வருடம் 2000 !
காலை 06:30 வாக்கில் தங்குமிடத்திலிருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது...
அருகில் ஒரு குரல், ஃப்ளாஸ்கில் விழுந்த சில்வர் ஸ்பூன் போன்ற ஒலியெழுப்பியது...
`தம்பி என்னை எப்படியாவது ஊருக்கு அனுப்பிடுங்க...`
`என்னாச்சு`
`முடியல... ஊரில நல்லா டிஸ்ட்ரிபூஷன் வியாபரம் செய்துகிட்டு இருந்தேன்...`
கண்ணீர், விழியிலிருந்து வெடித்துச் சிதறியது அங்கே அணைபோட ஆனையிடவும் இயலவில்லை, சாலையில் நடந்து செல்கிறோம் என்றா அந்த கண்ணீருக்கு தெரியும், தார் சாலையிலும் சொட்டுகள் முட்டியது.
`ஏன் பாய் அழறீங்க, இது ரோடு கம்பெணியாட்கள் பார்க்கிறார்கள்`
`முடியல இங்கே படுகின்ற கஷ்டம் வாழ்நாளில் படவே இல்லையே தம்பி, புள்ளைங்க படிப்பு இருக்கே....`
`என்னதான் கஷ்டம் ? என்னிடம் சொல்ல வேண்டியதுதானே சரி செய்றேனே...`
`வந்ததுலேயிருந்து லோடிங்லேயும், பாத்ரூம் கழுவுறதுலேயும் வேலைக்கு போட்டாங்க, ஊர் ஞாபகமா வருது...`
`என்ன பாய் வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு பழகியிருக்கனுமே... இங்கே இன்னுமா மாத்தாம வச்சிருக்கானுங்க...`
`நீங்க சொன்னா மாத்திடுவாங்கதான் தம்பி, ஆனா முடியல போயிடுறேன். தயவு செய்து கேன்சல் செய்து அனுப்புங்க`
`இருங்க இருங்க, மதியம் ப்ரேக்கில் ஆஃபிஸ்ல வந்து பாருங்க... பேசி முடிவு பன்னிக்கலாம்`
அன்று எதிர்பாராத வெளிவேலை ஒன்று இருந்ததால் வெளியில் சென்றுவிட்டு நாள் முழுவதும் திரும்பவில்லை அடுத்த நாள்தான் அலுவலகம்.
அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்து கொண்டு அவர் மைக்ரோ ஃபோனில் அழைக்கப்படுகிறார்.
`என்ன முடிவோட இருக்கீங்க ?`
`தம்பி இன்னும் கொஞ்ச நாள் இருந்து பார்க்கிறேன்`
`என்னாச்சு, ஒரு நாளில் மாற்றம் ?`
`ராத்திரிபூரா சிந்திச்சு பார்த்தேன் வீட்டுச் சூழல் கண்ணுல சுத்துனுச்சு தாங்க முடியல இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்கலாம்னு முடிவு பன்னேன்`
`சரி, நாளையிலேயிருந்து உங்க வேலைய மாத்தியிருக்கு அது கஷ்டமா இருக்காது`
`சரி தம்பி`
வருடம் 2013 நடுவில்...
`என்னோட பையன் விசிட்டில் வந்திருக்கான் தம்பி`
`அப்படியா சந்தோஷம், என்னா படிச்சிருக்கான் ஏன் அதுக்குள்ள இங்கே வரவச்சீங்க`
`அவன் ஆசைப்பட்டான், பி.இ. படிச்சிருக்கான்`
`மாஷா அல்லாஹ், விசிட் நீங்களா எடுத்தீங்க?`
`இல்லே தம்பி, என்னோட மச்சினன் தான் எடுத்தான் விஷாக்கு காசு நாந்தான் கொடுத்தேன், அவனோட மகளுக்குத்தான் மகனை பேசி வைத்திருக்கோம்`
`ஓ... அப்படியா..`
`ஏதாவது தெரிந்த இடம் இருந்தா வேலைக்கு சொல்லுங்க தம்பி`
`இன்ஷா அல்லாஹ் !`
மூன்று வாரம் ஓடிவிட்டது.
`தம்பி மகனுக்கு வேலை கிடைத்து விட்டது`
`அல்ஹம்துலில்லாஹ்`
`நல்ல வேலை படிப்பு ஏத்த வேலை`
`அப்படியா, நல்லது....`
`முடிச்சுட்டு போகலாம்னு இருக்கேன் தம்பி`
`ஏன் இன்னும் கொஞ்சம் இருக்கலாமே....?`
`இப்படித்தான் தம்பி பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்னீங்க இப்போ எல்லாமே மாறிப் போச்சு`
`இப்போ நீங்க திருப்தியாகத்தான் ஊருக்கு போக முடிவெடுத்தீங்களா?`
`ஆமா தம்பி நிறைய பட்டாச்சு பார்த்தாச்சு, மகளுக்கு தங்கச்சியோட நாத்தனார் மகனைத்தான் பேசி வச்சிருக்கோம் அத விவரமா சுறுக்க பேசி முடிக்கனும்`
`மாஷா அல்லாஹ்`
விஷா கேன்ஷல் செய்து இங்கிருந்து சென்ற நான்கு மாதம் கழித்து கல்யாண பத்திரிகை கைக்கு கிடைக்கிறது. அவருடைய மகளின் கல்யாணம் !
அபுஇப்ராஹிம்