Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அதிரை ஹாலித். Show all posts
Showing posts with label அதிரை ஹாலித். Show all posts

இஸ்லாத்திற்கு எதிரான திரிபு வாதமும், எதிர் குரலும் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2013 | , , , , ,

சகோதரர் எச்.பீர்முஹம்மது தங்களுக்கு இறைபுறத்திலிருந்தும் மேலும் எனது சாந்தியும் சமாதானமும், நேரிய சிந்தனையும் தூய இஸ்லாமிய எண்ணங்களும் உண்டாகட்டும் என்று இறைவனிடம் பிராத்தித்தவனாக  

தாங்கள் இந்து பத்திரிகையில்  October 10, 2013 அன்று எழுதிய "பயங்கரவாதத்தின் வேர்கள்" கட்டுரை பொது புத்தியுடையவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபடுவதால், இஸ்லாத்திற்கு எதிரான திரிபு வாதமாகவே கருத முடிகின்றது என்பதால் என் எதிர் குரலை இங்கு பதிவு செய்கின்றேன் 

Catch #1 //தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாக மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு பயங்கரவாதத்தின் வேர்கள்குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதத்தை //

do Try # தமிழ்நாட்டில் எந்த கொலையும் நடக்கவில்லை ஆனால் இந்துத்துவாவை சேர்ந்தவர்கள் மட்டுமே கொலை செய்யப் படுகின்றார்கள் என்ற தோற்றத்தை பாசிச இந்துத்துவ வாதிகள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கூவுவதை அப்படியே கட்டுரையாளரும் வழிமொழிகின்றார் அதுவும் அவை அனைத்தையும் இஸ்லாமியர்களே செய்கின்றார்கள் என்று அக்மார்க் முத்திரையுடன் ஆரம்பிக்கின்றார் கட்டுரையாளர் இவை போன்ற சொல்லாடல்கள் ஓர் குறிப்பிட்ட சமுகத்தின்மீது திட்டமிட்டு அரச மற்றும் ஊடக பயங்கரவாதிகளால்  திணிக்கப்படும் பழிச்சுமையை தன் பொதுபுத்தியிலிருந்து விலகிநின்று பாசிச சிந்தனைக்கு உரமூட்டுகின்றார் பீர்.நவீன காலத்து ஊடக நம்பிக்கையாளர் (Media Believer) எச்.பீர்முஹம்மது போன்றோர் அதன் நம்பிக்கைக்கு பாத்திரமாக நச்சுக் கருத்துக்களை பாமர வாசகர்கள் மேல் அள்ளி வீசிகின்றனர்.  இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தியாவில் யாரோ ஒருவன் கொலைசெய்து  கையும் களவுமாக பிடிப்பட்டாலும் காவல்துறையும் ஊடகமும், நீ அந்த கொலையை செய்யலப்பா  இது முஸ்லிம்(தீவிர வாதிகள்) செய்தது என்று மாற்றியமைக்கப்படும் காட்சிகளை அறிவு ஜீவிகள், பொதுநலவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களும் வாயிருந்தும் ஊமையாக. கையிருந்தும் முடவனாக மாற்றப் படுவார்கள் இது போன்ற பல பழிச்சுமைகள்  சுமக்க அதை துணிவுடன் எதிர் கொள்ளும் பக்குவம் முஸ்லிம்களுக்கு என்றும் புதிதல்ல அரச மற்றும் ஊடக பயங்கர வாதிகள் ஓர் குறிப்பிட்ட சமுகத்தின் மீது பழி சுமத்தும் ஈனச் செயல்களுக்கு மாற்றமாக உண்மையான எதார்த்தமான நடப்புகளை கீழே இணைத்துள்ள லிங்கில் பார்த்துக் கொள்ளலாம் 



Catch #2 //‘உலகில் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையிலான போராட்டம்’ என்கிறார் அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.//

do Try # மத்திய கிழக்கு நாடுகளை ஒரே ஏவுகணையில் ஆயிரக் கணக்காண குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் போன்ற ஏதும் அறியா அப்பாவிகளை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் (மேற்கத்திய) முதலாளியத்துவ சர்வாதிகாரத்தின் போக்கை கட்டுரையளர் எத்தகைய பயங்கர வாதத்தோடு ஒப்பீட்டுக் கொள்ளப் போகின்றார். உலக பயங்கரவாத செயல்களின் மொத்த குத்தகையை அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் அதன் நேச நாடுகளின் கொடுரச் செயல்கள் வண்டுதுளைத்த பழச்சோலைகள் போல் மொத்த அரபுலகமும் உருக்குலைந்த பிரதேசமாக மாறி இருப்பதை எந்த பயங்கரவாத எதிர்ப்பாளரும் கண்டுக் கொள்வதில்லையே ஏன்? அநியாயக் காரர்களின் பீரங்கிக்கும், கொத்துக் கொத்தாக கொள்ளும் கிலேட்சர் பாமுக்கும் எதிராக கல்லெறிபவர்கள் தீவிர வாதிகளா? மேற் குறிப்பிட்ட அநாகரிக செயல்களுக்கு அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி பார்வை எப்படியோ?  

Catch #3 //அவர்களே பின்னர் தலிபான்களாக உருமாறி,// 

do Try # ஒரு நாட்டுக்கு எதிரான அந்நிய சக்திகளை எதிர்க்க ஆரம்பிக்கப்பட்ட தலிபான் என்ற மாணவர் படை, அவை பிற்காலத்தில் மேற்கத்திய ஆக்கிரமிப்பு அரசுகளால் தீவிரவாதிகள் என்று சித்தரித்து முத்திரை குத்தப்படுகின்றது. பொதுபுத்தி உள்ளவர்களுக்கு புரியும் அமெரிக்காவும் அல்கெய்தவும் வெவ்வேறல்ல என்று. மேற்கத்திய கூட்டுப் படைகள் கால் வைத்த இடமெல்லாம் அம்மக்களிடம் பிரிவினைவாத சிந்தனையை உரமிட்டு, வேறூண்ட வைத்து சொந்த மக்களையே கருவறுக்கும் செயல் இந்தியா, பாக்கிஸ்தான், மேலும் அரபுலகங்கிலும் புற்றுநோயைப் போல் பரவ செய்த பெருமை பிரிட்டிஸ் அமெரிக்க  கூட்டுப் படைகளின் தந்திரமே என்பதை உங்கள் விஸ்வரூப சினிமா தலத்திற்கு ஏன் இன்னும் புரியவில்லை    

Catch #4 //சவூதி அரேபியாவில் உருவான தீவிர இஸ்லாமியக் கோட்பாடான வஹ்ஹாபியம்  இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடித் தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம்  //  

do Try # அன்றைய கேடு கெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ்  முஸ்லிம் நாடுகள் இருந்த போது   இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள், இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள், அக்கிரமங்கள் கட்டவிழ்த்தபட்டன மேலும் இஸ்லாத்தின் முதல் படிநிலையான  ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான இணைவைப்புகள், நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு இறைவனுக்கு இணைவத்தலும் மேலும் சூபியிசம் பெயரில் கணக்கிலடங்காத இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரான வழிபாடுகள் இஸ்லாமிய வேடமேற்ற சில யூத, கிருத்துவ சிந்தனை வேடதரிகளால் அறங்கேறின.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக்கு நிகராக ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் இறைவனுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.

இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது.

கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் சவூதி அரசாங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் முஹம்மத் (S/o அப்துல் வஹ்ஹாப்) என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் இறைவனுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். இறைவனுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார். 

ஓரிறை கொள்கைக்கு எதிரான தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும், இஸ்லாத்தின்  பெயரால் நடைப் பெற்ற மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள், அக்கிரமங்களை  ஒழித்து கட்டியதாலும் மேலும் ஓர் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று முஹம்மத் (பின் அப்துல் வஹ்ஹாப்) போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப் படுகின்றனர். ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப். இவரது பெயர் முஹம்மத் ஆகும். முஹம்மதீ என்று பெயர் சூட்டினால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி தனிமைப்படுத்த முயன்றனர். ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல.வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள். நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. மூட நம்பிக்கைகளை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீர்ர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். பெருமிதப்படும் வரலாறு சமைத்தவர். அவர் சந்தித்து போன்ற அடக்குமுறைகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது. இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் இப்னு சவூதையும் இப்னு அப்துல் வஹ்ஹாபயும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது. அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்து தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதை மறந்து விட முடியாது. நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹ்ஹம்த் பின் அப்துல் வஹ்ஹாப். ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்ததால் அதை சுட்டிக்காட்டி ஏகத்துவவாதிகள் நிராகரித்துள்ளார்கள். 

Catch #5 //ஜிஹாத் மற்றும் காபிர் என்ற இரு புனிதச் சொல்லாடல்கள் இதன் அரங்குக்குள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. //

do Try # இஸ்லாத்தின் ஓரிறை கொள்கைக்கு மாற்றமான "இறைமறுப்பாளர்" என்ற தமிழ் பதத்திற்கான காபிர் என்ற அரபிச் சொல்லும், உரிமைக்காக, சமூக அநீதிக்கு எதிராக அல்லது நியாயத்திர்க்காக போராடு என்ற (ஜிஹாத்) என்ற அராபிய சொல்லும் இன்று மேற்கத்திய மற்றும் பாசிச சித்தாந்தவாதிகளால் சொரியூட்டப்பட்டு, அதை பயங்கரவாத சொல்லாக மாற்றி இஸ்லாமிய கொள்கைக்கும் அதனை தூயவடிவில் பின்பற்ற நினைக்கும் மக்களின்மேல் இட்டுக்கட்டி சுமத்தி இஸ்லாத்தின் மீதுள்ள தன் அரிப்பை இந்த பாசிச விஷமிகள் இதன் மூலம் தனது கணக்கை சரி செய்து கொள்கின்றனர்.  உரிமைக்காக, சமூக  அநீதிக்கு எதிராக அல்லது நியாயத்திர்க்காக போராடு (ஜிஹாத்)  என்ற சொல்லை 1400 வருடத் திற்கு முன்பு அருளப்பட்ட குரானுக்கு போகுமுன் கடந்த நூற்றாண்டின் நடைபெற்ற காந்தியடிகள், நேதாஜி, சேகுவரே  போன்றோர்களின் சமூக  அநீதிக்கு எதிராக கலம்கண்ட போராட்ட குணங்களை முஹம்மது நபியவர்களின் போராட்ட குணத்தோடு பொது புத்தி கண்ணோட்டத்தோடு உரசி சரிபார்த்துக் கொள்ளவும்.  சமூக அநீதிக்கு எதிராக களத்தில் இறங்கி போராட எண்ணமில்லாமல் அல்லது அக்கறையில்லாமல் மரணிக்கும்  ஒவ்வொரு மனிதனும் கோழைகளாகத்தான் இவ்வுலகை விட்டு பிரிகின்றான் என்பது பல அறிஞர்களின் நோக்கு. 

Catch #6 //இந்நிலையில், தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது//

do Try # இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு பிறகு வந்த இரண்டாம் தலைமுறை லீக்குகள் இரண்டு மூன்று சட்டமன்ற பாராளுமன்ற இருக்கைகளை அலங்கரிப் பதற்காக ஒட்டுமொத்த இசுலாமியர்களின் வாழ்வாதார அடிப்படை பிரச்சனைகளான கல்வி வேலைவாய்ப்புகளில் கவணம் செலுத்தாமல், அதற்காக அரசு ஆள்பவர்களிடம் போரடி வாங்க திராணியில்லாமல் சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு மாற்றமாக  இறந்த தலைவர்கள் பெயரில் மணி மண்டபம், தபால் தலை, முஹரம் விடுமுறை, தர்ஹாகளுக்கு சந்தானம் பூசுதல் போன்ற சமூகத்திற்கு பயனற்ற திட்டங்களை அரசுகள் ஓட்டுக்காக பாமர இஸ்லாமியர்களை அடகு வைத்து ஏமற்றியததால் வெறுப் படைந்த அறிவார்ந்த இளைங்கர்களின் கூட்டு முயற்சியே தமுமுக மற்றும் அதனை பின் வந்த இயக்கங்கள்  

Catch #7 //தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. //

do Try # கோயபல்ஸ் கட்டுரையாளர் பீர் இங்கு அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து விட்டு தமிழ் நாட்டில் அண்ணன் தம்பிகளாக வாழும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் தமிழர்கள் யார்? என்ற ஓர் அச்ச உணர்வை, பதற்றத்தை ஏற்படுத்த உச்சமாக ஆதாரமற்ற விஷ கருத்துக்களை  திணிக்க முயற்சி செய்கிறார். அவரின் பிம்பம் இந்துத்வா பாசிச சக்திகளின் பின்புலமாக இருக்குமோ என சாதாரண வாசகனையும் அச்சப்பட வைக்கிறது. 

அய்யா பீர் அவர்களே, நீங்கள் தீவிரவாத முத்திரை குத்த நினைக்கும் இயக்கங்கள் பொது சமூகத்திற்கு தினந்தோறும் செய்யும் மனிதாபிமான சேவைகளை திட்டமிட்டு கச்சிதமாக புறக்கணித்தற்கு காரணம் என்னவோ? உதாரணத்திற்கு சில, ஆயிரக் கணக்கானவர்களை உயிர் பலி வாங்கிய சுனாமி அனர்த்தத்திற்கு உடனடியாக அந்த பேரிடர் இடர் நீங்கும் வரை அனைத்து உதவிகளையும் செய்தவர்கள், தினந்தோறும் இரத்த தான முகாம்கள், பட்டி தொட்டியெங்கும் ஆம்புலன்ஸ் வாகன அர்பணிப்புகள் போன்றவைகளில் சில மட்டுமே இங்கு குறிப்பிடுகின்றேன்,  மனிதாபிமான சேவைகளை கச்சிதமாக புறக்கணித்தது மட்டுமல்லாமல் அம்மக்களின் மீது தீவிரவாத பட்டம் சூட்டி, வெந்த புண்ணில் மேல் தீ மூட்டி மகிழ காரணம் என்னவோ?   நிச்சயமாக உங்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் விருதுகள் வீடு தேடி வரும் நிம்மதியா வட இந்திய உருது பேசும் முஸ்லிம்கள், உருது ஹிந்தி பேச தெரியா தமிழ் பேசும் முஸ்லீமை பார்த்து கேட்கும் "ஆப் முஸ்லிம் க்யா உர்து நஹி மாலும்" அப்பாவித் தனத்தை உங்களின் வரிகளில் உணர முடிகின்றது.

Catch #8 //பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது,  தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் //. 

do Try # ஆண்களுக்கே உரித்தான கம்பிரமான முக கேசங்களான தாடியை எடுப்பது என்பது தனிமனித உரிமையோ மற்ற பாலினதிர்ற்கு மாற்றாக முக கேசங்களான தாடியை வளர்த்து வசீகரிப்பதும் தனி மனித சுதந்திரமே இதையும் தீவிரவாதத்தோடு முடிச்சு போட்டு உங்களின் சொரி நோயுக்கு களிம்பு தடவ நினைக்காதீர். தாடிவைத்த திருவள்ளுவனும், பெரியாரும் மற்றும் உலகின் பல்வேறு காலங்களில் தோன்றிய அனைத்து அறிஞகர்களும் தீவிர வாத சிந்தனை உள்ளவர்கள் என்று நீங்கள் எண்ணினால் தாடிவைத்த அறிவார்ந்த முஸ்லிம் சமூகமும் அதே வரிசையில் இடம் பிடிக்க பெருமைபடுவான்.

Catch #9 //தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம்//. 

do Try # உண்மையான முஸ்லிம்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள் தங்களை சாதி, மொழி,  இன போன்ற குறுகிய பிராந்திய அடையாளங்களுக்குள் ஒளிந்துக் கொள்ளாமல் உலக சமூகத்தின் மைய நிரோட்டத்தில் ஒழுங்குற கலக்கும் கொள்கைக்கு சொந்தகாரர்கள். இதற்கு உதாரணமாக இப்புனித ஹஜ்ஜு மாதத்தில் மக்கா நகரில் இலட்ச கணக்காண பல் இன சமூகமக்கள், கருப்பு வெள்ளை ஏழை பணக்காரன் வேறுபாடு பார்க்காமல் ஒன்று கூடி ஓரிறையை சகோதரத்துவத்தோடு இறையஞ்சுவார்கள் . 

The End # இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே பீர்முஹம்மது உங்களின் பொது புத்தியுள்ள நேர்மையான மனிதாபிமான எதிர்காலம் ஆரம்பிக்கும்.

தங்களின் சகோதரனாக !

மு அ ஹாலித்
சிட்டினியிலிருந்து

அல்-கத்ர் சூராவின் விளக்கவுரை ! - TAMS-காணொளி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2013 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்..!

கடந்த வாரம் TAMS-ன் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வின் பொழுது புனிதமிக்க ரமளான் மாத வணக்கத்திற்கு ஏற்றவாறு ஒத்தி வைக்கப் பட்ட அல்-கத்ர்' சூராவின் முழு வசனங்களையும் மௌலவி இம்தியாஸ் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த புனிதமிக்க மாதத்தில் கேட்டு அதன்படி நம் முழு வணக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாய் மேலும் புனிதமிக்க லைலாத்துக் கதிரை நாம் அனைவரும் அடையக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக... ஆமீன் !


பரிந்துரை : ஹாலித் சிட்னி

ஆஸ்திரேலியா சிட்னியில் ரமளான் சிறப்பு தமிழ் பயான் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 09, 2013 | , , , , ,

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தமிழ்நாடு ஆஸ்திரேலியன் முஸ்லிம் சொஸைட்டி TAMS தன்னார்வ சேவை அமைப்பினர் தொடர்ந்து வாராந்திர குர்ஆன் தஃப்சீர் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இம்மாதம் 6ம் தேதி அன்று புனிதமிக்க ரமளான் பற்றிய சிறப்பு சொற்பொழிவும் கேள்வி பதில் நிகழ்வும் சிறப்புடன் நடத்திருக்கிறது, அதன் காணொளித் தொகுப்பினை இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது. 





பரிந்துரை : ஹாலித் - சிட்னி

சங்கங்கள் இயக்கங்கள் - ஒரு பார்வை ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2011 | , , ,

இறைவனின் திருப்பெயரால்...

அன்பானவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்..

த.மு.மு.க. நம் சமுதயத்திர்க்காக கிடைத்த பெரும் பொக்கிஷம், இது அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளை போரடி பெற்றுள்ளனர் இன்னும் பெற போராடிக் கொண்டுள்ளனர். இன்னும் எத்தனையோ சேவைகளை செய்த வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய சமுதாய நலன் அமைப்புகளில் உள்ளவர்கள் சங்கத்தின் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதா? ஏன் இன்னும் கோணல் பார்வை.

முந்தய சங்கங்களின் செயல்பாடுகள் கல்யாண வரி வசூலிப்பதிலும் மற்றும் மணமுறிவு (தலாக்) ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மட்டுமே இருந்துள்ளது. சங்கம் என்பது பலதரப்பட்ட மாற்று கருத்துடையவர்களின் கூட்டமைப்பே, பலதரப்பட்டவர்கள் மாற்று கருத்துள்ளவர்கள் இதில் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள் அனைவருக்கும் சமமாகவும் / நீதமானதாகவும் ஒளிவு மறைவின்றி இருக்கவேண்டும். ஒருசில நேரங்களில் சமுதாய நலன் கருதி முடிவுகள் எடுக்க நேரிடும்பொழுது சிலரிடமிருந்து கசப்பான எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை சமுதயத்திற்காக பொருந்திக் கொண்டுதான் ஆகவேண்டும், யாரேனும் பாதிக்கப்பட்டோம் என்று கருதினால் மேல்முறையீடு செய்வதுதான் சாலச்சிறந்தது. பொதுவாக அமைப்புகள் /  சங்கங்கள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. எல்லாவற்றையும்  எதிர் கொண்டுதான் ஆகவேண்டும், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.

சிலசமயம் த மு மு க வின் (மேலும் சில இயக்கங்களின்)  செயல்பாடுகளில் நமக்கு மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அதை புறம் தள்ளிவிட்டு அல்லாஹ்வுக்கும் நம் சமுதாயத்திற்காக உழைக்க கூடிய அந்த மக்களுக்கு முடிந்தவரை ஒத்துழைப்பையும் துவாவையும் செலுத்தி கொண்டுதான் இருக்கின்றோம்.

புதிதாக அமைந்த சங்க நிர்வாகிகள் நிர்வாக திறன் பாராட்ட தகுந்தவையாக உள்ளது,  சில விசயங்களில் உடனுக்குடன் சம்மந்த பட்டவர்களை தொடர்பு கொண்டு அதற்காக முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக முடிந்தவரை ஒத்துழைக்க வேண்டும்.  இதற்க்கு மெருகூட்டும் வண்ணம் அமீரகவாழ் அதிரைச் சகோதரர்களால் நடத்திய ஒருங்கிணைந்த நிகழ்வும், மேலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பொதுக் கூட்டமும் மனதிற்கு புதுதெம்பை தந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.       

சங்கங்கள் வரி மற்றும் தலாக் போன்ற பஞ்சாயத்தில் மட்டும் நின்று விடாமல் நம் சமுதாயத்தில் நிலவும் சமுக ஒழுங்கீனங்களை சீர்படுத்த முயற்சி செய்ய வேண்டும். 

உலமாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்று கூறும் சங்கங்கள் பொருளாதரத்தில் நலிவடைந்த உலமாக்களுக்கு / பள்ளிகளை பராமரிக்கும் முஅத்தீன் / நம் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கும் உஸ்தாதுகளுக்கு நம் ஊர் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

வேட்பாளர்களிடத்தில் உறுதிமொழி வாங்கியது போல், சங்கத்திற்கு கல்யாண வரி வசூலிக்கும் முன்பு பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கு கைக்கூலி பரிமாற்றம் இருக்கிறதா விசாரிக்க வேண்டும் அப்படி கைக்கூலி / வரதட்சனை பரிமாற்றம் இருந்தால் அந்த கல்யாணத்திற்கு பதிவுப் புத்தகத்தை அனுப்ப மாட்டோம் என்று (பெயரளவிலாவது) முதல் கட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும்.     

ஒவ்வொரு முஹல்லாவிலும் படிக்கும் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அந்தந்த முஹல்லாவில் அடிப்படை மார்க்க அறிவு போதிக்கப்படுகிறதா என்று ஆராய வேண்டும்.

பாதியில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் (பொருளாதார அல்லது அறிவுரீதியாக கற்க கடினப்படும்) செய்யும் மாணவர்களை இனம் கண்டு  அதற்கு ஏற்றவாறு உதவி செய்ய ஆலோசனை வழங்க வேண்டும்.
        
துரதிஷ்டவசமாக நம் ஊர் மக்கள் ஏனோ இன்னும் இடஒதுக்கிட்டை அனுபவிக்காமல் இன்னும் அரசு தரும் சலுகைகளை பெற முயற்சி செய்யாமல் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்)  மட்டுமே நம்பி வாழ்க்கையை காணடித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதும் நம் சமுதாயம் இன்னும் விசா வியாபாரிகளின் கையில் சிக்கி சின்ன பின்னமாகி கொண்டிருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை. 

மேலும் சில / பல கொள்கைகளால் பிரிந்து கிடக்கும் நம் சமுதாய இயக்க சகோதரர்கள் வீண் விதண்டவாதமும், கொள்கை சண்டைகளை முச்சந்திக்கு முச்சந்தி செய்வதை விட்டுவிட்டு பயனுள்ள வழியில் வருங்கால சந்ததியினருக்கு,  நாம் வரிசெலுத்தும் அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை அல்லது  பொது  இட ஓதிக்கிட்டு முறையில் கல்வி , வேலைவாய்ப்புகள் பெற முயற்சி செய்தல் வேண்டும், முதியோர் ஊக்க தொகை, ஏழை விதவைகளுக்கான உதவித் தொகை, உலமாக்கள் ஊதியம் போன்ற என்னென்ன சலுகைகளை பெறமுடியுமே அனைத்தையும் பெற சங்கங்களோடு சேர்ந்து முயற்சிக்கவேண்டும். இதற்காக ஒவ்வொரு முஹல்லா  சங்கத்தில்  உள்ள கட்டிடத்தில் தனி அலுவலகமே செயல் படவேண்டும்

இதுவரை நம் சமுதாயத்திற்கான பொதுவான பெண் மருத்துவரை பெற முயற்ச்சி செய்யவில்லை நன்கு படிக்கும் நடுத்தர அல்லது  ஏழை மாணவிகளை இனியாவது தேர்ந்தெடுங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்கு தேவைப்படும் பொருளாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய வெளியில் உள்ள நாங்கள் அதிரை சொந்தங்கள் மேலும் நட்பு வட்டங்கலில் சொல்லி ஆதரவு திரட்டி  உதவி செய்கின்றோம்.  இன்ஷா அல்லாஹ்.

மேலும் நமக்காக நம் சமுதாயத்திற்கான சட்ட நிபுணர்கள், வழக்கறிங்கர்கள் (law  studies), ஊடகவியலாளர்கள் (journalist )  இந்தியா மேலாண்மை அதிகாரிகள் (IAS ,IPS )   படிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவை இன்ஷா அல்லாஹ் இதற்காகவும் அமைப்புகளும், சங்கங்களும் ஒருங்கிணைந்தால் அனைத்துதரப்பிலும் உதவி செய்ய ஒத்த கருத்துடைய நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

இன்ஷா அல்லாஹ் ஒன்றுகூடி வளம் பெறுவோம் !

வல்லோனின் வான் துணையில் 

தங்களின்,

மு அ ஹாலித், சிட்னி    

குறிப்பு : இத்துடன் அதிரை பேரூராட்சி செயலற்று கிடந்த பொழுது அதற்கு மாற்றாக council for adirai promotion (CAP)  என்ற அமைப்பை உருவாக்கிய தன்னார்வ சகோதர்களில் அஸ்ரப் அலி அவர்கள் காலம் சென்ற மு. இ. ஹசன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் மர்ஹூம் மு.இ.ஹசன். இவை இன்று நடைபெறும் சச்சரவுக்கும் நம் அனைவரின் பதிலாக இருக்க முடியும்.


டாக்டர். அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகள். 7

அதிரைநிருபர் | September 30, 2010 | ,

வெளிநாட்டு வாழ் நம் மக்களின் கோரிக்கையை ஏற்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக  அக்டோபர் 3, 2010 முதல் அக்டோபர் 9, 2010 வரை  ஆஸ்திரேலியாவுக்கு வரும் பேராசிரியர்  அவர்கள் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள்.


நிகழ்ச்சி பற்றி மேலும் அறிந்துக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.



இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த ஆஸ்திரேலியா முஸ்லீம் சகோதரர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு  சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தகவல்: ஹாலித்
                 சிட்னி, ஆஸ்திரேலியா.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு