்திடும் மாதம்!

பாவங்கள் மன்னிக்கவும்
நண்மைகள் எண்ணிக்கவும்
அடிமனம் நேசிக்கும் மாதம்...
இதை
அனைவரும் வரவேற்போம் வாரும்!

Sabeer AbuShahruk

ரமளானே வருகவே...!!! 0

அதிரைநிருபர் | August 08, 2010 | , , ,


பகலெலாம் பசித்து
இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
                                                                                                                                            
அல்லாஹ்வைத் துதித்து
முகமத்(ஸல்) உம்மத்து
முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமளானே வருகவே...!!!

பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
வசித்திடும் ஷைத்தானை
வதைத்திட வைத்திடும் உண்ணாமை

குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்

பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்

அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி

வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்

ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமளானின் வரவு...!!!

ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே

ரமளானே வருகவே...!!!


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

நன்றி: எங்கள் நண்பர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு