Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வின்வெளி. Show all posts
Showing posts with label வின்வெளி. Show all posts

செயற்கை 'கோள்' - மூட்டல் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2015 | , , , ,


செயற்கை விண்கோள் என்றால் என்ன இது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் செயற்கை சாதனமே செயற்கை கோள் ஆகும்.

விண்ணில் ஏவப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது பூமியின் இழு விசை காரணமாக கிழே இழுக்கப்படும் அப்படி அது கிழே இழுக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பூமியின்  ஈர்ப்பு விசையை தாண்டி அந்த கோள்களை செலுத்த வேண்டும் (பூமியின் ஈர்ப்பு விசையானது பூமியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும்).

அதனால், செயற்கை விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கில் கொண்டு பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன இது குறைந்தது 200 கி.மீ தூரத்தில் இருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தூரத்தில் பெரும்பாலான  செயற்கைக் கோள்களும் சுற்றி வருமாறு செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி அனுப்புவதற்கு தேவைப்படும் சாதனமே ராக்கெட் என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு தூக்கி சென்று வானில் ஈர்ப்பு விசையை தாண்டி செலுத்திவிடும்.

ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றது போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை மேலே தூக்கிக்கொண்டு போகும் எரிபொருள் தீர்ந்ததும் அது செயற்கை கோளில் இருந்து பிரிந்து கிழே விழுந்துவிடும். 

முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும்போது இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்து விடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விடும்.

ஏவுகணைகள் வானில் அதிக தொலைவு செல்வதற்கு ஏதுவாக இரண்டு விதமான எரிபொருள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். ஒன்று திரவ ஏரிபொருள் மற்றொன்று திடஎரிபொருள். திரவ எரிபொருளில் ஹைட்ரஜன், கெரசின் (மண்ணெண்ணெய்) மற்றும் ஆக்சிஜன் மூன்றும் பயன்படுத்தப்படுகின்றன. திட எரிபொருளில் அலுமினிய மாவும், (இடியப்ப மாவு அல்ல) அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் பெர்குலேரேட் என்ற வேதியியல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் திட எரிபொருட்களே ஆபத்தில்லாமல் ஏவுகணையை செலுத்துவதற்கு ஏற்றது.

எல்லாம் சரிங்க கோடி கோடியா செலவு பண்ணி எதுக்காக அதை மேலே சுத்த உடுறாங்கன்னு மேலே சுத்துரத கிழே பார்ப்போம்.

விண்கோள்கள் இரண்டு விதமாக பூமியைச் சுற்றி வருகின்றன. ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

இதை மாற்றி இப்படியும் சொல்லலாம் பூமத்திய ரேகையில் சுற்றி வருபவை சில. பூமியின் துருவங்களைச் சுற்றி வருபவை சில. இரண்டுக்கும் இடைப்பட்ட வீதிகளில் சுற்றி வருபவை சில. செயற்கைக் கோள்கள் வட்ட வீதியிலும் நீள் வட்ட வீதியிலும் பலவாறாக சுற்றி வருகின்றன.

ஈக்குவேட்டர் பாதையில் சுற்றிவரும் விண்கோள்கள் 35,000 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுவதால் ஈக்குவேட்டர் விண்கோள்கள் சற்று அதிகமான உயரத்தில் பூமியை ஒரு சுற்றி வருவதால் ஏறக்குறைய 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தகுந்தாற்போல் உள்ள வேகத்திலும் உயரத்திலும் சுற்றி வரும்படி . இதன்  வேகத்தை அமைத்துக்கொள்வார்கள்  35,000கி.மீ. தொலைவில்   சுற்றிவரும் விண்கோளை ஜியோஸ்டேஷனரி சேட்டிலைட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். (தமிழில் எப்படி  என்று தெரியவில்லை )

இது பூமியைச் சுற்றிவரும் விண்கோளைப் போன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பூமியின் மேல்பரப்பில் எப்போதும் நின்று கொண்டிருப்பது போல் தோன்றும். இவ்வாறு ஒரே நிலையில் நிற்பதுபோல் தோன்றும் விண்கோள்களின் உதவியால்தான் தொலை தொடர்பு மற்றும் தொலைகாட்சி சாதனங்கள் (சீரியல் பார்த்து கண்ணீர் வடிப்பவர்களுக்கு இது தெரியுமா) ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒளிபரப்பப்படுவதும் இது போன்ற செயற்கை கோள்கள்தான்.

மேலும் இந்தவகை கோள்களே புயல், இயற்கை சீரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் செய்யவும்,(ரமணன் நினைவுக்கு வருவாரே, அவரைச் சுத்தலில் விடும் கோள்கள்) வானிலை ஆராய்ச்சிகளுக்கும், பூமியின் நிலவளங்கள், கனிமங்கள் மற்றும் நீர் நிலைகளை அறிந்துக் கொள்ளவும் உதவுகின்றன.

போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கை கோள்கள் பூமிக்கு அருகாமையிலேயே சுற்றிவரும் உயரத்தில் அதாவது 200 கி.மீ தொலைவில் மட்டுமே செலுத்தப்படும். இவைகள் பெரும்பாலும் பூமியை ஒரு சுற்று சுற்றி வர இரண்டு மணி நேரமே எடுத்துக் கொள்ளும், அது மட்டுமல்லாமல் அதிகமான இடங்களையும் சுற்றி வந்துவிடும். இவ்வகையான செயற்கை கோள்கள் பெரும்பாலும் உளவு பார்க்கும் பணிக்காகவே செலுத்தப் படுகின்றன.

வசதிமிக்க நாடுகள் இது போன்ற செயற்கை கோள்களை எதிரி நாடுகள் மற்றும் தனக்குப் பிடிக்காத நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார செயல்பாடுகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே வானில் செலுத்துகின்றன. போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக் கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானதாக இருக்கும். காரணம் எதிரி நாட்டு ராணுவ அசைவுகளை கண்காணிக்க இது போன்ற செயற்கை கோள்கள் உதவியாக இருக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்களின் பட்டியலை கொஞ்சம் பார்த்துடுவோம்... ஏதும் விற்பனைக்கு வந்தால் மாடல் என்னவென்று தெரிந்து கொள்ள உதவும்.

07-Jun-1979 - பாஸ்கரா-1, எடை 442 கிலோ
31-May-1981 - ஆர்.எஸ். டி-1, எடை 38 கிலோ
20-Nov-1981 - பாஸ்கரா - 2, எடை 444 கிலோ
17-May-1983 - ஆர்.எஸ். டி-2 - எடை 41.5 கிலோ
17-Mar-1988 - ஐ.ஆர்.எஸ்.-1-எ. - எடை 975 கிலோ
13-Jul-1988 - ஸ்ரோஸ்-2 - எடை 150 கிலோ
20-Aug-1991 - ஐ.ஆர்.எஸ்.-1-பி. - எடை 975 கிலோ
20-Sep-1993 - ஐ.ஆர்.எஸ்.-1-இ. - எடை 846 கிலோ
15-Oct-1994 - ஐ.ஆர்.எஸ்.-பி-2. - எடை 804 கிலோ
28-Dec-1995 - ஐ.ஆர்.எஸ்.-1-சி. - எடை 1,250 கிலோ
21-Mar-1996 - ஐ.ஆர்.எஸ்.-பி-3. - எடை 920 கிலோ
27-Sep-1997 - ஐ.ஆர்.எஸ்.-1-டி. - எடை 1,250 கிலோ
26-May-1999 - ஐ.ஆர்.எஸ்.-பி-4 (ஒசென்சாட்-1). - எடை 1,050 கிலோ
22-Oct-2001 - டி.இ.எஸ்.(தி டெக்னாலஜி எக்ஸ்பைரிமெண்ட் சாட்டிலைட்) - எடை 1,108 கிலோ
15-Oct-2003 - ரிசோர்ஸ்சாட்-1. - எடை 1,360 கிலோ
05-May-2005 - கேர்டோசாட்-1. - எடை 1,560 கிலோ
10-Jan-2007 - கேர்டோசாட்-2. - எடை 650 கிலோ (64 ஜீபி கொள்ளலவு கொண்ட பதிவுப் பெட்டகம் உள்ளடக்கம்)
24-Apr-2008 - கேர்டோசாட்-2-எ. - எடை 690 கிலோ
28-Apr-2008 - ஐ.எம்.எஸ்.(இந்தியன் மினி சாட்டிலைட்)-1 - எடை 83 கிலோ
20-Apr-2009 - ரிஸாட்-2 (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்). - எடை ___ கிலோ
23-Sep-2009 - ஓசென்சாட்-2. - எடை 960 கிலோ
12-Apr-2010 - கேர்டோசாட்-2-பி. - எடை 694 கிலோ
20-Apr-2011 - ரிசோர்ஸ்சாட்-2. - எடை 1,206 கிலோ
12-Oct-2011 - மெகா டிரோபிக்குஸ் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 998 கிலோ
26-Apr-2012 - ரிஸாட்-1 (ரேடார் சாட்டிலைட்). - எடை 1,858 கிலோ
25-Feb-2013 - சாரல் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 407 கிலோ

1 July 2013 PSLV-C22 IRNSS-1A is the first satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS). It is one of the seven spacecraft constituting the IRNSS space segment

26 July 2013 Ariane-5 INSAT-3D is the meteorological Satellite with advanced weather monitoring payload.

30 August 2013 Ariane-5 GSAT-7 is the advanced multi-band communication satellite dedicated for military use. 

5 November 2013 PSLV-C25 The Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan is India's first Mars orbiter.

5 January 2014 GSLV-D5  GSAT-14 is the twenty third geostationary communication satellite of India to augment the In-orbit capacity of Extended C and Ku-band transponders.

4 April 2014 PSLV-C24 IRNSS-1B is the second satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

10 November 2014 PSLV-C26 IRNSS-1C is the third satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

7 December 2014 Ariane-5 GSAT-16 is twenty fourth communication satellite of India configured to carry a total of 48 communication transponders.

28 March 2015 PSLV-C27 IRNSS-1D is the fourth satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

27 August 2015 GSLV-D6 GSAT-6 is a communication satellite. GSAT- 6 features an unfurlable antenna, largest on board any satellite. Launch of GSLV-D6 also marks the success of indigenously developed upper stage cryogenic engine.

28 September 2015 PSLV-C30 ASTROSAT is India’s first dedicated multi wavelength space Observatory.


இதுவரைக்கும் ஏவப்பட்டது அவ்வளவுதான் !

கோள்(கள்) சொல்வதை நம்பும் நாடுகள் இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் !?

Sஹமீது

செயற்கை 'கோள்' - மூட்டல் தொடர்கிறது... 38

அதிரைநிருபர் பதிப்பகம் | July 08, 2013 | , , , ,


செயற்கை விண்கோள் என்றால் என்ன இது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் செயற்கை சாதனமே செயற்கை கோள் ஆகும்.

விண்ணில் ஏவப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது பூமியின் இழு விசை காரணமாக கிழே இழுக்கப்படும் அப்படி அது கிழே இழுக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பூமியின்  ஈர்ப்பு விசையை தாண்டி அந்த கோள்களை செலுத்த வேண்டும் (பூமியின் ஈர்ப்பு விசையானது பூமியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும்).

அதனால், செயற்கை விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கில் கொண்டு பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன இது குறைந்தது 200 கி.மீ தூரத்தில் இருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தூரத்தில் பெரும்பாலான  செயற்கைக் கோள்களும் சுற்றி வருமாறு செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி அனுப்புவதற்கு தேவைப்படும் சாதனமே ராக்கெட் என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு தூக்கி சென்று வானில் ஈர்ப்பு விசையை தாண்டி செலுத்திவிடும்.

ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றது போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை மேலே தூக்கிக்கொண்டு போகும் எரிபொருள் தீர்ந்ததும் அது செயற்கை கோளில் இருந்து பிரிந்து கிழே விழுந்துவிடும். 

முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும்போது இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்து விடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விடும்.

ஏவுகணைகள் வானில் அதிக தொலைவு செல்வதற்கு ஏதுவாக இரண்டு விதமான எரிபொருள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். ஒன்று திரவ ஏரிபொருள் மற்றொன்று திடஎரிபொருள். திரவ எரிபொருளில் ஹைட்ரஜன், கெரசின் (மண்ணெண்ணெய்) மற்றும் ஆக்சிஜன் மூன்றும் பயன்படுத்தப்படுகின்றன. திட எரிபொருளில் அலுமினிய மாவும், (இடியப்ப மாவு அல்ல) அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் பெர்குலேரேட் என்ற வேதியியல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் திட எரிபொருட்களே ஆபத்தில்லாமல் ஏவுகணையை செலுத்துவதற்கு ஏற்றது.

எல்லாம் சரிங்க கோடி கோடியா செலவு பண்ணி எதுக்காக அதை மேலே சுத்த உடுறாங்கன்னு மேலே சுத்துரத கிழே பார்ப்போம்.

விண்கோள்கள் இரண்டு விதமாக பூமியைச் சுற்றி வருகின்றன. ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

இதை மாற்றி இப்படியும் சொல்லலாம் பூமத்திய ரேகையில் சுற்றி வருபவை சில. பூமியின் துருவங்களைச் சுற்றி வருபவை சில. இரண்டுக்கும் இடைப்பட்ட வீதிகளில் சுற்றி வருபவை சில. செயற்கைக் கோள்கள் வட்ட வீதியிலும் நீள் வட்ட வீதியிலும் பலவாறாக சுற்றி வருகின்றன.

ஈக்குவேட்டர் பாதையில் சுற்றிவரும் விண்கோள்கள் 35,000 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுவதால் ஈக்குவேட்டர் விண்கோள்கள் சற்று அதிகமான உயரத்தில் பூமியை ஒரு சுற்றி வருவதால் ஏறக்குறைய 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தகுந்தாற்போல் உள்ள வேகத்திலும் உயரத்திலும் சுற்றி வரும்படி . இதன்  வேகத்தை அமைத்துக்கொள்வார்கள்  35,000கி.மீ. தொலைவில்   சுற்றிவரும் விண்கோளை ஜியோஸ்டேஷனரி சேட்டிலைட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். (தமிழில் எப்படி  என்று தெரியவில்லை )

இது பூமியைச் சுற்றிவரும் விண்கோளைப் போன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பூமியின் மேல்பரப்பில் எப்போதும் நின்று கொண்டிருப்பது போல் தோன்றும். இவ்வாறு ஒரே நிலையில் நிற்பதுபோல் தோன்றும் விண்கோள்களின் உதவியால்தான் தொலை தொடர்பு மற்றும் தொலைகாட்சி சாதனங்கள் (சீரியல் பார்த்து கண்ணீர் வடிப்பவர்களுக்கு இது தெரியுமா) ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒளிபரப்பப்படுவதும் இது போன்ற செயற்கை கோள்கள்தான்.

மேலும் இந்தவகை கோள்களே புயல், இயற்கை சீரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் செய்யவும்,(ரமணன் நினைவுக்கு வருவாரே, அவரைச் சுத்தலில் விடும் கோள்கள்) வானிலை ஆராய்ச்சிகளுக்கும், பூமியின் நிலவளங்கள், கனிமங்கள் மற்றும் நீர் நிலைகளை அறிந்துக் கொள்ளவும் உதவுகின்றன.

போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கை கோள்கள் பூமிக்கு அருகாமையிலேயே சுற்றிவரும் உயரத்தில் அதாவது 200 கி.மீ தொலைவில் மட்டுமே செலுத்தப்படும். இவைகள் பெரும்பாலும் பூமியை ஒரு சுற்று சுற்றி வர இரண்டு மணி நேரமே எடுத்துக் கொள்ளும், அது மட்டுமல்லாமல் அதிகமான இடங்களையும் சுற்றி வந்துவிடும். இவ்வகையான செயற்கை கோள்கள் பெரும்பாலும் உளவு பார்க்கும் பணிக்காகவே செலுத்தப் படுகின்றன.

வசதிமிக்க நாடுகள் இது போன்ற செயற்கை கோள்களை எதிரி நாடுகள் மற்றும் தனக்குப் பிடிக்காத நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார செயல்பாடுகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே வானில் செலுத்துகின்றன. போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக் கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானதாக இருக்கும். காரணம் எதிரி நாட்டு ராணுவ அசைவுகளை கண்காணிக்க இது போன்ற செயற்கை கோள்கள் உதவியாக இருக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்களின் பட்டியலை கொஞ்சம் பார்த்துடுவோம்... ஏதும் விற்பனைக்கு வந்தால் மாடல் என்னவென்று தெரிந்து கொள்ள உதவும்.

07-Jun-1979 - பாஸ்கரா-1, எடை 442 கிலோ
31-May-1981 - ஆர்.எஸ். டி-1, எடை 38 கிலோ
20-Nov-1981 - பாஸ்கரா - 2, எடை 444 கிலோ
17-May-1983 - ஆர்.எஸ். டி-2 - எடை 41.5 கிலோ
17-Mar-1988 - ஐ.ஆர்.எஸ்.-1-எ. - எடை 975 கிலோ
13-Jul-1988 - ஸ்ரோஸ்-2 - எடை 150 கிலோ
20-Aug-1991 - ஐ.ஆர்.எஸ்.-1-பி. - எடை 975 கிலோ
20-Sep-1993 - ஐ.ஆர்.எஸ்.-1-இ. - எடை 846 கிலோ
15-Oct-1994 - ஐ.ஆர்.எஸ்.-பி-2. - எடை 804 கிலோ
28-Dec-1995 - ஐ.ஆர்.எஸ்.-1-சி. - எடை 1,250 கிலோ
21-Mar-1996 - ஐ.ஆர்.எஸ்.-பி-3. - எடை 920 கிலோ
27-Sep-1997 - ஐ.ஆர்.எஸ்.-1-டி. - எடை 1,250 கிலோ
26-May-1999 - ஐ.ஆர்.எஸ்.-பி-4 (ஒசென்சாட்-1). - எடை 1,050 கிலோ
22-Oct-2001 - டி.இ.எஸ்.(தி டெக்னாலஜி எக்ஸ்பைரிமெண்ட் சாட்டிலைட்) - எடை 1,108 கிலோ
15-Oct-2003 - ரிசோர்ஸ்சாட்-1. - எடை 1,360 கிலோ
05-May-2005 - கேர்டோசாட்-1. - எடை 1,560 கிலோ
10-Jan-2007 - கேர்டோசாட்-2. - எடை 650 கிலோ (64 ஜீபி கொள்ளலவு கொண்ட பதிவுப் பெட்டகம் உள்ளடக்கம்)
24-Apr-2008 - கேர்டோசாட்-2-எ. - எடை 690 கிலோ
28-Apr-2008 - ஐ.எம்.எஸ்.(இந்தியன் மினி சாட்டிலைட்)-1 - எடை 83 கிலோ
20-Apr-2009 - ரிஸாட்-2 (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்). - எடை ___ கிலோ
23-Sep-2009 - ஓசென்சாட்-2. - எடை 960 கிலோ
12-Apr-2010 - கேர்டோசாட்-2-பி. - எடை 694 கிலோ
20-Apr-2011 - ரிசோர்ஸ்சாட்-2. - எடை 1,206 கிலோ
12-Oct-2011 - மெகா டிரோபிக்குஸ் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 998 கிலோ
26-Apr-2012 - ரிஸாட்-1 (ரேடார் சாட்டிலைட்). - எடை 1,858 கிலோ
25-Feb-2013 - சாரல் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 407 கிலோ

இதுவரைக்கும் ஏவப்பட்டது அவ்வளவுதான் !

கோள்(கள்) சொல்வதை நம்பும் நாடுகள் இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் !?

Sஹமீது

கிரையோஜெனிக் ராக்கெட் 26

தாஜுதீன் (THAJUDEEN ) | July 19, 2010 | , , , ,

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும்.    அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.                                            என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள்

நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.

இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது


(இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும்

அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்


இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் .

ராக்கெட்டுக்குள் கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும். அப்போது 3,000 டிகிரி செல்சியஸ்( வேகாத கோழி மட்டன் இவை எல்லாம் ஒரு செகடில் பஸ்பம் ) அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது.

விஷயத்துக்கு வருவோம்  "அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்(குர்ஆன் 6:125)

அது என்ன விண்வெளியில் பயணம் செய்பவனின் மனதை போல் சுருங்கி இருக்குமாம் நாம் இந்த பூமி இன் இலுவிசையை தாண்டினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சுருங்கிவிடும் என்பதை சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே இறைவன் அறிவித்துள்ளான் மனிதர்களுக்கு விண்வெளியில் பயணம் செய்யகூடிய அறிவை வழங்கிவிட்டதாக இதை நாம் எடுத்து கொள்ளலாம் அல்லவா.

நோன்பு வருகின்றது அல்லாஹ்வின் பொருத்ததை அடைவதற்காக ஜகாத்தின் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை வசதியற்ற உற்றார் உறவினர்களுக்கும்,  ஈமான் கொண்டவர்களுக்கும் செய்திடுங்கள்.


ஆக்கம் - SHAHULHAMEED
 தம்மம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு