Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அன்பளிப்புகள். Show all posts
Showing posts with label அன்பளிப்புகள். Show all posts

அதிரையில் ரமளானும் அன்பளிப்பு எனும் சீதனங்களும் ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2013 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும் - நபிமொழி !

நபிமொழி அதுதான் நம் அனைவருக்கும் நேரான வழி, மானுட வாழ்வியலை அர்த்தமுடன் எக்காலத்திற்கும் எடுத்துரைக்கும் சூளுரைகள் !

அல்ஹம்துலில்லாஹ் !

அதிரையைப் பொறுத்தமட்டில் வரதட்சனைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும், ஆண்மக்களைப் பெற்றவர்கள் வீட்டில் வரதட்சனைகளாக கேட்டாலும் பெண்ணைப் பெற்றவர்கள் உறுதியாக தர இயலாது என்று மன உறுதியுடன் சொல்லும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், முற்றிலுமாக நின்றுவிட்டது என்று மார்த்தட்ட இயாலாவிடினும், பெரும்பாலும் குறைந்திருக்கிறது.

என்ன பயன் !?

தலைவாசலின் கதவுகள் அரைகுறையாக பூட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது கொல்லைப்புற வாசல்களை திறந்து வைத்துக் கொண்டு இருக்கும் நம்மவர்களின் கலாச்சாரமாக மாறிவரும் வரதட்சனைக்கு மறுபதிப்பாக விஷேட காலங்களில் குறிப்பாக ரமாளன் காலங்களில் தலை தூக்கும் விரையங்களை அள்ளிக் கொட்டும் சம்பந்திபுற சாப்பாட்டு பரிமாற்றங்களே.

அன்பளிப்புகள் அவரவர்களுக்குள் பரிமாற்றமாக இருந்திருந்தால் விமர்சனங்களாக எடுத்துரைக்கப்பட மாட்டாது, ஆனால், வீட்டாரின் தேவைகளுக்கு மேல் பன்மடங்கு பெறப்படும் அன்பளிப்புகளால் அதனை ஏற்பாடு செய்பவர்களின் செலவினங்களை அதிகரிக்கும் இந்த விரையம் தேவைதானா என்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

மாப்பிள்ளை, பெண் பேசி வைத்துவிட்டால் இருவீட்டாரின் நட்புறவுகள் வலுப்பெற பரஸ்பர பரிமாற்றங்கள் இருவீட்டாருக்குள் இருந்தால் விதிமீறல்கள் இருக்க வாய்ப்புகள் குறைவு, ஆனால் பகட்டுக்காக அடுத்தவர்களின் பார்வைக்காக, ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக கேட்டுப் பெறுவது ஒரு வழக்கமாக இருப்பின், கேட்காமலே வாரிவழங்கும் வள்ளல்களாக மாறும் பெண் விட்டாரை என்னவென்று சொல்வது!?.

இயன்றவர்கள் செய்யும் செலவுகள், இயலாதவர்களையும் அசைத்துப் போடுகிறது பொருளாதார எல்லைதாண்டி செலவுகள் செய்து இப்படிச் செய்ய வேண்டும் என்று அப்படி என்னதான் அவசியம் !?

பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய அன்பளிப்புகள் அவசியம் தானா ?

மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரியும் ஏனோ அதனை துப்பட்டிக்குள் போர்த்தி மூடி வைத்துவிட்டு, சஹனுக்கு மற்றொரு சஹனை போர்வையாக போர்த்திச் செல்லும், கேட்டுப் பெறும், அல்லது கேட்காமல் அனுப்பி வைக்கப்படுவதை வாங்கும் / கொடுக்கும் அனைத்து சீதனங்களும் சீர்கேடுகளே.

சிந்தியுங்கள் ஈமானிய சகோதர சகோதரிகளே !

இஸ்லாம் அனுமதித்தவைகளோடு இல்லறம் சிறக்க வாழ்வோம் இன்ஷா அல்லாஹ் !

மேலும் பார்க்க : http://adirainirubar.blogspot.ae/2013/05/blog-post_27.html

நேரம் ஒதுக்கி இங்கே கீழே பதிக்கப்பட்டிருக்கும் காணொளியில் எடுத்து வைக்கப்படும் கருத்துரைகளை தயைகூர்ந்து கேட்டுப்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்.


அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு