Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label pain worth it. Show all posts
Showing posts with label pain worth it. Show all posts

Pain...worth it! - வலி வழிச் செய்திகள்! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2015 | , , , , ,


Pain...worth it!

Pain...
in different forms
are needed in life !

so that
they can carve your soul
into
what they have to appear.

and
you cannot escape from
what has been decreed
upon you !

You
just have to pray
you will be
able to bear them !

And
you will be
surprised by your own self
for
what you have turned into !

Keep praying
for your sanity !

Keep praying
for your peace of mind !

The curves
on your lips
may change with time.

but
despite that..
oh human !
you are stronger
than
you have imagined l

You have this control
that
God has given you !

You can choose the path

You seem
you are trapped  -but
you have to look up into the sky
and realise...
Everything
soon
will end.

And
you will realise
the purpose of your life.

And
it will be all worth it.
the day
where your Creator smiles at you
for being pleased with you.

Hope for it ..
Work for it...
And may you reach that goal.
Insha Allah !

Shahnaz Sabeer Ahmed MBBS III year
வலி வழிச் செய்திகள்!

வலி
அதன் மாறுபட்ட பரிமாணங்களில்
வாழ்க்கைக்குத் தேவைதான்

அப்போதுதான் -அந்த
வலி
உணர்த்த வேண்டியது
ஆன்மாவில் ஆழப்பதியும்

உம்மீது
சுமத்தப்பட்டவையிலிருந்து
நீர் யாரும்
தப்பிவிட முடியாது

மாறாக
தூயவனைத் தொழுவதன் மூலம்
அதைத்
தாங்கிகொள்ள இயலுவதையும்

எத்துணைக் கடினமாக
அது உம்மை
மாற்றிக்காட்டியது என்பதையும்
கண்டு
உம்மீது நீரே
ஆச்சர்யப்பட்டுப்போவீர்

நுன்மதிக்கும் நிம்மதிக்கும்
தொடர்ந்து
தொழுது வாருங்கள்

காலமும்
கருப்பொருளும்
உமது
உதட்டு வளைவுகளின்
உரு மாற்றலாம்

ஆனபோதிலும்
ஓ மானிடரே
நீவிர்
கருதியிருப்பதைவிட
கடும் வலுவானவர் ஆவீர் நீர்
அறிக

அத்தகைய
கட்டுப்படுத்தும் சாதுர்யம்
உமக்கு
ஆண்டவன் கொடுத்த அருள்

உமது பாதையை
நீரே தேர்ந்தெடுக்கலாம்

பொறிக்குள் சிக்கிவிட்டதாக
உமக்குத் தோன்றலாம்
அவ்வாறல்ல
ண்ணாந்து சற்றே
ஆகாயம் பார்க்கையில்
உணர்வீர்கள்:
யாவும்
சடுதியில்
தீர்ந்துபோகும் என!

அத்தருணம் உமக்கு
வாழ்க்கையின் தாத்பரியம்
தெளியும்
உம் படைப்பின் நோக்கம்
புரியும்

உலகைப் படைத்தவன்
உம்மைப் பொருந்திக்கொண்டு
உம்மீது
புன்னகைக்கும்
அந்நாளில்...
எல்லா வலிகளும்
ஏற்புடையதாகவே அறிவீர்...

அதற்கான நம்பிக்கை கொள்வீர்
அதை நோக்கிச் செயல்படுவீர்

அவ்வாறே
ஆண்டவன் நாடிவிடட்டும்
இலக்கை
நீர்
எட்டிவிட!

தமிழில்: ஷஹ்னாஸ் வாப்பா


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு