Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label எத்தி வைப்பு. Show all posts
Showing posts with label எத்தி வைப்பு. Show all posts

எல்லாப் புகழும் இறைவனுக்கு! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2012 | , , , ,


திருச்சியின் சுகந்தம் அதன் எல்லையினை உணர்த்தியது.

சென்னையிலிருந்து இரவு கிளம்பிய பேருந்து, காலை சுமார் ஆறேகால் மணிக்கு திருச்சியின் எல்லையினை அடைந்தது.

பேருந்து ஓட்டுனர் இரவு விளக்கினை அணைத்துவிட்டு 'ஆல் இந்தியா ரேடியோ' வினைத் திருப்பிக்கொண்டிருந்தார்.

"ஸலாதுல்லாஹ்.... ஸலாமுல்லாஹ்...
அலா தாஹா ரஸூலுல்லாஹ்...
ஸல்லல்லாஹு அலா முஹம்மது 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..."  

பக்திப்பாடல் வரிசையில் காற்றில் கலந்து கொண்டிருந்தது இந்தப் பாடல்.

சக பயண நண்பரோடு, இரவெல்லாம் இஸ்லாம் பற்றியும், இறைத்தூதரைப்பற்றியும் வாதம், விவாதம் மற்றும் விளக்கங்கள் என நீண்டநேர சம்பாஷனை இரவின் இறுதிப்பகுதி வரை நீண்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நண்பரின் தூக்கத்தை மெல்ல கலைத்தது பாடலின் சப்தம்.

"ஆங்... பாருங்க, உங்ககிட்ட கேட்கணும்ன்னு நினைச்ச விஷயங்களில் இதும் ஒன்று.... ஏன் உங்கள் இறைத்தூதருக்கு புகழ் பாடுகிறீர்கள்?, அவரின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எல்லா முஸ்லீமும் உருதில் புகழ் பாட்டு பாடுகிறீர்களே?, ஏதோ மந்திரம் சொல்கிறீர்களே?? இந்தப் பாடலின் வரிகள் கூட அவற்றை உறுதிப்படுத்துகிறதே?? தனிமனித புகழ்ச்சி இல்லை என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்கள் இறைத்தூதருக்கு மட்டும் புகழ்ச்சி கூடும்? அவரும் ஓர் மனிதர்தானே?" என்று கேள்விக் கணைகள் பாயத்தொடங்கின.

புன்னகையுடன் அவரின் கேள்விக்கு பதில் தந்தேன். 

"நிச்சயமாக புகழ் அனைத்தும் நம்மையெல்லாம் படைத்துப் பாதுகாக்கின்ற இறைவன் ஒருவனுக்கே என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. இதில் இருவேறு கருத்துக்கும் இடமில்லை, ஆனால், நீங்கள் எண்ணியவாறு, நபியவர்கள் பெயரைக் கேட்டவுடன் நாங்கள் (முஸ்லீம்கள்) சொல்வது எந்த ஒரு மந்திரமுமில்லை, புகழவுமில்லை. இது ஒரு நன்றிக்கடன் அவ்வளவுதான்" 

'................' அவருடைய மௌனம் எனக்கு சம்மதமாய் தெரியவில்லை.

மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தேன். 

'நண்பரே!, நான் சொன்ன பதிலில் நீங்கள் திருப்தியானதாக நான் உணரவில்லை. நீங்கள் விரும்பினால், நீங்கள் பகிர்ந்துகொண்ட உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே விளங்க வைக்கிறேன்." என்றவுடன்..

சிறிது தயக்கத்துடன் தனது கைக்கடிகாரத்தினைப் பார்த்துவிட்டு, "...........ம், சொல்லுங்க..." என்றார்.

"இரவு பேசும்போது,நீங்கள் இளம்வயதில் வறுமை காரணமாக மும்பையிலிருந்து குடும்பத்தோடு தென்இந்தியா வந்ததாக சொன்னீர்கள். அப்படி இங்கு வந்தவுடன் யாரும் முன்வந்து பழகவில்லை, பேசவில்லை ஏன் குறைந்தபட்சம் ஒரு புன்னகை கூட இல்லை என்று வருத்தப்பட்டீர்கள்.

நண்பர்களில்லை, உறவினர்களில்லை. அண்டைவீட்டார்கள் கூட ஆறுவாரம்  கழித்துத்தான் நாங்கள் வந்திருப்பதையே அறிந்து கொண்டார்கள் என்று ஆதங்கப்பட்டீர்கள்."

"ஆம் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"  இலேசான கோபம் தெரிந்தது.

"நீங்கள்பட்ட துயரம், வேதனை, வலி ஆகியவற்றை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

பாருங்கள், எங்கள் இறைத்தூதர் போதித்திருப்பதை.." என்று பட்டியலிட ஆரம்பித்தேன் 

• முன் பின் தெரிந்திராத அறிந்திராத நபருக்கும் முன்வந்து சலாம் (முகமன்) கூறுங்கள்.
• உன் சகோதரனுக்காக புன்முறுவல் செய்தும் தர்மமே.
• உனக்கு சமைக்கும் போது உன் அண்டை வீட்டாருக்கும் சிறிது சேர்த்துக்கொள்.
• அண்டைவீட்டார் பசியோடிருக்கும் போது தான் மட்டும் புசிப்பவன் நம்மைச்சார்ந்தவனல்லன்.

என்று அவர் போதித்த மனிதநேயப் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருவேளை இந்த போதனைகளை ஏற்றுக்கொண்ட ஒருநபர் உங்கள் அண்டைவீட்டுக்காரராய் இருந்திருந்தால், நீங்கள் சென்ற விரக்தியின் எல்லை என்னவென்றே அறியாதிருந்திருப்பீர்கள்.

பாசமிகு சகோதரத்துவம் உங்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும். புதியதோர் உறவு உங்களை சொந்தம் கொண்டாடியிருக்கும்.

'எப்படி சார் இப்படி சகமனிதர்களோடு பழகுவதைக்கூட தவிர்ப்பவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும்?' என்று உங்களைப் போன்றோர்களின் ஆதங்கத்தினை உடைத்தெறியும் நற்பண்புகளை கற்றுக் கொடுத்தவர்தான் எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள். உங்கள் பாஷையில் சொல்லப்போனால் எங்களை மனிதர்களாக மாற்றியவர்.

ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நன்றியின் பெருக்கால் இதயத்தின் ஆழத்திலிருந்து (எங்களை முழுமனிதானக்கிய) நபி (ஸல்) மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்" என்று அவருக்காக இறைவனிடத்தில் இறைஞ்சும் பிரார்த்தனைதான் இது.

சொல்லுங்கள், இது தனிமனித புகழ்ச்சியா? மந்திரமா?.......

அசைவற்று கேட்டுக்கொண்டிருந்த அந்த நண்பரின் உதடுகளை அசைத்த வார்த்தை என்ன தெரியுமா??

"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"....!!!!

அல்ஹம்துலில்லாஹ்..

-புதுசுரபி

அதிரைநிருபர் எவ்வகையிலும் இசை மற்றும் அதன் சாயல் தொடும் எதனையும் ஆதரிப்பதில்லை, மாற்றுமதச் சகோதரர்களிடம் இசை வடிவிலும் அறிமுகமான இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை தடம் புரளாமல் கட்டுரையாளர் கையாண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறப்பையும் அவர்களுக்கு முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் அளவிடமுடியாத நன்மதிப்பையும் எடுத்துரைத்து தெளிவுற வைத்த விதம் அற்புதம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் இதனை செவியுற்ற மாற்றுமத சகோதரர் கலிமாவை முன்மொழியும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் !

-அதிரைநிருபர்-குழு

இறைவனுக்கு நன்றி... ! 16

ZAKIR HUSSAIN | November 02, 2011 | , , ,

ன் இறைவனுக்கு நன்றி செலுத்துவதை அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது... பெரும்பாலும் நம் தொழுகைகளில் அதிகம் கேட்கிறோம் அதைக் கொடு / இதைக் கொடு என்று [இது தவறு என்று நான் சொல்லவில்லை... அந்த சர்வ வல்லமை படைத்தவனிடம் கேட்காமல் யாரிடம்தான் கேட்பது?] ஆனால் இதுவரை நம்மை ஆளும் அந்த இறைவனுக்கு நன்றி எந்த அளவு செலுத்துகிறோம் என்பதை அவரவர்களின் அனுமானத்தில் விட்டு விடுகிறேன்.

முதலில் நம் உடம்புக்குள் நடக்கும் லேபரட்டரியை கவனித்தால் தெரியும்... இரத்தத்தில் உள்ள சோடியம் குறைந்தாலே பினாத்த ஆரம்பித்து விடுவோம். முன்பு வயதானவர்கள் வீட்டில் புலம்பும்போது 'வயசாயிட்டா  அப்படித்தான்' என ஒரே வார்த்தையில் கருத்து சொல்லிவிட்டு அடுத்த வேலையய் பார்க்க போய் விடும் நாம் டயாக்னைஸ் தெரிந்தால் நமக்கும் இப்படி சொல்ல வருங்காலத்தில் ஆட்கள் இருப்பார்கள் என்ற பயம் வந்து விடும். சுகர் அளவு அதிகம் உடம்பில் இருந்தால் நாளடைவில் பேன்க்ரியாஸிஸ் நொண்ட ஆரம்பித்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் இவர் அறிவாளி நல்லா சிந்திப்பாக...! என்று சொல்லப்படும் ஆட்களுக்கு ரொம்ப உதவி செய்தது சுகர்... ஆம் மூளைக்கு தேவை சுகர் மட்டும். சுகர் அளவு மூளைக்கு போவது குறைந்தால் சினிமாவில் கதாநாயகி அடிபட்ட பிறகு ஹாஸ்பிட்டல் கட்டிலிலிருந்து எழுந்து "நான் இப்ப எங்கே இருக்கேன்?" என கேட்பது போல் அடிக்கடி கேட்பீர்கள்.

அதை விட வித்தியாசமான முறையிலும் பிரைன் ப்ளுட் எப்படி எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை இதுவரை யாரும் எட்டாத அறிவில் இறைவன் வைத்திருக்கிறான் என்பதை பார்த்தாலே ஒருவிதமான பயம் வந்து விடும். அந்த நீர் இடம் மாறினான் நீர் இடம் மாறி விடுவீர் என்பது மருத்துவ விதி. [வர..வர.. நானும் கிரவுன் / வாவன்னா சார் மாதிரி எழுத ஆரம்பித்துவிட்டேன்]

இறைவன் படைக்கும் போது ஒரு நேர்த்தியாக அழகாக ஒரு சிமட்ரிக்களாக படைத்த இறைவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது மனிதத்தை. சமயங்களில் மனிதன் கோனபுத்தி கொண்டு குழப்பம் விளைவிப்பதால், வெற்றியடைய தாமதம் ஏற்படுகிறது. இறைவன் எதிர்பார்ப்பதை விட்டு மற்றவனைக் குறை சொல்வது, பசாது பேசுவது போன்ற தேவையற்ற காரணங்களுக்கு இதை பயன் படுத்துகிறோம்.

நாம் சுவாசிக்கும் காற்றின் 21% ஆக்ஸிஜன், ஆக்சிமீட்டரில் 100 காண்பிக்க வேண்டும். 90 ஐ விட குறைந்தால் நிச்சயம் ஆக்ஸிஜன் மாஸ்க்கில் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்..... எப்போதாவது உலகத்தில் இது திடீரென குறைந்தால் என்னவாகும்... எப்போதாவது  இறைவன் அவன் ஆளுமையில் உள்ள இந்த உலகத்துக்கு ஒரு 10% குறைத்து ஆக்ஸிஜன் கொடுத்திருக்கிறானா?... அப்படி குறைத்து கொடுத்தால் உலகத்தின் அழிவுக்கு பிரளயம் தேவையிருக்குமா?.... எந்த எஞ்சினீயரால் இந்த அளவை தொடர்ந்து மேற்பார்வை பார்க்க முடியும்?.

வாழ்க்கையில் நிமிர்ந்து நடக்க எல்லோருக்கும் பிடிக்கும் [இங்கு நிமிர்ந்து என்று நான் சொல்வது உண்மையில் நிமிர்ந்து - ஸ்பைன் எரெக்ட் பொஷிசன்.] ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் தான் இவ்வளவு படித்தவன் / என்னிடம் இத்தனை 'மா தோப்பு' இருக்கிறது / நான் இந்தக் குடும்பம் / இந்தத் தெரு / என் பேங்க் பேலன்ஸ் மற்றவனை விட அதிகம் என்று நிமிர்ந்து நடப்பவர்களும் உண்டு.. அந்த கிறுக்கன் களைப்பற்றி யோசித்தே பார்க்க வேண்டாம்.

நிமிர்ந்து நடக்க வேண்டியதற்கான காரணம் நம் லம்பாஸ்ட் ஸ்ட்ரக்சர் 33 எழும்புகளால் ஆனது... இவை எல்லாம் சின்ன சின்ன எலும்புகளால் நாம் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறோம், இந்த 33 எலும்பும் ஒவ்வொன்றும்  50 கிராமில் இருக்கலாம் இறைவன் நினைத்தால் அதில் ஒரு 50 கிராமை நகர்த்தினால் மொத்த 75 அல்லது 80 கிலோ  மனிதன் சரிந்து விழுந்து விடுவான் [சேர்ந்தே தெரு / படிப்பு / தோப்பு எல்லாம் சரிந்துவிடும் என்பது வேறு விசயம்]

நமது நாக்கில் எச்சில் சுரப்பதை  எப்போதும் ஒரு அனிச்சை செயலாக [நமக்கே தெரியாமல் / நம்மிடம் பர்மிஷன் வாங்கி செய்யாமல்]  இறைவன் எல்லோருக்கும் படைத்திருக்கிறான். இது சரியாக சுரக்கவில்லை என்றால் உணவுக்குழாயில் உணவு பயனிக்கும்போது பழைய வீட்டை இடித்துக்கொட்டுவதுபோல் சவுண்ட் சர்வீஸ் தரும். ஏதோ "தூ" னு துப்பும் சமாச்சாரம் அல்ல அது. உணவு வயிற்றுக்குள் விழும் நேரம் 4 - 7 செச்கன்ட் தான் , ஒருக்கால் எச்சில் உருவாகவில்லை என்று வைத்துக்கொள்வோம். வயிற்றில் செரிமானத்துக்கு தேவையான என்ஜைம் சுரக்காமல் உணவு அப்படியே நின்று விடும்... பிறகு வயிற்றிலிருந்து உணவை வெளியே தள்ள எந்த லாட்ஜ் / மேன்ஷன் மருத்துவராலும்(!!) முடியாது.

அந்த என்ஜைம் தான் உணவின் பாலிமெரிக் மேக்ரோ  மாலிக்யூளர் ஆக [குழம்ப வேண்டாம்... ”சின்ன சின்ன ப்லாக்” ஆக] நமது குடலின் சுவர்களுக்குள் எடுத்து சென்று உடலில் சேர வைக்கிறது.இப்படி சேர்வதால் தான் நாம் திடமுடன் நடக்க முடிகிறது.

இப்போது சொல்லுங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல ஐவேளை தொழுகை மட்டும் போதுமா?.

இப்படியெல்லாம் எழுதுவதால் இது ஏதோ முஸ்லீம் மத சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என மற்ற மத சகோதர, சகோதரிகள் நினைத்து விட வேண்டாம். நம் எல்லோரையும் காப்பாற்றும் இறைவன் ஒருவன் தான். முஸ்லீம்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், மற்ற சமூகத்தினர் இஸ்லாத்தை புரியாமல் பேசினால் உடன் கோபித்துக் கொள்ளாதீர்கள், இன்று நம்மிடம் இண்டர்நெட், நெட்புக், ஐபேட், புத்தகங்கள் அனைத்தும் இருந்தும் எப்படி நாம் இஸ்லாத்தை மற்ற சமுதாயத்துக்கு தெரியப்படுத்த தவறியிருக்கிறோம் என்பதை ஒரு முறை நினைத்துப்பாருங்கள்.

- ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு